search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஸ்தூரி ராவ்"

    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினியின் 4 படங்கள் அமெரிக்காவில் ரூ.10 லட்சம் வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
    பா.இரஞ்சித் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகி காலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காலா படத்தில் ரஜினி மும்பை தாதாவாக நடித்திருக்கிறார். 

    படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

    படத்தில் நடித்துள்ள வில்லன் நானா படேகர், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, திலீபன், அஞ்சலி பாட்டீல் என படத்தில் நடித்துள்ள பலருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

    தமிழத்தில் காலா படம் முதல் நாளில் 14 முதல் 15 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.77 கோடி வசூலாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரஜினியின் கபாலி படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு தான். கபாலி முதல் நாளில் ரூ. 21.5 கோடியை வசூலித்திருந்தது. முதல் நாளில் வசூலில் விஜய்யின் மெர்சல் ரூ. 22.5 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. 



    அதேநேரத்தில் அமெரிக்காவில் நான்காவது முறையாக ரூ. 10 லட்சம் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. கபாலி படம் முதல் நாள் ப்ரீமியர் காட்சியிலேயே 10 லட்சம் வசூலை தாண்டியிருந்த நிலையில், காலா படம் 2 நாட்களில் 10 லட்சம் வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வசூலில் கபாலி ரூ. 40 லட்சம் வசூலுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 

    இந்த நிலையில், காலா வசூல், கபாலி வசூலை முந்துமா என்பது கேள்வியாகியுள்ளது. #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் காலா படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் படத்திற்கு ஆதரவு பெருகியிருக்கிறது. #Kaala #Rajinikanth
    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியான காலா திரைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகுகிறது.

    ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான படம் காலா. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்துள்ளார்.

    ரஜினியின் அரசியல் வருகைக்கு பின் வெளியாகும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

    சமீபத்தில் தூத்துக்குடி சென்றிருந்த ரஜினி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படத்தில் அதிகமான போராட்டக் காட்சிகள் இருப்பதாக செய்தி வந்தது பரபரப்பை கூட்டியது.

    படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.



    தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்க முடியாத அம்பேத்கர் சிலை, புத்தர் மண்டபம் என்று ஒடுக்கப்பட்டோருக்கான குறியீடுகளை பல இடங்களில் வைத்துள்ளார். சமூகத்துக்கு தேவையான அடித்தட்டு மக்களின் நில உரிமையை ரஜினியை வைத்து பேசி இருக்கிறார்.

    எனவே எங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    காலா படம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுக்க 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர். வழக்கமான ரஜினி படங்களை காட்டிலும் இது குறைவு தான்.

    எனினும், வார இறுதியில் வசூல் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். #Kaala #Rajinikanth

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகம் முழுக்க 1800 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. உலகம் முழுவதும் ‘காலா’ படம் 1800 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி தூத்துக்குடி சென்று வந்த பிறகு ரஜினிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிய நிலையிலும், ‘காலா’ படத்திற்கு உற்சாகமாக வரவேற்பு கிடைத்துள்ளது. 

    இன்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் நடைபெற்றன. முதல் காட்சியிலேயே ‘காலா’ படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் வழக்கம்போல் குவிந்தனர். கொடி, தோரணம், ‘கட்-அவுட்’, பேனர்கள் தியேட்டர்களில் இடம் பிடித்தன.

    ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர். படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

    ரஜினி அரசியலுக்கு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்த படம் அதிகமாக அரசியல் பேசும் படமாக உருவாகவில்லை. மும்பை தாராவி பகுதியில் வாழும் ஏழைகளுக்கு குரல் கொடுப்பவராக ரஜினி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

    ரஜினியின் மற்ற படங்களை போல இந்த படத்திலும் அவர் ஸ்டைலாக நடித்திருக்கிறார். இது ரஜினியை பா.ரஞ்சித் இயக்கிய 2-வது படம். ரஜினியை மனதில் வைத்தே கதையை அவர் அமைத்து இருக்கிறார்.



    ‘காலா’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரஜினி குரல் கொடுக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும், பா.ரஞ்சித் முத்திரை அதிகம் உள்ளது. அனைவரும் விரும்பும் விதத்தில் கதை இருக்கிறது.

    இந்த படத்துக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ரஜினிக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமையும். ஆரம்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் சில நாட்களில் ‘காலா’ படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று இந்த படத்தின் கலைஞர்களும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். #Kaala #Rajinikanth

    பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `காலா' படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருக்கும் வத்திக்குச்சி திலீபன், படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து மனம் திறந்திருக்கிறார். #Kaala #Rajinikanth #Dileepan
    வத்திக்குச்சி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான திலீபன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்து இருக்கிறார். படம் குறித்து திலீபன் பேசும் போது, 

    வத்திக்குச்சி படத்துக்குபின் குத்தூசி என்ற படத்தில் நடித்தேன். அது இயற்கை விவசாயம் பற்றிய வணிக ரீதியான படம். அது விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித் அடுத்து ரஜினியை வைத்து படம் பண்ணபோவதாக செய்தி வந்ததும் சென்று சந்தித்தேன். வாய்ப்பு கேட்டேன். ரஞ்சித் இருக்கிறது. ஆனால் உறுதி அளிக்க முடியாதே என்று கூறிவிட்டு உடலை ஏற்ற முடியுமா? என்று கேட்டார். ஏற்ற வேண்டும் என்றார்கள். பின்னர் தேர்வின்போது ஒரு டயலாக் கொடுத்து பேச சொன்னார்கள். ரஞ்சித் நிறைய உதவி செய்து என்னை பேச வைத்தார். கதாபாத்திரத்துக்கான பயிற்சி நடக்கும்போது தான் நான் ரஜினி சாருக்கு மகனாக நடிப்பது தெரிய வந்தது. இன்ப அதிர்ச்சி ஆனேன்.



    போட்டோஷூட்டிலேயே பார்த்துவிட்டேன். அப்போதே சின்னதாக சிரித்து நம்மை நெருக்கமாக்கினார். முதல் காட்சியில் நடிக்கும்போது தான் மிகவும் பதட்டமானேன். ஆனால் நம் பதட்டத்தை அவர் எளிதில் கண்டுபிடித்துவிடுவார். நம்மிடம் சாதாரணமாக பேச்சு கொடுத்து பதட்டத்தை தணித்து நடிக்க உதவி செய்தார். ரஞ்சித்தும் மிகவும் கூல் டைப். நாம் எத்தனை முறை தவறு செய்தாலும் மிக பொறுமையாக கேட்டு அவருக்கு வேண்டியதை வாங்கிக்கொள்வார்.

    ரஜினியை பார்த்து வியந்த சம்பவம் ஏதாவது?

    அவரை ஒரு நடிகராக மட்டும் தான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தொழில்பக்தி என்னை வியக்க வைத்தது. 7 மணி படப்பிடிப்புக்கு 6.45 க்கு மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதேபோல் ஒரு வரி வசனமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்லி பார்த்துக்கொண்டே இருப்பார். அவரை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் முதல் படம்தான். 40 ஆண்டுகள் கடந்தும் அப்படியே இருப்பது யாராலும் முடியாத ஒரு வி‌ஷயம். அந்த தொழிலில் பக்தி இருந்தால் நாம் எந்த தொழிலும் வெற்றி பெறலாம் என்பதை புரிந்துகொண்டேன்.



    தாராவி மக்களின் வாழ்வியலை பேசும் படமாக இருக்கும். காலாவின் கதாபாத்திர படைப்பு வேற லெவலில் இருக்கும். ரஜினி ரசிகர்களையும் திருப்திபடுத்தும். ரஞ்சித் ரசிகர்களையும் சேர்த்தே திருப்திபடுத்தும். #Kaala #Rajinikanth #Dileepan

    ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் காலா படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் நாளை ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். 

    காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

    காலா படம் மும்பையில் வாழ்ந்த தமிழரான திரவியம் நாடார் என்பவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்தில் திரவியம் நாடாரை தவறாக காட்டியிருப்பதாகவும், அவர் இன வேறுபாட்டைத் தூண்டுவது போல் காட்சிகள் இருப்பதாகக் கூறி, மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடாரின் மகன் ஜவஹரின் வழக்கறிஞர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ரஜினிகாந்த்துக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. 



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், படத்தை பார்க்காமலேயே அதில் தவறாக சித்தரித்திருப்பதாக எப்படி கூற முடியும் என்று கேட்ட நீதிபதிகள், படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில், சென்னையின் இரண்டு பிரபல திரையரங்குகளில் காலா ரிலீசாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் நாளை ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். 

    காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் இந்த படம் சென்னையின் பிரபல திரையரங்குகளான உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



    இந்த 2 திரையரங்குகளில் படம் வெளியாகாதது குறித்து சில வதந்திகள் வெளியான நிலையில், வியாபார ரீதியிலான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகவில்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். #Kaala #Rajinikanth

    கர்நாடகாவில் காலா படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி, படத்தை வெளியிட அனுமதி கிடைத்துள்ள நிலையில், காலா படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படம் ‘காலா’. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசிய போது, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல்படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு. 

    காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். 



    இதையடுத்து, காலா படத்தை, கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சி நிறுவனத்தின் அலுவலகத்தை கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் சூறையாடியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth

    ரஜினியின் காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kaala #Rajini #Dhanush
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். 

    காவிரி பிரச்சனையின் போது, தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், அவர் நடிப்பில் உருவாகும் படங்களை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து காலா படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை காலா படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. 



    காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

    காலா புரோமஷன் நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்ற ரஜினி, தான் எதிர்பார்த்ததை விட குறைவாக தான் எதிர்ப்புகள் வந்திருப்பதாக கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக ரஜினி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ரஜினி விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினி அளித்த பேட்டி வருமாறு:-

    கே:- தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக நீங்கள் தெரிவித்த கருத்துக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளரே?

    ப:- சிலர் நான் சொன்னதை திரித்து சொல்லி வருகிறார்கள். இப்போது தொழில்நுட்பம் பெறுகிவிட்டது. யூடியூப் வீடியோவில் என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். நான் என்ன சொல்லி இருக்கேன். என்ன பேசி இருக்கேன் என்பது அதில் உள்ளது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. 

    கே:- காலா படத்தின் புரமோ‌ஷனுக்காகவே ரஜினி தூத்துக்குடி சென்றதாக விமர்சிக்கப்படுகிறதே? சாரிங்க... அது பற்றி நான் சொல்ல விரும்பல. ஆண்டவன் அருளால் என்னோட ரசிகர்கள், மக்களோட ஆதரவு உள்ளது. படம் ஒடுவதற்காக இந்த மாதிரி ஸ்டண்ட் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. சினிமாவுக்கு வந்து 43 வரு‌ஷம் ஆகுது. இந்த வயசுல நான் அதுமாதிரி செய்யணும்னு அவசியம் இல்லை.

    கே:- அரசியலில் குதித்துள்ள உங்களையும், உங்கள் தொழிலையும் தொடர்புபடுத்தி பேசுறத எப்படி பார்க்கிறீங்க?

    ப:- அவங்க அப்படித்தான் பண்ணுவாங்க. என்ன பண்றது. அரசியல் வேற, சினிமா தொழில் வேற.



    கே:- அரசியல் பிரவேசத்துக்கு அப்புறம் காலா படம் வருது. உங்க மன்றத்தின் சார்பா என்ன வேண்டுகோள் விடுக்கிறீர்கள்?

    ப:- எதிர்ப்புகள் இன்னும் கம்மியா இருக்கேன்னு நான் பார்த்துட்டு இருக்கேன். இதைவிட ஜாஸ்தியா இருக்கும்னு நினைச்சேன். படம் நல்லா இருந்தா 100 சதவீதம் நன்றாக ஓடும். நன்றாக இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள்.

    கே:- காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதே?

    ப:- கர்நாடகாவில் ஒரு பிரச்சினையும் வராது என்று எதிர்பார்க்கிறேன். எதிர்ப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. இது கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும் தெரியும். அங்கு நமது தமிழக மக்கள் மட்டுமல்ல. பல லட்சம் பிறமொழி மக்களும் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளனர். எனவே அவர்களை ஏமாற்றக் கூடாது. எனவே கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கு. நான் மதிக்கும் பெரியவர் தேவேகவுடாவும் இருக்கிறார். அவர் நிச்சயம் படத்தை தடை செய்ய விடமாட்டார்.

    கே:- பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாத நிலையில் அவர் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறாரே?

    ப:- சார்... அது பற்றி நான் கருத்து கூறவிரும்பவில்லை.

    கே:- நீட் தேர்வு வேண்டாம் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

    ப:- இதுபற்றி பெரியவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு ரஜினி கூறினார். #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் ரிலீஸாக இருக்கிறது. #Kaala #Rajinikanth
    ரஜினியின் காலா படம் வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார்.

    தமிழகத்தின் தென் மாவட்டத்தில் இருந்து மும்பை சென்று வசிக்கும் தாராவி தமிழர்களுக்காக போராடிய தாதாவின் கதை தான் காலா. இதற்கிடையே ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    படம் ரிலீசுக்கு இடையே தூத்துக்குடி சென்ற ரஜினி தெரிவித்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தது. 

    சில அமைப்புகள் காலா படத்துக்கு எதிராக போராட தயாராகி வருகின்றன. தமிழகம் முழுக்க இதுவரை 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் காலா வெளியீட்டை உறுதி செய்திருக்கின்றன. சென்னையில் மட்டும் இதுவரை 45-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரையிடப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    தென் மாவட்டங்களில் ரஜினியின் காலா படத்தை புறக்கணிப்போம் என்ற ரீதியில் பரப்பிவருகிறார்கள். சென்னையிலும் சில அமைப்புகள் காலா வெளியாகும் போது படம் வெளியாகும் திரையரங் குகளின் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பது போலீசுக்கு தெரிய வந்துள்ளது.



    இதனால் காலா படத்துக்கு பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காலா வெளியாகும் திரையரங்குகள் எண்ணிக்கை இன்னும் முழுமை அடையவில்லை. எனவே திரையரங்கு எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்புள்ளதாக திரைப்பட வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாக கூறி கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உள்ளனர். கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிடக் கூடாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கும், கன்னட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட தடை செய்து கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், காலா படத்தின் புரோமஷனுக்காக ரஜினிகாந்த் இன்று ஐதராபாத் சென்றுள்ளார். #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரஜினி மும்பையில் வாழும் தமிழ் மக்களுக்காக போராடும் தலைவனாக நடித்திருக்கிறார். நிலத்தின் உரிமைக்காக போராடும் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது.

    படத்தின் ரிலீசையொட்டி தெலுங்கு பதிப்புக்கான விளம்பர நிகழ்ச்சி கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி கலவரம் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மதியம் 12.30 மணிக்கு ரஜினி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். 



    தனுஷின் வுண்டர்பார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். #Kaala #Rajinikanth

    காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்திற்கு எதிராக யார் போராடினாலும், படம் கண்டிப்பாக வெளியாகும். அதை யாரும் தடுக்க முடியாது என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

    கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் ரஜினி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்துள்ளது. 

    காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.



    இந்த நிலையில், காலா விவகாரம் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், 

    பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு கலையையோ சமூக பிரச்சனையை சுட்டிக்காட்டி எதிர்ப்பது சரியல்ல. ஒரு பொதுவான பிரச்சனையை சுட்டிக் காட்டி சட்டத்தை கையில் எடுப்பது தவறு. இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உறுதியளிக்க வேண்டும். படத்திற்கு எதிராக போராடினாலும், காலா படம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது.

    படத்தை ரிலீஸ் செய்ய கர்நாடக வர்த்தக சபை தடை கோரவில்லை. விநியோகஸ்தர்களின் அழுத்தம் காரணமாகவே படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth #PrakashRaj
    ×