search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி வன்முறை"

    • சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார்.
    • மாநில தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவர் பிரியங்கானுங்கோ தலைமையில் 7 பேர் குழு கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இந்த சம்பவத்துக்கு நீதிகேட்டு அமைதியான போராட்டம் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி அன்று இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவிற்கு கலவரமாக மாறியது.

    அதன் பிறகு டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் மற்றும் அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டனர். பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு போராட்டக்காரர்களை பிடிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து 308 பேர் இதுவரைக்கும் கைது செய்துள்ளனர்.

    பின்பு மாநில அளவில் இந்த கலவரம் பேசப்பட்ட நிலையில் தாமாக முன்வந்து தேசிய மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் இன்று (27-ந் தேதி) நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மாநில தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவர் பிரியங்கானுங்கோ தலைமையில் 7 பேர் குழு இன்று காலை 11:30 மணியளவில் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஸ்ரீமதி மாணவி 3-வது மாடியில் இருந்த தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்ட கீழ்தளத்திலும் பிறகு மூன்றாவது மாடி மற்றும் மாணவி தங்கி இருந்த விடுதி மொட்டை மாடி ஆகிய இடங்களில் பார்வையிட்டனர்.

    • கலவரம் காரணமாக பள்ளி வகுப்புகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் தொடர் விடுமுறையில் மாணவர்கள் இருந்தனர்.
    • 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதிகேட்டு பல்வேறு அமைப்புகள் கடந்த 17-ந்தேதி போராட்டம் செய்தனர்.

    இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து வகுப்பறைகளை சூறையாடினர். அதோடு அங்கு நின்ற வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த கலவரத்தில் பள்ளி வகுப்பறைகள், பஸ்கள், வகுப்பில் உள்ள மேஜை உள்ளிட்ட பொருட்கள் சேதமானது.

    மாணவி ஸ்ரீமதி இறந்த நாளில் இருந்து இந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. கலவரம் காரணமாக பள்ளி வகுப்புகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் தொடர் விடுமுறையில் மாணவர்கள் இருந்தனர்.

    எனினும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடியாக கள ஆய்வுக்கு சென்றார். அப்போது மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களுக்கு வகுப்பு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன் முதல் கட்டமாக கலவரத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் ஆன்-லைன் வகுப்பு தொடங்கியது. எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை இன்று ஆன்-லைன் வகுப்புகள் நடைபெற்றது. இதில் ஆசிரியர், ஆசிரியைகள் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகளை நேரடியாக தொடர்பு கொண்டு வகுப்புகளை நடத்தினர்.

    மேலும் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கனியாமூரை சுற்றியுள்ள 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள வகுப்பறைகளில் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் நேரடி வகுப்புகளை நடத்த உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கைதான 5 பேரும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

    இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 5 பேரும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுக்க முடிவு செய்தனர்.

    அதன்படி 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் இன்று காலை 11.20 மணிக்கு சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    மனுவினை விசாரித்த நீதிபதி புஷ்பராணி பள்ளி நிர்வாகிகள் 5 பேரையும் 1 நாள் மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியதோடு நாளை (28-ந் தேதி) நண்பகல் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

    அதனைதொடர்ந்து 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி கூடுதல் சூப்பிரண்டு கோமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அழைத்து சென்றனர்.

    முன்னதாக சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பள்ளி தாளாளர் உள்பட 5 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் விழுப்புரம் அழைத்து வந்தனர்.

    • சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
    • இன்று காலை தேசிய மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் சரண்யா ஜெயக்குமார், முரளி ஆகியோர் தலைமையில் பெரியநெசலூர் கிராமத்துக்கு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பு காரணமாக கடந்த 17-ந் தேதி கலவரம் வெடித்தது.

    இதனைத்தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கையால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்தனர். 2 முறை பிரேத பரிசோதனை செய்தும் தங்களது மகளின் சாவுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று பெற்றோர் தொடர்ந்து போராடினர்.

    இதனைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுபடி மாணவியின் உடலை பெற்றோர் வாங்கினர். அதன்பின்னர் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. என்றாலும் மாணவியின் பெற்றோருக்கு சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர்ந்து ஆறுதல் கூறி வருகிறார்கள். இது தவிர அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழுவினரும் நேரடியாக மாணவியின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதன்படி இன்று காலை தேசிய மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் சரண்யா ஜெயக்குமார், முரளி ஆகியோர் தலைமையில் பெரியநெசலூர் கிராமத்துக்கு சென்றனர். அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் நடவடிக்கைகள், படிப்பு விபரம் குறித்து அவர்கள் தகவல் சேகரித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • கைதான 5 பேர் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக வெடித்தது.

    இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 5 பேரும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுக்க முடிவு செய்தனர்.

    அதன்படி 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு விசாரணையின்போது, எத்தனை நாள் காவலில் விசாரிக்க அனுமதி கிடைக்கும் என தெரியவரும்.

    • காவல்துறையினர் போராட்ட சமயத்தில் சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இச்சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.
    • தமிழக அரசு மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் கைது செய்த மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் பாதிக்காதவாறு அவர்களை எச்சரித்து, விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதி, தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பிற்கு நியாயம் கிடைக்கப்பெற களத்தில் போராடிய மாணவர்களும், இளைஞர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையான முறையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வருகிற செய்தி வேதனையளிக்கிறது.

    காவல்துறையினர் போராட்ட சமயத்தில் சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இச்சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.

    எனவே, இருபுறமும் நடந்தேறியவற்றை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் கைது செய்த மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் பாதிக்காதவாறு அவர்களை எச்சரித்து, விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
    • டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிப்பு

    சென்னை:

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் சிலர் ஆதாயம் தேடுவதாகவும், பள்ளியில் நடந்த வன்முறையால் 4,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதி கூறினார். வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை என்று கூறிய அவர், மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கிடையே கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருவதால், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எஸ்.பி. பகலவன் தலைமையிலான தனிப்படை இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வதந்திகளை பரப்பிய சமூக வலைத்தள பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    • மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுங்பதாக அரசு வழக்கறிஞர் முறையீடு
    • 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய உத்தரவு

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனையின்போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

    அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்தார் . அப்போது மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகள், மற்றும் பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு, இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும என்றும் உத்தரவிட்டார்.

    மேலும், மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக்கொண்டு கண்ணியமாக உடலை அடக்கம் செய்யும்படி பெற்றோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்று மதியம் 12 மணிக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். நாளை 11 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

    • ஒரு குழுவினர் பள்ளியில் ஏற்பட்ட சேதம் மற்றும் தீயில் எரிந்த வாகன சேதங்களைக் கணக்கீடு செய்ய உள்ளனர்.
    • ஒரு குழுவினர் கலவரக்காரர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிய, கள்ளக்குறிச்சி சுற்றுப்பகுதியில் உள்ள டோல்கேட்டுகள் மற்றும் பள்ளிக்கு வரும் வழியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலுார் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலுாரை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    மாணவின் மரணத்துக்கு நீதி கேட்டு, கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளி பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை தீயிட்டு, பள்ளியில் உள்ள பொருட்களை கலவரக்காரர்கள் சூறையாடினர்.

    கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பிரவீன்குமார் டி.ஐ.ஜி.அபிநவ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ராதா கிருஷ்ணன், கிங்கஷ்லின், முத்துமாணிக்கம், சந்திரமவுலி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.

    இக்குழுவினர் உளுந்தூர்பேட்டை பாலியில் உள்ள சிறப்பு காவல் படை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டத்தில் ஈடுபட்டனர்.


    பின்னர் சக்தி மெட்ரிக் பள்ளியில், நேற்று மாலை டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். அங்கு, கலவரக்காரர்கள் சேதப்படுத்திய பள்ளி கட்டிடம், வகுப்பறைகள், தீயிட்டு கொளுத்தப்பட்ட பள்ளி பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை பார்வையிட்டனர்.

    அவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டனர் இதில், ஒரு குழுவினர் பள்ளியில் ஏற்பட்ட சேதம் மற்றும் தீயில் எரிந்த வாகன சேதங்களைக் கணக்கீடு செய்ய உள்ளனர்.

    ஒரு குழுவினர் கலவரக்காரர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிய, கள்ளக்குறிச்சி சுற்றுப்பகுதியில் உள்ள டோல்கேட்டுகள் மற்றும் பள்ளிக்கு வரும் வழியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளனர். மற்றொரு குழுவினர் பள்ளியில் கலவரம் நடந்த நேரத்தில் பயன்பாட்டில் இருந்த மொபைல் எண்களைக் கண்டறிய 'தம் டவர் ஆப்பரேட்' செய்து, விபரங்கள் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

    முதல்கட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பள்ளியை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே கலவரக்காரர்களிடம் இருந்துள்ளது. இதற்காக, மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்பது போன்று, போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அந்த கும்பல், வன்முறையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முழு காரணம் பள்ளியின் தாளாளர் மீதான வெறுப்பு தான். பள்ளி தாளாளர் ரவிக்குமார், அதிக கடனில் இருந்துள்ளார். இதனால், கல்விக் கட்டணத்தை கறாராக வசூலித்துள்ளார்.

    எந்த அமைப்பாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும் நன்கொடை தர மறுத்துள்ளார். இதனால், ரவிக்குமார் மீது பல்வேறு அமைப்புகளுக்கு கோபம் இருந்துள்ளது. பெற்றோரிடமும் ரவிக்குமார் கறாராக நடந்துள்ளார். தன் தாய் சிறிய அளவில் தொடங்கிய பள்ளியை, ரவிக்குமார் வங்கியில் கடன் பெற்று விரிவுபடுத்தியுள்ளார். அரசியல் கட்சியினரிடமும் ரவிக்குமார் பகையை சம்பாதித்து உள்ளார்.

    இப்படி பல்வேறு தரப்பினரிடையே ரவிக்குமார் எதிர்ப்பை சம்பாதித்ததே, இந்த கலவரத்திற்கு காரணம் ஆகும். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மாணவி மரணம் குறித்த விசாரணையும் பல்வேறு கோணங்களில் நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    • பணியில் சேரும்போது ஆசிரியர்கள் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வாங்கி, அவர்கள் வசம் வைத்திருந்தது.
    • கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர ஊதியம் கிடைக்காமல் தவித்தோம்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட வன்முறையில் பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது. பள்ளிக்கட்டிடம் பற்றி எரிந்தது. இதில் மாணவர்களின் சான்றிதழ்கள், பள்ளியின் முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவை சாம்பலாயின.

    இந்த கலவரத்தில் முக்கியமாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பட்டச்சான்றிதழ்களும் எரிந்து சாம்பலாகி உள்ளது.

    இதுதொடர்பாக இங்கு பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கூறும்போது, "பணியில் சேரும்போது எங்களது சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வாங்கி, அவர்கள் வசம் வைத்திருந்தது. நடந்த கலவரத்தில், எங்களது சான்றிதழ்களும் தீயில் கருகிவிட்டது. பள்ளி மூடப்பட்டுள்ள சூழலில் வேறு பள்ளியில் வேலை தேடலாம் என்றாலும், சான்றிதழ் இல்லாததால் தவித்து வருகிறோம்.

    கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர ஊதியம் கிடைக்காமல் தவித்தோம். தற்போதுதான் நிலைமை சற்று சரியானது. தற்போதுள்ள சூழலில் பள்ளி மீண்டும் இயங்குமா? என்பதுதெரியவில்லை. இந்த இக்கட்டான நிலையில், சான்றிதழ் இல்லாத எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

    இப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு அவரவர் சான்றிதழ்களின் நகல்கள் அடிப்படையில் புதிய சான்றிதழ்களை உடனே வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

    • மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சி செய்வதாக தகவல் பரவியது.
    • இதனை அடுத்து அந்தந்த மாவட்ட போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    சின்னசேலம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி இறந்ததை அடுத்து பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17-ந் தேதி இந்தப் போராட்டம் கலவரமாக மாறியது.

    போராட்டக்காரர்கள் மாணவி படித்த பள்ளிக்குள் புகுந்து வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். பள்ளி அலுவலக கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இதில் ஏராளமான போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.

    இந்தக் கலவரத்திற்கு முக்கிய காரணம் வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி இளைஞர்கள் பங்கேற்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக பள்ளி கல்லூரிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சி செய்வதாக தகவல் பரவியது.

    இதனை அடுத்து அந்தந்த மாவட்ட போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சின்னாகண்டனூரை சேர்ந்த 2 வாலிபர்கள் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்அப் மூலம் ஆட்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சின்னாக்கண்டனூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (22) கட்டிட மேஸ்திரி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (19). பிளஸ்-2 படித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக கூலி வேலை பார்த்து வருகிறார். இருவரும் நண்பர்கள். எந்த நேரமும் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வந்தனர்.

    அப்போதுதான் கள்ளக்குறிச்சியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி இறந்ததை அறிந்து அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் இளைஞர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதன்படி தங்களது வாட்ஸ்அப் மூலம் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பி சேலம் ரெயில்வே சந்திப்பில் ஒன்று கூடி அங்கே மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

    இவர்களது இந்த வாட்ஸ்அப் தகவல் குறித்து கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் கொடுமுடி போலீசார் ஸ்ரீதர் மற்றும் அசோக்கை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு தகவல் அனுப்பி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முயற்சி செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளக்குறிச்சி சம்பவத்தில் போலீசாரும், உளவுப்பிரிவு போலீசாரும் சரிவர செயல்படவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டி வந்தார்.
    • போலீசார் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் கலவரத்தை தடுத்திருக்க முடியும் என்று அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்தார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 17-ந்தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமரணத்துக்கு நீதி கேட்டு அங்குள்ளவர்கள் போராட்டம் நடத்திய போது பெரும் கலவரம் ஏற்பட்டது.

    இதில் பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசாரும், உளவுப்பிரிவு போலீசாரும் சரிவர செயல்படவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டி வந்தார். போலீசார் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் கலவரத்தை தடுத்திருக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த சூழலில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை நேரில் சந்தித்து போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பரபரப்பான புகார்களை கூறி உள்ளார்.

    அவருடன் வி.பி. துரைசாமி, கே.பி.ராமலிங்கம், முருகானந்தம், கார்த்தியாயினி, டாக்டர் சரவணன், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் உடன் சென்றனர்.

    மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியதாக தெரிகிறது.

    ×