search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி கலவரம்: வதந்தி பரப்பும் சமூக வலைத்தள பக்கங்களை முடக்க நடவடிக்கை
    X

    கள்ளக்குறிச்சி கலவரம்: வதந்தி பரப்பும் சமூக வலைத்தள பக்கங்களை முடக்க நடவடிக்கை

    • வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
    • டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிப்பு

    சென்னை:

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் சிலர் ஆதாயம் தேடுவதாகவும், பள்ளியில் நடந்த வன்முறையால் 4,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதி கூறினார். வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை என்று கூறிய அவர், மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கிடையே கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருவதால், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எஸ்.பி. பகலவன் தலைமையிலான தனிப்படை இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வதந்திகளை பரப்பிய சமூக வலைத்தள பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    Next Story
    ×