search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களக்காடு"

    • லெட்சுமியை கடந்த சில நாட்களுக்கு முன் நாய்கள் துரத்தியது.
    • இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி லெட்சுமி (வயது70). இவருக்கு குழந்தைகள் இல்லை. கணவர் சுப்பிரமணியனும் பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் பத்மநேரியில் பொதுமக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரை நாய்கள் துரத்தியது. இதனால் பயத்தில் ஓடியவர் தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெட்சுமி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • சிவபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
    • கடந்த 2021-ம் ஆண்டு அந்த சாலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான பி.சி.ராஜன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் களக்காடு நகராட்சிக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விநாயகர், சாஸ்தா கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களும் உள்ளன.

    ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் உள்ளன. மேலும் இந்த கிராமத்தை சுற்றி நீரோடைகளும் ஓடுகின்றன. தலையணை ரோட்டில் இருந்து, சிவபுரம் கிராமத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய களக்காடு பேரூராட்சி நிதி ஒதுக்கீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டது. சிவபுரம் அருகே சாலையின் குறுக்கே செல்லும் ஓடையில் பிளாஸ்டிக் குழாய் மூலம் பாலமும் அமைக்கப்பட்டது.

    அதன்பின் கடந்த 2021-ம் ஆண்டு அந்த சாலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் களக்காடு வனத்துறையினர் கடந்த மாதம் சிவபுரத்திற்கு செல்லும் சாலையை தடுப்புகள் வைத்து அடைத்தனர். அத்துடன் சாலையில் போக்குவரத்தை தடை செய்யும் நோக்கில் சாலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    நீரோடையில் அமைக்க ப்பட்ட பாலத்தையும் பெயர்த்து, குழாய்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் சிவபுரத்திற்கு செல்லும் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விளைநிலங்களுக்கு டிராக்டர், லாரிகள் மூலம் இடு பொடுட்களை கொண்டு செல்ல முடியாமலும், விளை பொருட்களை விளைநிலங்களில் இருந்து ஊர்களுக்கு கொண்டு வர முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சேதப்படுத்தி, கிராம மக்களை அவதிக்குள்ளாகி வரும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் களக்காடு நகராட்சிக்குட்பட்ட சிவபுரத்தை மூடி அங்குள்ள மக்களை வெளியேற்றி, விளைநிலங்களையும் கையகப்படுத்தி, விவசாயத்தை அழிக்க வனத்துறையினர் சதி செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இதற்காகத்தான் வனத்துறையினர் முதல் கட்டமாக சிவபுரம் சாலையை அடைத்து, பின்னர் போக்குவரத்தை தடை செய்ய, சாலையை துண்டித்துள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் நிதி நிறுவனத்தில் அருண்குமார் ஊழியராக உள்ளார்.
    • அருண்குமார் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    களக்காடு:

    கல்லிடைகுறிச்சி குமாரகோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 21). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். நேற்று இவரும், அதே ஊரை சேர்ந்த சக்திவேலும் (23) மோட்டார் சைக்கிளில் களக்காட்டில் இருந்து சேரன்மகாதேவி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பத்மநேரி அருகே உள்ள பிளவக்கல் இசக்கியம்மன் கோவில் ரோட்டில் சென்ற போது, சாலையின் குறுக்கே சென்ற பன்றியின் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அருண்குமாரும், சக்திவேலும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அருண்குமார் நெல்லை அரசு மருத்துவமனையிலும், சக்திவேல் தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்ட னர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • உணவு மற்றும் குடிநீருக்காக கரடி கிராமத்திற்குள் புகுந்து வருகிறது.
    • கோவிலின் அருகே கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல், பெருமாள்குளம் அருகே உள்ள பொத்தைகளில் தஞ்சமடைந்து உணவு மற்றும் குடிநீருக்காக கிராமத்திற்குள் புகுந்து வருகிறது.

    கடந்த 2-ந் தேதி அதிகாலை அங்குள்ள இசக்கியம்மன் கோவிலில் கரடி உலா வந்த காட்சிகள் சி.சி.டி.வியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஊருக்குள் சுற்றி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனைதொடர்ந்து களக்காடு வனத்துறையினர் கரடி நடமாட்டம் காணப்படும் பெருமாள்குளத்தில் ஆய்வு செய்தனர். அங்கு பதிந்திருந்த கரடியின் கால்தடங்களையும் சோதனையிட்டனர். அதன்பின் கோவிலின் அருகே கரடியை உயிருடன் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. கூண்டுக்குள் கரடி விரும்பி உண்ணும், அன்னாசி பழங்கள் வைத்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். பழத்தை உண்ப தற்காக கரடி வரும் போது கூண்டுக்குள் சிக்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பொதுவாக கோடை காலங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்படும்.
    • களக்காடு தலையணையில் தீயணைப்பு, வனத்துறையினருக்கு கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கடும் வெப்பம் நிலவுகிறது.

    பொதுவாக கோடை காலங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவும் என்பதால் அதனை தடுக்க வனத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி களக்காடு தலையணையில் காட்டுத் தீ விபத்தை தடுப்பது குறித்து தீயணைப்பு, வனத்துறையினருக்கு கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நாங்குநேரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்கள், களக்காடு வனத்துறை ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், தீ ஏற்படாமல் தடுப்பது பற்றியும் கூட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் கள பயிற்சியும் கொடுக்கப்பட்டது. நாங்குநேரி தீ அணைப்பு நிலைய அதிகாரி பாபநாசம், களக்காடு வனசரகர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.

    • அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    களக்காடு:

    பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், ஆன் லைன் சூதாட்ட தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுனர் ரவியை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் களக்காட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா மற்றும் அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, பணகுடி, மூலைக்கரைப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கேரள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது.
    • ஆண்டு தோறும் வாழை விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு மவுசு அதிகம். கேரள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது.

    ஆண்டு தோறும், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. சீசன் தொடங்கும் போது ஏத்தன் ரக வாழைத்தார் 1 கிலோ ரூ. 40 வரை விற்பனை ஆகி வருகிறது. அடுத்த 10 நாட்களில் இருந்தே வாழைத்தார் விலை இறங்குமுகமாகி விடும். படிப்படியாக விலை குறைந்து ரூ. 10-க்கும் குறைவாக விற்பனையாகும்.

    வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது. இதையடுத்து ஆண்டு தோறும் வாழை விவசாயி கள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைத்து, அரசே நேரடியாக வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அறுவடை காலத்தில் வாழைத்தார்களை சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

    அதன்படி களக்காடு அருகே ஜெ.ஜெ.நகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் 3 ஏக்கர் பரப்பளவில் வாழைத்தார் ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு மையம் அமைக்க. கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி தமிழக சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி சந்தை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஆனால் கட்டுமான பணிகள் மிகவும் மந்தமான முறையில் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது வாழைத்தார்கள் அறுவடை சீசன் தொடங்கும் நிலையில் உள்ளது.

    பணிகள் தொடங்கி 4 மாதங்களாகியும் 20 சதவிகித பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. எனவே இன்னும் 1 மாதத்திற்குள் கட்டுமான பணிகளை முடித்து, சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று களக்காடு ஒன்றிய இந்திய கம்யூ. செயலாளர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

    களக்காடு:

    களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் தலைமை தாங்கினார். துணை பொருளாளர் இளையாராஜா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் ஜலில், துணை தலைவர் உசேன், தொகுதி தலைவர்கள், செய்யது, தவுபிக், செயலாளர் உசேன், ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிராஜ் வரவேற்றார்.

    இதில் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் முருகன், ஐ.மு.மு.க. மாவட்ட தலைவர் சித்திக் புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா ஆகியோர் கண்டன உரையாற்றினார். நகர தலைவர் கமாலுதீன் செயற்குழு உறுப்பினர்கள், முகம்மது ரபிக், ஆரிப்பைஜீ, கபீர், ராம்நாடு பீர்முகம்மது, பத்தமடை நகர தலைவர் ஷெரிப், சேரன்மகாதேவி நகர தலைவர் அஹமது, கவுன்சிலர்கள் அப்துல் கபூர், ரஹ்மத்துல்லாஹ் உள்பட ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்தி திணிப்புக்கு எதிராகவும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

    • களக்காடு தனியார் பள்ளி அருகே ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 1 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    களக்காடு:

    களக்காடு தனியார் பள்ளி அருகே ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் சிவன் கோவில் தெருவை ேசர்ந்த கண்ணன் என்ற குண்டாஸ் கண்ணன் (வயது 34) பிளாஸ்டிக் பையில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    இதைப்பார்த்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • நாகராஜ் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
    • சோமசுந்தரம் நாகராஜிடம் அரிவாளை காட்டி மிரட்டி, ரூ. 300 ஐ எடுத்துக் கொண்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர், மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 57). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வடக்கு கள்ளிகுளத்தை சேர்ந்த அப்பாவு மகன் மாடசாமி என்ற சோமசுந்தரம் (37) நாகராஜிடம் செலவுக்கு ரூ. 500 கேட்டுள்ளார். அதற்கு நாகராஜ் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் அரிவாளை காட்டி மிரட்டி, அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ. 300 ஐ எடுத்துக் கொண்டார். மேலும் இதுபற்றி போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

    இதுபற்றி நாகராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சோமசுந்தரத்தை தேடி வருகிறார்.

    • சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • சுவாமி, அம்பாள் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர்.

    களக்காடு:

    களக்காடு சத்தியவா கீஸ்வரர் கோமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் தொடர்ச்சியாக பட்டிட பிரவேச விழா நடந்தது.

    இதையொட்டி சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் விஷேச அலங்காரத்தில் காட்சி அளித்தனர். சிறப்பு தீபாராதனைகளுக்கு பின் சுவாமி, அம்பாள் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை களக்காடு பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.

    • செந்தில்குமார் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • போலீசார் சாதுர்யமாக செந்தில்குமாரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிங்கிகுளம், நவீன் நகரை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார் (வயது 43) என்பவர் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    உடனே போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இருப்பினும் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு செந்தில்குமாரை பிடித்து, களக்காடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்குமாரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 42 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×