search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அறிவுரை"

    • மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் காய்கறி-சிறு தானியங்கள் பயிரிட வேண்டும்.
    • கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுரை வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கலந்துகொண்டு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 744 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் மூலம் நெற்பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல சிறுதானிய பயிர்கள் மற்றும் காய்கறி களுக்கும் முக்கியத்துவம் வழங்கி பயிரிட வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன.

    பெண்களும், இளை ஞர்களும் வேலை வேண்டி விண்ணப்பித்து வருகின்ற னர். இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திகழ வேண்டும். இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு தொழில் புரிவதற்கு முதலாவதாக மனநிலை தேவை, இரண்டாவது தொழில்சார்ந்த தெளிவான சிந்தனை வேண்டும்.

    மேலும் அத்தொழில் புரிவதற்கு உண்டான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தொழில் புரிவதற்கு உண்டான மனநிலை மட்டும் இருந்தால் போதும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு திறன்வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக உதவித்தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரமிளா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, கீழையூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஷீலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வதைத் தடை செய்யும் சட்டத்தின் படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கேட்கக் கூடாது.
    • எளிய முறையிலான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் திரும்ப படித்து எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் பெண் குழந்தைகளின் விகிதம் மற்றும் பிறப்பு விகித எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு அறிமுகப் படுத்தப்ப ட்டுள்ளது.

    இந்த திட்டம் நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதம் முதல் செயல்பட உள்ளது. பெண் மீதான மற்றும் பெண் குழந்தை மீதான வெறுப்பை நீக்கிக் கொள்ள வேண்டும். ஆண்,பெண் பாலின சமத்துவத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வதைத் தடை செய்யும் சட்டத்தின் படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கேட்கக் கூடாது. வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. எளிய முறையிலான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குமரேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சிவகாந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு மஞ்ச ப்பைகளை வழங்கினார்.
    • மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவில் மாவட்ட கலெக்டர் சாந்தி மரக்கன்றுகளை நட்டு வைத்து, அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு மஞ்ச ப்பைகளை வழங்கினார்.

    தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு மாசுக்க ட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து துணிப்பைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீதமாக மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஒரு சிறப்பு நிகழ்வாகவே எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஒரு மரக்கன்று வைத்து வளர்க்க வேண்டும்.

    பொதுமக்கள் தங்கள் குடும்பங்களில் உள்ளவர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களை நினைவுகூறும் வகையில் கட்டாயம் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல் நட்ட மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும். மக்களின் மனதில் இது ஆழமாக பதிய வேண்டும்.

    பல்வேறு வகையான மரங்கள் வளர்க்க வேண்டும். மக்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள காலி இடங்களில் மரக்கன்றுகளை வைத்து வளர்க்க வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் அதிகமாக பசுமை பரப்பு இருக்கின்றது காரணம் வனத்துறை அலுவ லர்கள், உள்ளாட்சி துறைகள், சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்பு களினுடைய பிரதிநிதிகள், தன்னா ர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருடைய ஒத்து ழைப்போடு இந்த பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.
    • பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்ற வற்றை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையி ல்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்க ப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்ற வற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படு வதோடு விபத்து களுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்படு வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, போகிப்ப ண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
    • தடுப்பு முறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வதால் வெறிநோயை 100 சதவிகிதம் ஒழித்து விடலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி கீழ்புதூர் வட்டார வள மைய கல்வி விளையாட்டு வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

    இதை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து, கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    கால்நடை வளர்ப்போர், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மற்றும் பொதுமக்களுக்கு வெறி நோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    வெறிநோய்த் தடுப்பு நாய் வளர்ப்போரின் பொறுப்புணர்வில் தான் ஆரம்பிக்கிறது. அனைத்து நாய்களுக்கும் வருடந்தோறும் வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும். கால்நடை மருத்துவர் அறிவுரையில் இதை ஒரு சமுதாயக் கடமையாகச் செய்ய வெண்டும். தடுப்பு முறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வதால் வெறிநோயை 100 சதவிகிதம் ஒழித்து விடலாம்.

    எனவே பொதுமக்கள், தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு வெறிநோய் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர் அறிவுரை
    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு கூட்டம் டி. கே.எம். மகளிர் கல்லூரியில் இன்று நடந்தது.

    விழிப்புணர்வு கூட்டம்

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    இந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்பது குறித்து தெரிவித்துள்ளனர்.இந்த கருத்துக்களை உங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

    குழந்தைகள் பெண்களுக்கு எதிராக யார் மூலம் குற்றங்கள் நடக்கிறது என்பது தெரியும்.அப்படி நடந்து கொள்பவர்களை முன்கூட்டியே அறிந்து அவர்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மாணவிகள் தங்களது குறிக்கோள் ஒன்றே கடமையாகக் கொண்டு அதனை நோக்கி நடை போட வேண்டும்.

    தற்போது கல்வி, வருங்காலத்தில் என்ன வேலை பார்க்கப் போகிறோம் என்ற நோக்கத்தில் செயல்பட வேண்டும்.

    இந்தக் கட்டத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் கவனத்தை சிதறவிடாமல் செயல்பட வேண்டும்.

    சின்ன சின்ன ஆசைகள் மூலம் உங்களுடைய குறிக்கோள்களை இழந்து விடக்கூடாது.தற்காலிகமாக வரக்கூடிய ஆசைகளை கடந்து செல்பவர்கள் தான் சமூகத்தில் முக்கியமானவர்களாகவும் சமூக கட்டமைப்பை உருவாக்குபவர்களாகவும் வருவார்கள்.

    எதிர்த்து போராட வேண்டும்

    உங்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் அதைக் கொண்டு பயந்து விடக்கூடாது.தைரியமாக எதிர்த்து போராட வேண்டும்.

    கல்லூரி காலங்களை கடந்து தான் நாங்களும் வந்திருக்கிறோம்.கல்லூரி படிக்கும் காலத்தில் திருமணம் செய்து கொண்ட சிலர் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். அது போன்ற நிலை உங்களுக்கு வந்து விடக்கூடாது.

    கவனத்தை சிதறவிடாமல் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தாசில்தார் செந்தில், கல்லூரி தாளாளர் மணி நாதன் மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, குடும்ப நல பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, டி கே எம் கல்லூரி முதல்வர் பானுமதி, வக்கீல் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களும் மாணவர்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    • இந்த காலகட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    திருச்சி,

    மழையின் காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் விடுமுறை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் வணக்கம். நான் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பேசுகிறேன். இன்று 11-11-22 திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருப்பதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நான் விடுமுறை அறிவித்துள்ளேன்.

    பொதுமக்களும் மாணவர்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த காலகட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே சிறார்களும், மாணவர்களும் பொதுமக்களும் மிகவும் கவனமாக சாலையைக் கடக்க வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சில நேரங்களில் மின்னலின் தாக்கமும் இருக்கக்கூடும்.

    எனவே திறந்த வெளி மற்றும் விவசாய நிலங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் இருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய மாவட்டத்தில் மழையின் அளவு அதிகமாக இருக்கிற காரணத்தினால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.அதனால் சிறார்களும் மாணவர்களும் அதில் இறங்க வேண்டாம். பெற்றோர்கள் அவர்களை அனுமதிக்க வேண்டாம். நீர் நிலைகளில் இறங்கி எந்த ஒரு விபத்தும் நேரா வண்ணம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இந்த மழைக்காலத்தில் எந்த ஒரு விபத்தும் நிகழாத வண்ணம் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் என கூறியுள்ளார்.

    கலெக்டரின் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.

    மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் நெஞ்சில் நிறுத்தி அவர் பேசி இருக்கும் ஆடியோ அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    • 10 முக்கியமான கோரிக்கைகளை செயல்படுத்துவது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், கூடலூா் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    ஊட்டி,

    ஊட்டியில் நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 10 முக்கியமான கோரிக்கைகளை செயல்படுத்துவது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், கூடலூா் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் பங்கேற்ற பின் மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் தலா 10 கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா் மற்றும் கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 10 முக்கியமான கோரிக்கைகள் அந்தந்த சட்டப் பேரவை உறுப்பினா்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்துவது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து முதற்கட்டமாக துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றாா்.

    கூட்டத்தில், முதுமலை புலிகள் காப்பக கள இக்குநா் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    3 சட்டமன்ற தொகுதிகளில் தலா 10 கோரிக்கைகளை செயல்படுத்த திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்- கலெக்டர் அறிவுரை

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கிய 101 பேர் பலியானார்கள்.
    • தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய கலெக்டர் அறிவுரை கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022 ஜனவரி முதல் 2022 ஆகஸ்டு வரை 233 வாகன விபத்துக்கள் மூலம் 249 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் 98 இருசக்கர வாகன விபத்துகளில் 101 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விபத்துகளில் 99 சதவீதம் இரு சக்கர வாகனத்தில் பயணித்த வர்கள் தலைக்கவசம் அணியாமல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    பொதுவாக தலைக்க வசம் அணிய வேண்டும். அதுதான் உயிர் கவசம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வதை தவிர்த்து இனி கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.

    இதுபோன்ற விபத்துக்க ளால் உயிரிழந்தவர்களின் நிலை அவர்களோடு முடிவதில்லை. அவர்க ளுக்கு பின்னால் குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தாலே ஒவ்வொருவரும் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை பாதுகாப்பாக பயன்படுத்தி பாதுகாப்புடன் செல்லலாம்.

    எனவே அரசின் விதி முறைகளை கடைபிடித்து 4 சக்கர வாகன ஓட்டுபவர்கள் உரிய வேகத்தில் செல்வதும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்து மிதமான வேகத்தில் செல்வதும், சாலையை கடந்து செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்க ளில் மட்டுமே சாலையை கடப்பது என சாலை விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்பான பய ணத்தை மேற்கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி மாவட்டத்தில் உள்ள பெண் ஊராட்சி தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பிரதீப்குமார் அறிவுரை வழங்கினார்
    • ஆண்களுக்கு எந்தவிதத்திலும் தங்களது செயல்பாட்டில் குறைந்தவர் அல்ல என்பதை தங்களது செயல்பாட்டின் மூலம் நிரூபித்திட வேண்டும் என்றார்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிகளின் பெண் தலைவர்கள் சுதந்திர தின விழாவன்று தேசியக்கொடியை ஏற்றுதல் குறித்தும், நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் ஏற்படும் இடர்பாடுகளை களைதல் குறித்தும் பெண் ஊராட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

    வருகிற சுதந்திர தினத்தன்று பெண் ஊராட்சி தலைவர்கள் தங்களது ஊராட்சியில் தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்திட வேண்டும். பெண் ஊராட்சி தலைவர்கள் தங்களது நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

    தங்களுக்கான உரிமைகளை எப்பொழுதும் விட்டுக்கொடுத்தல் கூடாது. ஊராட்சி நிர்வாகங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.

    பெண் என்பதாலோ, சாதி, மத, இனம் ரீதியாகவோ எவர் ஒருவர் இடர்பாடுகளை ஏற்படுத்தினாலும் அதனை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். பெண் ஊராட்சி தலைவர்களை செயல்படவிடாமல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெண் தலைவர்கள் தங்களது திறமை, ஈடுபாடு மற்றும் சிறந்த செயல்பாடுகளால் சிறப்பாக மக்களுக்கு சேவையாற்றிட வேண்டும்.

    ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆண்களுக்கு எந்தவிதத்திலும் தங்களது செயல்பாட்டில் குறைந்தவர் அல்ல என்பதை தங்களது செயல்பாட்டின் மூலம் நிரூபித்திட வேண்டும் என்றார்.

    முன்னதாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் உள்ள வீடுகளில் வருகிற 15-ந்தேதி வரை வீடுகளில் தேசியக்கொடியினை ஏற்றிடும் வகையில், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களிடத்தில் தேசியக்கொடியை கலெக்டர் மா.பிரதீப்குமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி மற்றும் பெண் ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை வழங்கினார்.
    • மாணவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாவண்ணம் தடுத்திட பள்ளிகளில் சமூக நல்லிணக்கம் மேற்கொள்ள வேண்டும் .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமை தடுப்பு சட்டம்-1989 மற்றும் விதிகள் 1995-ன்கீழ் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்ஒவ்வொரு ஆண்டும் காலாண்டுவாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காணிப்புக் குழு கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு காலாண்டில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்குகள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில், சென்ற ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தொடர்பாக நிலுவையில்உள்ள வழக்குகள்குறித்தும், நீதிமன்றவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப டாத நிலையில் உள்ள வழக்குகளின் எண்ணி க்கை குறித்தும், நீதிமன்ற விசாரணையில் நிலுவை வழக்குகள்குறித்தும், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் குறித்தும், அவ்வழக்குகளின் மீதுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அனைத்து வன்கொடுமை வழக்குகள்மீதும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்குத் தீருதவி உதவித்தொகை விரைந்து வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு அளிக்கும் தீருதவி, ஓய்வூதியம், வேலைவாய்ப்பு போன்ற சலுகைகள் விரைந்து கிடைத்திட அறிவுறுத்தப்பட்டது. 

    எதிர்வரும் காலங்களில் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் விழிப்புணர்வு முகாம் பெருமளவில் நடத்திட காவல்துறையினருக்கும் இக்குழு உறுப்பின ர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மேல்நிலைபள்ளிகளில் மாணவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாவண்ணம் தடுத்திட பள்ளிகளில் சமூக நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வினை பள்ளி மேலாண்மைக்குழு, இக்குழு உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில்குழு உறுப்பினர்மணி க்கண்ணன்எம்.எல்.ஏ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, வேளாண்மை துணை இயக்குநர் விஜயராகவன், இணை இயக்குநர் வேளாண்மை (திட்டம்) சுந்தரம், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) நடராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    ×