search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector advice"

    • ெந்திகுமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் விருதுநகர் கலெக்டர் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் செந்திகுமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில், மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    போதை பழக்கம் நண்பர்கள் மூலமும், சூழ்நி லையின் காரணமாகவும் உருவாகிறது. சரியான விழிப்புணர்வு இருந்தி ருந்தால் போதைக்கு அடிமையாவதை தவிர்க்கலாம். மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தும் மற்ற மாணவர்களிடமிருந்து வரும் பழக்கத்தை நிராகரிக்கும் போது எதிர்வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் சாலை விபத்தில் ஓர் ஆண்டில் சுமார் 15,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நமது மாவட்டத்தில் சுமார் 500 பேர் உயிரிழக்கின்றனர். அதுபோக கை, கால் இழப்பு மற்றும் பெருங்காயங்கள் ஏற்பட்டு பாதிப்ப டைவோரும் உள்ளனர். பெரும்பாலும் இந்த விபத்துக்கள் மது அருந்தி விட்டு வாகனம் இயக்குவதால் ஏற்படுகிறது.

    போதையால் ஒரு நொடியில் ஏற்படக்கூடிய இன்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாழாகிவிடும். படிப்பு, வேலை உள்ளிட்டவைகளால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை கட்டுப்ப டுத்துவதற்கு போதைப் பொருள் தீர்வு அல்ல.

    மாணவர்கள் தங்கள் இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி காலங்களில் விளை யாட்டாக ஆரம்பிக்கும் போதை பழக்க வழக்கம் எதிர்கால வாழ்க்கையை அழித்து விடும். அவற்றை தவிர்க்க நாம் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    • திருநங்ககைள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்படவுள்ளது.
    • போட்டி தூரத்தை நிறவைு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தடை செய்யப்பபட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடக்கிறது. இப்போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தளபதி திடல் வளாகத்தில் நாளை மறுநாள் மாலை 3.30 மணியளவில் நடைபெறும் மாரத்தான் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இப்போட்டிகள் பள்ளி பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ- மாணவிகள் ஆண்கள் பெண்கள் என 4 பிரிவாக 5 கிலோ மீட்டர் தூரமும் திருநங்ககைள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் 2ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் 3ம் பரிசாக ரூ.1,000 மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். போட்டி தூரத்தை நிறவைு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் பொதுப்பிரிவினர்கள் திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டியும் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுமதும பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போட்டியில கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயரை எம்.ஜி.ஆர் உள்விளையாட்டரங்கில் பதிவு செய்திடலாம். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் நா.புகழேந்தி எம்.எல்.ஏ மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் மற்றும் வாலிபால் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவேண்டும் என கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    • சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை, மேல்நிலை, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வருகிற 10 மற்றும் 24-ந் தேதிகளில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை அந்தந்த பள்ளிகளில் சிறப்பு மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்த திட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் பள்ளிகளில் படிப்பை தொடராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கும் வகையில் அனைவரும் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    இந்த கூட்டத்தின் நோக்கம், பள்ளிகளில் படிப்பை தொடராத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவருக்கு தேவையான படிப்பை தொடரும் வகையில் துணை தேர்வு எழுதுவதற்கான ஆலோசனை வழங்குதல் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த ஆலோசனை வழங்குவதே ஆகும்.

    எனவே மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று வரும் காலத்தில் இடைநிற்றல் என்ற சொல்லே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் காய்கறி-சிறு தானியங்கள் பயிரிட வேண்டும்.
    • கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுரை வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கலந்துகொண்டு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 744 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் மூலம் நெற்பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல சிறுதானிய பயிர்கள் மற்றும் காய்கறி களுக்கும் முக்கியத்துவம் வழங்கி பயிரிட வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன.

    பெண்களும், இளை ஞர்களும் வேலை வேண்டி விண்ணப்பித்து வருகின்ற னர். இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திகழ வேண்டும். இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு தொழில் புரிவதற்கு முதலாவதாக மனநிலை தேவை, இரண்டாவது தொழில்சார்ந்த தெளிவான சிந்தனை வேண்டும்.

    மேலும் அத்தொழில் புரிவதற்கு உண்டான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தொழில் புரிவதற்கு உண்டான மனநிலை மட்டும் இருந்தால் போதும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு திறன்வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக உதவித்தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரமிளா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, கீழையூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஷீலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.
    • பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்ற வற்றை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையி ல்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்க ப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்ற வற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படு வதோடு விபத்து களுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்படு வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, போகிப்ப ண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலெக்டர் அறிவுரை
    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு கூட்டம் டி. கே.எம். மகளிர் கல்லூரியில் இன்று நடந்தது.

    விழிப்புணர்வு கூட்டம்

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    இந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்பது குறித்து தெரிவித்துள்ளனர்.இந்த கருத்துக்களை உங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

    குழந்தைகள் பெண்களுக்கு எதிராக யார் மூலம் குற்றங்கள் நடக்கிறது என்பது தெரியும்.அப்படி நடந்து கொள்பவர்களை முன்கூட்டியே அறிந்து அவர்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மாணவிகள் தங்களது குறிக்கோள் ஒன்றே கடமையாகக் கொண்டு அதனை நோக்கி நடை போட வேண்டும்.

    தற்போது கல்வி, வருங்காலத்தில் என்ன வேலை பார்க்கப் போகிறோம் என்ற நோக்கத்தில் செயல்பட வேண்டும்.

    இந்தக் கட்டத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் கவனத்தை சிதறவிடாமல் செயல்பட வேண்டும்.

    சின்ன சின்ன ஆசைகள் மூலம் உங்களுடைய குறிக்கோள்களை இழந்து விடக்கூடாது.தற்காலிகமாக வரக்கூடிய ஆசைகளை கடந்து செல்பவர்கள் தான் சமூகத்தில் முக்கியமானவர்களாகவும் சமூக கட்டமைப்பை உருவாக்குபவர்களாகவும் வருவார்கள்.

    எதிர்த்து போராட வேண்டும்

    உங்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் அதைக் கொண்டு பயந்து விடக்கூடாது.தைரியமாக எதிர்த்து போராட வேண்டும்.

    கல்லூரி காலங்களை கடந்து தான் நாங்களும் வந்திருக்கிறோம்.கல்லூரி படிக்கும் காலத்தில் திருமணம் செய்து கொண்ட சிலர் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். அது போன்ற நிலை உங்களுக்கு வந்து விடக்கூடாது.

    கவனத்தை சிதறவிடாமல் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தாசில்தார் செந்தில், கல்லூரி தாளாளர் மணி நாதன் மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, குடும்ப நல பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, டி கே எம் கல்லூரி முதல்வர் பானுமதி, வக்கீல் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களும் மாணவர்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    • இந்த காலகட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    திருச்சி,

    மழையின் காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் விடுமுறை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் வணக்கம். நான் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பேசுகிறேன். இன்று 11-11-22 திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருப்பதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நான் விடுமுறை அறிவித்துள்ளேன்.

    பொதுமக்களும் மாணவர்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த காலகட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே சிறார்களும், மாணவர்களும் பொதுமக்களும் மிகவும் கவனமாக சாலையைக் கடக்க வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சில நேரங்களில் மின்னலின் தாக்கமும் இருக்கக்கூடும்.

    எனவே திறந்த வெளி மற்றும் விவசாய நிலங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் இருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய மாவட்டத்தில் மழையின் அளவு அதிகமாக இருக்கிற காரணத்தினால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.அதனால் சிறார்களும் மாணவர்களும் அதில் இறங்க வேண்டாம். பெற்றோர்கள் அவர்களை அனுமதிக்க வேண்டாம். நீர் நிலைகளில் இறங்கி எந்த ஒரு விபத்தும் நேரா வண்ணம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இந்த மழைக்காலத்தில் எந்த ஒரு விபத்தும் நிகழாத வண்ணம் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் என கூறியுள்ளார்.

    கலெக்டரின் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.

    மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் நெஞ்சில் நிறுத்தி அவர் பேசி இருக்கும் ஆடியோ அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    தண்ணீர் திறப்பு எதிரொலியால் கால்வாய் பக்கம் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம் என்று கலெக்டர் பிரபாகர் கூறியுள்ளார். #collector

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவேரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் வெள்ள நீர் வருகிறது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதும் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவேரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே பொதுமக்கள் மற்றும் காவேரி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கு வேண்டும். அவர்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். காவேரி ஆற்றில் இறங்கவோ, ஆற்றினை கடக்கவோ முயற்ச்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனக் கால்வாய்களிலும் மேட்டூர் வாய்க்காலிலும் அதன் முழுக் கொள்ளளவிற்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை கால்வாய்களின் அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கு வேண்டும். கால் வாயில் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் செல்லும் போது பொதுமக்கள் கவனமுடனும் மிகுந்த எச்சரிக்கையாகயுடனும் இருக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் அதில் கூறியுள்ளார்.

    ×