search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமவளம்"

    • மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படு வதாக புகார்கள் எழுந்துள்ளன.
    • தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமான கேர ளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

    கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்க ளிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்க ளும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படு வதாக புகார்கள் எழுந்துள்ளன.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சங்க நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினார்கள்.
    • சிறப்பு விருந்தினர்களாக தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்து கொண்டார்.

    சென்னை:

    தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்க முப்பெரும் விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.

    சங்கத்தின் பொதுக்குழு புதிய நிர்வாகிகள், பொறுப்பேற்றல், தலைநகர் ஐ.கே.எஸ். நாராயணனின் 60-ம் ஆண்டு மணிவிழா எவரெஸ்ட் சிகரம் தொட்ட முத் தமிழ் பெண் என்.முத்தமிழ் செல்விக்கு பாராட்டு விழா ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இதில் சங்கத் தலைவராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.கே.எஸ். நாராயணன், செயலாளர், எம்.சாமிநாதன், பொருளாளர், எக்ஸ்பிரஸ் எல்லப்பன் ஆகியோரை சங்க நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார், மணல் லாரி சங்கத் தலைவர் செல்லா ராசா மணி, லாரி சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், தொழில் அதிபர் ஆர்.ஜெயராமன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

    • கனிம வளங்களை அதிக பாரத்துடன் கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது
    • கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் உரிமையாளர் யார்? என்று போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவுக்கு 100-க்கணக்கான லாரிகள் கனிம வளங்களை அதிக பாரத்துடன் கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியா மலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியா மலும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் படந்தாலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 4 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் உரிமையாளர் யார்? என்று போலீசார் தொ டர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து துறை சார்ந்த கலந்தாய்வு கூட்டம்
    • இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், மே.22-

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் கனிமவள விதிமீறல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கனிமவளம் அனுமதியில்லாமலும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தணிக்கை மற்றும் கண்காணிக்கவும், கனிமவள புவியியல் ஆய்வாளர், தனி வட்டாட்சியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து வாகன சோதனை இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் கடந்த வாரம் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அதிக பாரம் ஏற்றி வந்த 4 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக பாரம் ஏற்றியும், அனுமதியில்லாமலும் வருகிற வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும், கனிமவளங்களை கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தினை தவிர்த்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள குழுவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்திடவும், வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் விதிமீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் இதுபோன்ற கனிமவள விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீதும் சோதனை மேற்கொண்டு, அபராதம் விதித்து உரிய நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு குழுவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மதுரை மண்டல பறக்கும் படை துணை இயக்குநர் குருசாமி, துணை இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) தங்கமுனியசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியன், தனி தாசில்தார்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கலெக்டரின் உத்தரவில், கனிம வள உதவி கமிஷனர் வள்ளல், கண்காணிப்பு அதிகாரியால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.
    • விவசாயிகள்-பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து கல் குவாரி உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறை யினரிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குவாரி முறைகேடுகள் குறித்து குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீதும் கனிம வளத்துறையினர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

    கடந்த 2022 நவம்பர் 14-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலக கனிமவளத்துறை அலுவலகத்தில் கலெக்டர் வினீத் அதிரடி ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். ஆனாலும் துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கும்வகையில் இல்லை. இதனால் கனிமவ ளத்துறை உதவி கமிஷனர் வள்ளலை பதவியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    கலெக்டரின் உத்தரவில், கனிம வள உதவி கமிஷனர் வள்ளல், கண்காணிப்பு அதிகாரியால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.மாதாந்திர விவசாயிகள் கூட்டம், அமைச்சர் நடத்திய ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்கவில்லை. கனிமவள த்துறை அலுவல கத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு பெண் இருப்பதாக வைக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மாவட்ட நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளார். இத்தகைய காரணங்களுக்காக உதவி இயக்குனர் பணியில் இருந்து வள்ளல் நீக்கப்படுகிறார்.அவருக்கு பதில் புவியியலாளர் (ஜியாலஜிஸ்ட்) சச்சின் ஆனந்த், கூடுதல் பொறுப்பாக மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக நியமிக்க ப்படுகிறார் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வள்ளலிடம் நிருபர்கள் கருத்து கேட்க முயன்ற போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலக கனிமவ ளத்துறை அலுவலகத்தில் கோமதி என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவரை தனிப்பட்ட முறையில் உதவி இயக்குனர் வள்ளல் பணியமர்த்தி இருந்தார். அரசின் சார்பில் நியமிக்கப்படாமல் தனிப்பட்ட முறையில் பணியமர்த்தியதால் இது குறித்து விளக்கம் அளிக்க கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் வள்ளல் எந்தவித விளக்கமும் அளிக்கவில்ைல.

    மேலும் கோமதிக்கு கல்குவாரி உரிமையாளர்கள் தரப்பில் இருந்து மாதந்தோறும் சமபளம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கனிம வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள்-பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து கல் குவாரி உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கோமதியை பணியில் இருந்து நீக்க இன்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டிய தமிழக அரசுத் துறைகள் அதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.
    • கனிமவளக் கொள்ளையை அனுமதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கிரானைட் மற்றும் கருங்கல் குவாரிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையும் சலுகை காட்டுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டிய தமிழக அரசுத் துறைகள் அதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.

    இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கனிமவளக் கொள்ளையை அனுமதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியிருக்கிறது. ஆனால், அதை சற்றும் மதிக்காமல் கிரானைட் கொள்ளை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறையும் செயல்படுவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிரானைட் கொள்ளை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படும் அரசுத்துறைகள் குறித்து விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை பற்றி உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். அதுவரை கிரானைட் குவாரிகளை மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×