search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் கனிமவள உதவி இயக்குனரை தொடர்ந்து அலுவலக பெண் உதவியாளர் மீதும் நடவடிக்கை
    X

    வள்ளல் மற்றும் கோமதி

    திருப்பூர் கனிமவள உதவி இயக்குனரை தொடர்ந்து அலுவலக பெண் உதவியாளர் மீதும் நடவடிக்கை

    • கலெக்டரின் உத்தரவில், கனிம வள உதவி கமிஷனர் வள்ளல், கண்காணிப்பு அதிகாரியால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.
    • விவசாயிகள்-பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து கல் குவாரி உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறை யினரிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குவாரி முறைகேடுகள் குறித்து குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீதும் கனிம வளத்துறையினர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

    கடந்த 2022 நவம்பர் 14-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலக கனிமவளத்துறை அலுவலகத்தில் கலெக்டர் வினீத் அதிரடி ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். ஆனாலும் துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கும்வகையில் இல்லை. இதனால் கனிமவ ளத்துறை உதவி கமிஷனர் வள்ளலை பதவியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    கலெக்டரின் உத்தரவில், கனிம வள உதவி கமிஷனர் வள்ளல், கண்காணிப்பு அதிகாரியால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.மாதாந்திர விவசாயிகள் கூட்டம், அமைச்சர் நடத்திய ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்கவில்லை. கனிமவள த்துறை அலுவல கத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு பெண் இருப்பதாக வைக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மாவட்ட நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளார். இத்தகைய காரணங்களுக்காக உதவி இயக்குனர் பணியில் இருந்து வள்ளல் நீக்கப்படுகிறார்.அவருக்கு பதில் புவியியலாளர் (ஜியாலஜிஸ்ட்) சச்சின் ஆனந்த், கூடுதல் பொறுப்பாக மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக நியமிக்க ப்படுகிறார் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வள்ளலிடம் நிருபர்கள் கருத்து கேட்க முயன்ற போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலக கனிமவ ளத்துறை அலுவலகத்தில் கோமதி என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவரை தனிப்பட்ட முறையில் உதவி இயக்குனர் வள்ளல் பணியமர்த்தி இருந்தார். அரசின் சார்பில் நியமிக்கப்படாமல் தனிப்பட்ட முறையில் பணியமர்த்தியதால் இது குறித்து விளக்கம் அளிக்க கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் வள்ளல் எந்தவித விளக்கமும் அளிக்கவில்ைல.

    மேலும் கோமதிக்கு கல்குவாரி உரிமையாளர்கள் தரப்பில் இருந்து மாதந்தோறும் சமபளம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கனிம வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள்-பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து கல் குவாரி உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கோமதியை பணியில் இருந்து நீக்க இன்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×