search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள் பறிமுதல்"

    • உரிய ஆவணம் இல்லாமல் இயங்கிய ஆட்டோக்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
    • ராஜபாளையம் நகரில் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, முடங்கியார் சாலை, பஞ்சு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் திடீரென ஸ்ரீவில்லி புத்தூர் வட்டார போக்கு வரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா,

    ராஜபாளையம் காவல் துறை துணை கண்கா–ணிப் பளர் பிரீத்தி, விருதுநகர் ஆயுதப்படை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிகுமார், ஆகியோர் அதிரடியாக 'திடீர்' வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    உரிய ஆவணம் இல்லாத ஆட்டோக்கள், சரக்கு வேன் கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த வாக னங்களுக்கு ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் அபராதமாக விதிக் கப்பட்டது.

    மேலும் ஆட்டோக்களில் அரசு விதிகளை மீறி அதிக அளவில் கல்லூரி மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து இருக்கையை விட அதிக மான அளவில் ஆட்களை ஏற்றக்கூடாது என அறி வுரை வழங்கினர்.

    இது போன்ற திடீர் வாகன சோதனைகள் ராஜ பாளையம் நகரில் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியு றுத்தி உள்ளனர்.

    • போலீசாரின் சோதனைக்கு பயந்து சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரிகளும் சிக்கின
    • களியக்காவிளை அருகே இன்று அதிகாலை சோதனை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங் களில் இருந்தும் 100-க் கணக்கான லாரிகள் கனிம வளங்களை வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளா விற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு-பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு, தொடர் விபத்துக்களும் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியா ளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியா மலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் உத்தர விட்டனர். அதன்படி கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு கனிம வளங்கள் கடத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை தனிப்பிரிவு போலீசார் படந்தாலுமூடு பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 4 வாகனங்கள் வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அந்த வாகனங்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாகனங்கள் களியக்கா விளை போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு செல்லப் பட்டன. மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் உரிமையாளர்கள் யார்? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் குழித்துறை முதல் களியக்காவிளை வரை சாலையோரம் கனிமவளம் ஏற்றிய லாரிகள் நிற்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த லாரிகளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அதிக அளவில் கனிம வளங்கள் ஏற்றப்பட்டி ருப்பது தெரியவந்தது.

    ஆனால் லாரியில் டிரைவர் உள்பட யாரும் இல்லை. இதனால் லாரி களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். போலீசாரின் சோதனை காரணமாக, கனிமவளங்களை கடத்திச் செல்லும் வாகனங்களை ஆங்காங்கே விட்டு விட்டு டிரைவர்கள் தப்பிச் செல்வது ஏற்கனவே நடந்து வருகிறது. அதுபோலத் தான் தற்போதும் இந்த வாகனங்களை நிறுத்தி விட்டு, டிரைவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அந்த லாரிகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், அதனை வைத்து உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனிம வளங்களை அதிக பாரத்துடன் கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது
    • கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் உரிமையாளர் யார்? என்று போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவுக்கு 100-க்கணக்கான லாரிகள் கனிம வளங்களை அதிக பாரத்துடன் கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியா மலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியா மலும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் படந்தாலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 4 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் உரிமையாளர் யார்? என்று போலீசார் தொ டர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்த அதிகாரிகள்
    • 2 வாகனங்களிலும் கொண்டு வந்த ரேசன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்கு கொண்டு சென்றது

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே சுங்கான்கடை பகுதியில் இன்று அதிகாலையில் தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு வந்த மினி லாரியை அதிகாரிகள் கைகாட்டி நிறுத்தினர். ஆனால் அந்த லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றது. உடனே அதிகாரிகள் அந்த வாகனத்தினை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றதும் அந்த வாகனத்தினை டிரைவர் சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

    பின்னர் மினி லாரியை சோதனை செய்ததில் அதில் சுமார் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தக்கலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது டிரைவர் தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்து அந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

    முதற்கட்ட விசாரணை யில் 2 வாகனங்களிலும் கொண்டு வந்த ரேசன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்கு கொண்டு சென்றது என தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார்விளை அரசு கிட்டங்கியில் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

    • குடியாத்தம் நகராட்சி எச்சரிக்கை
    • உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிகளை செய்ய அறிவுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நக ராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின் அடிப்படையில் கழிவுகளை அகற்ற விரிவான திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

    கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது, மலக்கசடு, கழிவுநீரை வாகனங்கள் மூலம் அகற்றுதல் உள்ளிட்டபணிகள் ஒழுங்குப்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 2022-ம் ஆண்டில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் கழிவுநீரை அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    நகராட்சி மூலம் 2 ஆண்டு செல்லுபடியாகும் உரிமம் பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிகளை செய்ய வேண்டும். செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும்.

    அவ்வாறு உரிமம் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிப்ரவரி 24-ந் தேதி முதல் தற்போது வரை 1,254 வாகனங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்டன.
    • 94 வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவையில் அனுமதி யில்லாமல் கனிமவளங்கள் கடத்தி சென்ற 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் இருந்து கேரளத்துக்கு அனுமதியில்லாமல் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வரப்பெற்றன. இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள எல்லை சோதனைச் சாவடிகளில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய குழு தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    அனுமதி வழங்கப்பட்ட கனிம இருப்பு கிடங்குகளிலிருந்து கேரளத்துக்கு எடுத்துசெல்ல புவியியல் மற்றும் சுரங்கத் துறை மூலம் சீனியரேஜ் தொகை, கனிம அறக்கட்டளை நிதி மற்றும் பசுமை வரி ஆகியவற்றை செலுத்திய பின் 4 யூனிட், 6 யூனிட் அளவுகளில் எடுத்து செல்ல போக்குவரத்து நடைச்சீட்டு கள் வழங்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நடைச்சீட்டில் நாள், நேரம் போன்ற விவரங்கள் விடுபட்டிருந்தலோ, பிழை திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக கனிமங்கள் ஏற்றிச்செல்லப்பட்டாலோ கனிம வளத்துறை வருவாய்த்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி முதல் தற்போது வரை 1,254 வாகனங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்டன. மேலும், கடந்த ஜூலை 2022 முதல் மார்ச் 2023 வரை உரிய அனுமதியில்லாமல் கனிமவ ளங்களை கடத்தி சென்ற 54 வாகனங்கள் கனிமவளம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக கனிம வளங்க ளை ஏற்றிச் சென்ற 94 வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகளை கண்டறியும் வகையில் 15-க்கும் மேற்பட்ட குவாரிகளில் ஆய்வுகள் நடைபெற்றன. இதில் 2 குவாரிகளில் விதிமீறல்கள் கண்ட றியப்பட்டு உரிய அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குவாரி குத்தகை வழங்கப்படும் நேர்வுகளில் அனுமதி கோரும் புலத்தினை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு எல்லைத் தூண்கள் நடுவதற்கு அனைத்து குத்தகை தாரர்களுக்கும் அறிவு றுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள்.
    • மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    2023 புத்தாண்டு பாதுகாப்பு முன்னிட்டு கடலுார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில், கூடுதல் காவல் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், 2 உதவி போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டு, 33 இன்ஸ்பெக்டர்கள், 231 சப் இன்ஸ்பெக்டர் கள், சிறப்பு உதவியாளர்கள், மற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் 8 மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் மேற்கொண்டு பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். மேலும் கூடுதலாக கடலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும்.

    காவல்துறை வாகனங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணி மேற்கொள்வார்கள். முக்கியமான இடங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். தங்கும் இடங்களில் காவல் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். கோவில்கள், தேவால யங்கள் போன்ற வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களான தேவனாம்ப ட்டினம் வெள்ளி கடற்கரை, பிச்சாவரம் சுற்றுலா மையம், சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டு அன்று இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. மதுஅருந்திவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    • மணல் கடத்திய வாகனங்களை சிறைபிடித்து பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • வருவாய்துறை , வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீங்காடு கிராம பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்த மழை பொழிவால் கிராமத்தை ஒட்டி உள்ள காப்புக்காடு வனப் பகுதிகளில் வழிந்தோடும் நீரோடை மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி நேற்று 5 டிராக்டர், ஜேசிபி எந்திரம் மூலமாக மணல் கடத்திய நிலையில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து மணல் கடத்திய வாகனங்களை சிறைபிடித்து பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறை, வருவாய்த்து றை துறை, வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பாலக்கோடு வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து டிராக்டர்கள் மற்றும் ஒரு ஜேசிபியை பறிமுதல் செய்தனர்.

    • கழிவு மண் வெட்டி கடத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை சேர்ந்த வர்கள் வெங்கட்ராமன், செங்கமலம். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் நெடுஞ்சாலைத்துறை பணி முடிந்து காலி செய்த இடத்தில் இருந்த கழிவு மண்ணை எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றனர்.  தகவல் அறிந்த கடலூர் கனிமவளம் வருவாய் ஆய்வாளர் வேனுநாதன், பண்ருட்டி வட்டாட்சியர் சிவா. கார்த்திகேயன் ஆகியோர் அங்கு விரைந்தனர். அப்போது 2 ஜே.பி.பி. எந்திரங்கள், மற்றும் 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    • 4 வேன், ஜேசிபி இயந்திரம் மீது நடவடிக்கை
    • அபராதம் விதிக்கப்பட்டது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளான உமராபாத், புறவழிச்சாலை, ரெட்டி தோப்பு, வெங்கிலி உள்ளிட்ட இடங்களில் ஆம்பூர் போக்குவரத்து வட்டார ஆய்வாளர் அமர்நாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் உரிமம் இல்லாத 16 ஷேர் ஆட்டோ, 4 வேன், ஜேசிபி இயந்திரம் சரக்கு வாகனங்கள் என 23 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    • ஏராளமான கட்டுமானப் பொருட்கள் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் கவனிக்கப்படாமல் கிடக்கின்றன.
    • வாகனங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டனர்.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    முக்கியமான வீதிகளில் வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவதால், சாலையின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதோடு அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.

    அத்தகைய வாகனங்களை அகற்றுவதற்காக கடந்த 22-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை அங்கீகரிக்கப்படாத இடங்களில்வாகன நிறுத்தத்தை தவிர்க்க சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.

    இதேபோல், ஏராளமான கட்டுமானப் பொருட்கள் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் கவனிக்கப்படாமல் கிடக்கின்றன. 10 இடங்களில் கிடந்த கட்டுமான பொருட்களை அகற்றுமாறு உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டன. இதேபோல் 107 இடங்களில் கடை பலகைகள், நீட்டிக்கப்பட்ட கடைகள் போன்ற பிறதடைகளையும் அகற்றி வழக்குபதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    கேட்பாரற்ற வாகனங்கள், கைவிடப்பட்ட வாகனங்கள் போலீசாரின் தனியார் இழுவை வாகனங்களை கொண்டு அகற்ற (பறிமுதல்) செய்யப்பட்டது. மொத்தம் 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வாகனங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டனர்.எதிர்காலத்தில் சாலைப் பயனாளர்களுக்கு இடையூறாகவோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறாக வோநிறுத்த மாட்டோம் என்று உத்தரவாத கடிதங்கள் பெறப்பட்டன . இந்த சிறப்பு வாகன தணிக்கைகள் தொடரும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×