search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscation of vehicles"

    • தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள்.
    • மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    2023 புத்தாண்டு பாதுகாப்பு முன்னிட்டு கடலுார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில், கூடுதல் காவல் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், 2 உதவி போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டு, 33 இன்ஸ்பெக்டர்கள், 231 சப் இன்ஸ்பெக்டர் கள், சிறப்பு உதவியாளர்கள், மற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் 8 மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் மேற்கொண்டு பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். மேலும் கூடுதலாக கடலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும்.

    காவல்துறை வாகனங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணி மேற்கொள்வார்கள். முக்கியமான இடங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். தங்கும் இடங்களில் காவல் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். கோவில்கள், தேவால யங்கள் போன்ற வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களான தேவனாம்ப ட்டினம் வெள்ளி கடற்கரை, பிச்சாவரம் சுற்றுலா மையம், சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டு அன்று இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. மதுஅருந்திவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    ×