search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுப்பாடு"

    • சமூக வலைதளத்தில் வைரலான விபத்து காட்சிகளால் பரபரப்பு
    • படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அழகியமண்ட பம் அருகே சம்பவத்தன்று ஒரு கார் வேகமாக சென்றது. அந்தக் கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் சென்ற கார் சாலையின் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.மேலும் சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஆட்டோ வையும் இடித்து சேதப்படு த்தியது. இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் கட்டுப் பாட்டை இழந்த கார், இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதிய காட்சிகள் சமூக வலை தளத்தில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தது கருங்கல் பகுதியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் என்பதும் அவர் தனது பெண் நண்பருடன் வந்த போது தான் விபத்து ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

    விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் வந்த பிலாங்காலை சேர்ந்த சோனி (வயது43) படுகாய மடைந்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் சேத மடைந்த ஆட்டோவில் இருந்த டிரைவர் இரவி புதூர் கடை பகுதியை சேர்ந்த எட்வின் வசந்த் என்பவரும் காயம் அடைந்தார்.

    • பொன்னேரி அருகே உள்ள கண்டெய்னர் யார்டிற்கு செல்லும் வாகனங்கள் மட்டும் மதியம் 12 பணி முதல் 4 மணி வரை அனுமதிக்கப்படும்.
    • விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகன ஓட்டிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 500 முதல் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் மற்றும் அதானி துறைமுகம், மற்றும் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, பெட்ரோலிய நிறுவனம் தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

    மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்டச்சாலை வழியாக வந்து செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் அவ்வழியாக சென்றால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்பதால் மீஞ்சூர் நகரம் வழியாக பொன்னேரி நகரை கடந்து தச்சூர் வழியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை அடைகிறது. இதனால் பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனை தவிர்க்கும் வகையில் மீஞ்சூர்- தச்சூர் கூட்டுச்சாலையில் பொன்னேரி வழியாக செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் விதித்து பொன்னேரி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.

    அதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பொன்னேரி அருகே உள்ள கண்டெய்னர் யார்டிற்கு செல்லும் வாகனங்கள் மட்டும் மதியம் 12 பணி முதல் 4 மணி வரை அனுமதிக்கப்படும்.

    விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகன ஓட்டிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 500 முதல் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.

    தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வட்டாட்சியர் செல்வக்குமார் தெரிவித்து உள்ளார்.

    • காவல்துறையினருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் அவசியமானது.
    • பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டியது காவல்துறையினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்

    திருச்சி

    திருச்சி கிராப்பட்டியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதல் அணி மைதானத்தில் பயிற்சி காவலர்களின் 7 மாத பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. சிறப்பு காவல் படை முதல் அணி கமாண்டன்ட் மு.ஆனந்தன் விழாவை ஒருங்கிணைத்தார். இதில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த 274 பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர் பேசுகையில், பயிற்சி முடித்த நீங்கள் காவல்துறையின் மாண்பையும், பெருமையையும் பேணிக்காக்கும் வகையில் உங்கள் பணியை அமைத்துக் கொள்ள வேண்டும். காவல்துறையினருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. காவல் பணி என்பது பொதுமக்களிடம் கனிவையும், அன்பையும் காட்ட வேண்டும். கயவர்களையும், சமூக விரோதிகளையும் இரும்பு கரம் கொண்டு அடக்க துணிய வேண்டும். பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டியது காவல்துறையினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என கூறினார்.

    நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர்கள் சுரேஷ்குமார், அன்பு, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானம் மற்றும் திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த பெண் காவலர்கள் உள்ளிட்ட 622 பேரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாக்களும் நடைபெற்றன. மேற்கண்ட விழாக்களில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார், கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
    • காற்றில் பறக்கும் களைக்கொல்லிகளை சுவாசிப்பதால் பாதிப்புகள் ஏற்படுகிறது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இந்தநிலையில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லிகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவித்து வருகின்றன.எனவே களைக்கொல்லிகளின் பயன்பாட்டை முழுமையாகத் தடுக்க வேண்டும், ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    நமது பாரம்பரிய விவசாயத்தில் ரசாயனங்களின் பயன்பாடு முற்றிலுமாக இல்லை.மண்ணை வளமாக்க மாட்டுச்சாணம், ஆட்டுரம் போன்ற இயற்கை உரங்களையே பயன்படுத்தினார்கள்.அதுமட்டுமல்லாமல் அவர்கள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில்லை.மாறாக பூச்சி விரட்டிகளையே பயன்படுத்தினர்.எல்லாவற்றுக்கும் மேலாக களைக்கொல்லிகளின் பயன்பாடு என்பது நமது முன்னோர்கள் காலத்தில் அறவே இல்லாத ஒன்றாகும். நிலத்தை நன்கு உழும்பொழுது பெருமளவு களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.புல் போன்ற களைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகி விடும்.மீதமுள்ள களைகளை கூலி ஆட்கள் மூலம் அகற்றுவார்கள்.ஆனால் தற்போது கூலி ஆட்கள் பற்றாக்குறையால் முழுவதுமாக களைக்கொல்லிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    அதிலும் தடை செய்யப்பட்ட, வீரியம் மிக்க களைக்கொல்லிகள் பலவும் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது.இத்தகைய களைக்கொல்லிகள் படிப்படியாக மண்ணுக்குள் ஊடுருவி மண் வளத்தைப் பாதிக்கிறது.அத்துடன் நிலத்தடி நீர் மாசடைவதற்கும் காரணமாகிறது.மேலும் பல பகுதிகளில் காற்றில் பறக்கும் களைக்கொல்லிகளை சுவாசிப்பதால் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

    • பாபு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து திருப்பயத்தங்குடி வடிகால் வாய்க்காலில் விழுந்தார்.
    • நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சுரேஷ் பாபு (வயது 43) விவசாய கூலித்தொழிலாளி.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பயத்தங்குடியில் இருந்து சோழங்கநல்லூர் சென்றுள்ளார்.

    அப்போது சுரேஷ் பாபு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் திருப்பயத்தங்குடி வடிகால் வாய்க்காலில் விழுந்தார்.

    அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சுரேஷ்பாபுவை மீட்டு திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.

    அங்கு சுரேஷ்பாபுவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் சுரேஷ் பாபுவின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் சுரேஷ்பாபுவின் மனைவி மீனா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்து அமைப்புகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
    • வழிபாட்டு ஸ்தலங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும்.

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும்.

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண் டாடப்படும். வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படு வதையடுத்து இந்து அமைப் புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள். இந்து முன்னணி, பாரதிய ஜனதா இந்து மகா சபா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்படுகிறது.

    பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 2, 3, 4-ந் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் சிலை களை கரைப்பது தொடர் பாக இந்த அமைப்புகளு டன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்த இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்யவேண்டும். புதிய இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. 10 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் பிரதிஷ்டை செய்யக்கூடாது. சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் ஒரு குழு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    போலீசாரின் அனுமதி பெற்ற பின்னரே சிலை களை பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கிடையாது.மக்கும் பொருட்களால் ஆன சிலைகளை மட்டுமே பூஜைக்கு வைக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன.

    வழிபாட்டு ஸ்தலங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அதற்கென்று ஒதுக்கப்பட்ட பாதையின் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். கூம்பு வடிவ ஒளிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.மக்காத பொருட்களால் செய்த விநாயகர் சிலைகளை கடலில் நீர் நிலைகளிலும் வீசக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் இடங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அந்தந்த பேரூராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கிறார்கள்.

    ×