search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனரக வாகனங்கள்"

    • மழை காரணமாக 3 முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் கட ந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி யில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    நம்பியூரில் கடந்த 4-ந் தேதி இரவு 61 மில்லி மீட்டர், சத்தியமங்கலத்தில் 53 மில்லி மீட்டர் மழை பெய்ததால் நம்பியூர்-அரசூர் சாலையில் தட்டாம்பாளையம் தரைமட்ட பாலம் வெள்ளப்பெருக்கில் மூழ்கி சேதம் அடைந்தது. இத னால் 2 நாட்களாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அதன் பின் தரைமட்ட பாலம் சீரமைத்து 7-ந் தேதி வாகன போக்குவரத்து தொடங்கியது.

    அன்று இரவு சத்தியமங்கலத்தில் 18 மில்லி மீட்டரும், நம்பியூரில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்ததால் தரைமட்ட பாலம் மீண்டும் மூழ்கி 2-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் நம்பியூ ரில் 123 மில்லி மீட்டர் மழை பெய்த தால் 3-வது முறையாக தரை மட்ட பாலம் வெள்ள த்தில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறாக மழை காரணமாக 3 முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் தரைமட்ட பாலம் வழியாக குறைந்த அளவு நேற்று மதியம் மழை நீர் சென்றதால் நெடு ஞ்சாலை துறை சார்பில் மீண்டும் பாதை சீரமைக்கும் பணி முடிந்து தரைமட்ட பாலம் வழியாக இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

    கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என நெடுஞ்சாலைத்துறை சார்பாக போர்டு வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து இலகுரக வாகனங்கள் மட்டுமே அந்த வழியாக சென்று வருகிறது.

    • பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
    • போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாக னங்கள் வந்து செல்ல தடை விதித்து நேர கட்டுபாடு அறிவிக்கப்பட்டு நகர எல்லைகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    சீர்காழி நகரில் பிரதான சாலைகளான பிடாரி வடக்கு வீதி, கடைவீதி காமராஜர்வீதி, கொள்ளிடமுக்கூட்டு, பழைய பேந்து நிலையம், தென்பாதி, புதிய பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது.

    பிரதான சாலைகளில் உள்ள பலசரக்கு விற்பனை கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஆகியவற்றுக்கு லாரிகளில் பொருட்கள் எடுத்து வரும்போது சாலையின் இருப்புறமும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றா மல் நிறுத்திவைத்து பொருட்களை இறக்குவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு, வாகனஓட்டிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டது.

    பள்ளி நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இது குறித்து பொதுமக்கள் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு மீனாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, போக்குவரத்தை சீரமை க்கவும், ஒருவழிப்பாதை, நோபார்கிங் ஆகியவற்றை பின்பற்றாத வாகனஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீஸ்சா ருக்கு அறிவுறுத்தினார்.

    அதன்படி போக்குவரத்து போலீசார் சீர்காழி நகரில் போக்குவரத்து விதிமுறை களை மீறும் வாகனஓட்டிகளை எச்சரித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளி நேரங்களில் நகருக்குள் காலை 8மணி முதல் 10மணி வரையிலும், மாலை 4மணி முதல் 6மணிவரையிலும் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதித்து அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகரின் எல்லை நுழைவு பகுதியில் போக்குவரத்து போலீசாரால் அமைக்கப்பட்டது.

    • கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.
    • மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.

    பொன்னேரி:

    பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக தச்சூரிலிருந்து பொன்னேரி சாலைக்கும் மீஞ்சூர் அத்திப்பட்டு, எண்ணூர் துறைமுகத்தின் சாலையில் இருந்து தச்சூர் கூட்டு சாலைக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.

    அதனை மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். இதில் பொன்னேரி ஆய்வாளர் சின்னத்துரை மீஞ்சூர் டிராபிக் உதவி ஆய்வாளர் நாராயணசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
    • போலீசார் இரவு விடிய, விடிய சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த கலியனூர் என்ற பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு ஆந்திராவை சேர்ந்த லாரி டிரைவர் ஜெகன்பாபு என்பவர் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டு இருந்தார்.

    அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி சென்ற ஆம்னி வேன் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த ஒரு பெண், வேனை ஓட்டி வந்த டிரைவர் ஆகியோர் படுகாயத்துடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்து பற்றி தெரியவந்ததும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கலெக்டர் கார்மேகம் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவின் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில், சங்ககிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இரவு விடிய, விடிய சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.

    அப்போது விதிகளைமீறி சாலை ஓரம் நிறுத்தி இருந்த சுமார் 40 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து தினமும் இது போன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • கனிம வளங்களை கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் சாலைகள் சேதம் அடைவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

    நாகர்கோவில்:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் குமரிமாவட்டம் வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துக்கள் நடந்து வருவதாகவும் சாலைகள் சேதம் அடைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து கனரக வாகனங்களில் கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 10 சக்கர வாகனங்களில் 28 டன் எடையில் மட்டுமே கனிவளங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனிம வளங்களை கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் புத்தேரி வழியாக கனிம வளங்களை கொண்டு செல்வதுடன் மீண்டும் அதே வழியாக வாகனங்கள் திரும்பி வருவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் சாலைகள் சேதம் அடைவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

    இந்நிலையில் இன்று காலை புத்தேரி பகுதி பொதுமக்கள் சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டம் நடத்த பாரதிய ஜனதா மீனவர் அணி பெருங்கோட்ட பொறுப்பாளர் சகாயம் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புத்தேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இடையூறாக இருப்பதால் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
    • வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தி பழுது பார்ப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    கன்னியாகுமரி :

    பேச்சிப்பாறை முதல் மார்த்தாண்டம் வரை யிலான ரோடு எப்போதும் வாகனங்கள் செல்லும் நெருக்கடியான சாலை யாகும். காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி கல்லூரி வாகனங்கள் அதிகளவில் செல்கிறது. மற்றும் மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு இந்த சாலை வழியாக தான் ஏராளமான வாகனங்கள் செல்கிறது.

    குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் ரோட்டோரம் கனரக மற்றும் சிறிய வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் அதிக அளவில் உள்ளது. இந்த வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தி பழுது பார்ப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    சில வாகனங்களை வேலை முடிந்ததும் உடனே கொண்டு செல்வது இல்லை. ரோட்டோரம் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பல நாட்கள் ரோட்டோரம் நிற்கிறது. குறிப்பாக மாத்தாண்டம் முதல் கீழ்பம்பம் வரை அதிக அளவில் ரோட்டின் இரண்டு பக்கமும் கனரக வாகனங்களை ரோட்டோம் நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.

    எனவே போக்குவரத்து போலீசார் அந்த வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து வாகனத்தை ரோட்டோரத்தில் இருந்து மாற்றி வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் அந்த பகுதியில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ரோட்டோரம் கனரக வாகன பழுது பார்க்கும் உரிமையாளர்களை கலந்து ஆலோசனை செய்து வாகனங்களை நிறுத்த கூடாது என்றும் அதை மீறி நிறுத்தும் வாகன ஒட்டிகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • தினமும் கேரளாவுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், மண், எம்-சாண்ட், என்-சாண்ட் போன்றவை செல்கிறது

    திருவட்டார், ஜூன்.28-

    குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், மண், எம்-சாண்ட், என்-சாண்ட் போன்றவை செல்கிறது. அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக ஏற்றி ஓவர் லோடாக கேரளாவுக்கு பல்வேறு வழிகளில் செல்கிறார்கள். இந்த வாகனங்கள் தினமும் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் நடைபெறுகிறது.

    அதிக அளவு லோடுகள் ஏற்றி செல்வதால் குமரி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்கள் இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போய் விடும் அளவிற்கு தினமும் வெட்டி எடுக்கிறார்கள். அதன்பிறகு மழையின் அளவும் குறைந்து விடும் அபாயம் உள்ளது.

    உள்ளூர் மக்கள் அதிக விலை கொடுத்து கல் மண் வாங்க வேண்டிய நிலை கேராளவுக்கு அதிக வாகன ங்களில் கனி மவளங்கள் செல்வதால் உள்ளூர் பகுதி மக்களுக்கு வீடு கட்டுவதற்கு அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை உள்ளது. அதனால் உள்ளூர் பகுதி மக்களுக்கு வீடுகட்டுவதற்கும் தொழில் நடத்துவதற்க்கும் தேவையான பொருள்கள் கிடைப்பது இல்லை. கனரக வாக னங்கள் அதிவேகமாக செல்வதால் ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பல விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

    இந்த கனரக வாகனங்கள் காலை மாலை வேளைகளில் கேரளாவுக்கு அதிவேகமாக செல்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    காலை மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்வ தால் இந்த வாகனங்கள் அந்த வாகனங்களை முந்தி செல்ல முயலும் போது பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகிறது. சில இடங்களில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ரோட்டை கடந்து செல்லும்போது கனரக வாகனங்கள் செல்வதால் மாணவ மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள். எனவே மாவட்ட கலெக்டர் தலை யிட்டு இந்த கனரக வாக னங்கள் காலை, மாலை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சென்றுவரும் நேரங்களில் செல்ல தடை விதிக்க வேண்டும். என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • அதிவேகத்தில் வரும் கனரக வாகனத்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் தொடர்கிறது.
    • போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் திருவள்ளூர் நகரத்துக்குள் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரில் உள்ள சாலைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றிவரும் வாகனங்கள் அதிகளவு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் பள்ளி, மருத்துவமனைக்கு மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அதிவேகத்தில் வரும் கனரக வாகனத்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் தொடர்கிறது.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் திருவள்ளூர் நகரத்துக்குள் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

    அதில், "திருவள்ளூர் நகர பகுதிக்குள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்து உள்ளார்.

    • வாகன நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
    • பள்ளி நேரத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணி வரையும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியை சுற்றி காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம், எல்.என்.டி. கப்பல் கட்டும் தளம், வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல்மின் நிலையம், சிமெண்ட் ஆலைகள், பெட்ரோலிய நிறுவனம், சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளிட்ட ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.

    இந்த நிறுவனங்களுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வருகின்றன. அவை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் சாலை மற்றும் தச்சூர்-பொன்னேரி- மீஞ்சூர் சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, கனரக வாகனங்கள் மீஞ்சூர்- வண்ட லூர் சாலையை பயன்ப டுத்தவும் பொன்னேரிக்குள் நுழையவும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஏற்கனவே பள்ளி நேரத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணி வரையும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை விடுமுறையினால் இந்த விதிமுறை சரியாக பின்பற்றபடாமல் இருந்து வந்ததது.

    இந்நிலையில் கடந்த ஒரே வாரத்தில் மீஞ்சூரில் வாகன விபத்து காரணமாக 6 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறக்க உள்ளதால் விதிமுறைகளை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. துரை சங்கர் சேகர், நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், டி. எஸ். பி. கிரியா சக்தி, அகியோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வழியாக தச்சூர் கூட்டு சாலைக்கு எந்த கனரக வாகனமும் வரக்கூடாது எனவும், மீறினால் ரூ.1000 அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் சாலையின் ஓரங்களில் விளம்பர பேனர் வைக்ககூடாது, சாலையின் ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

    இதில் தாசில்தார் செல்வகுமார், நகராட்சி ஆணையர் கோபிநாத், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் உள்ள மையத்தடுப்புகளை தனியார் நிறுவனங்கள் அகற்றுவதால் விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.
    • மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கும்போது உரிய பதில் அளிக்காமல் உள்ளனர்.

    திருப்பூர்:

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கே.செட்டிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக செயலாளரை நியமிக்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் காலாவதியான கனரக வாகனங்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். திருப்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் உள்ள மையத்தடுப்புகளை தனியார் நிறுவனங்கள் அகற்றுவதால் விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும். மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கும்போது உரிய பதில் அளிக்காமல் உள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
    • இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் சீரமைப்பு பணிகள் நடப்பதால் இன்று காலை முதல் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த வருடம் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. உடனே இந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வர அனுமதி தரப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்ப்படாமல் இருக்க மீண்டும் மணல் மூட்டைகள் வைத்து சிமெண்ட் கலவை பூசும் பணி இன்று காலை தொடங்கியது.

    இதனால் இன்று காலை முதல் வருகிற வெள்ளிக்கிழமை வரை சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.

    மாற்று பாதையான சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம், குப்பனூர் வழியாக ஏற்காட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் குப்பனூர் வழியாக அரசு பேருந்துகள், கார்கள் சென்று வருகிறது. குப்பனூர் பகுதியில் சுங்க சாவடி உள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை வரை இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டு மே மாதம் இறுதியில் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் கோடை விழா நடப்பதை ஒட்டி மலை பாதை முழுவதும் சாலை சீரமைக்கவும் உத்தர விடப்பட்டு உள்ளது.

    • சாலையின் குறுக்கே குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும்பாசன வாய்க்கால்களின் பாலங்களும் அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து வசதிக்கு பயன்பட்டு வருகிறது.
    • இதனால், காலவிரையம் ஆவதோடு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

    திருவையாறு:

    கல்லணை-தோகூரி லிருந்து திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, கண்டியூர் மற்றும் அய்யம்பேட்டை வழியாக கும்பகோணம் செல்லும் மாநில நெடு ஞ்சாலை உள்ளது. எற்கனவே ஒற்றைச் சாலையாக இருந்த இச்சாலை புதுப்பிக்கப்பட்டு, இரட்டைச் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பேருந்து மற்றும் லாரி முதலிய கனரக வாகனங்களின் அதிகமான போக்குவரத்தை முன்னிட்டும் மாநில நெடுஞ்சாலையின் அகலத்திற்கேற்பவும் இச்சாலையின் குறுக்கே குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும்பாசன வாய்க்கால்களின் பால ங்களும் அகலப்படு த்தப்பட்டு போக்குவரத்து வசதிக்கு பயன்பட்டு வருகிறது.

    ஆனால், கண்டியூர்கிழக்கு எல்லையில் அய்ய ம்பே ட்டைச் சாலை கொ ண்டை ஊசி வளைவு திருப்பத்திலேயே பழங்கால பாசன வாய்க்கால் குறுகிய பாலம் உள்ளது. கொண்டை ஊசி வளைவிலும் குறுகிய நிலையிலும் இப்பாலம் உள்ளதால் பஸ், லாரி முதலிய வாகனங்கள் திரும்பும்போது எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாததோடு, நேரெதிரே சந்திக்கும் வாகனத்திற்கு பின்னோக்கி சென்றே வழிவிட்டு கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், காலவிரையம் ஆவதோடு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.எனவே, கண்டியூர் கிழக்கு எல்லையிலுள்ள மாநில நெடுஞ்சாலை பழங்கால ஒற்றைப் பாலத்தை அகலப்படுத்தி போக்குவரத்து வசதியை மேம்படுத்திட ஆவன செய்யுமாறு வாகன ஓட்டிகளும் சம்மந்தப்பட்ட துறையினரிடம்சமூக ஆர்வலர்களும் கோருகிறார்கள்.

    ×