search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகரில் காலாவதியான கனரக வாகனங்களை  பறிமுதல் செய்ய கோரிக்கை
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் மாநகரில் காலாவதியான கனரக வாகனங்களை பறிமுதல் செய்ய கோரிக்கை

    • திருப்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் உள்ள மையத்தடுப்புகளை தனியார் நிறுவனங்கள் அகற்றுவதால் விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.
    • மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கும்போது உரிய பதில் அளிக்காமல் உள்ளனர்.

    திருப்பூர்:

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கே.செட்டிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக செயலாளரை நியமிக்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் காலாவதியான கனரக வாகனங்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். திருப்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் உள்ள மையத்தடுப்புகளை தனியார் நிறுவனங்கள் அகற்றுவதால் விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும். மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கும்போது உரிய பதில் அளிக்காமல் உள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×