என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடவுள்"
- இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி ‘திரோபவக் கோலம்‘ எனப்படுகிறது.
- தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.
இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி 'திரோபவக் கோலம்' எனப்படுகிறது.
திரோபவம் என்றால் மறைத்தல் என்று பொருள்.
உயிர்கள் பூமியில் வாழ்கின்ற காலத்தில் அறிந்தோ அறியாமலோ வினைகளை செய்கின்றன.
இவ்வாறாகப் பிறவி தோறும் அவை செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் இறைவன் அருள்புரிகின்றான்.
மறைப்பு நிலையாக இருந்து இறைவன் அடைவதற்கு அரியவன் என்னும் தத்துவத்தை பல்லக்கு வாகனம் உணர்த்துகின்றது.
தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.
தேரோட்டம் ஏன் திருவிழாக்களில் நடைபெறுகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.
இத் திருவிழாவின்போது தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மக்களுக்கு ஆசீர் வழங்க இறைவனின் திருவருள் எனக் கூறலாம்.
தேர்த் திருவிழா பார்க்கும் ஒவ்வொருவர் மனத்திலும் ஏழுவகைப் பிறப்பையும் மாய மல குணம்
ஏழும் நீக்கப் பெறுவதில் உட்கருத்தே ஏழாம் திருவிழாவாகும்.
மேலும் எந்தத் திருக்கோவிலிலும் இல்லாத பஞ்ச மூர்த்திகளின் திருத்தேரோட்டம் ஒரே நாளில்
நடைபெறுவது இத்திருத்திலத்திற்கு சிறப்பாகும்.
முப்புரம் ஆணவம், கன்மம், மாயை மூன்று அசுரர்கள் - தாருதாக்கன், கமலாக்கன், வித்யூன்மா,
மூவகை ஆன்மாக்கள்- விஞ்ஞானாகலர், பிரனாயகலர், சகலர்.
பரம்பொருளாகிய சிவபெருமானே ஆன்மாக்கட்கு மும்மல பந்த வாதனைகளை நீக்கி
பேரானந்தப் பெருவாழ்வளிப்பவர் என்ற உட்பொருளைத் தேர்திருவிழா விளக்குகிறது.
- இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.
- இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.
இடபம் (காளை) தியாகத்தின் வடிவமாகும்.
மனிதன் தன்னலமற்றவனாக, பொது நலம் உடையவனாக வாழ வேண்டும்
என்னும் தத்துவத்தை உணர்த்துவதாக இடப வாகனம் அமைந்திருக்கின்றது.
ரிஷப வாகனம் பல மெய்ப்பொருள்களைக் கொண்டது.
ரிஷபத்தின் தத்துவம் மெய்ஞ்ஞானம் உடைய அனைவரும் இறைவனின் திருப்பாதங்களை அடைய வழி வகுக்கும் வாகனமாகும்.
ரிஷபத்தின் உருவத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு அவயமும் ஒவ்வொரு தத்துவத்தை விளக்குவதாகும்.
இக்காட்சி கைலாயத்தில் இறைவனைக் காணும் காட்சியாகும்.
- இவ்வுலகம் கோள்களின் இயக்கத்தால் ஆகியது.
- உலகம் முழுவதும் சூரிய, சந்திரனால் நிலைத்துள்ளது என்பதாகும்.
இவ்வுலகம் கோள்களின் இயக்கத்தால் ஆகியது.
சிவபெருமான் சூரிய சந்திரப்பிரபை வாகனங்களில் எழுந்தருளி அருள் வழங்கும் காட்சி திதிக்கோலம் என்று அழைக்கப்படுகிறது.
தன்னால் படைக்கப்பட்ட அண்டத்தைத் தானே காத்து வரும் தன்மை உடையவன் என்பதை
எடுத்துக் காட்டும் கோலமே சூரிய சந்திரப் பிரபை வாகனத்தின் தத்துவமாக அமைகின்றது.
உலகம் முழுவதும் சூரிய, சந்திரனால் நிலைத்துள்ளது என்பதாகும்.
திதிக் கோலத்தின் பொருள் என்னவெனில், படைக்கப் பெற்ற அனைத்து உயிர்களையும் இறைவனாகிய பரம்பொருள்
சூரிய சந்திரகோள்களுக்கு இடையே ஞானம் பெறும் தீச்சுடராக விளங்குவதாலேயே
பகலும் இரவும், தட்ப வெப்பமும் உண்டாகிறது.
எந்தவொரு தொழிலையும் செய்யவும், எந்தவொரு பொருளையும் பார்க்கவும் முடிகிறது.
அதனால் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது என்பதால் அண்ட சராசரங்களையும்காத்து வருகின்றார்
என்ற உண்மை விளங்கவே இந்தச் சூரிய சந்திர பிரபை வாகனத்தின் உட்பொருளை நினைவில் கொண்டு
பரம்பொருளைத் தரிசித்து அருள் பெறுவோம்.
- கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
- படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை உள்ளடக்கியது.
கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
எனவே உயிரினங்கள் அனைத்திலும் இறைவன் உறைந்து விளங்குவான் என்னும்
தத்துவத்தை நிலை நிறுத்தவே கற்பகத்தரு வாகனம் வீதி உலாவில் பயன்படுத்தப்படுகின்றது.
இறைவனிலேயே எல்லாம் தொடக்கமாக அமைத்து அங்கேயே ஒடுங்குவதால், மீண்டும் படைப்புகள்
உண்டாக்கப்படுவதால் படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை
உள்ளடக்கிய கற்பக விருட்சம் வாகனமாகப் பயன்படுத்தப் படுகின்றது.
- ஆலயங்களில் நடைபெறும் விழாக்களில் இறைவனின் திருவீதி உலா முக்கியத்துவம் வாய்ந்தது.
- இறைவன் ஐந்து தொழில்களையும் செய்து வருகிறான்.
ஆலயங்களில் நடைபெறும் விழாக்களில் இறைவனின் திருவீதி உலா முக்கியத்துவம் வாய்ந்தது.
உலக மக்களுக்கும், கோவிலுக்கு வர இயலாத முதியோர்கள், நோயாளிகளுக்காகவும் அருள் பாலிப்பதற்காக
இறைவன் திருவீதி எழுந்தருள்கிறார்.
அப்படி வீதி உலா வரும் இறைவனுக்காக பல்வேறு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உலக உயிர்களின் நன்மைக்காக இறைவன் ஆற்றிவரும் ஐந்தொழில்களின் தத்துவக் கருத்துக்களை
உணர்த்தும் நோக்கில் வாகனங்களும் உருவாக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் கற்பக விருட்சம், சூரிய சந்திரப் பிரபை,
இடப வாகனம், நாக வாகனம், பல்லக்கு லிங்கார வட்ட சொரூபப் பிரபை, யானை வாகனம், தேர்,
குதிரை வாகனம், அதிகார நந்தி பூத வாகனம், ராவணனின் திருக்கயிலை வாகனம் முதலியன குறிப்பிடத்தக்கனவாகும்.
இறைவன் ஐந்து தொழில்களையும் செய்து வருகிறான்.
அவரை விழாக்காலங்களில் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு முடித்து
வாகனங்களில் ஏற்றி அவர் அழகை ரசித்து இன்புற்று ஈடு இணையற்ற பேரின்பம் பெற வழிபாடு செய்கிறோம்.
இதில் தீபத்திருவிழா உள்ளிட்ட உற்சவ நாட்களில் பத்து நாட்களும் அண்ணாமலையார்
வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கின்றார்.
அவ்வாகனங்களின் உட்பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
- கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும்.
- எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.
கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும்.
இப்படி நீராடுவதை, 'கார்த்திகை நீராடல்' என்பர்.
ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் உள்ள திருக்குளம் 'குப்தகங்கை' எனப்படுகிறது.
கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள்.
மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள்.
எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.
- அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.
- கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.
அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.
"பஞ்ச" என்றால் ஐந்து என்று பொருள்.
பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி
கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.
தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி
நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.
இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போழுது "ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.
இப்படி செய்தால் அம்பிகையின் அருளாளல் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.
- பசு மாடுகள் லட்சுமி வடிவம் என்பதால் அவை வருவதற்கு முன்பே வீடுகளில் தீபம் ஏற்றி விடும் பழக்கம் இருந்தது.
- குத்து விளக்கு அம்பாளின் வடிவம் ஆகும்.
பழங்காலத்து வீடுகளில் விளக்கு வைப்பதற்கு என்றே தனி மாடங்கள் அமைக்கப்பட்டன.
வாசல்படியின் இருபுறங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுவதற்கு என மாடங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.
கிராமப்புறங்களில் பசு மாடுகள் மேய்ந்து விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பும்.
பசு மாடுகள் லட்சுமி வடிவம் என்பதால் அவை வருவதற்கு முன்பே வீடுகளில் தீபம் ஏற்றி விடும் பழக்கம் இருந்தது.
குத்து விளக்கு
குத்து விளக்கு அம்பாளின் வடிவம் ஆகும்.
இதன் அடிப்பாகம் பிரம்மா, தண்டு பாகம் விஷ்ணுவையும், தகழி சிவனையும்,
திருவிளக்கின் ஐந்து முகம் பஞ்ச பூதங்களையும், எண்ண நாத தத்துவத்தையும்,
குடம் லட்சுமியையும், ஒளி சரஸ்வதியையும், ஒளியால் பிறக்கின்ற சூடு சக்தியையும் குறிக்கும்.
- தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை “தீபலட்சுமி”யாக பரிணமிக்கிறாள்
தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை "தீபலட்சுமி"யாக பரிணமிக்கிறாள் என்று நமது ஆகமங்கள் கூறுகின்றன.
அந்த பதினாறு வகை தீபலட்சுமிகள் விவரம் வருமாறு:
ஆதிலட்சுமி,
சவுந்தரிய லட்சுமி,
சவுபாக்கிய லட்சுமி,
கீர்த்தி லட்சுமி,
வீர லட்சுமி,
ஜெயலட்சுமி,
சந்தான லட்சுமி,
மேதா லட்சுமி,
வித்யா லட்சுமி,
துஷ்டி லட்சுமி,
புஷ்டி லட்சுமி,
ஞான லட்சுமி,
சக்தி லட்சுமி,
ராஜ்யலட்சுமி,
தான்யலட்சுமி,
ஆரோக்கிய லட்சுமி
ஆகியோராவர்.
- சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.
- ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.
சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.
அவை மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியவை ஆகும்.
அதில் சிவராத்திரி தினங்களில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.
அன்றைய தினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.
அன்று ஈசனை நினைத்து விரதம் இருந்து ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை தரும்.
முக்தி கிடைக்கும்.
சிவராத்திரியில் யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகைகள் உண்டு.
மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி வரும்.
அன்றைய தினத்தில் உபவாசமிருந்து அவரவர்களுக்கு உகந்ததைப் பாராயணம் செய்தால் ஈசன் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
- விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.
- மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான்.
விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.
மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான்.
ஒவ்வொரு விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
1. திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் பரிபூர அன்பைப் பெறலாம்.
2. செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
3. புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
4. வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
5. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
6. சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
7. ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால்
எல்லா நன்மைகளும் கிட்டும்.
எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.
- விரதம் என்பது நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்தது.
- விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது.
விரதம் என்பது நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்தது.
விரதம் இருந்தால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.
விரதம் இருக்க பல முறைகள் உள்ளன.
ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,
அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,
நீர், ஜூஸ், பழங்கள் மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.
இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது.
கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது.
ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது.
உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்