search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீவாஞ்சியம்"

    • கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும்.
    • எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.

    கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும்.

    இப்படி நீராடுவதை, 'கார்த்திகை நீராடல்' என்பர்.

    ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் உள்ள திருக்குளம் 'குப்தகங்கை' எனப்படுகிறது.

    கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள்.

    மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள்.

    எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் என்பர்.

    • தீர்த்தக் குளத்தை சுத்திகரிப்பவன் தேவ ஆண்டில் ஆயிரமாண்டு மோட்சத்தில் வசிக்கிறான்.
    • பிரகாரம், மண்டபங்கள், கோபுரங்கள் கட்டுபவன் சிவாயுஞ்யம் அடைகிறான்.

    ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் என்னென்ன திருப்பணிகள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை ஸ்கந்தபுராணம் கீழ்க்கண்டவாறு போற்றுகிறது.

    1. இத்தலத்தில் யார் ஒருவர் ஏழை எளியவர்களுக்கு அமுது படைக்கிறாரோ அவர் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்.

    2. பால், தயிர், நெய், தேன், பழங்கள், தேங்காய் இவைகளோடு அணிகலன் கொண்டு சிறந்த துதிப் பாடலோடு ஸ்ரீ மங்களாம்பிகையும், வாஞ்சிநாதரையும் வழிபடுபவர் சிறந்த அரசனாகி சிவ சாயுஞ்யம் அடைகிறார்.

    3. இத்திருக்கோயிலுக்கு பிரகாரம், மண்டபம், கோபுரங்கள் கட்டி வைப்பவர். அனைவராலும் வணங்கத்தக்க அரசனாகிறார்.

    4. இத்திருக்கோயிலுக்கு தேர் திருப்பணி செய்து கோமுரசு, மத்தாளம் துணைக் கருவிகளோடு தேர்த்திருவிழா செய்பவர் சிறந்த போகங்கள் அனுபவித்து தேவரும் கந்தர்வரும், பகலும் இரவும் துதிக்க நூறு கற்ப கோடிகாலம் தனது மனித உருவத்தோடு இறைவனுக்கு முன் வசிப்பார்.

    5. திருவாஞ்சியத்தில் எவர் வசந்த விழா செய்கிறாரோ அவர் சிறந்த விமானம் ஏறி சிவ சன்னதியில் வசிக்கிறார்.

    6. குப்த கங்கை திருக்குளத்தினை தூர்வாரி சுத்தம் செய்து தீர்த்தத்தினை சுத்தம் செய்தால் தனது குடி, குலத்துடன் சிவலோகம் அடைந்து சத்திய வித்திலும், அபய வித்திலும் எவ்வளவு புண்ணியமோ அவ்வளவு புண்ணியத்தை அடைவார். ஸ்ரீருவாஞ்சியம் திருவாஞ்சியேசர் விமானத்திற்கு சுற்று வட்டம் கிருதாயுகத்தில் இரண்டு யோசனை தூரமும் திரேதாயுகத்தில் அதில் பாதியும், துவாபரயுகத்தில் அதிலும் பாதியும் கலியுகத்தில் ஐந்து குரோசமும் (ஐந்து நாழி வழி) ஆகும். அதில் வசிக்கும் மக்கள் முக்தியடைவது நிச்சயம்.

    7. இச்சிவாலயத்தில் எவன் ஒரு கணம் உறைகிறானோ அவன் கணங்களுக்கு அதிபதியாகிறான்.

    8. நீர் விழா, வசந்த விழா செய்பவன் சிவ சன்னதியில் வசிக்கிறான். தயிர், பால், நெய், தேன், வாழைப்பழம், தேங்காய் கொண்டு பூஜை செய்பவன் சிவனோடு வசிக்கிறான்.

    9. பிரகாரம், மண்டபங்கள், கோபுரங்கள் கட்டுபவன் சிவாயுஞ்யம் அடைகிறான்.

    10. குடை சாமரம் விசிறி வாத்திய முழக்கங்களுடன் திருத்தேர் விழா செய்பவன், செய்விப்பவன் சிறந்த மங்கையருடன் கூடி தேவர் துதிக்க நூறு கற்பகோடி காலம் உடலுடன் தேவனுக்கு முன் வசிப்பான்.

    11. தீர்த்தக் குளத்தை சுத்திகரிப்பவன் தேவ ஆண்டில் ஆயிரமாண்டு மோட்சத்தில் வசிக்கிறான்.

    12. படி கட்டுபவன் சிவகாயுஜ்யம் அடைவான். பாசி நீக்குபவன் தனது கோடி குலத்துடன் சிவலோகம் அடைவான்.

    13. வஸ்திரம் மலர் இவற்றால் மந்திரமின்றி பூசிப்பவன் கூட கோடி குலத்தை உயர்த்துவான்.

    14. கழுவாயற்ற பாவங்களும் வாஞ்சீஸ்வரரை தரிசித்தாலும், முனி தீர்த்தத்தில் நீராடினாலும் பாவங்கள் நீங்கி முக்தியுண்டாகும்.

    15. அரை கணம் இங்கு வசித்தாலும் ஊர்வசியை சேருவான். எவள் வீட்டில் இப்புராணம் எழுதப்படுகிறதோ அவள் வீட்டில் லட்சுமி செல்வம் நோயின்மையை மேன்மேலும் வளர்க்கிறாள். இதனை படிப்பவனும், கேட்பவனும் மூவகை இன்பங்களை துய்த்து முக்தியடைகிறான். - ஸ்கந்தபுராணம் சனத்குமா ரஸம் ஹிதை 58-ம் அத்தியாயம்.

    • ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை நீராடுவது சிறப்பு.
    • கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்

    தட்சன் தன் மகள் தாட்சாயணியைச் சிவனுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க மறுத்த நிலையில் சிவன்-தாட்சாயணி திருமணம் நடந்தது. இதனால் கோபம் கொண்ட தட்சன் சிவனை அழைக்காமல் வேள்விக்கு ஏற்பாடு செய்தான். அவன் சிவனுக்கு கொடுக்க வேண்டிய பிரசாதத்தையும் தரவில்லை. ஆனால் பிரம்மா சிவனின் பிரசாதத்தை நந்திக்கு கொடுத்து விட்டார். இதை அறிந்து கோபம் கொண்ட தட்சன் மேரு மலையின் வடக்கே புதிய யாகம் ஒன்றைத் தொடங்கினான். சிவனைத் தவிர மற்ற அனைத்துத் தேவர்களும், ரிஷிகளும் கலந்துக்கொண்டனர்.

    சிவனுக்கு அவிர்பாகம் அளிக்காமல் யாகம் நடத்துவது தவறு என்று தந்தைக்குச் சுட்டிக்காட்ட தாட்சாயணி முடிவு செய்தாள். சிவன் தடுத்தும் சென்ற தாட்சாயணியை தட்சன் அவமதித்தான். கோபம் கொண்ட தாட்சாயணி தட்சனின் யாகத்திற்கு வந்த தேவர்கள், முனிவர்கள் மற்றும் தட்சனும் விரைவில் அழிந்து போகச் சாபம் கொடுத்து யாகத் தீயில் விழுந்து மாண்டாள். அப்போது ஆங்காரத்துடன், ஆங்கார சக்தி வெளிப்பட்டது. தாட்சாயணி உயிர் துறந்ததை அறிந்த சிவன் கடும் கோபம் கொண்டு பெரும் பலம் கொண்ட வீரபத்திரனை அனுப்பி யாகத்தை அழிக்க சொன்னார்.

    வீரபத்திரனும் தன் கணங்கள் சூழ யாகசாலை அடைந்து அனைத்தையும் அழித்தார். அனைவரையும் அடித்து நொறுக்கி இல்லாமல் செய்தார். இந்திரன், சந்திரன், விஷ்ணு, எமன், அக்னி, வாயு, குபேரன், வருணன் என்று அனைவரையும் வதம் செய்தார். சூரியனின் கன்னத்தில் அறைய சூரியனின் பற்களெல்லாம் கீழே கொட்டின. இறுதியில் மகா விஷ்ணுவின் வேண்டுதல் பேரில் கோபம் குறைந்தார் வீரபத்திரர். அப்போது அங்கு தோன்றிய சிவன், தவறு செய்தவர்களை மன்னித்து உயிர் பிச்சை கொடுத்தார்.

    பற்கள் இழந்த சூரியனின் பாவம் தீர ஸ்ரீ வாஞ்சியத்தில் நீராடி, கார்த்திகை மாதம் முழுவதும் வழிபட்டால் பலன் கிடைக்கும். சிவத்துரோகத்தால் வந்த பாவம் போகும் என்று சிவன் வழி சொன்னார். அவ்வாறே ஸ்ரீவாஞ்சியம் சென்று முனி தீர்த்தம் என்ற குப்த கங்கையில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் தவம் செய்து இறைவனை சூரியன் வணங்கினார். இதனால் மகிழ்ந்த சிவன் அவர் முன் தோன்றி, பாவம் நீக்கி, பழைய ஒளியைத் தந்தார். அத்தோடு கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களின் பஞ்சமாபாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் அருள்புரிந்தார். அன்று முதல் ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை நீராடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    குறிப்பாக கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி அதிக பலன் பெற முடியும் என்று கூறப்படுகிறது. கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி பலன் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

    கார்த்திகை முதல் ஞாயிறு:

    ஐந்தக்னிபுரன் என்ற ஊரில் பாரிபத்ரன் என்பவ ரின் மகன் விஸ்வபத்திரன் செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளை காரணத்தால் மிகவும் கெட்டவனாக வளர்ந்தான். பெண்கள் மீது மிகுந்த ஆசை கொண்டான். அவனை அவனது தந்தை கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த அவன் தந்தையை கொன்றான். பிரம்ம கத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு வருந்திய அவன் குப்த கங்கையில் நீராடி தோஷம் நீங்கப் பெற்றான்.

    கார்த்திகை இரண்டாம் ஞாயிறு:

    கங்கைக் கரையில் மிருத்யுஞ்சய நகரில் வசித்த பாஷ்களன் என்பவருக்கும் அவரது மனைவி போகநாதாவுக்கும் ஐந்து மகன்கள் பிறந்தனர். துயுமணி, மணி, சின்மணி, மாயா நரசமணி, தரணி ஆகிய ஐவரில் மூத்தவன் துயுமணி ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினான். ஒழுக்கத்தில் சிறந்த இவன் தலயாத்திரை செய்கையில் ஒரு நாள் காய்ச்சல் வந்து அவஸ்தைப்பட்டான். ஒரு வீட்டில் நீர் கேட்க தாதி பெண் கள்ளை கொடுத்துவிட அதை தெரியாமல் குடித்தார். சுரம் தீர்ந்தாலும் கள் குடித்ததை அறிந்து என்ன இழிசெயல் புரிந்தோம் என மனம் வருத்தி உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தான். அப்போது சிவன் தோன்றி கார்த்திகை மாதம் 2-ம் ஞாயிறன்று ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள முனி தீர்த்தத்தில் நீராடி பாவம் ேபாக்கிக் கொள் என்றார். அதன்படி நீராடி பாவம் போக்கினார்.

    கார்த்திகை 3-ம் ஞாயிறு:

    வங்க தேசத்தில் மாகதம் எனும் கிராமத்தில் வசித்து வந்த சிறந்த அந்தணன் ககோளன். இவன் மழை பெய்து இடிந்து கிடந்த ஒரு வீட்டு சுவற்றில் புதையல் ஒன்று இருப்பதை கண்டு அதனை எடுத்து தானதர்மங்கள் செய்தார். அப்போது அங்கே வந்த துருவாச முனிவரை விருந்துக்கு அழைக்க நீ திருடிப்பெற்ற பொருளில் உணவு உண்ண மாட்டேன் என்றார். இதனால் அந்தணன் துன்பம் தாங்காமல் உயிர்விட துணிந்தான். தேவர்களை துதிக்க ஆகாய வானவர் அசரீரி யாக ஸ்ரீவாஞ்சிய புண்ணிய புஸ்கரணியில் கார்த்திகை 3-ம் ஞாயிறு நீராடு என்றார். அதன்படி அங்கு நீராடி பாவம் போக்கினார்.

    கார்த்திகை 4-ம் ஞாயிறு:

    வங்க தேசத்தில் சந்திரிகை என்னும் நகரத்தில் யக்ஞபக்தன் குமுதவதி ஆகியோருக்கு பிறந்தவன் துர்போதன். அவன் பிறந்ததும் தந்தை இறந்துவிட்டான். பின்னர் பஞ்சம் ஏற்பட்டு பிரத்யாகை சென்றார். அங்கு காம மயக்கத்தில் குருவின் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டான். தெளிந்தபின் மனம் வருத்தி அவிமுக்தம் என்ற திருத்தலம் சென்று மணிகர்ணிகை என்னும் தீர்த்தத்தில் நீராடி மூன்று வருடம் விஸ்வேஸ்ரரை துதிக்க மனம் மகிழ்ந்த சிவன் பிரசன்னமாகி ஸ்ரீவாஞ்சிய பெருமையையும் கூறி அங்கு நீராடு உன் பாவம் நீங்கும் என்றார். அவனும் ஸ்ரீவாஞ்சியம் வந்து குப்த கங்கையில் நீராடி தன் பாவம் நீங்கப் பெற்று சிவபாதம் அடைந்தான்.

    கார்த்திகை 5-ம் ஞாயிறு:

    நர்மதைக்கரையில் ஸ்தபகம் என்ற ஊரில் வசித்தவர் காலஜித். இவன் மூவுலகம் சென்று வரும் ஆற்றல் கொண்டவன். தூய வாழ்க்கை வாழ்ந்த இவனுக்கு குழந்தைகள் நான்கு பேர். பிள்ளை களிடத்து பற்று கொண்ட காலஜித் அவர்கள் தீயவழி செல்வதனை கண்டிக்காமல் விட அதனால் சம்சார்க்கம் என்னும் பாவம் அவனை சேர்ந்தது. அதனால் அவன் தவ வலிமை குன்றி மூவுலகு செல்லும் ஆற்றல் நீங்கியது. அப்போது அசரீரி உரைத்தபடி வசிட்டரை வணங்கி குருவருள் பெற்று இங்கு வந்து கார்த்திகை 5-ம் ஞாயிறு நீராடி இறைவனை வணங்கிப் பாவத்திலிருந்து விடுபட்டு பல காலம் இங்கே தங்கி அநேக இன்பங்கள் அனுபவித்து பின் முக்தியடைந்தான்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகிலேயே புண்ணியத்தை அதிகம் வழங்கும் இடம் காசி.
    • ஸ்ரீவாஞ்சியம் வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்குகிறது.

    இந்துவாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த உயிரினமாக இருந்தாலும் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியில் இறந்தால் அடுத்த பிறவி என்பது இல்லாமல் முக்தி கிடைத்து இறைவனுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தான் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தமிழகத்தில் இருந்து `காசி' மிக நீண்ட தொலைதூரத்தில் இருப்பதால், மிகுந்த பொருட்செலவு செய்து பெரும்பாலானவர்கள் செல்வது இல்லை. மேலும் கால விரயம் ஆவதால் காசிக்கு எல்லோராலும் செல்ல முடிவதில்லை. இந்தநிலையில் காசிக்கு சென்ற புண்ணியத்தை அதிலும் 100 முறை காசிக்கு சென்ற பலனை தமிழகத்தில் உள்ள ஒரு தலத்திற்கு சென்றால் பெறலாம் என்று பல்வேறு முனிவர்கள் கூறியுள்ளனர். சிறப்புக்குரிய அந்த தலம் ஸ்ரீ வாஞ்சியம் தலமாகும்.

    உலகிலேயே புண்ணியத்தை அதிகம் வழங்கும் இடமாக `காசி' தலம் கருதப்படுகிறது. அத்தகைய மகத்துவம் வாய்ந்த 'காசி' திருத்தலத்திற்கு 100 முறை சென்று வந்த பலனை தமிழகத்தில் கும்பகோணத்திற்கு அருகே உள்ள "ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் கிடைக்கும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

    தல வரலாறு

    உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அதன் இறுதி காலத்தில் பறிக்கும் போது தனக்கு அவப்பெயர் ஏற்படுவதாக எமதர்மராஜா மிகவும் வருந்தினார். அதனால் `திருவாரூர் தியாகராஜரிடம்' சென்று தனது குறையை தெரிவித்தார். அதற்கு இறைவனும், ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரியாக கூறினார்.

    அதன்படி எமதர்மன் `ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். எமதர்மனின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் காட்சியளித்து எமதர்மனுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

    எமதர்மனும் இறைவா அனைத்து உயிர்களையும் பறிக்கும் பதவியால் எல்லோரும் என்னை கண்டு பயந்து திட்டுகின்றனர். உயிர்களை பறிப்பதால் "பிரம்மஹத்தி தோஷம்" பிடித்து என்னை வாட்டுகிறது. எனவே அதிலிருந்து நீங்கும் வரம் வேண்டும் என்றார்.

    எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன் எமதர்மா இனிமேல் யாரும் எமன் உயிரை பறித்து விட்டான் என கூற மாட்டார்கள். நோய் வந்ததால், வயதாகி விட்டதால், விபத்து ஏற்பட்டு இறந்தான் என்றே கூறுவார்கள். அதனால் உனக்கு எந்த பழியும் பாவமும் ஏற்படாது.

    மேலும் நீ தவம் செய்த இந்த இடத்திற்கு புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தலத்தின் ஷேத்திர பாலகனாக நீ விளங்குவாய்.

    இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பு என்னை தரிசிப்பார்கள் என்று கூறினார். அதன்படி இங்கு எமதர்மராஜனுக்கு முதல் வழிபாடு நடைபெறுகிறது.

    யோக நிலையில் எமதர்மன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்குகிறது. காசியில் இறப்பதால் எம பயமில்லாது போனாலும் ஒரு நாழிகையாவது பைரவரின் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் இறந்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை எதுவுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் இறைவனை வணங்கி கொண்டு இருக்கிறார். எனவே எமதர்மன் பைரவர் இருவருக்குமே அதிகாரம் இல்லாத இத்தலம் காசியை காட்டிலும் 100 மடங்கு உயர்ந்தது என்று முனிவர்கள் கூறுகின்றனர்.

    ஸ்ரீவாஞ்சியத்தின் சிறப்பு குறித்து பிரமாண்ட புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கங்கையில் குளித்து தங்களது பாவத்தை தீர்ப்பதால் கங்காதேவியிடம் பாவம் சேர்ந்து விட்டது. அதனால் தன்னிடம் சேர்ந்த பாவத்தை போக்க வேண்டும் என்று `கங்காதேவி' சிவபெருமானிடம் சென்று முறையிட்டாள். அதற்கு சிவபெருமான் பதில் கூறுகையில் உயிர்களைப் பறிக்கும் எமதர்மனுக்கு பாவம் விமோசனம் அளித்த ஸ்ரீவாஞ்சியதிற்கு சென்று வணங்கினால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்று கூறினார்.

    அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதியுள்ள 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் வந்திருப்பதாக ஐதீகம். அதனால் `குப்த கங்கை தீர்த்தம்' என்று அழைக்கப்பட்ட இங்கு உள்ள தீர்த்தம் தற்போது 'முனி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

    எனவே காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது மாசி மகத்தன்று இத்தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரக்காரர்கள், மேஷம், சிம்மம், கும்பம் ராசி மற்றும் லக்னக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்குவதற்கு இங்கு வந்து பரிகாரம் செய்து வழிபடலாம். பதவி இழந்தவர்கள், பணி மாற்றம் விரும்புபவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் குப்த கங்கையில் குளித்து வாஞ்சிநாதரை வழிபடுவது சிறந்தது.

    • இங்கு நீராடினால் பஞ்ச மாபாதங்களும் ஒழிந்து நற்கதி பெறுவீர்.
    • இங்குள்ள புஷ்கரணி `குப்த தீர்த்தம்’ என்ற பெயர் கொண்டது.

    `கலியுகத்தில் மக்கள் தான் செய்த பாவங்களில் இருந்து விடுபட, காசிக்கு வந்து என்னில் நீராடி புனிதம் பெறுகிறார்கள். அதனால் காலங்காலமாய் பாவங்களை சுமந்து நான் பாவமூட்டையாக கனத்து விட்டேன். இதற்கென்ன விமோசனம்?' என்று கங்கா தேவி சிவபெருமானிடம் கேட்டாள்.

    `சோழ நாட்டின் காவிரிக்கு தென்கரையில் ஸ்ரீவாஞ்சி என்ற புண்ணியத்தலம் உள்ளது. அங்கு நீ அந்தர்வாகினியாகச் சென்று புஷ்கரணியில் சேர்த்து விடு, உன்பாவமூட்டைகள் களையப்படுவதோடு உலகம் உய்வு பெற மக்கள் இங்கு நீராடினால் பஞ்ச மாபாதங்களும் ஒழிந்து நற்கதி பெறுவீர்' என்று அருளாசி கூறினார் கங்கைமணாளன்.

    தன் ஆயிரம் கலைகளில் ஒன்றை மட்டும் விட்டு விட்டு ஏனைய 999 கலைகளுடன் ஸ்ரீவாஞ்சியம் வந்தடைகிறாள் கங்கை அன்னை.

    அந்தர்வாகினியாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வாழ்வதால் `குப்த கங்கை' என்ற பெயர் கொண்டாள். இந்த புஷ்கரணியும், `குப்த தீர்த்தம்' என்ற பெயர் கொண்டது.

    கங்கையின் பாவச்சுமைகளையே போக்க வல்ல சக்தி வாய்ந்த ஸ்ரீவாஞ்சிய சேத்திரம், காசியை காட்டிலும் உன்னதமானதாகும். உயிரை மாய்த்திடும் பணியில் ஈடுபட்டிருக்கும் எமதர்மராஜன் தன் பணியின் கொடுமையினால் ஏற்பட்ட மனச்சுமை நீங்கிட, இத்தல ஈசனான வாஞ்சி லிங்கேஸ்வரரை வணங்கினார். அது முதல் எமனை சேத்திர பாலகராக நியமித்து, கோயிலின் அக்னி மூலையில் தனிக்கோயில் ஒன்றை நிர்மாணித்தார் ஈசன்.

    தெற்கு நோக்கிய சந்நிதியில் எமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, ஆலம் ஏந்தி இடக்காலை மடித்து வலக்காலைத்தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலை வடிவம் உள்ளது.

    யோக நிலையில் எமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு, ஆனால், ஸ்ரீ வாஞ்சியத்தில் மரித்தவருக்கு எம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது.

    இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களை யெல்லாம் கீழே வைத்து விட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார், எமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், 'காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது' என முனிவர்கள் கூறுகின்றனர். பிரம்மாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    ஒரு சமயம், திருமானுக்கும் லட்சுமி தேவிக்கும் ஊடல் ஏற்பட்டது. தேவி கண்காணாத தொலைவுக்குச் சென்று விடுகிறாள். அவளில்லாமல், திருமால் தவிக்கிறார். நல்லதொரு முடிவைக் கண்டிட மைத்துனன் சிவபெருமானை அணுகுகிறார் திருமால்.

    இந்த நிலை கண்ட கயிலை நாதன் தேவியை அணுகி `உலகெல்லாம் போற்றித் துதிக் கப்படும் தேவி நீ இல்லையென்பதால், பொலிவிழந்து காணப்படுகிறது. தேவி! தயை கூர்ந்து உனது கணவனுடன் வாஞ்சையாக இருந்திட வருவாய்!' என்று இறைஞ்சி கேட்கிறார் மகாதேவன்.

    பிரிவால் வாடி இருந்த அன்னைக்கு இந்த அழைப்பு. ஆறுதலாக இருந்தது. கணவனுடன் சேர்ந்திட மன மகிழ்ந்து ஒப்புக்கொள்கிறாள்.

    லட்சுமி தேவியை வாஞ்சையுடன் அழைத்தமையால், ஈசன் வாஞ்சி நாதேஸ்வரர் ஸ்ரீவாஞ்சி லிங்கேஸ்வரர் என்ற திருநாமங்களைப் பெற்றார். இந்த தலத்திற்கு `ஸ்ரீவாஞ்சியம்' என்ற தலப்பெயரும் கிடைத்தது.

    ×