search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srivanchiam"

    • தீர்த்தக் குளத்தை சுத்திகரிப்பவன் தேவ ஆண்டில் ஆயிரமாண்டு மோட்சத்தில் வசிக்கிறான்.
    • பிரகாரம், மண்டபங்கள், கோபுரங்கள் கட்டுபவன் சிவாயுஞ்யம் அடைகிறான்.

    ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் என்னென்ன திருப்பணிகள் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை ஸ்கந்தபுராணம் கீழ்க்கண்டவாறு போற்றுகிறது.

    1. இத்தலத்தில் யார் ஒருவர் ஏழை எளியவர்களுக்கு அமுது படைக்கிறாரோ அவர் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்.

    2. பால், தயிர், நெய், தேன், பழங்கள், தேங்காய் இவைகளோடு அணிகலன் கொண்டு சிறந்த துதிப் பாடலோடு ஸ்ரீ மங்களாம்பிகையும், வாஞ்சிநாதரையும் வழிபடுபவர் சிறந்த அரசனாகி சிவ சாயுஞ்யம் அடைகிறார்.

    3. இத்திருக்கோயிலுக்கு பிரகாரம், மண்டபம், கோபுரங்கள் கட்டி வைப்பவர். அனைவராலும் வணங்கத்தக்க அரசனாகிறார்.

    4. இத்திருக்கோயிலுக்கு தேர் திருப்பணி செய்து கோமுரசு, மத்தாளம் துணைக் கருவிகளோடு தேர்த்திருவிழா செய்பவர் சிறந்த போகங்கள் அனுபவித்து தேவரும் கந்தர்வரும், பகலும் இரவும் துதிக்க நூறு கற்ப கோடிகாலம் தனது மனித உருவத்தோடு இறைவனுக்கு முன் வசிப்பார்.

    5. திருவாஞ்சியத்தில் எவர் வசந்த விழா செய்கிறாரோ அவர் சிறந்த விமானம் ஏறி சிவ சன்னதியில் வசிக்கிறார்.

    6. குப்த கங்கை திருக்குளத்தினை தூர்வாரி சுத்தம் செய்து தீர்த்தத்தினை சுத்தம் செய்தால் தனது குடி, குலத்துடன் சிவலோகம் அடைந்து சத்திய வித்திலும், அபய வித்திலும் எவ்வளவு புண்ணியமோ அவ்வளவு புண்ணியத்தை அடைவார். ஸ்ரீருவாஞ்சியம் திருவாஞ்சியேசர் விமானத்திற்கு சுற்று வட்டம் கிருதாயுகத்தில் இரண்டு யோசனை தூரமும் திரேதாயுகத்தில் அதில் பாதியும், துவாபரயுகத்தில் அதிலும் பாதியும் கலியுகத்தில் ஐந்து குரோசமும் (ஐந்து நாழி வழி) ஆகும். அதில் வசிக்கும் மக்கள் முக்தியடைவது நிச்சயம்.

    7. இச்சிவாலயத்தில் எவன் ஒரு கணம் உறைகிறானோ அவன் கணங்களுக்கு அதிபதியாகிறான்.

    8. நீர் விழா, வசந்த விழா செய்பவன் சிவ சன்னதியில் வசிக்கிறான். தயிர், பால், நெய், தேன், வாழைப்பழம், தேங்காய் கொண்டு பூஜை செய்பவன் சிவனோடு வசிக்கிறான்.

    9. பிரகாரம், மண்டபங்கள், கோபுரங்கள் கட்டுபவன் சிவாயுஞ்யம் அடைகிறான்.

    10. குடை சாமரம் விசிறி வாத்திய முழக்கங்களுடன் திருத்தேர் விழா செய்பவன், செய்விப்பவன் சிறந்த மங்கையருடன் கூடி தேவர் துதிக்க நூறு கற்பகோடி காலம் உடலுடன் தேவனுக்கு முன் வசிப்பான்.

    11. தீர்த்தக் குளத்தை சுத்திகரிப்பவன் தேவ ஆண்டில் ஆயிரமாண்டு மோட்சத்தில் வசிக்கிறான்.

    12. படி கட்டுபவன் சிவகாயுஜ்யம் அடைவான். பாசி நீக்குபவன் தனது கோடி குலத்துடன் சிவலோகம் அடைவான்.

    13. வஸ்திரம் மலர் இவற்றால் மந்திரமின்றி பூசிப்பவன் கூட கோடி குலத்தை உயர்த்துவான்.

    14. கழுவாயற்ற பாவங்களும் வாஞ்சீஸ்வரரை தரிசித்தாலும், முனி தீர்த்தத்தில் நீராடினாலும் பாவங்கள் நீங்கி முக்தியுண்டாகும்.

    15. அரை கணம் இங்கு வசித்தாலும் ஊர்வசியை சேருவான். எவள் வீட்டில் இப்புராணம் எழுதப்படுகிறதோ அவள் வீட்டில் லட்சுமி செல்வம் நோயின்மையை மேன்மேலும் வளர்க்கிறாள். இதனை படிப்பவனும், கேட்பவனும் மூவகை இன்பங்களை துய்த்து முக்தியடைகிறான். - ஸ்கந்தபுராணம் சனத்குமா ரஸம் ஹிதை 58-ம் அத்தியாயம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகிலேயே புண்ணியத்தை அதிகம் வழங்கும் இடம் காசி.
    • ஸ்ரீவாஞ்சியம் வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்குகிறது.

    இந்துவாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த உயிரினமாக இருந்தாலும் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியில் இறந்தால் அடுத்த பிறவி என்பது இல்லாமல் முக்தி கிடைத்து இறைவனுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தான் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தமிழகத்தில் இருந்து `காசி' மிக நீண்ட தொலைதூரத்தில் இருப்பதால், மிகுந்த பொருட்செலவு செய்து பெரும்பாலானவர்கள் செல்வது இல்லை. மேலும் கால விரயம் ஆவதால் காசிக்கு எல்லோராலும் செல்ல முடிவதில்லை. இந்தநிலையில் காசிக்கு சென்ற புண்ணியத்தை அதிலும் 100 முறை காசிக்கு சென்ற பலனை தமிழகத்தில் உள்ள ஒரு தலத்திற்கு சென்றால் பெறலாம் என்று பல்வேறு முனிவர்கள் கூறியுள்ளனர். சிறப்புக்குரிய அந்த தலம் ஸ்ரீ வாஞ்சியம் தலமாகும்.

    உலகிலேயே புண்ணியத்தை அதிகம் வழங்கும் இடமாக `காசி' தலம் கருதப்படுகிறது. அத்தகைய மகத்துவம் வாய்ந்த 'காசி' திருத்தலத்திற்கு 100 முறை சென்று வந்த பலனை தமிழகத்தில் கும்பகோணத்திற்கு அருகே உள்ள "ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் கிடைக்கும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

    தல வரலாறு

    உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அதன் இறுதி காலத்தில் பறிக்கும் போது தனக்கு அவப்பெயர் ஏற்படுவதாக எமதர்மராஜா மிகவும் வருந்தினார். அதனால் `திருவாரூர் தியாகராஜரிடம்' சென்று தனது குறையை தெரிவித்தார். அதற்கு இறைவனும், ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரியாக கூறினார்.

    அதன்படி எமதர்மன் `ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். எமதர்மனின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் காட்சியளித்து எமதர்மனுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

    எமதர்மனும் இறைவா அனைத்து உயிர்களையும் பறிக்கும் பதவியால் எல்லோரும் என்னை கண்டு பயந்து திட்டுகின்றனர். உயிர்களை பறிப்பதால் "பிரம்மஹத்தி தோஷம்" பிடித்து என்னை வாட்டுகிறது. எனவே அதிலிருந்து நீங்கும் வரம் வேண்டும் என்றார்.

    எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன் எமதர்மா இனிமேல் யாரும் எமன் உயிரை பறித்து விட்டான் என கூற மாட்டார்கள். நோய் வந்ததால், வயதாகி விட்டதால், விபத்து ஏற்பட்டு இறந்தான் என்றே கூறுவார்கள். அதனால் உனக்கு எந்த பழியும் பாவமும் ஏற்படாது.

    மேலும் நீ தவம் செய்த இந்த இடத்திற்கு புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தலத்தின் ஷேத்திர பாலகனாக நீ விளங்குவாய்.

    இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பு என்னை தரிசிப்பார்கள் என்று கூறினார். அதன்படி இங்கு எமதர்மராஜனுக்கு முதல் வழிபாடு நடைபெறுகிறது.

    யோக நிலையில் எமதர்மன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்குகிறது. காசியில் இறப்பதால் எம பயமில்லாது போனாலும் ஒரு நாழிகையாவது பைரவரின் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் இறந்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை எதுவுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் இறைவனை வணங்கி கொண்டு இருக்கிறார். எனவே எமதர்மன் பைரவர் இருவருக்குமே அதிகாரம் இல்லாத இத்தலம் காசியை காட்டிலும் 100 மடங்கு உயர்ந்தது என்று முனிவர்கள் கூறுகின்றனர்.

    ஸ்ரீவாஞ்சியத்தின் சிறப்பு குறித்து பிரமாண்ட புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கங்கையில் குளித்து தங்களது பாவத்தை தீர்ப்பதால் கங்காதேவியிடம் பாவம் சேர்ந்து விட்டது. அதனால் தன்னிடம் சேர்ந்த பாவத்தை போக்க வேண்டும் என்று `கங்காதேவி' சிவபெருமானிடம் சென்று முறையிட்டாள். அதற்கு சிவபெருமான் பதில் கூறுகையில் உயிர்களைப் பறிக்கும் எமதர்மனுக்கு பாவம் விமோசனம் அளித்த ஸ்ரீவாஞ்சியதிற்கு சென்று வணங்கினால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்று கூறினார்.

    அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதியுள்ள 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் வந்திருப்பதாக ஐதீகம். அதனால் `குப்த கங்கை தீர்த்தம்' என்று அழைக்கப்பட்ட இங்கு உள்ள தீர்த்தம் தற்போது 'முனி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

    எனவே காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது மாசி மகத்தன்று இத்தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரக்காரர்கள், மேஷம், சிம்மம், கும்பம் ராசி மற்றும் லக்னக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்குவதற்கு இங்கு வந்து பரிகாரம் செய்து வழிபடலாம். பதவி இழந்தவர்கள், பணி மாற்றம் விரும்புபவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் குப்த கங்கையில் குளித்து வாஞ்சிநாதரை வழிபடுவது சிறந்தது.

    ×