search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலில்"

    • கப்பல் மூலம் தேட முடிவு
    • 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47), அதே பகுதியை சேர்ந்த கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். விசைப்படகை பங்குத்தாரர் ஆன்றோ ஓட்டினார். 28-ந்தேதி நள்ளிரவு ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸ் ஆகியோர் சென்ற விசைப்படகு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் சுமார் 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் எதிர்பாராமல் திடீரென கடலில் மூழ்கியது. இதனால் கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மீனவர்களை அந்த பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மற்றொரு குளச்சல் படகு அவர்களை மீட்டது.

    இதில் 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் மாயமான ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸை நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில், கொட்டில்பாடு மீனவர் பயஸின் உடல் கடந்த 30-ந்தேதி மீட்கப்பட்டது. தொடர்ந்து ஆன்றோ, கே.ஆரோக்கியம் ஆகிய இருவர்களை மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக மீனவர் 25 விசைப்படகுகளில் சென்று தேடினர். இவர்களுடன் தூத்துக்குடி கோஸ்டல் கார்டும் மீனவர்களை தேடி வருகின்றனர். ஆனால் 2 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கப்பல் மூலம் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கொச்சி கப்பற்படையிலிருந்து கப்பல் வரவழைக்கப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக கப்பற்படை அதிகாரிகள் மணப்பாடு கடல் பகுதி விசைப்படகு மூழ்கிய பகுதியில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர். கப்பல் தேடும் பணியை தொடங்கும் முன் அங்கு ஆய்வு நடத்தப்படுவது வழக்கம் என மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று அல்லது நாளை கொச்சியிலிருந்து கப்பல் மணப்பாடு கடல் பகுதிக்கு செல்லும் என துறைமுக வட்டாரம் தெரிவித்துள்ளது. 10 நாட்களுக்கு மேலாகியும் கடலில் மாயமான குளச்சல் மீனவர்கள் மீட்கப்படாதது மீனவர்களின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி
    • மீனவர்கள் 16 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்

    நாகர்கோவில் : கடலில் மாயமான குளச்சல் மீனவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி மாநில தி.மு.க. மீனவர் அணி செயலாளர் வழங்கினார்  குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 28-ந்தேதி இரவு இவர்களது விசைப்படகு மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் கவிழ்ந்தது. இதில் 13 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மீனவர்கள் ஆன்றோ (47), ஆரோக்கியம் (52), கொட்டில்பாடு பயஸ் (63) ஆகியோர் மாயமாகினர்.

    இதில் பயஸ் உடல் 30-ந்தேதி மீட்கப்பட்டது. ஆன்றோ, ஆரோக்கியம் குறித்து தகவல் கிடைக்கவில்லை. இவர்களை உறவினர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின் மாயமான மீனவர்கள் ஆன்றோ, ஆரோக்கியம் மற்றும் பலியான பயஸ் ஆகியோர் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    பின்னர் பயஸ், ஆரோக்கியம் ஆகியோரது குழந்தைகளின் மேற்படிப்புக்கான செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். இதில் தி.மு.க. மாவட்ட மீனவர் அணி தலைவர் ஆன்றனி ராஜ் (எஸ்.கே.), செயலாளர் அனனியாஸ், துணை செயலாளர் ரூபன், குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்க தலைவர் வற்கீஸ், செயலாளர் பிராங்கிளின், துணை செயலாளர் ஆன்றனி, பொருளாளர் அந்திரியாஸ், கவுன்சிலர்கள் ஜாண்சன், பனிக்குருசு, முன்னாள் கவுன்சிலர் சிபு மற்றும் விஜயன், மிரா ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • குளச்சல் நகர அ.தி.மு.க.வலியுறுத்தல்
    • குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது.

    குளச்சல்:

    குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது, நகர முன்னாள் செயலாளர் பஷீர்கோயா, ஆனக்குழி சதீஸ், நகர இணை செயலாளர் செர்பா, முன்னாள் கவுன்சிலர் பெலிக்ஸ் ராஜன் மற்றும் ஜெகன், வினோத், துபாய் மாகீன், ரமேஷ்குமார், ஜில்லட், ஜோக்கியான், நடேசன், அம்பிலிகலா, சிசிலி, தேவிசக்தி, நிர்மலா பேபி, பவுஸ்தீனம்மாள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்று விசைப்படகு கவிழ்ந்ததில் மாயமான குளச்சல் மீனவர்கள் ஆன்றோ, ஆரோக்கியம் ஆகியோரை மாவட்ட நிர்வாகமும், மீன் வளத்துறையும் துரிதமாக மீட்க கேட்பது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வை நியமனம் செய்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, கழக 52-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வின் 65-வது பிறந்த நாளை வருகிற 17-ந்தேதி குளச்சல் அலுவலகத்தில் கொண்டாடுவது எனவும் வலியுறுத்தப்பட்டது.

    • 3 நாட்கள் ஆன பிறகும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
    • கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தின் பின் பக்கம் உள்ள கடலில் கடந்த 2-ந்தேதி வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டி ருந்தது. இது குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த வாலிபரின் பிணத்தை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பொதுமக்களின் உதவியுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி முழ்கி இறந்தாரா? அல்லது வேறு எங்காவது வைத்து அவரை கொலை செய்துவிட்டு பிணத்தை கொண்டு வந்து கடலில் வீசினார்களா? அல்லது அவர் வேறு எங்காவது கடலில் மூழ்கி இறந்து அவரது உடல் அலையில் இழுத்து கொண்டுவரப்பட்டு கன்னியாகுமரி கடற்கரை யில் கரை ஒதுங்கியதா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடநாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த வாலிபர் யார்? என்பது குறித்து 3 நாட்கள் ஆன பிறகும் இன்னும் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போலீ சார் திணறி வருகிறார் கள். கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த வாலிபரின் சட்டை மற்றும் பேண்டில் எந்தவித அடையாள அட்டைகளும் இல்லாததால் இந்த நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    • மீனவர்கள் காப்பாற்றினர்
    • மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடலில் புனித பாதம் நனைப்பது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடலில் புனித பாதம் நனைப்பது வழக்கம்.

    நேற்று காலை அங்கு கடற்கரையில் நின்ற பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்தார். இதனால் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். உடனே அவர்கள் சப்தமிட்டனர். உடனே புதூர் மீனவர்கள் கடலில் குதித்து கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு கரை சேர்த்தனர்.

    உடல் முழுவதும் மணல் ஒட்டியிருந்தது. தகவலறிந்த குளச்சல் மரைன் இன்ஸ் பெக்டர் நவீன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அந்த பெண் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு கிறார். போலீசார் நடத்திய விசார ணையில் அந்த பெண் கருங்கல் அருகே நட்டாலம் கிணற்று விளையை சேர்ந்த ஜானி மனைவி ஆன்சி (30) என்பதும், கணவன்-மனை விக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனம் உடைந்த ஆன்சி மண்டைக் காடு வந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஆன்சிக்கு 2 பெண் குழந்தை கள் உள்ளனர்.

    ×