search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலில் மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    X

    கடலில் மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • குளச்சல் நகர அ.தி.மு.க.வலியுறுத்தல்
    • குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது.

    குளச்சல்:

    குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது, நகர முன்னாள் செயலாளர் பஷீர்கோயா, ஆனக்குழி சதீஸ், நகர இணை செயலாளர் செர்பா, முன்னாள் கவுன்சிலர் பெலிக்ஸ் ராஜன் மற்றும் ஜெகன், வினோத், துபாய் மாகீன், ரமேஷ்குமார், ஜில்லட், ஜோக்கியான், நடேசன், அம்பிலிகலா, சிசிலி, தேவிசக்தி, நிர்மலா பேபி, பவுஸ்தீனம்மாள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்று விசைப்படகு கவிழ்ந்ததில் மாயமான குளச்சல் மீனவர்கள் ஆன்றோ, ஆரோக்கியம் ஆகியோரை மாவட்ட நிர்வாகமும், மீன் வளத்துறையும் துரிதமாக மீட்க கேட்பது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வை நியமனம் செய்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, கழக 52-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வின் 65-வது பிறந்த நாளை வருகிற 17-ந்தேதி குளச்சல் அலுவலகத்தில் கொண்டாடுவது எனவும் வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×