search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்பத்தகராறில் மண்டைக்காடு கடலில் குதித்த இளம்பெண்
    X

    குடும்பத்தகராறில் மண்டைக்காடு கடலில் குதித்த இளம்பெண்

    • மீனவர்கள் காப்பாற்றினர்
    • மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடலில் புனித பாதம் நனைப்பது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடலில் புனித பாதம் நனைப்பது வழக்கம்.

    நேற்று காலை அங்கு கடற்கரையில் நின்ற பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்தார். இதனால் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். உடனே அவர்கள் சப்தமிட்டனர். உடனே புதூர் மீனவர்கள் கடலில் குதித்து கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு கரை சேர்த்தனர்.

    உடல் முழுவதும் மணல் ஒட்டியிருந்தது. தகவலறிந்த குளச்சல் மரைன் இன்ஸ் பெக்டர் நவீன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அந்த பெண் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு கிறார். போலீசார் நடத்திய விசார ணையில் அந்த பெண் கருங்கல் அருகே நட்டாலம் கிணற்று விளையை சேர்ந்த ஜானி மனைவி ஆன்சி (30) என்பதும், கணவன்-மனை விக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனம் உடைந்த ஆன்சி மண்டைக் காடு வந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஆன்சிக்கு 2 பெண் குழந்தை கள் உள்ளனர்.

    Next Story
    ×