என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எய்ம்ஸ்
நீங்கள் தேடியது "எய்ம்ஸ்"
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பாரத பிரதமர் மோடி இன்று காலை 11.28 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். #MaduraiAIIMS
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று காலை 11.28 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று காலை 11.28 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நலம் விசாரித்தார். #VenkaiahNaidu #ManoharParrikar
புதுடெல்லி :
கோவா மாநில முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் அவதிபட்டு வருகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் சுமார் 3 மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
அதன் பின்னர் கடந்த மாதம் முதல் வாரத்தில் அவர் நாடு திரும்பினார். அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்றபோதும், அவருக்கு நோய் பாதிப்பு குறையவில்லை.
இதையடுத்து கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது பற்றி வெங்கையா நாயுடு தனது டுவிட்டரில், ' கோவா மாநிலத்தின் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்து அவருடைய உடல் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தேன். அவர் நமது நாட்டின் மிகவும் அன்பான மற்றும் நேர்மையான மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். அவர் விரைவில் குணமடைந்து வந்து எப்போதும் போல இந்த சமூகத்துக்கு சேவையாற்றுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். ' என தெரிவித்தார். #VenkaiahNaidu #ManoharParrikar
கோவா மாநில முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் அவதிபட்டு வருகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் சுமார் 3 மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
அதன் பின்னர் கடந்த மாதம் முதல் வாரத்தில் அவர் நாடு திரும்பினார். அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்றபோதும், அவருக்கு நோய் பாதிப்பு குறையவில்லை.
இதையடுத்து கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது பற்றி வெங்கையா நாயுடு தனது டுவிட்டரில், ' கோவா மாநிலத்தின் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்து அவருடைய உடல் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தேன். அவர் நமது நாட்டின் மிகவும் அன்பான மற்றும் நேர்மையான மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். அவர் விரைவில் குணமடைந்து வந்து எப்போதும் போல இந்த சமூகத்துக்கு சேவையாற்றுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். ' என தெரிவித்தார். #VenkaiahNaidu #ManoharParrikar
Met Shri Manohar Parrikar, the Chief Minister of Goa and enquired about his health at AIIMS today. He is one of the most lovable and honest senior politicians of our country. I wish & hope he will get well soon and serve the society as he ever does. #ManoharParrikar
— VicePresidentOfIndia (@VPSecretariat) September 30, 2018
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகளை பொய்யர்களின் கூடாரம் என முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். #MKStalin #AIIMS #RTI
சென்னை :
மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும் அந்த பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தெரியவந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகளை பொய்யர்களின் கூடாரம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது பதிவில் கூறியிருப்பதாவது:–
‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்கவேண்டும் என்றனர் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள். ஆனால், இவை அனைத்தும் பொய் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. பொய்யர்களின் கூடாரம் மத்திய–மாநில அரசுகள்’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மதுரையை சேர்ந்த ஹக்கீம் காசிம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பெற்ற இதுதொடர்பான விவரங்கள் அடங்கிய கடிதத்தையும் மு.க.ஸ்டாலின் பதிவேற்றம் செய்துள்ளார். #MKStalin #AIIMS #RTI
மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை இயக்கத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும் அந்த பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தெரியவந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகளை பொய்யர்களின் கூடாரம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது பதிவில் கூறியிருப்பதாவது:–
‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்கவேண்டும் என்றனர் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள். ஆனால், இவை அனைத்தும் பொய் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. பொய்யர்களின் கூடாரம் மத்திய–மாநில அரசுகள்’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மதுரையை சேர்ந்த ஹக்கீம் காசிம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பெற்ற இதுதொடர்பான விவரங்கள் அடங்கிய கடிதத்தையும் மு.க.ஸ்டாலின் பதிவேற்றம் செய்துள்ளார். #MKStalin #AIIMS #RTI
தமிழகத்தில் #AIIMS அமைய மத்திய அரசு 2000 கோடி ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்க வேண்டுமென்றனர் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள்!
— M.K.Stalin (@mkstalin) September 30, 2018
ஆனால், RTI தகவல் இவையனைத்தும் பொய் என்பதை உறுதிபடுத்தியுள்ளது! பொய்யர்களின் கூடாரம் மத்திய மாநில அரசு! pic.twitter.com/yUVai7BkZ4
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த கர்ப்பிணி மனைவியை பார்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் டாக்டர் வேடமிட்டு சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். #AIIMS
புதுடெல்லி :
இருப்பினும் காவலர்களுக்கு சந்தேகம் தீராததால் அவரிடம் டாக்டர்கள் வைத்திருக்கும் அடையாள அட்டையை கேட்டபோது, பதற்றமைடைந்த அந்த நபர் தாம் டாக்டர் வேடமிட்டு வந்த உண்மையை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தெற்கு டெல்லி காவல் துணை ஆணையர் ரோமிலா பணியா கூறுகையில், ‘ அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் காசியாபாத்தை சேர்ந்த அஷிஷ் திருப்பதி என்பது தெரியவந்தது.
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மனைவியை எளிதில் பார்க்க முடியாத அவர், டாக்டர் வேடமிட்டு சென்றால் எளிதில் மனைவியை பார்க்க முடியும் என்பதால் வெள்ளை கோட் அணிந்து மருத்துவமனை வார்டுகளில் சுற்றித்திரிந்துள்ளார்’ என தெரிவித்தார்.
எனினும், அவர் மீது வழக்கு பதியப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வார்டுகளில் டாக்டர்கள் அணியும் வெள்ளை கோட் அணிந்தவாறு 25 வயது மதிக்கத்தக்க நபர் சுற்றித்திரிந்துள்ளார்.
அவரது நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இருந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் விசாரித்ததில் தாம் ஒரு மூத்த டாக்டர் என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் காவலர்களுக்கு சந்தேகம் தீராததால் அவரிடம் டாக்டர்கள் வைத்திருக்கும் அடையாள அட்டையை கேட்டபோது, பதற்றமைடைந்த அந்த நபர் தாம் டாக்டர் வேடமிட்டு வந்த உண்மையை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தெற்கு டெல்லி காவல் துணை ஆணையர் ரோமிலா பணியா கூறுகையில், ‘ அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் காசியாபாத்தை சேர்ந்த அஷிஷ் திருப்பதி என்பது தெரியவந்தது.
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மனைவியை எளிதில் பார்க்க முடியாத அவர், டாக்டர் வேடமிட்டு சென்றால் எளிதில் மனைவியை பார்க்க முடியும் என்பதால் வெள்ளை கோட் அணிந்து மருத்துவமனை வார்டுகளில் சுற்றித்திரிந்துள்ளார்’ என தெரிவித்தார்.
எனினும், அவர் மீது வழக்கு பதியப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
புதுடெல்லி:
பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.
இதனை அடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் மந்திரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
புதுடெல்லி:
பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா , மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும், பல மாநில முதல்வர்களும், மத்திய மந்திரிகளும் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர்.
நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
புதுடெல்லி:
பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி செலுத்துவார்கள். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது.
பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பின்னர், அங்கு அவருக்கான நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி, பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் நாளை பொதுவிடுமுறை அறிவித்துள்ளன. #Atal Bihari Vajpayee #RIPVajpayee
புதுடெல்லி:
பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி, பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளன. மேலும், நாளை ஒருநாள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சமாதி அமைந்ந்துள்ள விஜய் காட் பகுதியில் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க அரசு 1.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Atal Bihari Vajpayee #RIPVajpayee
புதுடெல்லி:
பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு குடும்பத்தினர், பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி செலுத்துவார்கள். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது.
பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பின்னர், அங்கு அவருக்கான நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
கார்கில் போர், அணுகுண்டு சோதனை என இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்க வைத்த வாஜ்பாய் எனும் தலைவர் என்றும் வரலாற்றில் இருப்பார். #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee
புதுடெல்லி:
இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கியவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். பிரதமர் பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமை பெற்றவர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாய் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு பிறந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். குவாலியரின் விக்டோரியா கல்லூரியில் படித்த அவர் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.
வாஜ்பாயின் அரசியல் பயணம் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இருந்து தொடங்கியது. தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று கைதாகி சிறை சென்றார். 23 நாட்கள் அப்போது சிறைவாசம் அனுபவித்தார்.
பாஜகவின் தாய் இயக்கமான ஜன சங்கத்தை தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜியின் சீடராக இணைந்த வாஜ்பாய் அரசியலில் கால் பதிக்க தொடங்கினர். 1957-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.
தனது பேச்சால் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்ட வாஜ்பாய், பின்னாளில் நாட்டின் பிரதமராக வருவார் என அப்போதைய பிரதமர் நேரு சிலாகித்து புகழ்ந்துள்ளார். எமர்ஜென்சியில் சிறை சென்ற வாஜ்பாய், எமர்ஜென்சிக்கு பின்னர் ஜனதா கூட்டணியாக பல தலைவர்களுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்து வென்று மொராஜி தேசாராய் மந்திரிசபையில் வெளியுறவு மந்திரியாக இடம் பிடித்தார்.
ஜனதா கூட்டணி 1979-ல் கலைந்த பின்னர், அத்வானி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நண்பர்களுடன் இணைந்து வாஜ்பாய் பா.ஜ.க.வை தொடங்கினார். கடின முயற்சி எடுத்து கட்சியை வளர்த்து காங்கிரசுக்கு நிகரான கட்சியாக அதனை மாற்றினார்.
1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. நாட்டின் பிரதரமராக வாஜ்பாய் பதவியேற்றார். ஆனால், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.
1996-1998 காலகட்டத்தில் இரண்டு முறை ஐக்கிய முன்னணி அரசாங்கங்கள் வீழ்ச்சியடைய, ஆட்சி கலைக்கப்பட்டது, மறுபடியும் தேர்தல் நடந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது. வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். 13 மாதங்கள் கழித்து, அ.தி.மு.க. தனது ஆதரவை திரும்ப பெற்றதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார்.
பின்னர் 1999 பொதுத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்களைக் கைப்பற்றியது. வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். இந்த முறை தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
வாஜ்பாய் தனது பதவிக்காலத்தில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொண்டார். தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், வெளியுறவுக்கொள்கை, பொருளாதார சீர்திருத்தங்கள், கார்கில் போர், போக்ரான் அணுகுண்டு சோதனை, இந்தியா-பாகிஸ்தான் பேருந்து சேவை என உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது.
குறிப்பாக இவர் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டபின் நாடு பல கோணங்களில் முன்னேற்றம் அடைந்தது. தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள் ஏற்றம் கண்டன.
அரசியல்வாதி மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் என பனமுகத் திறமை கொண்ட வாஜ்பாய், இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர், பல ஆண்டுகளாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாஜகவை விமர்சிப்பவர்கள் கூட வாஜ்பாய் மீது மரியாதை செலுத்தும் வண்ணம் அவரது அரசியல் செயல்பாடுகள் இருந்தது. இந்த செயல்பாடுகள் மூலம் அவர் என்னென்றும் நினைவு கூறத்தக்க வகையில் இருப்பார்.
கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. #AtalBihariVajpayee #Vajpayee #AIIMS #RIPVajpayee
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.
வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #Jayalalithaa
சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிஷன் ஜெயலலிதா தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை அளிக்க வந்த டெல்லி எய்மஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோர் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆஜராக விசாரணை கமிஷன் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X