search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை கால்பந்து"

    • ஆறு போட்டிகளில் நான்கில் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்
    • அரையிறுதியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினார்

    கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    நாளை நடைபெறும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியனுக்காக பிரான்ஸ்- அர்ஜென்டினா அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த அணியின் கேப்டன் மெஸ்சிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. இதற்கு முன் 2014-ல் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

    இதனால் மெஸ்சிக்கு உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என கருதப்பட்டது. ஆனால், அதன்பின் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது சிறப்பான விளையாட்டால் தற்போது அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    குரோசியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அதன்பின் அல்வாரெஸ் கோல் அடிக்க துணை புரிந்தார்.

    இந்த போட்டியின்போது மெஸ்சி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாராம். 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லையாம். இருந்தாலும் விளையாடுகிறேன் என மெஸ்சி தன்னம்பிக்கையுடன் விளையாடினாராம்.

    தற்போது இடது காலில் தசைப்பிடிப்பு (hamstring) ஏற்பட்டதன் காரணமாக நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதனால் அர்ஜென்டினா அணி மெஸ்சி காயத்தால் கவலையடைந்துள்ளது.

    ஒரு வேளை நாளைமறுதினம் பிரான்ஸ்க்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்சி 100 சதவீத உடற்குதியுடன் விளையாடவில்லை என்றால், அது அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.

    டி மரியா அரையிறுதியில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது அவர் உடற்தகுதி பெற்று விட்டதால் இறுதிப் போட்டியில விளையாட வாய்ப்புள்ளது.

    இந்த உலகக் கோப்பையில் மெஸ்சி 5 கோல் அடித்துள்ளார். 3 கோல் அடிக்க துணை புரிந்துள்ளார். அவருடன் எம்பாப்வேவும் 5 கோல் அடித்துள்ளார். இருவரும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

    • இறுதிப்போட்டி 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    • அர்ஜென்டினா-பிரான்ஸ் அணி 2 முறை உலக கோப்பையை வென்றுள்ளன.

    லுசைல்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது உச்ச கட்டத்தை எட்டி விட்டது. நேற்றுடன் அரை இறுதி ஆட்டங்கள் முடிந்து விட்டன.

    நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதியில் அர்ஜென்டினா அணி குரோஷியாவையும், நேற்று நடந்த 2-வது அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி மொராக்கோவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 3-வது இடத்துக்கான போட்டி நாளை மறுநாள் (17-ந்தேதி) தோகாவில் உள்ள கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அரை இறுதியில் தோல்வியை தழுவிய மொராக்கோ-குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 'குரூப்' சுற்றில் 'எப்' பிரிவில் இடம் பெற்று இருந்தன. இரு அணிகளும் மோதிய 'லீக்' ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. 3-வது இடத்துக்கான ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

    இறுதிப்போட்டி 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-பிரான்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இரு அணிகளும் 2 முறை உலக கோப்பையை வென்றுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா 1978, 1986 ஆகிய ஆண்டுகளிலும், ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ் 1998, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை வென்றன.

    இரு அணி நட்சத்திர வீரர்களும் நேரடியாக இறுதிப்போட்டியில் மோதுகிறார்கள். அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சியும், எம்பாப்வேயும் இறுதி போட்டியில் வீர தீரத்துடன் விளையாடுவார்கள். இருவருமே பிரான்ஸ் நாட்டில் உள்ள பி.எஸ்.ஜி. கிளப் அணிக்காக ஆடி வருகிறார்கள்.

    இந்த உலக கோப்பையில் மெஸ்சியும், எம்பாப்வேயும் தலா 5 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளனர். இதே போல 2-வது இடத்தில் ஜுலியன் அல்வா ரெஸ் (அர்ஜென்டினா), ஆலிவர் ஜிரவுட் (பிரான்ஸ்) உள்ளனர். இருவரும் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர்.

    • இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத மொராக்கோ ரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கினார்கள்.
    • பெல்ஜியத்தில் போலீசார் மீது மொராக்கோ ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

    பாரீஸ்:

    கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து அரை இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியிடம் மொராக்கோ அணி தோல்வியை தழுவியது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத மொராக்கோ ரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கினார்கள்.

    பிரான்சில் போலீசார் மீது அவர்கள் கற்களை வீசினார்கள். பெல்ஜியத்தில் போலீசார் மீது மொராக்கோ ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அந்த பகுதி முழுவதும் தீ பிழம்பாக காட்சி அளித்தது. இந்த வன்முறைகளை தடுத்த போது போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வன்முறையை அடக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,
    • 35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியோடு அதாவது டிசம்பர் 18 ஆம் தேதி ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தினார். அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்றைய போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

    உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அடுத்த தொடர் வருவதற்கு பல வருடங்கள் ஆகும், என்னால் அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன். இப்படி முடித்து கொள்வதே சிறந்தது என அவர் கூறினார்.

    35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.
    • மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

    இதனை அடுத்து 7-வது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இந்த போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.

    இந்நிலையில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் டிசம்பர் 18 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    முதல் முறையாக அரையிறுதிப் போட்டியில் தகுதி பெற்ற குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கனவு தகர்ந்தது.

    • லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன்.
    • 46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.

    தோகா:

    பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நேற்று அளித்த பேட்டியில், 'உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில்- பிரான்ஸ் அணிகள் மோதும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. இப்போது பிரேசில் வெளியேறி விட்டது. இனி பிரான்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளது.

    தடுப்பாட்டம், தாக்குதல், நடுகளம் என்று எல்லா வகையிலும் நிலையான ஒரு அணியாக இருக்கிறது. கிலியன் எம்பாப்பே, இந்த உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி வருகிறார். உடல் மற்றும் தொழில்நுட்ப அளவில் அவரது தரம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக அவர் உருவெடுக்கலாம்' என்றார்.

    லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன், ஆனால் ஒரு பிரேசில் வீரராக அல்ல' என்றும் குறிப்பிட்டார். 46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.

    • அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
    • உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை.

    லுசைல்:

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் , 2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா, கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த குரோஷியா , ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 4 நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரை இறுதி ஆட்டம் லுசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதைத் தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை. 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

    அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 9 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அரைஇறுதியில் அந்த அணி தோற்றது கிடையாது.

    குரோஷியா பலம் வாய்ந்தது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. முன்களத்தில் வலுவாக இருக்கும் அந்த அணி பினகளத்தில் பலவீனமாக காணப்படுகிறது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. கடைசி நிமிடங்களில் 2 கோல் வாங்கி இருந்தது. இதனால் பின் களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    நட்சத்திர வீரர் மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் 4 கோல்கள் அடித்துள்ளார். முக்கியமான அரைஇறுதியில் அவர் வீரர்களை ஒருங்கிணைப்பது அவசியமானதாகும்.

    ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் , மார்டினஸ் , மொலினா போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். கோல்கீப்பர் மார்ட்டினஸ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். நடுகள வீரர் அகுனா மஞ்சள் அட்டை பெற்றதால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது.

    உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

    மொராக்கோ, பெல்ஜியத்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றில் ஜப்பானையும் , கால் இறுதியில் பிரேசிலையும் பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 6 கோல் போட்டுள்ளது. 3கோல் வாங்கியுள்ளது.

    சிறந்த வீரர்களை கொண்ட குரோஷியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு நுழையும் வேட்கையில் உள்ளது. 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த உலக கோப்பையில் அந்த அணி அரைஇறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இறுதிப் போட்டியில் பிரான்சிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    குரோஷியா அணியில் கேப்டன் மாட்ரிச் , கிராமரிச், பெரிசிச் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். நடுகளம், பின்களத்தில் அந்த அணி மிகவும் வலுவாக இருக்கிறது.

    இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அர்ஜென்டினா 2 ஆட்டத்திலும், குரோஷியா 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    உலக கோப்பையில் மோதிய 2 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. 1998 உலக கோப்பையில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கிலும் , கடந்த உலக கோப்பையில் குரோஷியா 3-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றன. இதற்கு அர்ஜென்டினா நாளை பழிவாங்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

    அர்ஜென்டினாவும், குரோஷியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    நாளை மறுநாள் (14-ந் தேதி) நடைபெறும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

    • போர்ச்சுகல் அணிக்கான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை.
    • எனது அணியினரையோ, எனது நாட்டையோ ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் போர்ச்சுக்கல் உலக கோப்பையை வெல்லும் என்ற தன்னுடைய கனவு முடிவுக்கு வந்து விட்டதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

    போர்ச்சுக்கலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாகும். கனவு இருக்கும் வரை அழகாக இருந்தது. இந்த கனவுக்காக நான் கடுமையாக போராடினேன். துரதிஷ்டவசமாக என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது.

    போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எப்போதும் ஒரு (போர்த்துகீசியம்) இலக்கிற்காக போராடி வருகிறேன். எனது அணியினரையோ அல்லது எனது நாட்டையோ நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன். 16 ஆண்டுகளுக்கும் மேலாக நான் விளையாடிய 5 உலகக் கோப்பை ஆட்டங்களில், எப்போதும் மில்லியன் கணக்கான போர்ச்சுகீசியர்களின் ஆதரவிலும், நான் எனது முழுமையான பங்களிப்பை கொடுத்தேன்.

    எப்போதும் அனைவரின் நோக்கத்திற்காக போராடும் ஒருவனாக இருக்கிறேன். இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. ஒரு நல்ல ஆலோசகராக இருந்து ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டிய நேரம் இது. நன்றி போர்ச்சுகல், நன்றி, கத்தார். இவ்வாறு ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

    போர்ச்சுக்கல் அணிக்காக 5 உலக கோப்பை தொடர்களில் ரொனால்டோ விளையாடி உள்ளார். இந்நிலையில் அடுத்த உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. அப்போது ரொனால்டோவுக்கு 41 வயது ஆகி விடும் என்பதால் அதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    • அரையிறுதிச் சுற்றுக்கு 4 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
    • இதில் இருந்து 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.

    லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழைந்தன. நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், காலிறுதி சுற்றுகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன. காலிறுதியில் வென்றதன் மூலம் அர்ஜென்டினா, குரோசியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    நாளை மறுதினம் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா, குரோசியா அணிகள் மோதுகின்றன. டிசம்பர் 14-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 2-வது அரையிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய அணிகளுக்கு குரோசியா, மொராக்கோ அணிகள் அதிர்ச்சி அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

    • முதல் பாதியில் ஒரு கோல் அடித்து பிரான்ஸ் முன்னிலை பெற்றிருந்தது.
    • இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ட்சோயமெனி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

    2வது பாதி ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சம நிலையில் இருந்தது. பின்னர் 78 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிரவுட் ஒரு கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவிலும் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    • மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • மொராக்கோ அணி இந்தத் தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3-வது காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    மொராக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை என்ற குறையையும் தீர்த்துள்ளது.

    • போர்ச்சுக்கல் வீரர்கள் அடித்த அனைத்து கோல்களையும் ரொனால்டோ கொண்டாடினார்.
    • ரொனால்டோ இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.

    தோஹா:

    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், கோல் மெஷின் என அழைக்கப்படும் தலைசிறந்த வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோ (வயது 37), களமிறக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார்.

    சுவிட்சர்லாந்துடனான போட்டி தொடங்கியபோது, தேசிய அணியில் இருந்து விலகப் போவதாக மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது. தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோசுடனான உரையாடலின்போது இதனை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் அணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு விளக்கம் அளித்தது. அதில், "கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த நேரத்திலும் கத்தாரில் தேசிய அணியை விட்டு வெளியேறுவதாக மிரட்டவில்லை. அவர் தேசிய அணிக்காகவும் நாட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் ஒரு தனித்துவமான சாதனையை உருவாக்குகிறார். இதை மதிக்க வேண்டும்" என கூறியிருந்தது.

    இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரொனால்டோ குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டி நடைபெற்ற நாளில் மதிய உணவுக்குப் பிறகு ரொனால்டோவை எனது அலுவலகத்திற்கு அழைத்தேன். அவர் எப்போதும் ஆரம்பத்திலேயே களமிறங்கியதால், நான் எடுத்த முடிவு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.

    இது ஒரு நல்ல யோசனை என்று நினைக்கிறீர்களா? என என்னிடம் கேட்டார். இந்த உரையாடல் சாதாரணமாகவே இருந்தது. நான் எனது கருத்துக்களை விளக்கினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார். வெளிப்படையாகவும் சாதாரணமாகவும் உரையாடினோம். அப்போது அவர் தேசிய அணியை விட்டு வெளியேற விரும்புவதாக என்னிடம் ஒருபோதும் கூறவில்லை.

    அவர் தனது சக வீரர்களை ஊக்குவிக்க முடிவு செய்தார். மேலும் நாங்கள் அடித்த அனைத்து கோல்களையும் கொண்டாடினார். இறுதியில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சக வீரர்களை அழைத்தார். அவரை விட்டுவிடுங்கள். அவரை சுதந்திரமாக விட்டுவிட வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும், 90 சதவீத கேள்விகள் அவரைப் பற்றியே இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ரொனால்டோ இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரொனால்டோவுக்கு பதிலாக களமிறங்கிய ஸ்ட்ரைக்கர் கோன்கலோ ராமோஸ் (21) ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

    எனினும், இன்று மொராக்கோவுடனான காலிறுதி ஆட்டத்தில் ரொனால்டோவுக்கான கதவு திறந்திருக்கிறது என பயிற்சியாளர் சான்டோஸ் தெரிவித்தார். இது வித்தியாசமான ஆட்டமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். எந்த வீரராக இருந்தாலும், களத்தில் இறக்கப்படாமல் மாற்று வீரராக வெளியில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்றும் பயிற்சியாளர் சான்டோஸ் தெரிவித்தார்.

    ×