என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உயர்கல்வி"
- முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- மாணவ-மாணவிகள் நேரடியாக கல்லூரியில் சேர அரசு இறுதி வாய்ப்பு அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022- 23-ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இளம் அறிவியல், புள்ளியியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
12-ம் வகுப்பில் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே கணினி அறிவியல், புள்ளியில் பாட பிரிவிலும், வணிகவியல் படித்தவர்கள் மட்டுமே இளம் வணிகவியல்(பி. காம்.) பாடப்பிரிவிலும், பொருளியல் படித்தவர்கள் மட்டுமே எக்கனாமிக்ஸ் பாடப்பிரிவிலும் சேர முடியும். ஆகையால் இதுவரை பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர தவறவிட்ட மாணவ-மாணவிகள் நேரடியாக கல்லூரியில் சேர அரசு இறுதி வாய்ப்பு அளித்துள்ளது. இத்தகவலை ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
- இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.
முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உரிய ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததால் இவர்களின் பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர்கல்வி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கிடைக்ககூடிய சலுகைகள் பெற முடியாத நிலை உள்ளது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா நொச்சியூர் கிராமத்தில் "இந்து மலைக்குறவர்" இனத்தை சேர்ந்த 38 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு உரிய ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததால் இவர்களின் பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜாதி சான்றிதழ் கேட்டு அதிகாரிகளிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறுகின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கடந்த 11 வருடங்களாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகின்றனர்.
தங்கள் ஜாதியை தவிர்த்து பொய்யாக பிற ஜாதி பெயரை தங்களின் அடையாளமாக சான்றிதழ் பெற்றால் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கிடைக்ககூடிய சலுகைகள் பெற முடியாத நிலை உள்ளது.
அந்த காலத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தங்களின் முன்னோர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லை.
ஆனால் தற்போது எங்கள் பிள்ளைகளும் பள்ளிகளுக்கு செல்வதால் சாதி,மத, இருப்பிட சான்றிதழ்கள் தேவை கட்டயாமாக உள்ளது.
எனவே நொச்சியூர் கிராமத்தில் வசிக்கும் இந்து மலைவாழ் மக்களுக்கு உரிய ஜாதி சான்றிதழை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உயர்கல்வி கற்பது குறித்து வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி ஆசிரியா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்.
- மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
அங்குள்ள வகுப்பறை, சமையற்கூடம், தொழிற்பயிற்சி கூடம், ஆய்வகக்கூடம், பணியாளர்கள் அறை, பதிவறை போன்றவற்றை பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பரிசோதனை செய்தார். பின்னர் மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பாடங்களில் சேரும் தருணத்தில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்த கல்வி நிலையங்களில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் சரியாக புரியவில்லை என்றால் மீண்டும் அதற்குரிய விளக்கத்தை கேட்டு அறிந்து புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை மனப்பாடம் செய்வது நீண்ட நாட்களுக்கு பயன்படாது. சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு காலங்களில் மட்டுமே படிப்பது என்ற எண்ணத்தை தவிர்த்து தினந்தோறும் பாடங்களை படிக்க வேண்டும். மாணவர்கள் படிக்க விரும்பும் பட்டப்படிப்பினை திட்டமிட்டு விடாமுயற்சியுடன் கல்வி கற்கும் பட்சத்தில் வெற்றி எளிதாகும்.
அரசுப்பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்களது திறமையினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவம், பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு பாடத்தில் உள்ள உயர்கல்வி என்ன என்பது குறித்தும், சிறந்த கல்வி நிலையங்கள் உள்ள இடங்கள் குறித்தும், மாணவர்கள் அறியும் வகையில் வாரத்திற்கு 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களது வீட்டுச்சூழ்நிலை வேறுபடும். ஆகையால் ஆசிரியர்கள் அனைவ ரையும் அர வணைத்து புரியும்படியான பாடத்திட்டங்களை தொகுத்து வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மநாப புரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்,
ஜூன்.30-
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு முதல்- அமைச்சரின் நான் முதல்வன் என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற தலைப்பினை மைய கருத்தாக கொண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி னார். நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
12-ம் வகுப்பு முடித்து மேற்படிப்பிற்கு செல்ல உள்ள மாணவ, மாணவி யர்களாகிய நீங்கள் உங்களு டைய தனித்திறமையை புரிந்து கொண்டு அதற்கேற்ற கல்வியினை பயின்றும் உங்களது உள்ளத் தில் புகைந்திருக்ககூடிய எண்ணங்களை வெளிப்ப டுத்தி அவற்றில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தி உலகளவில் சாதிக்க முன்வர வேண்டும்.
மாணவ, மாணவியர்களா கிய நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் கல்வி பயில ேவண்டுமென்ற எண்ணத்தை மாற்றி, அரசுப்பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவியர்கள் உங்களுடைய உள்ள தாழ்வு மனப்பான்மையினை மாற்றி எங்களாலும் நல்ல சூழ்நிலையில் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற முடியும் என்ற இலட்சிய நோக்கத்து டனும், எளிதாக என்னாலும் கல்வி பயில முடியும் என்ற நம்பிக்கை யுடன் மேற்படிப்பை தொடர வேண்டும்.
கல்வி என்பது மிக சக்தி வாய்ந்த ஆயுதம். எதிர்காலத் தில் நான் இந்த துறையில் தான் பணியாற்ற வேண்டு மென்ற எண்ணம் மாணவ, மாணவியர்களாகிய அனை வரிடமும் இருப்பது இயல்பு. அந்த எண்ணம் நிறைவேறா விடினும் நீங்கள் அனை வரும் மனம் தளராமல் விடா முயற்சியுடனும், தன் னம்பிக்கையுடனும் உங்கள் வாழ்வினை எதிர்கொண்டு ஏற்றம் பெற வேண்டும்.
மாணவ, மாணவியர்களா கிய நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் எதிர்காலத்திற்காக வும் கல்வி பயில முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மநாப புரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்