என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்தியா தென் ஆப்பிரிக்கா தொடர்"
- உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதில் இருந்தால் அதை செய்யுங்கள்.
- சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது.
ராஞ்சி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன் அடித்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 84 பந்துகளில் 93 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஷான் கிஷன் கூறியதாவது:
சில வீரர்களுக்கு ஸ்டிரைக்கை சுழற்றும் பலம் உண்டு, சிக்ஸர் அடிப்பதே எனது பலம். நான் சிரமமின்றி சிக்ஸர் அடித்தேன், பலரால் அதைச் செய்ய முடியாது. சிக்ஸர் அடித்து ரன்கள் குவித்தால், ஸ்ட்ரைக் ரேட் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதாக இருந்தால் அதை செய்யுங்கள். ஒற்றை ரன்னாக எடுத்திருக்கலாம், சதம் அடித்திருக்கலாம். ஆனால் நான் எனக்காக விளையாட மாட்டேன்.
எனது தனிப்பட்ட ஸ்கோரை நினைத்தால், எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நான் ரசிகர்களை ஏமாற்றி விடுகிறேன். சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் 93 ரன் அணிக்கு ஒரு பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். ரன் எடுப்பதில் வேகத்தை அளித்து அணியை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, இதனால் அடுத்து வரும் வீரர்கள் மீது அழுத்தம் குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 278 ரன்களை எடுத்துள்ளது.
- அடுத்து ஆடிய இந்திய அணி 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
ராஞ்சி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும் அவுட்டாகினர். டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர்.
தவான் 13 ரன்னிலும் கில் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்தியா 2 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது.
அடுத்து இறங்கிய இஷான் கிஷன் ஜோடி நேர்த்தியாக ஆடியது. கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். அரை சதம் கடந்த இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 161 ரன்களை குவித்து அசத்தியது. அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ஒத்துழைக்க இந்திய அணி வெற்றிப் பாதைக்குச் சென்றது.
பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். இது அவரது 2வது சதமாகும்.
இறுதியில், இந்திய அணி 45.5 ஓவரில் 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன்னுடனும், சாம்சன் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 278 ரன்களை எடுத்துள்ளது.
- அந்த அணியின் ஹென்ரிக்ஸ், மார்க்ரம் ஆகியோர் அரை சதமடித்தனர்.
ராஞ்சி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. டி காக் 5 ரன்னில் அவுட்டானார். மலான் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஹென்ரிக்சுடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதம் கடந்தனர்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், கிளாசன் 30 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும், பார்னெல் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- தீபக் சாஹர் லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 2-வது ஒருநாள் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறுகிறது.
லக்னோ:
இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி-20 தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக லக்னோவில் நடந்த முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 9ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 11ஆம் தேதி புதுடெல்லியிலும் நடைபெறவுள்ளது.
- நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை தவறவிட்டனர்.
- ஸ்ரேயாஸ், சாம்சன், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடினர்.
லக்னோ:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி நேற்று லக்னோவில் நடந்தது.
இதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடியது. மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 40 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்தது. டேவிட் மில்லர் 75 ரன்னும், கிளாஸ்சன் 74 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணியில் ஷிகர் தவான் (4 ரன்), சுப்மன் கில் (3), ருதுராஜ் கெய்க்வாட் (19), இஷான் கிஷன் (20) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஸ்ரேயாஸ் அய்யர்-சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன் கடைசி வரை நின்று போராடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டது. அதில் சாம்சன் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 20 ரன்னே எடுத்தார்.
இந்தியா 40 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா 9 ரன் வித்தியாசத்தில் வென்றது. நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை தவறவிட்டனர். பீல்டிங் சிறப்பாக அமையவில்லை.
தோல்வி குறித்து கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-
எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். ஸ்ரேயாஸ், சாம்சன், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடினர். ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியது. வேகமும் இருந்தது.
இதனால் 250 ரன் இலக்கு என்பது அதிகமானது என்று நினைத்தேன். பீல்டிங்கில் தவறு செய்ததால் சில ரன்களை விட்டு கொடுத்து விட்டோம். ஆனால் இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவமாகவும், கற்றலாகவும் இருக்கும் என்றார்.
சஞ்சு சாம்சன் கூறும் போது, நடு ஓவர்களில் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி அதிக ரன் விட்டு கொடுத்தார். எனவே அவரை இலக்கு வைத்து விளையாடினேன்.
கடைசி ஓவரை ஷம்சி வீசுவார் என்று எங்களுக்கு தெரியும். கடைசி ஓவரில் 24 ரன் எடுக்க வேண்டி இருந்திருந்தால் அதில் நான்கு சிக்சர் அடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். இரண்டு ஷாட்களை அடிக்க தவறிவிட்டேன். அடுத்த முறை இன்னும் கடினமாக முயற்சி செய்வேன். ஆனால் எனது பங்களிப்பில் நான் திருப்தியடைந்தேன் என்றார்.
3 ஆட்டம் கொண்ட தொடரில் 2-வது ஆட்டம் வருகிற 9-ந்தேதி ராஞ்சியில் நடக்கிறது.
- அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- கடைசி வரை போராடிய சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார்.
லக்னோ:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 8 ரன்களில் துவக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. அதாவது ஷூப்மான் கில் 3 ரன்னிலும், கேப்டன் ஷிகர் தவான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்களும், இஷான் கிஷன் 20 ரன்களும் சேர்த்தனர்.
அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார். போதுமான ரன்ரேட் இல்லாமல் தவித்த நிலையில், சஞ்சு சாம்சன்-ஷர்துல் தாக்கூர் ஜோடி நம்பிக்கை அளித்தது. நெருக்கடிக்கு மத்தியில் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்த ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். இதனால் ரன்ரேட் உயர்ந்தது. எனினும் இலக்கை எட்ட முடியவில்லை.
மறுமுனையில் ஆடிய ஷர்துல் தாக்கூர் 33 ரன்களில் அவுட் ஆனதையடுத்து, ஆட்டத்தின் போக்கு மாறியது. குல்தீப் யாதவ் வந்த வேகத்தில் வெளியேறினார். ஆவேஷ் கான் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரை ஷாம்சி வீசினார். முதல் பந்து வைடு ஆனது. இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ரவி பிஷ்னோய் சிக்சர் அடித்தார். இரண்டாவது மற்றும் 3வது பந்தில் சஞ்சு சாம்சன் பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் மீண்டும் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். கடைசி ஓவரில் மொத்தம் 20 ரன்கள் அடித்தனர். சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் மொத்தம் 86 ரன்கள் குவித்தார்.
கடைசி வரை போராடிய இந்திய அணி 40 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி 9ம் தேதி ராஞ்சியில் நடக்கிறது.
- ஹென்ரிச் கிளாசென் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாசினர்.
- இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட் எடுத்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்கள் ஜனனிமான் மாலன், குயின்டன் டி காக் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாலன் 22 ரன்களும், குயின்டன் டி காக் 48 ரன்களும் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். கேப்டன் பவுமா 8 ரன்களிலும், மார்க் ராம் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.
அதன்பின்னர், அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாசினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
- தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
- மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
லக்னோ:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் ஆகியோர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார்கள்.
இந்திய அணி:-
ஷிகர் தவான், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அவேஷ் கான்
தென் ஆப்பிரிக்கா அணி:-
ஜான்மேன் மலான், குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி
- மழைப் பொழிவு காரணமாக டாஸ் அரை மணி நேரம் தாமதமாக போட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்திய அணி ஆடும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. லக்னோவில் இந்திய அணி ஆடும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.
இந்நிலையில் மழைப் பொழிவு காரணமாக டாஸ் அரை மணி நேரம் தாமதமாக போட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டம் 2 மணிக்கு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி மோத இருந்த ஒருநாள் போட்டி கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 3-வது டி20 போட்டியில் 227 ரன்கள் குவித்த தென்ஆப்பிரிக்கா, 178 ரன்னில் இந்தியாவை ஆல்-அவுட் செய்து அசத்தியது.
- 2-வது ஆட்டத்தில் டேவிட் மில்லரும், கடைசி ஆட்டத்தில் ரிலீ ரோசவ்வும் சதம் அடித்து அசத்தினர்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. லக்னோ, பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து தென்ஆப்பிரிக்க அணி தொடரை இழந்தது. ஆனால் இந்தூரில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரில் தொடக்க ஆட்டத்தில் 106 ரன்னில் அடங்கி தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்கா அணி 2-வது ஆட்டத்தில் எழுச்சி பெற்றதுடன், இலக்கை விரட்டுகையில் 221 ரன்கள் குவித்து மிரட்டியது.
கடைசி ஆட்டத்தில் 227 ரன்கள் குவித்த தென்ஆப்பிரிக்கா 18.3 ஓவர்களில் 178 ரன்னில் இந்தியாவை ஆல்-அவுட் செய்து அசத்தியது. 2-வது ஆட்டத்தில் டேவிட் மில்லரும், கடைசி ஆட்டத்தில் ரிலீ ரோசவ்வும் சதம் அடித்து அசத்தினர். கடைசி 2 ஆட்டங்களிலும் குயின்டாக் டி காக் அரைசதம் விளாசினார். கடைசி ஆட்டத்தில் அந்த அணியின் பந்து வீச்சாளர்களும் கலக்கினர்.
தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் குயின்டான் டி காக், டேவிட் மில்லர், கேப்டன் பவுமா, ரோசவ், ரீஜா ஹென்ரிக்ஸ் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். பவுமா தொடர்ந்து சொதப்பி வருகிறார். பந்து வீச்சில் இங்கிடி, அன்ரிச் நோர்டியா, வெய்ன் பார்னெல், ரபடா, பிரிட்டோரியஸ் ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள்.
கடந்த 20 ஓவர் போட்டியில் வெற்றி கண்டதால் தென்ஆப்பிரிக்க அணி கூடுதல் நம்பிக்கையுடன் கால் பதிக்கும். அதேநேரத்தில் உலக கோப்பை சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் பின்தங்கி இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 16-ந் தேதி தொடங்குவதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்கிறது.
இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி களம் இறங்குகிறது. இந்திய அணியில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மாற்று வீரர்களாக இடம் பிடித்துள்ள மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோரும் அங்கம் வகிக்கிறார்கள். அறிமுக வீரர்களாக ராகுல் திரிபாதி, ரஜத் படிதார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பேட்டிங்கில் ஷிகர் தவான், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷனும் வலுசேர்க்கிறார்கள். வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், அவேஷ் கான், முகமது சிராஜூம், சுழற்பந்து வீச்சில் ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவும் சிறந்த நிலையில் உள்ளனர். இந்திய ஒருநாள் போட்டி அணியில் தங்களது இடத்தை தக்கவைக்க வீரர்கள் முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம். இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
- டி20 தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி கடுமையாக போராடும்.
- இந்திய நேரப்படி இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
லக்னோ:
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் நடந்து முடிந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் நாளை தொடங்குகிறது. இந்தியாவின் முன்னனி வீரர்கள் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளதால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதன் படி இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி நாளை லக்னோவில் தொடங்குகிறது. டி20 தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி கடுமையாக போராடும்.
அதே வேளையில் இந்திய முன்னணி வீரர்கள் இல்லாததால் அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்கள் அணியில் தங்களது இடத்தை பிடிக்க தங்களது திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்ல கடுமையாக போராடுவர். இந்திய நேரப்படி இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
- முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 227 ரன்கள் குவித்தது.
- இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 46 ரன்கள் அடித்தார்.
இந்தூர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 42 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 68 ரன்கள் அடித்தார். கேப்டன் பாவுமா 3 ரன்னுடன் வெளியேற, மற்றொரு வீரர் ரிலீ ரோசோவ் 48 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டர்கள் அடங்கும்.
மற்றொரு வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 18.3 ஓவர் முடிவில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 46 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் 27 ரன்னும், ஹர்சல் படேல் 17 ரன்னும், தீபக் சாகர் 31 ரன்னும் அடித்தனர். உமேஷ் யாதவ் 20 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்