search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா தென் ஆப்பிரிக்கா தொடர்"

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • முதல் நாள் முடிவில் இந்திய அணி 208 ரன்கள் எடுத்துள்ளது.

    செஞ்சூரியன்:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமானது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 5 ரன், ஜெய்ஸ்வால் 17 ரன், சுப்மன் கில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவு ஆடிய விராட் 38 ரன், ஸ்ரேயாஸ் 31 ரன், ஷர்துல் 24 ரன்கள் எடுத்தனர்.

    இந்திய அணி 59 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    கே.எல்.ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 27.1 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது.

    கிளாசன் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 18 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் சரிவுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் 49 ரன்னும் (8 பவுண்டரி), ஸ்ரேயாஸ் அய்யர் 23 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நிகிடி, போஜனுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    இந்த வெற்றி மூலம் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 ரன்னில் வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் தொடரையும், ஒரு நாள் தொடரையும் இழந்தது.

    நேற்றைய வெற்றி மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை சமன் செய்தது.

    அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணி இந்த ஆண்டில் 38 வெற்றியை பெற்றுள்ளது. டெஸ்டில் 2, ஒருநாள் போட்டியில் 13, 20 ஓவர் ஆட்டத்தில் 23 என 38 வெற்றி கிடைத்துள்ளது.

    2003-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற போது ஆஸ்திரேலியா அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஒரு ஆண்டில் ஒரு அணி சர்வதேச போட்டியில் பெற்ற அதிக வெற்றியாக இது இருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் இந்திய அணி 37 வெற்றிகளை பெற்று இருந்தது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடிக்க இந்திய அணிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்தியா முறியடிக்கும். * * * தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கோப்பையுடன் கேப்டன் ஷிகர் தவான் இருப்பதை படத்தில் காணலாம்.

    • தென் ஆப்பிரிக்காவின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
    • இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. நேற்றைய போட்டியில் இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

    போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியானது. எனது தன்னம்பிக்கையை இந்த போட்டி அதிகமாக்கி இருக்கிறது. ஐபிஎல் இந்த சீசன் எனது நம்பிக்கையை உயர்த்தியது. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் இந்தியா-ஏ அணிக்காகவும் சிறப்பாக பந்து வீசினேன்.

    நீங்கள் சில நேரங்களில் விக்கெட்டுகளைப் பெறுவீர்கள், சில நேரங்களில் நீங்கள் விக்கெட்டுகளைப் பெறுவதில்லை. இருப்பினும் என் நம்பிக்கை அதிகமாக உள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி சிறந்த ஒன்றாகும். எனது செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வரவிருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 99 ரன்களில் சுருண்டது
    • இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நிதானமாக முன்னேறியது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 10 ரன்களில் வெளியேறினார்.

    பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷூப்மான் கில், 49 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும், சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 2 ரன்களும் எடுக்க, 19.1 ஓவரிலேயே இந்தியா இலக்கை எட்டியது. 19வது ஓவரின் முதல் பந்தில் ஸ்ரேயாஸ் அய்யர் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

    3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்த இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

    • குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மலான் - டிகாக் ஆடினர். 6 ரன்னில் இருந்த டி காக் 1 பவுண்டரியுடன் வாஷிங்டன் சுழலில் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஹெண்டிரிக்ஸ் 3 ரன்னிலும் மார்க்ரம் 9 ரன்னில் நடயைக் கட்டினர்.

    இதனையடுத்து சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மலான் 15, மில்லர் 7, பெஹ்லுக்வாயோ 5, கிலாசன் 34, ஃபார்டுயின் 1, நோர்க்யா 0 என ஆட்டமிழந்தனர்.

    இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்கா அணியில் கேசவ் மகராஜ் இடம் பெறவில்லை.
    • இந்திய அணி எந்த மாற்றம் இல்லாமல் களம் இறங்குகிறது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இந்த தொடரை வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி இதுவாகும். இந்திய அணி எந்த மாற்றம் இல்லாமல் களம் இறங்குகிறது.

    தென் ஆப்பிரிக்காவில் கேசவ் மகராஜ் இடம் பெறவில்லை. அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் செயல்படுகிறார்.

    இந்திய அணி:-

    ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான்

    தென் ஆப்பிரிக்கா அணி:-

    குயின்டன் டி காக், ஜான்மேன் மலான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே

    • 1 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில் ஈரப்பதம் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • 1.30 மணிக்கு மைதானத்தை நடுவர்கள் ஆய்வு செய்து விட்டு போட்டி தொடங்கும் நேரத்தை அறிவிப்பார்கள்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. 1 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில் மைதானம் ஈரப்பதத்துடன் இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. 1.30 மணிக்கு மைதானத்தை நடுவர்கள் ஆய்வு செய்து விட்டு போட்டி தொடங்கும் நேரத்தை அறிவிப்பார்கள்.

    • தொடரை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டும் என எதிர்பார்ப்பு.
    • இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை 20 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 12-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

    தென்ஆப்பிரிக்கா இங்கு ஆடியுள்ள ஒரே ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது. இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • முதல் 2 போட்டியில் மோசமாக ஆடிய இந்திய வீரர்கள் முக்கியமான 3-வது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.
    • இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இந்தியா 10-ல், தென் ஆப்பிரிக்கா 8-ல் வெற்றி பெற்றுள்ளன.

    ராஜ்கோட்:

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டித்தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2- வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3- வது ஆட்டத்தில் இந்தியா 48 ரன்னில் வெற்றி பெற்றது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 4-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை ( 17-ந் தேதி ) நடக்கிறது.

    முதல் 2 போட்டியில் மோசமாக ஆடிய இந்திய வீரர்கள் முக்கியமான 3-வது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். இந்திய அணியின் வெற்றி நாளைய ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய வீரர்களுக்கு உள்ளது.

    கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கும், பந்து வீச்சும் நன்றாக இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார். இதேபோல சுழற்பந்து வீரர்கள் யசுவேந்திர சாஹல், அக்ஷர் படேல் ஆகியோர் இயல்பான நிலைக்கு திரும்பினார்கள்.

    கடந்த 3 ஆட்டத்திலும் வீரர்கள் தேர்வில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநிலை நாளைய ஆட்டத்திலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்கா அணி நாளைய போட்டியில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் அந்த அணி கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு சிறப்பாக ஆட முயற்சிக்கும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 19-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இந்தியா 10-ல், தென் ஆப்பிரிக்கா 8-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை.
    • இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சாகல் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-

    திட்டங்களை செயல்படுத்துவதை பற்றி பேசி இருந்தேன். அதை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் இருந்து நாம் பார்த்தோம்.

    நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்போது வெற்றி கிடைக்கும்.

    பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை. ஆனால் ஒரு நல்ல தொடக்கத்துக்கு பிறகு புதிய பேட்ஸ்மேன்கள் உடனே அதிரடியாக விளை யாடுவது கடினம். இதில் அடுத்த போட்டியில் முன்னேற முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா கூறும் போது, "நாங்கள் எங்களது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்திய பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கினர். பார்ட்னர் ஷிப் அல்லது உத்வேகத்தை பெற முடியவில்லை.

    நாங்கள் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் இந்தபோட்டியை மட்டும் வைத்து கொண்டு எங்களை நான் மதிப்பிட மாட்டேன். தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது என்றார்.

    5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் மற்றும் 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 17-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

    • இந்திய பந்து வீச்சாளர் சஹல் 4 ஓவரில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்தியா முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் கெய்க்வாட் 57 ரன்னும், இஷான் கிஷன் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 31 ரன் எடுத்தார்.

    இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் பவுமா 8 ரன், ஹென்ரிக்ஸ் 23 ரன், பிரிடோரியஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.

    வான் டெர் டுசன் ஒரு ரன்னில் வெளியேறினார். கிளாசன் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், சஹல் 3 விக்கெட்டும், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட், இஷான் கிஷன் அரை சதமடித்தனர்.
    • இந்தியா பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது.

    விசாகப்பட்டினம்:

    தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்தில் இந்தியா அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

    கெய்க்வாட் 30 பந்தில் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 57 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 14 ரன்னில் அவுட்டானார்.

    கெய்க்வாடை தொடர்ந்து இஷான் கிஷன் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 54 ரன்னில் அவுட்டானார்.

    ரிஷப் பண்ட்6 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

    ×