search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்பி உதயகுமார்"

    • தீபாவளிக்கு 3 நாட்களில் மது விற்பனை ரூ.708 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?.
    • எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மதுக்காக போராடிய முதலமைச்சர் இப்போது மது விற்பனைக்கு என்ன சொல்ல போகிறார்?

    மதுரை:

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் தீபாவளி திருநாளை உறவுகள், நட்போடு சேவை மனப்பான்மையுடன் எல்லோருக்கும் கொடுத்து மன மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. ஜனாதிபதியை தொடர்ந்து பிரதமர் மோடி கார்கில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து கூறினர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆகியோர் வாழ்த்து கூறினர்.

    மொழிக்கடந்து மாநிலம், நாடு கடந்து பண்பாட்டுடன் பாரம்பரியமாக கொண்டாடப்படுவது தீபாவளி திருநாள் ஆகும். தீமைகளை அகற்றி நன்மைகளை பரவ வேண்டும் என்பதுதான் அனைவரது எண்ணம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. தி.மு.க. தலைவராக இருந்திருந்தால் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்ல மனம் மறுப்பது ஏன்?

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவ இடத்தை, நேரில் ஆய்வு செய்த காவல்துறை இயக்குநர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும்.

    தீபாவளிக்கு 3 நாட்களில் மது விற்பனை ரூ.708 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?.

    எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மதுக்காக போராடிய முதலமைச்சர் இப்போது மது விற்பனைக்கு என்ன சொல்ல போகிறார்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. எனும் மகத்தான மக்கள் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார்.
    • கிளைக்கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு உள்ளது.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் ஆத்மா எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது என்ற எடுத்துக்காட்டுதான் தற்போது வந்த நீதிமன்ற தீர்ப்பு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி இதுதான் அ.தி.மு.க.வின் அத்தியாயம்.

    அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி வெற்றி சிம்மாசனத்தில் அமர்த்தினார். அ.தி.மு.க.வை ஜெயலலிதா. 3-வது மக்கள் இயக்கமாக மாற்றினார். எதிரிகளே இல்லாத நிலையை ஜெயலலிதா உருவாக்கினார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. எனும் மகத்தான மக்கள் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார். கிளைக்கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு உள்ளது.

    மக்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றியாக இந்த தீர்ப்பு உள்ளது. அவரின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி. வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. வெற்றியடையும் என மக்கள் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

    நியாயம், சத்தியம், தர்மம், உண்மை தொண்டர்கள் மனம் குளிர கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி தீர்ப்பு. 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு.

    ஒரு இயக்கம் ஒரு தலைவரை தன்னிச்சையாக தருகிற ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான் உண்டு. எல்லாம் தெரிந்து கொண்டு அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் சிலர் உள்ளனர். இதற்கு காலம் தான் பதில் சொல்லும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
    • கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவாக உள்ளது.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு தி.மு.க. அரசு உடந்தையாக இருந்தது. ஓ.பி.எஸ்.சிடம் பலகட்ட பேச்சுவார்த்தையை மூத்த நிர்வாகிகள் நடத்தினர், அதை உதாசீனப்படுத்தி தூக்கி எறிந்தார் ஓ.பன்னீர்செல்வம். தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்தை கேட்காமல் இருந்ததால் தற்போது அவர் அரசியலில் அனாதையாகி விட்டார்.

    உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என நிரூபிக்கும்வகையில் 75 மாவட்டங்களிலும் வருகிற 25-ந்தேதி தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற உள்ளது. தேனியில் 26-ந்தேதி போராட்டம் நடைபெறுகிறது. வரும் காலங்களில் துரோகத்திற்கும், எதிரிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

    குடியரசு தலைவர் பிரிவு உபசார விழாவிலும், குடியரசு தலைவர் பதவி ஏற்பு நிகழ்விலும் அ.தி.மு.க.வின் ஒற்றை முகமாக, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக கலந்து கொள்ள மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஒன்றரை கோடி கட்சி தொண்டர்களின் இதயமாக விளங்கும் தலைமை கழகத்தை காலணியால் உதைத்தனர். தி.மு.க.வும் இதற்கு உடந்தையாக இருந்து வருவாய்த்துறை மூலம் சீல் வைத்தனர். இந்த வன்முறையால் தொண்டர்கள் கண்ணீர் விட்டனர்.

    தொண்டர்களின் கண்ணீரை துடைக்கும் வண்ணம் சீல் அகற்றி ஈ.பி.எஸ்.சிடம் தலைமை கழகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவாக உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.
    • மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு செல்வாக்கு சரிந்து விட்டது.

    மதுரை:

    முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. மதுரை பழங்காநத்தம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் அவரது ஆட்சியில் மின் கட்டண உயர்வு கேட்டாலே ஷாக் அடிக்கும் வகையில் உயர்ந்துள்ளது. தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

    கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் மெத்தனம் காட்டிய காரணமாக அங்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கும் கதையாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். எப்போது தேர்தல் நடந்தாலும் தி.மு.க. அரசு வீட்டுக்கு போவது நிச்சயம்.

    மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு செல்வாக்கு சரிந்து விட்டது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் கேலிக்கூத்தாகி உள்ளது. அ.தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன.

    அ.தி.மு.க. சட்டமன்ற துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர், மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பாக செயல்படக்கூடியவர், எந்த பணியை செய்தாலும் அதில் தனித்துவம் மிக்க செயலாற்றக்கூடிய வல்லமை படைத்தவர், சட்டமன்ற உறுப்பினர், ஒரு சமுதாயத்தில் இருந்து ஒரு நபருடைய பதவியை எடுக்கும் போது அந்தப் பிரதிநிதித்துவத்தை அதே சமுதாயத்தைச் சேர்ந்த நபருக்கு கொடுத்தால் தான் சிறப்பாக அமையும். அந்த வகையில் ஆர்.பி.உதயகுமாருக்கு சட்டமன்ற துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது ஜாதி அரசியல் ஒன்றும் இல்லை.

    தென் மாவட்டத்திற்கு பெருமை தரக்கூடிய வகையில் அ.தி.மு.க.வில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து சமுதாய மக்களும் பாராட்டுகின்ற வகையில் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் சபாநாயகரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
    • அந்த மனுவில், 'சட்ட மன்ற குழுவை மாற்றி அமைக்கும் படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியையும் பறித்து கட்சியில் மட்டுமல்லாமல் சட்டசபையிலும் அவரது அந்தஸ்தை இழக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசம் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 62 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள்.

    ஓ.பி.எஸ். அணியில் அவரையும் சேர்த்து 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். அதாவது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்துள்ளார்.

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டை, பார்க் ஓட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி துணைத்தலைவராக திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை செயலாளராக போளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கான பரிந்துரை கடிதத்தை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பி உள்ளார்.

    இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் சபாநாயகரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'சட்ட மன்ற குழுவை மாற்றி அமைக்கும் படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    இதுபற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    பொதுக்குழு தொடர்பான வழக்குக்கும் சட்டமன்ற குழுவை மாற்றி அமைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    இப்போதைய நிலையில் 63 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே யாரை தேர்வு செய்வது, யாரை நீக்குவது என்பதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர்தான் முடிவு செய்வார்கள். அதில் எந்த பிரச்சினையும் வராது' என்றனர்.

    • கழக பொதுச்செயலாளர் என்பது கழகத்தின் உச்சபட்ச அதிகாரம் உள்ள பொறுப்பாகும். அவர் கழகத்தை வழிநடத்தக் கூடியவர் ஆவார்.
    • கழகத்தையும், தொண்டர்களையும் வழிநடத்தக் கூடிய தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடுபவர்களுக்கு முறையான தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை ஏன் வேண்டும்? என்பது பற்றி முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் விளக்கி பேசினார். அதன் விவரம் வருமாறு:-

    அம்மாவின் மறைவிற்கு பிறகு கழகத்தில் ஏற்பட்ட பிளவுகளை சரி செய்து, ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை உருவாக்கிட வேண்டி பொதுச்செயலாளர் பொறுப்பை ரத்து செய்து கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை கொண்டு வரப்பட்டது.

    பொதுச்செயலாளர் என்ற அதிகாரம் மிக்க தெளிவான, வலிமையான தலைமை இல்லாமல், இரட்டைத் தலைமை ஏற்பட்ட பிறகு நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முடிவு எடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் பல்வேறு சங்கடங்கள், தாமதங்கள் ஏற்பட்டன.

    இதனால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் மிகப்பெரிய ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள இந்தக் காலத்தில் தி.மு.க. அரசையும், கட்சியையும் வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றால் தெளிவான மற்றும் வலிமையான ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயமாகும். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எண்ணமும், பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அதுவே ஆகும்.

    கடந்த 14.6.2022 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இரட்டைத் தலைமையால் கழகத்துக்கு நிர்வாக சிக்கல்களும், சங்கடங்களும், உடனுக்குடன் முடிவு எடுப்பதில் காலதாமதமும் ஆவதால், ஒரு வலிமையான ஒற்றைத் தலைமை தேவை என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டது.

    23.6.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை அந்தப் பொதுக்குழுவிலேயே அறிவித்து, அடுத்து கூடும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை கடிதமும் கொடுக்கப்பட்டது.

    நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் என்ற அம்மாவின் வாக்கு நிறைவேற வேண்டும் என்றால், மீண்டும் புரட்சித் தலைவர் ஆட்சி, புரட்சித் தலைவி அம்மா ஆட்சி மலர வேண்டும் என்றால் வலிமையான ஒற்றைத் தலைமை உருவாக்கப்பட வேண்டும்.

    எனவே, கழக அடிப்படை உறுப்பினர்களின் விருப்பத்திற்கும், எதிர்பார்ப்புக்கும், கோரிக்கைக்கும் ஏற்ப, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கழக அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழக பொதுச்செயலாளர் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

    கழக பொதுச்செயலாளர் என்பது கழகத்தின் உச்சபட்ச அதிகாரம் உள்ள பொறுப்பாகும். அவர் கழகத்தை வழிநடத்தக் கூடியவர் ஆவார். கழகத்தையும், தொண்டர்களையும் வழிநடத்தக் கூடிய தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடுபவர்களுக்கு முறையான தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

    மேலே கூறப்பட்டுள்ளவைகளைக் கருத்தில்கொண்டு, கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் பின்வருமாறு செய்யப்படுகின்றன.

    * கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், விதி எண். 20 ரத்து செய்யப்படுகிறது.

    * கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், எங்கெல்லாம் "கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர்'' என்ற சொற்றொடர்கள் வருகின்றதோ அங்கெல்லாம் அவற்றிற்கு பதிலாக கழக பொதுச்செயலாளர் என்றும் எங்கெல்லாம் கழக துணை ஒருங்கிணைப்பாளர் என்று வருகிறதோ அங்கெல்லாம் "கழக துணை பொதுச்செயலாளர்'' என்றும் மாற்றி அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு உதயகுமார் பேசினார்.

    • சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு பிரச்சினை செய்து வருகிறது.
    • இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்பது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கடந்த 2 ஆண்டுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.

    இதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் திருமங்கலம், கப்பலூர் வாகன ஓட்டிகளுக்கு உள்ளூர் கட்டணம் வசூலிக்க கூடாது என தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.

    இதை தொடர்ந்து இன்று காலை கப்பலூர் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    அங்கு பந்தல் அமைக்கும் பணி நடைபெறுவதை அறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையிலான போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை.

    எனவே பந்தல் அமைக்க கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பந்தல் அமைக்க அனுமதி அளிக்காததால் தொண்டர்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவருக்கு ஆதரவாக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வம், ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி மற்றும் மாநில நிர்வாகிகள் ஜான் மகேந்திரன், வெற்றிவேல், உச்சப்பட்டி செல்வம், சாமிநாதன் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் போலீசார் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம். போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிடாததால் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை கைது செய்ய முற்பட்ட போது, தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதனால் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. தொண்டர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி பஸ்சில் ஏற்றினர்.

    இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    முன்னதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டு பிரச்சினை செய்து வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தற்போது சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் நகர் மற்றும் கப்பலூர் வாகன ஓட்டிகளுக்கு 2 ஆண்டு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது திருமங்கலம் பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு திருமங்கலம் நகர் பஸ்கள் ரூ.28 கோடி சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக சுங்கச்சாவடியை அகற்ற மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்.

    ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி மறுக்கிறது. தேர்தல் வாக்குறுதியின் போது கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த தமிழக முதல்-அமைச்சர் தற்போது வரை அதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×