search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்குழு"

    • அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி தலைமைக் கழகத்தில் கூடியது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை காலை கூடுகிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆன பிறகு நடைபெறும் பொதுக்குழு என்பதால் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தேர்தல் கமிஷனின் சட்டதிட்ட விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவும், 2 முறை செயற்குழு கூட்டமும் நடத்தப்பட வேண்டும்.

    அந்த வகையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி தலைமைக் கழகத்தில் கூடியது.

    இதைத் தொடர்ந்து இப்போது அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நாளை காலை 10.35 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த பொதுக்குழு நடைபெறுவதால் ஜெயலலிதா இருந்தபோது என்னென்ன நடைமுறைகளை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பொதுக்குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மகளிர் அணி உள்பட 10 பேர்கள் வரை பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் இறுதியாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார்.

    அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.வின் கூட்டணி நிலைப்பாடு பற்றி ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். வர இருக்கும் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து

    அ.தி.மு.க. விலகியுள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணி வியூகம் எவ்வாறு அமையும் என்பதை எடப்பாடி பழனிசாமி இந்த பொதுக்குழுவில் சூசகமாக தெரிவிப்பார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இதில் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்பதை பறைசாற்றும் வகையில் தீர்மானம் கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    முதன் முறையாக பொதுச் செயலாளர் ஆன பிறகு இந்த பொதுக்குழு நடைபெறுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு - செயற்குழு வாழ்த்து தெரிவித்து முதல் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்ற உள்ளனர்.

    மிச்சாங் புயல் மழை மற்றும் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வருவதுடன் தி.மு.க. அரசு மேற் கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலும் ஒரு தீர்மானம் கொண்டுவர உள்ளனர்.

    இவை உள்பட 17-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் கொண்டு வரப்படும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.


    கடந்த வருடம் ஜூன் 22-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு வானகரத்தில் கூடிய போது அ.தி.மு.க.வில் இரட்டை தலைமைகள் இருந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமைகளாக இருந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

    பல்வேறு சர்ச்சைகளுடன் நடைபெற்ற அந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று கோர்ட்டு கூறி உள்ள நிலையில் தேர்தல் கமிஷனும் அப்போது நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டது.

    இந்த சூழலில் இப்போது அ.தி.மு.க.வின் செயற்குழு- பொதுக்குழு கூட்டம் வெகு விமரிசையாக வானகரத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் பங்கேற்க 2,800 பேர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பகுதி கழக, பேரூர் கழக நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநில கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள். இது தவிர முக்கிய விருந்தினர்களுக்கும் சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகி முதன் முறையாக பொதுக் குழுவில் கம்பீரமாக பங்கேற்க உள்ளதால் அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேளதாளம் முழங்க தொண்டர்கள் வழி நெடுக நின்று அவருக்கு வர வேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • முன்னாள் அமைச்சர்களான மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களை பிரிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
    • ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் முறையில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

    டிசம்பர் மாதத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்தி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டியது வழக்கமான நடைமுறை தான்.

    இருந்தாலும் இந்த பொதுக்குழுவில் கட்சியின் எதிர்கால நலனை மையமாக வைத்து சில அதிரடி மாற்றங்கள் குறித்து தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    கூட்டணி இல்லாமலும் அ.தி.மு.க. தனித்து வெற்றி பெறுவதற்கு கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து புதிய வியூகத்தை அமைத்துள்ளார். முக்கியமாக மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.

    2 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் 117 மாவட்ட செயலாளர்களை பொறுப்புக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார். அதன்படி ஏற்கனவே சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 72 மாவட்டங்களாக இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

    அதே நேரம் முன்னாள் அமைச்சர்களான மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களை பிரிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

    செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், காமராஜ், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்பட சிலர் 4 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய மாவட்டத்துக்கு செயலாளர்களாக இருக்கிறார்கள். தொகுதிகளை குறைத்தால் தங்கள் வலிமை குறைந்து விடும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

    அதிகமான தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக இருந்தும் தேர்தல் நேரத்தில் இவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள். கூடுதலான தொகுதிகளை கைப்பற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. அதற்கு காரணம் மாவட்ட செயலாளர்களுக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையேயான மோதல்தான் என்று தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மீது கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவே புகார் தெரிவித்துள்ளார்கள். பெரும்பாலான புகார்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றவர்களை வளரவிடுவதில்லை என்பதுதான்.

    இதுவே தேர்தல் வெற்றிக்கும் தடையாக இருப்பதால் மாவட்டங்களை பிரிப்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

    இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்றால் தேர்தலில் அவர் நிச்சயம் வெற்றி பெற கடுமையாக உழைப்பார். அவருக்கு கீழ் உள்ள மற்றொரு தொகுதியையும் கைப்பற்ற உழைப்பார்கள். இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை எளிதாக கைப்பற்றி ஆட்சிக்கு வர முடியும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு. எனவே இதுபற்றி பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்கிறார்கள்.


    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் முறையில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. தற்போது கட்சி முற்றிலும் தனது கட்டுப்பாட்டில் வந்து விட்டதால் பொதுச்செயலாளர் தேர்வில் சில திருத்தங்கள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக 2,665 பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 300 பேர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4 ஆயிரம் பேருக்கு அழைப்புகள் அனுப்பப்படும் என்கிறார்கள்.

    மேலும் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    விரைவில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் பற்றியும் முடிவு செய்கிறார்கள். இப்போது மாவட்டத்துக்கு ஒரு பொறுப்பாளர் என நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    இனி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரை நியமிக்க முடிவு செய்துள்ளார்கள்.

    புதுமுகங்கள் பலருக்கு பொறுப்புகள் வழங்கி கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கூட்டம் கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
    • கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 26.12.2023 (செவ்வாய்கிழமை) காலை 10.35 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

    கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    • வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது.
    • ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தனிப்பட்ட காரணத்திற்காக மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

    இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துவிட்டு சிவில் வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் தான் விசாரணையை தள்ளி வைக்கும் கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்து வருகிறார். எனவே அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இருவர் சார்பிலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைக்குமா? அல்லது நாளையே உத்தரவு பிறப்பிக்குமா? என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம்.

    • இருதரப்பு வக்கீல்களையும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டனர்.
    • இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது.

    இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்தும், அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்மானங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தி இருந்தது.

    இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது.

    இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது வக்கீல் வாதம் 7 நாட்கள் நடைபெற்றது.

    இருதரப்பு வக்கீல்களையும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஓ.பி.எஸ். தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில், இந்த வழக்குகளில் எங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எந்த நீதிமன்றமும் கூறாத நிலையில் நான் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை எடப்பாடி பழனிசாமியால் தடுக்க முடியாது.

    இடைக்கால தடை மூலம் இதனை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், 8 மாதங்கள் மவுனம் காத்த மனுதாரர்கள், தற்போது அந்த தீர்மானங்களுக்கு தடை கோர உரிமையில்லை.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அந்த தீர்மானங்களின் அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருவதால், காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

    • தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
    • பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த மனுவை இன்று விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க நீதிபதி மறுப்பு.
    • அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதன்மூலம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தெரிய வந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வானார்

    பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வானார்.

    இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். பொதுச்செயலாளர் சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.

    அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
    • தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார்.

    அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றியை கொடுத்துள்ளது.
    • ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தகவலை அறிந்ததும் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    மேலும் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கும் அவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை.

    இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ந்தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பெயரில் ஏராளமான அ.தி.மு.க.வினர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

    எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட இருந்த நிலையில் இந்தத் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கனவே இது தொடர்பான வழக்கு மார்ச் 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று ஏப்ரல் 11-ந் தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்னர் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசியம் என்றும், ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவசர வழக்காக பதிவு செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

    மேலும், பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளைத் தொடரலாம். ஆனால், முடிவை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மார்ச் 22-ந் தேதி இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    அதேவேளையில் மார்ச் 24-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எழுத்து பூர்வமான வாதம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்க்கும் வழக்குகளின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

    ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லுபடியாகும்.

    அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதும் செல்லும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளும் செல்லும். இவற்றை எதிர்த்து தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

    இவ்வாறு நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை கேட்டதும் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதே சமயத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றியை கொடுத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தகவலை அறிந்ததும் எடப்பாடி பழனிசாமி அணியினர் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கையில் அ.தி.மு.க. தேர்தல் நடத்தும் குழுவினர் ஈடுபட்டனர்.

    தீர்ப்பு வெளியான அரை மணிநேரத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.

    பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

    வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழும் அவரிடம் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று தொண்டர்கள் வெற்றிக்கோஷம் எழுப்பினார்கள்.

    தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததால் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையில் அ.தி.மு.க. தேர்தல் நடத்தும் குழுவினர் ஈடுபட்டனர்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினார்கள். தீர்ப்புக்கு பின்னர் அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தலைமை கழகத்தில் திரண்ட கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்கள். இதனால் தலைமைக் கழகம் களை கட்டியது.

    இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அப்பீல் செய்தார். நாளை அந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.

    • ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
    • நாளை மறுநாள் நடைபெற உள்ள வழக்கு விசாரணையை இரு தரப்பினரும் எதிர்நோக்கி உள்ளனர்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பினர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் மாறுபட்ட தீர்ப்புகள் கூறப்பட்டன. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முதலில் தீர்ப்பளித்த நிலையில் 2-வதாக வந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக அமைந்திருந்தது.

    இதை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம் 29-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு தீர்மானங்களில் தலையிடவில்லை என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே இதுபற்றி முடி வெடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடைபெற்றது.

    மனுதாரரான மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் குருகிருஷ்ணகுமார், ஜூலை 11-ந்தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் செயல்பட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

    பொதுக்குழு முடிவுகள் அ.தி.மு.க. நிறுவனரான எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், எனவே கட்சி விதிகளுக்கு மாறாக தங்களை நீக்கிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்தரப்பினரின் கருத்தை கேட்காமலேயே இதனை செய்ய வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் விஜய் நாராயணன், வைத்திய நாதன் ஆகியோர் கடந்த 9 மாதங்களாக ஓ.பி.எஸ். தரப்பினர் இதே வாதங்களை முன்வைத்து வருவதாக தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் தங்கள் தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எதிர்மனுதாரர்களின் (எடப்பாடி பழனிசாமி தரப்பு) விளக்கத்தை கேட்காமல் எப்படி தடைவிதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

    விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 17-ந்தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் மனுவை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் பதில் மனுவை தயாரித்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளனர்.

    எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிசாமியின் பதில் மனு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றோ, நாளையோ அல்லது வழக்கு விசாரணை நடைபெறும் நாளான 17-ந் தேதியோ பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

    அ.தி.மு.க. சட்ட விதிகளின்படியே பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை என்பது போன்ற விளக்கங்களுடன் பதில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழு செல்லும் என்றால் தீர்மானங்களும் செல்லுபடியாகும் தானே என்கிற கேள்வியை எழுப்பும் எடப்பாடி ஆதரவாளர்கள் நாளை நடைபெற உள்ள விசாரணையிலும் தங்களுக்கு சாதகமாகவே நிச்சயம் தீர்ப்பு கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இதனால் நாளை மறுநாள் நடைபெற உள்ள வழக்கு விசாரணையை இரு தரப்பினரும் எதிர்நோக்கி உள்ளனர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். அணியினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகள் கூறப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று முதலில் தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 23-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து உரிமையியல் வழக்கு தொடருவதற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும், உரிமையியல் வழக்கை தொடரலாம் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தனர். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

    எனவே அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே உள்ளது என்று கூறி எடப்பாடி பழனிசாமி அணியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக வர்ணித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களையும் ஒட்டினார்கள்.

    இப்படி அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு வந்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருந்தது.

    இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார்.

    இதன் காரணமாக ஐகோர்ட்டு விசாரணையின் போது எந்த மாதிரியான உத்தரவை ஐகோர்ட்டு வழங்க போகிறது என்பது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வைரமுத்து வழக்கறிஞரும், ஓ.பன்னீர் செல்வம் வழக்கறிஞரும் முதலில் வாதங்கள் செய்தனர்.
    • அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.

    அப்போது வைரமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தனது வாதத்தை தொடர்ந்தார். நேற்றும் வாதாடினார். அ.தி.மு.க. பொதுக்குழு சட்ட விதிமுறைபடி நடைபெறவில்லை. அதுவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால் இந்த பொதுக்குழு அவ்வாறு கூட்டப்படவில்லை.

    அவைத் தலைவரை வைத்து பொதுக்குழுவை கூட்டினார்கள். ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதாக கூறினார்கள். ஆனால் அப்படி நீக்குவதற்கு முறைப்படி நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கவில்லை. எனவே ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக் குழு செல்லாது என்று வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து இதுவரை எந்த கோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடரவில்லை. எனவே அந்த பிரச்சினையை இந்த வழக்கில் எழுப்ப முடியாது. 5-ல் ஒரு பகுதியினர் கடிதம் அளித்தாலே பொதுக்குழுவை கூட்டலாம் என்று கட்சி விதிகளில் உள்ளதாக வாதிட்டார்.

    எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பேச முற்பட்டபோது அதற்கு நீதிபதிகள் உங்கள் முறை வரும்போது உங்கள் வாதத்தை தொடரலாம் என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தொடர்ந்து வாதிட்டார்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்து உள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கட்சி விதிகளில் எங்கெங்கு உள்ளதோ அதை பொதுச்செயலாளர் என்று மாற்றி உள்ளனர் என்று வாதிட்டார்.

    நேற்று மாலை 4.30 மணி வரை வாதங்கள் நீடித்ததால் விசாரணையை இன்று மதியம் 12 மணிக்கு தள்ளி வைத்திருந்தார்.

    இன்று இந்த வழக்கு விசாரணை மதியம் மீண்டும் தொடங்கியது. வைரமுத்து வழக்கறிஞரும், ஓ.பன்னீர் செல்வம் வழக்கறிஞரும் முதலில் வாதங்கள் செய்தனர்.

    தன்னிசையான முறையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிகாரம் இல்லை. பொதுக் குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து மட்டுமே கூட்ட முடியும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டப்படி செல்லாது. அவை சட்டத்துக்கு புறம்பானவை என்று அவர்கள் வாதிட்டனர்.

    அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் வாதாட உள்ளார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் இன்று நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறி உள்ளதால் அ.தி.மு.க. வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமா? அல்லது இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சர்ச்சைக்கு தீர்ப்பில் விடை கிடைத்துவிடும்.

    ×