என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொண்டர்கள் மனம் குளிர கிடைத்த மகத்தான தீர்ப்பு- ஆர்.பி.உதயகுமார்
- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. எனும் மகத்தான மக்கள் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார்.
- கிளைக்கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு உள்ளது.
மதுரை:
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் ஆத்மா எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது என்ற எடுத்துக்காட்டுதான் தற்போது வந்த நீதிமன்ற தீர்ப்பு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி இதுதான் அ.தி.மு.க.வின் அத்தியாயம்.
அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி வெற்றி சிம்மாசனத்தில் அமர்த்தினார். அ.தி.மு.க.வை ஜெயலலிதா. 3-வது மக்கள் இயக்கமாக மாற்றினார். எதிரிகளே இல்லாத நிலையை ஜெயலலிதா உருவாக்கினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. எனும் மகத்தான மக்கள் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார். கிளைக்கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு உள்ளது.
மக்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றியாக இந்த தீர்ப்பு உள்ளது. அவரின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி. வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. வெற்றியடையும் என மக்கள் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
நியாயம், சத்தியம், தர்மம், உண்மை தொண்டர்கள் மனம் குளிர கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி தீர்ப்பு. 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு.
ஒரு இயக்கம் ஒரு தலைவரை தன்னிச்சையாக தருகிற ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான் உண்டு. எல்லாம் தெரிந்து கொண்டு அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் சிலர் உள்ளனர். இதற்கு காலம் தான் பதில் சொல்லும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்