search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடை"

    • ஏ.இ.பி.சி., ஏற்றுமதியாளர் வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
    • 2 ஆண்டுகளாக கொரியாவின் ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    திருப்பூர் :

    தென்கொரியாவின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 0.67 சதவீத அளவிலேயே உள்ளது. அந்நாட்டுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஏற்றுமதியாளர் வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.தென்கொரிய தலைநகர் சியோலில் வருகிற செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    கொரோனா பரவல் இருந்தபோதும்கூட கடந்த 2 ஆண்டுகளாக கொரியாவின் ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வர்த்தக வாய்ப்புகள் மிகுந்த தென்கொரிய சந்தையை கைப்பற்ற ஏதுவாக திருப்பூர் உள்பட நாடு முழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள் வர்த்தகர் சந்திப்பில் பங்கேற்க ஏ.இ.பி.சி., அழைப்புவிடுத்துள்ளது. பங்கேற்க விரும்பும் நிறுவனத்தினர் வரும் 30ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உடல்நல பாதிப்புக்குள்ளானவர்களின் ஆடைகளை சுடு நீரில் அலசலாம்.
    • காட்டன் துணிகளை வேண்டுமானால் சுடுநீரில் அலசலாம்.

    அழுக்கு துணிகளை நீரில் மூழ்க வைத்து அதில் சோப்பு தூள் கலந்து ஊற வைத்து பின்பு சோப்பு போட்டு துவைத்து நீரில் அலசுவோம். இந்த செயல் முறையை வாஷிங் மெஷின் எளிமைப்படுத்திவிட்டது. ஆனாலும் துணிகளை கைகளால் சோப்பு போட்டு உலர வைப்பதற்குத்தான் பலரும் விரும்புகிறார்கள்.

    துணியில் ஏதேனும் கறைகள் படிந்திருந்தால் சிலர் சுடு நீர் பயன்படுத்தி சோப்பு போட்டு அலசுவதுண்டு. அப்படி அடிக்கடி சுடு நீர் கொண்டு துணிகளை அலசுவது துணியின் தரத்தை பாழ்படுத்தி விடும். அப்படி சுடுநீர் பயன்படுத்தி துவைக்கும்போது கறை நீங்கி பளிச்சென்று காட்சி அளிக்கும். அதே வேளையில் ஆடை சுருங்கிவிடக்கூடும். சுடுநீர் பயன் படுத்துவதால் இந்த பிரச்சினை ஏற்படும். மேலும் சுடு நீர் ஆடையின் நிறத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. சுடுநீரில் இருக்கும் வெப்பம் காரணமாக சாயம் மங்கி ஆடை நிறம் மாற்றமடையக்கூடும். சுடு நீரில் அலசும்போது ஆடை சுருங்கும் பிரச்சினை காரணமாக அதில் உள்ள நூல் இழைகள் வலுவிழந்துபோய்விடும்.

    ரெடிமேடு ஆடைகளை வாங்குவதாக இருந்தால் அதில் எப்படி துவைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். காட்டன் துணிகளை வேண்டுமானால் சுடுநீரில் அலசலாம். மற்ற துணிகளாக இருந்தால் சுடுநீர் உபயோகிக்கலாமா? என்பதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. ஒருவேளை சுடு நீர் பயன்படுத்துவதாக இருந்தால் ஆடையின் ஒரு பகுதியை அதில் 5 நிமிடங்கள் முக்கி பரிசோதிக்கலாம். அப்போது ஆடையில் சுருக்கமோ, நிறம் மாறுதலோ தென்பட்டால் சுடுநீர் பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிட வேண்டும். சுடு நீரில் துவைக்கும் தன்மை கொண்ட துணியாக இருந்தாலும் 10 நிமிடங்களுக்கு மேல் சுடு நீரில் ஊறவைக்கக்கூடாது.

    ஏனெனில் எந்த துணியாக இருந்தாலும் சுடுநீரில் அதிக நேரம் ஊறவைத்தால் சுருங்கிவிட தொடங்கிவிடும். சுடு நீருக்கு பதில் வெதுவெதுப்பான நீரை உபயோகிக்கலாம். அது துணியின் ஆயுளை பாதுகாக்கும். ஆடைகளில் படியும் கறைகளை போக்குவதற்கு சுடு நீருக்கு மாற்றாக வினிகர் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.

    உடல்நல பாதிப்புக்குள்ளானவர்களின் ஆடைகளை துவைப்பதற்கு சுடு நீர் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ் கிருமிகளை கொல்வதற்கு சுடு நீர் உதவும். பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றை சுடு நீர் பயன்படுத்தி சுத்தம் செய்வதும் நல்லது.

    • கனம் குறைந்த சந்தேரி சில்க் புடவைகள் இன்றைய இளம்பெண்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.
    • ஸ்டிரெயிட் குர்தா(Straight Kurta)க்களை அனைத்து உடல்வாகுடைய பெண்களும் அணியலாம்.

    நம் நாட்டுப் பெண்கள் அணியக்கூடிய பாரம்பரிய உடைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் முக்கிய இடத்தைப் பிடிப்பது புடவைகளாகத்தான் இருக்கும்.

    பெண்களுக்கான சமீபத்திய மற்றும் அழகான இந்திய ஆடை வடிவமைப்புகள் புடவைகள், குர்தா செட், லெஹங்கா சோளி, சல்வார் கமீஸ், சுரிதார் உடைகள் இந்திய ஸ்டைல் ​​கவுன்கள், பாரம்பரிய உடகள், பாவாடைகள், குர்தா பைஜாமா, பலாஸ்ஸோ உடைகள், பாட்டியாலா சூட், ஹரேம் சூட், ஷராரா சூட், டோத்தி சூட்

    சமகாலத்திய புடவைகள்

    * காஞ்சீவரப் பட்டுப்புடவைகள்: கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவை இந்த காஞ்சீவரப் பட்டுப்புடவைகள். காஞ்சீவரப் பட்டுப் புடவைகளிலும் இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றார்போல் பலவிதமான டிசைன்களும், பாணிகளும் வந்துவிட்டன.கதை பேசும் புடவைகள் என்று சொல்லும் அளவுக்கு ஏதாவது ஒரு கருவை புடவையில் கொண்டுவந்து நெய்கிறார்கள்.காஞ்சிவரம் புடவைகள் என்றாலே மிகவும் கனமாக இருக்கும் என்று சொல்வதற்கு மாறாக இப்பொழுது லைட் வெயிட் புடவைகளும் வந்துவிட்டன.

    * பனாரஸ் பட்டு புடவைகள்: புனித நகரமான வாரணாசியை பிறப்பிடமாகக் கொண்டவை பனாரஸ் பட்டு புடவைகள். இந்தப் புடவைகள் ஆடம்பரமான மற்றும் சிக்கலான வடிவமைப்புக்கு பெயர் பெற்றவையாகும்.. பாரம்பரிய பனாரஸ் புடவைகள் மிகவும் கனமானவை மற்றும் விலை உயர்ந்தவை. இப்பொழுது வரும் பனாரஸ் சேலைகள் கண்கவர் டிசைன்களில் கனம் குறைந்தவையாக வருகின்றன.

    * சந்தேரி சில்க் புடவைகள்: கனம் குறைந்த சந்தேரி சில்க் புடவைகள் இன்றைய இளம்பெண்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.அலுவலகம் மற்றும் வீட்டில் அன்றாடம் உடுத்தக்கூடிய வசதியான புடவைகளாக இவை இருக்கின்றன.

    * சீக்வின் ஷிஃபான் புடவைகள்: மிகவும் கனம் குறைந்த அதே நேரத்தில் ஆடம்பர தோற்றத்தை தரக்கூடிய இந்த புடவைகளின் ரகத்திலேயே பெரும்பாலான பார்ட்டி புடவைகள் வருகின்றன.இந்த புடவைகளில் பலவிதமான எம்பிராய்டரி மற்றும் சம்கி வேலைப்பாடுகளுடன் வரும் புடவைகள் இன்றைய இளம் பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.இந்த புடவைகளிலேயே நீளமான கவுன்களை தைத்து அணிந்து கொள்வதும் இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

    குர்த்தாக்கள்

    * நவீன ஹை-லோ அனார்கலி குர்தா: முகலாய தோற்றம் கொண்ட அனார்கலி குர்த்தாக்கள் மார்பு பகுதியில் இறுக்கிப் பிடித்து இடுப்பிலிருந்து பரந்த ஃப்ளேர்களை கொண்டவையாக இருக்கும்.பாரம்பரிய அனார்கலி குர்திகள் எம்பிராய்டரி மற்றும் மிகவும் கனமான அலங்காரங்களை கொண்டவையாகும்..இப்பொழுது வரும் ஹை- லோ குர்திகள் மிகவும் ட்ரெண்டிங் ஆடையாக இருக்கின்றன. காட்டன், ஷிஃபான்,பட்டு, ஜார்ஜெட் என அனைத்து விதமான துணிகளிலும் கல்லூரி, அலுவலகம் மற்றும் சிறு விழாக்களுக்கு அணிந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.

    * A-லைன் குர்தா: A-லைன் வடிவத்துடன் பரந்த அடிப்பாகத்தை கொண்ட இவ்வகைக் குர்த்தாக்கள் அனார்கலி ஆடைகளுக்கு மாற்று என்று சொல்லலாம்.இந்த பிரபலமான நவீன பாணி ஆடைகள் தினசரி முதல் எப்போதாவது அணிவது வரை பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு ஏராளமான மாடல்களில் வருகின்றன.இவை கணுக்கால் வரை இருக்கும் லெகிங்களுடன் அணிய ஏற்றவை..

    * பிரிண்டட் ஸ்டிரெயிட் குர்தா: பல ஆண்டுகளாக பெண்கள் அன்றாடம் அணியும் ஆடைகளில் இவை முதலிடம் பிடித்தவை என்றால் அது மிகையாகாது. லெக்கின்ஸ், பலாஸ்ஸோ, ஜீன்ஸ் என பலவிதமான கால்சட்டைகளுடன் அணிவதற்குப் பொருத்தமானவை இவை.கலம்காரி, இக்கத்,ஃபிளோரல்,ஜியாமெட்ரிகல் மற்றும் டிஜிட்டல் பிரிண்ட்களுடன் வரும் இந்த ஸ்டிரெயிட் குர்தாக்களை அனைத்து உடல் வாகுடைய பெண்களும் அணியலாம்.

    * லேயர்ட் குர்தா: ஒரே குர்த்தாவில் பல லேயர்கள் வருவது போல வடிவமைக்கப்பட்டு வருவது இப்பொழுது மிகவும் பிரபலமான பாணியாக உள்ளது. பெரும்பாலும் உட்புறம் வரும் லேயர்பிளெயின் கலரிலும் வெளிப்புறம் வரும் லேயர்கள் பிரிண்ட்களுடன் வருவது போலவும் வடிவமைக்கிறார்கள்.சில குர்தாக்களில் சுங்கங்கள் தொங்குவது போன்று தைய்த்திருப்பது கூடுதல் அழகைத் தருகின்றது.கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாக இவை இருக்கின்றன.

    * சிக்கன்காரி குர்தா: லக்னோவின் வர்த்தக முத்திரைக்கு பெயர் பெற்றவை என்றால் அவை சிக்கன்காரி குர்தாக்களாகத்தான் இருக்க முடியும். பருத்தி, பட்டு மற்றும் ஷிஃபான் துணிகளில் வரும் இந்த ஆடைகளில் நுட்பமான நூல் வேலைபாடுகளைச் செய்கிறார்கள்.இவை பெரும்பாலும் வெள்ளை, வெளிர் நீலம், வெளிர் பச்சை, இளஞ்சிவப்பு, இளம் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களிலேயே வருகின்றன.கழுத்து, கைகள் மற்றும் ஹெம்லைன் ஆகியவற்றில் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வரும் இந்த சிக்கன்காரி ஆடைகளுக்கு எப்பொழுதுமே பெண்களிடம் மவுசு அதிகம் என்று சொல்லலாம்.அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு இவை ஏற்றவையாக இருக்கின்றன. பாட்டியாலா, லெகிங் மற்றும் நேரான பேண்ட்களுடன் அணிய ஏற்றவை.

    லெஹங்கா சோளி

    ரஃபிள்டு துப்பட்டாவுடன் வரும் மென்மையான நெட்டட் லெஹங்கா, எம்ப்ராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா கமீஸ்,ஃபாயில் பிரிண்ட்டுடன் கூடிய துடிப்பான வண்ணங்களில் வரும் லெஹங்கா, ஹெவி பிரைடல் எம்ப்ராய்டரி லெஹங்கா,ஸ்டைலான லெஹங்கா சோளி என லெஹங்காக்களில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் மிகவும் டிரெண்டாகவும், அசத்தலாகவும் வந்திருக்கின்றன.

    • பெண்கள் அணியும் துப்பட்டா, அவர்களுக்கு கூடுதல் அழகை தரக்கூடியது.
    • துப்பட்டாவை பலவிதமான முறைகளில் அணிய முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே.

    உங்களுக்குப் பிடித்த நீளமான துப்பட்டாவை எடுத்து, இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும். பின் கழுத்து வழியாக துப்பட்டா முன்னால் வரும்படி அணிந்தால், ஒரு பக்கத்தில் துப்பட்டாவின் இரண்டு முனைகளும், மறுபக்கத்தில் துப்பட்டாவை மடக்கிய வளையம் போன்ற அமைப்பும் கிடைக்கும். ஆடைக்கு ஏற்றவாறு பெண்கள் அணியும் துப்பட்டா, அவர்களுக்கு கூடுதல் அழகையும், பாதுகாப்பையும் தரக்கூடியது. இதை ஒரே மாதிரியாக அணியாமல், பலவிதமான முறைகளில் அணிய முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே.

    பின்னல் அமைப்பு ஸ்டைல்: உங்களுக்குப் பிடித்த நீளமான துப்பட்டாவை எடுத்து, இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும். பின் கழுத்து வழியாக துப்பட்டா முன்னால் வரும்படி அணிந்தால், ஒரு பக்கத்தில் துப்பட்டாவின் இரண்டு முனைகளும், மறுபக்கத்தில் துப்பட்டாவை மடக்கிய வளையம் போன்ற அமைப்பும் கிடைக்கும். அந்த இடைவெளி வழியாக துப்பட்டாவின் இரண்டு முனைகளையும் இழுக்க வேண்டும். பின்பு அவற்றை இன்னொரு முறை சுழற்றி அவற்றில் துப்பட்டாவின் இரண்டு முனைகளையும் இழுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் 'பின்னல்' போன்ற அமைப்பில் துப்பட்டாவை அணியலாம்.

    டபுள் பந்தனா ஸ்டைல்: இந்த ஸ்டைலில் சதுர அல்லது செவ்வக வடிவில் நான்கு முனைகளுடன் இருக்கும் துப்பட்டாவை, எதிரெதிர் முனையுடன் சேர்த்து மடித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது துப்பட்டா முக்கோண வடிவத்திற்கு வரும். பிறகு துப்பட்டா மடிக்கப்பட்ட இடத்தில் உள்ள நேரெதிர் முனைகளை முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். வளையம் போன்ற அமைப்பை கழுத்தில் அணிந்து கொண்டு அதனை சுழற்றி திருப்பி தலையில் அணிந்து கொள்ள வேண்டும். பின்பக்கமாக சென்ற துப்பட்டாவை, முன்புறமாக மாற்றிக் கொண்டால் 'டபுள் பந்தனா' டிசைன் தயார்.

    பிரெஞ்சு வளைவு ஸ்டைல்: பெண்களை மிகவும் கவர்ந்த ஸ்டைலான இதை செய்வதற்கு, துப்பட்டாவை இரண்டாக மடித்து கழுத்தில் அணிய வேண்டும். பிறகு, ஒரு பக்கத்தில் வரும் வளையத்தில், அதாவது ஓட்டையில் மறுபக்கத்தில் உள்ள துப்பட்டாவின் இரண்டு முனைகளில் ஒரு முனையை இழுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வளையத்தில் மற்றொரு முனையையும் உள்ளிழுத்தால், அழகான 'பிரெஞ்சு வளைவு' தயாராகிவிடும்.

    பின்புற முடிச்சு 'கோட்' ஸ்டைல்: நீளமான துப்பட்டாவை, முதுகுக்கு பின்புறமாக தோள்பட்டையில் கைகளைக் கட்டுவது போல நன்றாக முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு முடிச்சு போட்ட இடத்தை மறைய வைக்கும் படி துப்பட்டாவை தோள் வரை இழுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறையில் துப்பட்டா முன்புறமாக பார்க்கையில், கோட் அணிந்ததுபோல அழகான காட்சியை ஏற்படுத்தும்.

    பெல்ட் கேப் ஸ்டைல்: பெரிதாக இருக்கும் துப்பட்டாவை முக்கோண வடிவில் மடித்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். இரு பக்கத்திலும் உள்ள துப்பட்டாவை ஒன்றின் மேல் ஒன்று வைத்து துப்பட்டாவின் நிறத்திற்கேற்ற பெல்டை இடுப்பு பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த ஸ்டைல், பல பெண்களால் விரும்பி அணியப்படுகிறது.

    • சிக்கன்காரி புடவைகள் மற்றும் குர்த்திகள் இந்தியாவில் உள்ள அழகிய ஆடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
    • ஜாலி வேலைப்பாடு என்பது சிக்கன்காரியில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம்.

    ஜாலி வேலைப்பாடு என்பது துணிகளில் துளைகளை உருவாக்கி,அந்தத் துளைகளைச் சுற்றி செய்யப்படும் நூல் வேலைக்கு ஒப்பான ஒரு நுட்பமான வேலைப்பாடாகும். துணிகளில் வெறும் துளைகளை மட்டும் உண்டாக்கி செய்யப்படும் வேலைப் பாட்டிலிருந்து இது சற்று வேறுபட்டது என்று சொல்லலாம்.துணியின் தொடர்ச்சியை சேதப்படுத்தாமல் ஒரு ஊசியால் வார்ப் மற்றும் நெசவு நூல்களை வெளியில் இழுத்து துளைகளை உருவாக்குவதை உள்ளடக்கியதே இந்த வேலைப்பாட்டின் சிறப்பாகும்.இதன் மூலம் எம்பிராய்டரி வேலைப்பாட்டிலிருந்து இது சற்று வேறுபட்டது என்பது புரிந்திருக்கும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிக்கன்காரி வேலைகளில் இந்த சிறப்பு வாய்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி துணிகளில் மிகச்சிறந்த வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. துணிகளில் ஜாலி என்பது ஒரு குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி(டிரெலிஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.

    தையல் மற்றும் எம்பிராய்டரி என்பது காலங்காலமாக முதலில் தேவையாகவும் பின்னர் ஒரு விலை போகும் பொருளாகவும் இருந்திருக்கின்றது.துணிகளை கற்கள் மற்றும் நூல்களால் அழகுபடுத்துவது, ஜமிக்கி வேலைப்பாடுகள் என பல்வேறு அலங்காரங்கள் இருந்தாலும் இந்த ஜாலி வேலைப்பாடு என்பது சற்று வித்தியாசமான அதிநவீன வேலைப் பாடாக இருந்ததால் மக்களிடையே பிரபலமானது.

    முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான், துருக்கிய கட்டிடக்கலையில் சிறப்பு ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.பரந்த திறந்த வடிவமைப்புகளும், ஜாலியின் காட்சி விளைவுகளும், அதாவது கான்கிரீட்டில் உள்ள லேட்டிஸ் திரைகளும் அவரைக் கவர்ந்தன. ஜாலி அல்லது லேட்டிஸ் திரைகளை கான்கிரீட்டில் பிரதி செய்ய வேண்டும் என்ற ஆசைதான் சிக்கன்காரியில் இந்த நுட்பத்தை உருவாக்க தூண்டியது.முகலாய கட்டிடக்கலையில், அரண்மனைகள் மற்றும் கோட்டைகள் போன்றவற்றில் இந்த லேட்டீஸ் திரைகள் போன்ற அமைப்புகள் முகலாயர்களுக்கு ஒரு அடையாளமாக மாறியது

    வேலைப்பாடு

    சுமார் 40 தையல்கள் உள்ள இந்த சிக்கன் காரி வேலைப்பாட்டில் ஒருவகையான தையலில் நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்கள் தங்கள் ஆடைகளில் மட்டுமே வேலைப்பாடுகளை செய்துகொள்வது இதன் சிறப்பம்சமாகும்.. இந்த ஆடைகளில் விடுபட்ட இடங்களை நிரப்பும் கைவினைஞர்களால் துணிகளில் ஜாலிகளை உருவாக்க முடியாது.. ஜாலிகளை உருவாக்குவதற்கென்றே நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மட்டுமே இதுபோன்ற ஜாலிகளை உருவாக்க முடியும்.

    'அசெம்பிளி லைன்' எனப்படும் எம்பிராய்டரி வேலைப் பாட்டின் ஆரம்ப வடிவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. வார்ப் மூலம் துணியின் மீது ஜாலியை உருவாக்கும் வேலை செய்யப்படுகிறது..ஒரு ஊசியால் நெசவு நூல்களைப் பிரித்து இறுக்குவதன் மூலம் துணியில் வலை போன்ற தோற்றமானது உருவாகின்றது.இது துணியின் வலிமையை சமரசம் செய்யாமல் வழக்கமான சுற்றளவுடன் துளைகளை உருவாக்குகிறது. துளைகளுடன் உருவாக்கப்பட்ட துணியை நிரப்ப கைவினைஞர்கள் அந்த வலையைச் சுற்றி வேலைபாடுகளைச் செய்கிறார்கள்.

    பாணி மற்றும் வகை

    நெட்டட் துணிகளை தயாரிக்கும் வேலையைப் போன்றதே இந்த ஜாலியை உருவாக்கும் விளைவு என்று சொல்லலாம். இது ஆடையை மிகவும் நேர்த்தியாகவும் எடை குறைந்ததாகவும் மாற்ற உதவுகிறது. ஜாலி வேலைப்பாடு என்பது சிக்கன்காரியில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாக இருந்தாலும், இதுபோன்ற பல நுட்பத்துடன் கூடிய வேலைப்பாடுகளை அது தன்னகத்தே கொண்டுள்ளது.

    ஹத்கதி மற்றும் பேங்க் ஜெயில் என்று அழைக்கப்படும் இரண்டு நேரான ஜாலி தையல்கள் இந்த வேலைப்பாட்டில் பயன்படுத்தப் படுகின்றன.புள்புள் சாஷ்ம், மக்ரா, மந்த்ராஸி, பூல் ஜாலி, சிதாவுல் ஜாலி மற்றும் தாஜ்மஹால் ஆகியவை பொதுவாகக் காணப்படும் பிற ஜாலி தையல்கள் ஆகும்.சிக்கன்காரி ஆடைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மோட்ஃப்கள் பூக்கள், கொடிகள், இலைகள் மற்றும் புட்டிஸ். இதற்குள் ஜாலிகள் உருவாக்கப்படுகின்றன.

    இன்றைய சூழ்நிலை

    உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட எம்பிராய்டரி வடிவங்களில் ஒன்று என்று சிக்கன்காரி ஆடைகளைச் சொல்லலாம்..உலக அளவில் போற்றப்படும் சில சிறந்த இந்திய வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டஇந்த ஜாலி வேலைப்பாட்டுடன் கூடிய சிக்கன்காரி உடைகளை அணிந்து ஆடவரும், பெண்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு போட்டிகளில் பங்கு பெறுகிறார்கள். இருப்பினும் சிக்கன் காரி கலையை கற்றுக்கொள்ளும் கலைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருகிறது.

    ஜாலிஸை உருவாக்கும் நுட்பம் உலகம் முழுவதும் பலரால் கவனிக்கப்படுகிறது. பாரம்பரிய கலை வடிவங்களைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்ட பல வடிவமைப்பாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இந்த வகை எம்பிராய்டரியை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய தீவிரமாக முயற்சி செய்கின்றனர்.தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால்,சிக்கன்காரி ஆடைகளின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.

    பராமரிப்பு

    ஜாலி உருவாக்கப்படும் விதத்தால் துணியானது எந்தவித சமரசமும் இல்லாமல் முன்பு எப்படி வலிமையாக இருந்ததோ அதேபோன்ற வலிமையுடன் ஜாலி உருவாக்கப்பட்ட பின்பும் இருக்கின்றது.இதனால் இந்த ஆடையை பராமரிப்பது என்பது எளிதாகிறது.வழக்கமான சலவை மற்றும் இஸ்திரி நுட்பங்கள் ஜாலி வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளுக்கு ஏற்றவையாக இருக்கின்றது.மற்ற சாதாரண துணிகளுக்கு செய்யும் பராமரிப்பு போன்ற பராமரிப்பை இந்த துணிகளுக்கும் வழங்கலாம்.

    ஜாலியில் உள்ள துளைகள் கைவினைஞர்கள் விரும்பும் நீளம் மற்றும் அகலத்தில் இருப்பது போன்று உருவாக்கப்படுகின்றது. அது பொதுவாக அவர்களுடைய படைப்புப் பார்வையைப் பொறுத்தது.

    ஜாலியை முடிக்க, அது உருவாக்கப்பட்ட பகுதியைச் சுற்றி ஒரு அவுட்டர் லைனிங் இருக்க வேண்டும்.ஒரு ஜாலி எப்போதுமே ஏதாவது ஒரு மையக் கருத்தை கொண்டிருப்பதுபோல் செய்யப்படுகிறது.

    சிக்கன்காரி புடவைகள் மற்றும் குர்த்திகள் இந்தியாவில் உள்ள அழகிய ஆடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

    முதலில், சிக்கன்காரி வெள்ளை நிற துணிகள் அல்லது பேஸ்டல் வண்ணங்களில் மட்டுமே செய்யப்பட்டாலும், தற்பொழுது துடிப்பான வண்ணங்களில் செய்யப்படும் சிக்கன்காரி ஆடைகளை இன்றைய தலைமுறையினர் மிகவும் விரும்பி அணிகின்றனர்.

    • மல்மல் சேலைகளில் அதிக கலெக்ஷன்கள் வருகின்றன.
    • மல்மல் சேலைகளுக்கு கஞ்சி போட்டு அணிய வேண்டிய அவசியமில்லை..

    பெண்கள் அன்றாடம் உடுத்துவதற்கு மிகவும் வசதியான மிருதுவான சேலைகளின் வரிசையில் மல்மல் சேலைகளுக்கு முதலிடம் என்று சொல்லலாம். பலவித வண்ணங்களில் அருமையான பூ டிசைன்கள், ஜியோ மெட்ரிக் டிசைன்கள்,இக்கத் பிரிண்ட்டுகள் என உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலும் பல்லு மற்றும் பார்டர் வேறு வண்ணத்திலும் இருப்பது போலவும், புடவை முழுவதுமே ஒரே வண்ணத்தில் இருப்பது போலவும், உடல் முழுவதும் ஒரு வண்ணம் மூன்றுவிதமான பார்டர் வண்ணங்கள் என்று வித்தியாசமாகவும் இந்த மிருதுவான மல்மல் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    அதிலும் குறிப்பாக உடல் முழுவதும் டிசைன்கள் இருக்க பார்டர் ஒன்றன் கீழ் ஒன்றாக பிளெயின் வண்ணத்தில் இருப்பது போன்று வந்திருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. உடல் முழுவதும் பூ டிசைன்களுடன் இரண்டு சைடு பார்டர்களும் ஜியோ மெட்ரிக் டிசைனில் இருப்பது போன்று காண்ட்ராஸ்ட் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சேலைகள் கண்களைக் கவரும் விதத்தில் இருக்கின்றன..ஆரஞ்சு வண்ணத்திற்கு அடர் நீல வண்ணம் பார்டராக வருவது போலவும், மஜன்தாவிற்கு வான நீல நிறம் பார்டராக வருவது போலவும், கிரே வண்ண உடலிற்கு மஜன்தா வண்ணம் பார்டராக வருவது போலவும் மிகவும் அருமையாக கண்கவர் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து வடிவமைத்திருக்கிறார்கள்.

    உடல் முழுவதும் அலை வடிவத்தை செங்குத்தாக வடிவமைத்து பார்டர் மற்றும் பல்லு விற்கு வெறும் கோடுகள் வருவது போன்று வடிவமைத்திருப்பது அணிபவருக்கு ஒல்லியான தோற்றத்தை தருவதாக இருக்கும். உடல் முழுவதும் கொடியில் இலைகளும் பூக்களும் இருப்பது போன்றும் பார்டர் மற்றும் பல்லுவிற்கு நெளி கோடுகள் வருவது போன்றும் டிசைன் செய்யப்பட்டிருப்பது அலுவலகம் செல்லும் பெண்கள் உடுத்துவதற்கு நேர்த்தியான ஒன்றாக இருக்கும்.

    சில பெண்கள் மிகவும் மிருதுவான வண்ணங்களில் வரும் சேலைகளை அணிவதற்கு விருப்பப்படுவதால் அதுபோன்றும் இந்த மல்மல் சேலைகளில் அதிக கலெக்ஷன்கள் வருகின்றன. உடல் முழுவதும் சந்தன வண்ணத்தில் நீலம், பச்சை, மஞ்சள்,பழுப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் சிறிய டிசைன்களை பிரிண்ட் செய்து அதே வண்ணங்களை பார்டராகக் கொடுத்திருப்பது பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கின்றது. வயதான பெண்கள் மட்டுமல்லாமல் சிறு வயது பெண்களும் இதுபோன்ற மிருதுவான வண்ணங்களை இப்பொழுது தேர்ந்தெடுத்து அணிகிறார்கள்.. இந்த மல்மல் சேலைகளுக்கு கஞ்சி போட்டு அணிய வேண்டிய அவசியமில்லை.. இந்த புடவைகளை வீட்டிலேயே சாதாரண ஷாம்பு வாஷ் செய்து அணியலாம்.

    உடல் முழுவதும் செங்குத்துக் கோடுகள் இருக்க பல்லு மற்றும் பார்டரில் ஃபிகர் பிரிண்டுகள் வருவது போன்று அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் புடவைகள் அதன் வண்ணம் மற்றும் டிசைனிற்கு அட்டகாசமாக பொருந்தி வருகின்றது என்று சொல்லலாம். அலுவலகம் செல்லும் பெண்கள் அன்றாடம் அணிவதற்கு இந்த புடவைகள் மிகவும் பொருத்தமாக இருக்கும்..புடவை முழுவதும் செல்ஃப் கலரில் இருப்பது ஒரு விதமான அழகு என்றால் கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் வரும் புடவைகள் மற்றொரு விதத்தில் கவர்ச்சிகரமாக இருக்கின்றன.

    உடல் முழுவதும் கலம்காரி டிசைன்களுடன் பாந்தினி பிரிண்ட் பார்டர் மற்றும் பல்லுவுடன் வரும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.மிருதுவான வண்ணத்தில் உடல்முழுவதும் கலம்காரி டிசைன்கள் வருவது போன்றும் அதற்கு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பாந்தினி பிரிண்டுகள் பார்டர் மற்றும் பல்லுவாக வருவது போன்றும் வடிவமைத்து இருப்பது புடவையை விரும்பாதவர்களைக் கூட வாங்கத் தூண்டும் என்று சொல்லும் அளவிற்கு இருக்கின்றது.

    பத்திக் பிரிண்ட்களை இந்தப் புடவைகளில் மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்..கையகல பட்டையான செங்குத்து கோடுகளில் பத்திக் பிரிண்ட்டுகளும் அதையடுத்து கையகல பிளெயின் வண்ணப் பட்டைகளும் வருவது போன்று இருக்கும் புடவைகள் அட்டகாசமாக இருக்கின்றன.. அதிலும் பிரிண்டுகள் ஒரு வண்ணத்திலும் பிளெயின் பட்டைகள் மற்றொரு வண்ணத்திலும் வருவது மிகவும் அழகாக இருக்கின்றது.

    மல் மல் காட்டன் புடவைகளில் பிளவுஸுடன் வரும் புடவைகளும் இருக்கின்றன..உடல் முழுவதும் பூ டிசைன்கள், பல்லுவிற்கு வித்தியாசமான டிசைன்கள் இருப்பதுபோன்று வரும் புடவைகளுக்கு மிகவும் கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பிளவுஸ் துணிகளை இணைத்திருக்கிறார்கள்..

    மல்மல் புடவைகளில் ஹாஃப் அண்ட் ஹாஃப் பேட்டர்ன்களும் வருகின்றன.உடல் முழுவதும் பூ டிசைன் இருந்தால் ஃபிரில்லிற்கு கட்டங்கள், கோடுகள் மற்றும் பிளெயின் வண்ணங்கள் வருவது போன்றும் வடிவமைத்திருக்கிறார்கள்.

    இந்த புடவைகளில் ஹேண்ட் பிரிண்டுகள் மிகவும் கலக்கலாக இருக்கின்றன என்று சொல்லலாம்.. வெளியில் அணிந்து செல்வதற்கு மிகவும் பொருத்தமாக இந்த சேலைகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    மிருதுவான துணியில் அட்டகாசமான டிசைன்களும் அருமையான வண்ணங்களும் இருப்பது போன்று வடிவமைத்து வருவது மல்மல் சேலைகளின் சிறப்பம்சம் என்று சொல்லலாம்.. இந்தப் புடவைகளை டிரை கிளீன் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு முறை உடுத்திய பிறகும் வீட்டிலேயே சாதாரணமாகத் துவைத்துப் பயன்படுத்தலாம்.கோடைக்காலத்திற்கு பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்ற சேலைகள் என்று இவற்றைச் சொல்லலாம்.இவ்வளவு அருமையான இந்தப் புடவைகள் 600 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய்க்குள் கிடைப்பது மல்மல் புடவைகளின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

    • 50 நிறுவனங்களை ஒருங்கிணைத்து அப்பேரல் கிளஸ்டர் என்கிற பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.
    • வெளிநாடுகளிலிருந்து அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    திருப்பூர் :

    திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை ரகங்களை அவற்றில் இடம் பெறும் பிரின்டிங், மதிப்பு கூட்டுகிறது. இத்தகைய பிரின்டிங் துறையை வளர்ச்சி பெறச்செய்வதற்காக 50 நிறுவனங்களை ஒருங்கிணைத்து அப்பேரல் கிளஸ்டர் என்கிற பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது தொழில் பாதுகாப்புக்குழு.

    பழவஞ்சிபாளையத்தில் ரூ. 16.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஜூலை மாதம் கிளாஸ் பிரின்ட், கியூரிங் எந்திரங்கள் வந்திறங்கின.இரண்டாம் கட்டமாக துருக்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ரவுண்ட் கரோசல் பிரின்டிங் எந்திரங்கள் திருப்பூருக்கு வந்து சேர்ந்தன.

    பர்ன் அவுட், ஹீட் டிரான்ஸ்பர், 3டி பிரின்ட், ஷிம்மர், ரேடியம் பிரன்ட், எம்போசிங், லெதர் கோட்டிங், டை அண்டு டை, பிளாட்ச் உட்பட 27 வகை பிரின்டிங் செய்யமுடியும். பிரின்டிங் நிறுவனங்களின் திறன்மிக்க தொழிலாளரை பணி அமர்த்துவதற்காக பொது பயன்பாட்டு மையத்தில் பயிற்சி மையம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தற்போது வந்துள்ள ரவுண்ட் கிரோசல் எந்திரம் தொழிலாளர்களுக்கு பிரின்டிங் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்பட உள்ளதாக தொழில் பாதுகாப்புக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.விரைவில் பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்த எந்திரம் சோதனை ஓட்டத்தை துவக்க உள்ளது.

    • இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணிகளை பின்பற்றி தயாரிக்கப்படுபவை.
    • சமீப காலத்தில் பெண்களுக்கான சில ரக ஆடைகளில் பாக்கெட்டுகள் வைத்து தைக்கப்படுகின்றன.

    ஆண்களின் உடைகள், பைகள் இல்லாமல் முழுமை அடைவதில்லை. ஆனால், பெண்களின் உடைகளில் பைகள் வைத்து தைப்பதை பற்றி ஏன் யோசிப்பதில்லை?

    பெண்கள் காலம்காலமாக தோள்களிலும் கைகளிலும் பைகளை சுமந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தோள் பைகள் ஒருபோதும் சட்டை பைகளுக்கு இணையாகாது. இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணிகளை பின்பற்றி தயாரிக்கப்படுபவை. எனவே இந்தக் கேள்விக்கான விடையையும் ஐரோப்பிய வரலாற்றில் இருந்தே கண்டறிய முடியும். முந்தைய காலத்தில் ஆண்களும், பெண்களும் கையில் எடுத்துச் செல்லும் பைகளை மட்டுமே பயன்படுத்தினார்கள்.

    கி.பி.476 முதல் 1500-ம் ஆண்டு வரையிலான காலத்தில் எடை குறைவான பொருட்களை வைக்கும் வகையில் சட்டைப்பைகளையும் இடுப்பு பெல்ட்டுடன் இணைக்கப்பட்ட சிறு பைகளையும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். திருடர்களிடமிருந்து பணத்தை பாதுகாப்பதற்காக, சட்டையின் உட்புறமாக பைகளை தைக்கும் வழக்கமும் தொடங்கியது. பெண்களும்கூட சில ரக ஆடைகளில் இப்படி உள்பைகளைத் தைத்துக்கொண்டார்கள்.

    17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஆண்களின் கோட், வெயிஸ்ட் கோட், பேன்ட் என்று எதுவாக இருந்தாலும் அதில் கண்டிப்பாகப் பைகள் இருந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பெண்களின் ஆடைகளுக்கு இந்த வாய்ப்பு அமையவில்லை. 18-ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சியின்போது ஆடை வடிவமைப்பிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. பெண்களின் ஆடைகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலை இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்தன. எனவே பெண்கள் தங்களது உடைகளுடன் பைகளை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போனது.

    இந்த காலகட்டத்தில் மிகவும் அழகிய வடிவமைப்புகளோடு கூடிய பெண்களுக்கான பிரத்யேக பர்ஸ் பிரபலமானது. ஆனால், சமீப காலத்தில் பெண்களுக்கான சில ரக ஆடைகளில் பாக்கெட்டுகள் வைத்து தைக்கப்படுகின்றன.

    • வெள்ளை மற்றும் நீலப் பின்னணி கொண்ட சட்டைகள் அதிக பிரபலமானதாக உள்ளது.
    • ராயல் லுக் தரும் கிளன் பிளைட் பேட்டர்ன் அதிகளவில் விரும்பி அணியப்படுகிறது.

    ஆண்கள் அணிகின்ற சட்டையில் இடம் பெறும் பேட்டர்ன்கள் என்பது தனிசிறப்பு கொண்டவை. அதில் ஒவ்வொரு பேட்டர்ன்களும் ஒவ்வொரு விதமாக உருவாக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டர்ன்கள் என்பது பிரபலமானதாக மாறிவிட்ட பிறகு அதற்கென தனித்துவம் ஏற்பட்டு விடுகிறது. உலகமெங்கும் சட்டை உற்பத்தியாளர்கள் இந்த பேட்டர்ன்களில் ஏதேனும் ஒன்றை கொண்டே சட்டையை உருவாக்கி தருகின்றனர். அதுபோல் மிக முக்கியமான சட்டை பேட்டர்ன்களை அடிப்படையாக கொண்டே விதவிதமான வண்ணக் கலவையுடன் சட்டைகள் உலா வருகின்றன.

    பிரபலமான சட்டை பேட்டர்ன்கள்

    உலகெங்கும் பிரபலமான சட்டை பேட்டர்ன்கள் என்றவாறு பல உள்ளன. அவை ஜின்கெம், மெட்ராஸ், டார்டன் பிளைட், ஷெப்பர்ட செக், ஹவுண்ட்ஸ் டூத், கிளன் பிளைட், விண்டோ பேன் செக், கிராப் செக், டாட்டர்ஸ் சால், மினி செக், பின் செக், அவனிங் ஸ்டிரிப், பெங்கால் ஸ்டிரிப்ஸ், கேண்டி ஸ்டிரிப்ஸ், பென்சில் ஸ்டிரிப், ஹேர்லைன் ஸ்டிரிப், பார்கோடு, ஷேடோ போன்றவாறு பல பேட்டர்ன்கள் உள்ளன.

    ஜின்கெம் பேட்டர்ன்

    ஜின்கெம் என்பது பொதுவாக கட்டம் உள்ளவாறு உருவாக்கப்படுகிறது. வெள்ளை மற்றும் வண்ணம் இணைந்தவாறு பெரும்பாலும் சதுர கட்டங்கள் பெரிய அளவில் உள்ளவாறு இதன் வடிவம் இருக்கும். நீளம் மற்றும் குறுக்குவாட்டில் பட்டை கோடுகள் என்பது இரட்டை வண்ணத்தில் பிரிண்ட் செய்யப்படும்போது சதுரமான கட்டம் போன்று காட்சியளிக்கும். நீளவாக்கில் 17-ம் நூற்றாண்டில் அறிமுகமான ஜின்கெம் பேட்டர்ன் என்பது 18-ம் நுற்றாண்டில் கட்டம் வடிவத்தில் உருவாக்கப்பட்டன. வெள்ளை மற்றும் நீலப் பின்னணி கொண்ட இந்த பேட்டர்ன் சட்டைகள் அதிக பிரபலமானதாக உள்ளது.

    மெட்ராஸ் பேட்டர்ன்

    கோடை காலத்தில் அணிய ஏற்றவாறு இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தினர் உருவாக்கிய பேட்டர்ன் தான் மெட்ராஸ். வண்ணமயமான கோடுகள் மற்றும் கட்டங்கள் உள்ளவாறு ஒரே சீரான இல்லாத மாறுபட்ட அளவுகளில் காணப்படும். மெட்ராஸ் பேட்டர்ன் கேஷ்வல் சட்டைகளாகவும், அரைகால் சட்டைகளாகவும் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன.

    கிளன் பிளைட்

    கிளன் பிளைட் என்பது வேல்ஸ் ராஜா கட்டம் என்றவாறு அழைக்கப்படுகிறது. இந்த பேட்டர்ன் பெரும்பாலும் சூட் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இரட்டை சாயல் கொண்ட வெட்டுப்பட்ட கட்டங்கள் கொண்டவாறு இருக்கும். அதுபோல் டார்க் மற்றும் லைட் வண்ண கோடுகள் மாற்றி மாற்றி உள்ளது போன்ற பேட்டர்ன் அமைப்பு. ராயல் லுக் தரும் இந்த பேட்டர்ன் அதிகளவில் விரும்பி அணியப்படுகிறது.

    அவனிங் ஸ்டிரிப்ஸ்

    அவனிங் ஸ்டிரிப்ஸ் என்பது அகலமான வடிவில் நீள கோடுகள் உள்ளது போன்று இருப்பது. வெள்ளை பின்னணியில் டார்க் மற்றும் லைட் வண்ண பட்டை கோடுகள் வருவது இதன் சிறப்பு அதாவது ¼ இன்ச் அளவிற்கு இந்த பட்டை கோடு உள்ளவாறு சீரான இடைவெளி அமைப்புடன் இந்த அவனிங் ஸ்டிரிப்ஸ் பேட்டர்ன் உள்ளது. இந்த அவனிங் ஸ்டிரிப்ஸ் என்பது கேஸ்வல் ஆடை வடிவமைப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    பென்சில் ஸ்டிரிப்ஸ்

    பென்சில் அளவுள்ள சிறிய கோடுகள் உள்ள அமைப்பு. சீரான இடைவெளியின்றி வரிசைகிரமமாக கோடுகள் நீளவாக்கில் இருப்பது இதன் அமைப்பு. இதுவும் வெள்ளை நிற பின்னணியில் வண்ண கோடுகள் நீளவாக்கில் வரும்.

    ஷேடோ ஸ்டிரிப்ஸ்

    ஷேடோ ஸ்டிரிப்ஸ் என்பது நீளவாக்கில் கோடுகள் போல அமைந்திருக்கும். ஒரு வண்ணத்திற்கு மற்றது மார்டன் போல காட்சியளிக்கும். மேலும் ஏதேனும் வண்ணக்கோடுக்கு ஏற்ப அதே வண்ண சாயல் பரவியுள்ளவாறு தோன்ற செய்யப்படும். பெரும்பாலும் மூன்று (அ) இரட்டை வண்ண சாயல் பின்னணியில் இந்த பேட்டர்ன் உருவாக்கம் அமைகிறது.

    ஹியரிங் போன்

    மேல் மற்றும் கீழ் நோக்கி 'க்ஷி' வடிவில் இந்த பேட்டர்ன் வடிவமைக்கப்பட்டிருக்கும். மீனின் உள்முள் வடிவில் உள்ள இந்த பேட்டர்ன் சூட் மற்றும் வெளிநிகழ்வு ஆடைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நாம் அணிகின்ற சட்டைகள் எந்த வகையான பேட்டர்ன் என்பதை அறிந்து அணியும்போது அதன் சிறப்பும் பெருமையும் அறிய முடியும்.

    • பெண்கள் சில பொருட்களை கண்டிப்பாக கைவசம் வைத்திருக்க வேண்டும்.
    • பெண்களுக்கு உள்ளாடடைகள் சார்ந்த விஷயங்களில் போதிய விழிப்புணர்வு இல்லை.

    பெண்கள் தங்களது தோற்றத்தை மேம்படுத்தும் அழகு சாதனங்கள், ஆடைகள், அலங்காரப்பொருட்கள் போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். ஆனால் அவற்றை விட முக்கியமானது உள்ளாடடைகள் சார்ந்த விஷயங்கள். இவற்றில் பலருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மையாகும்.

    வியார்வையால் ஏற்படும் அரிப்பு, உள்ளாடை அணிவதால் ஏற்படும் தழும்புகள் போன்ற பல பாதிப்புகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். இவற்றை தவிர்க்க சில பொருட்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். அதை பற்றிய குறிப்புகள் இங்கே...

    ஸ்வெட் பேட்

    பெண்களின் அக்குள் பகுதியில் வியர்பை அதிகமாக வெளியேறும். தொடர்ந்து வியர்க்கும் போது நுண் கிருமிகளால் தொற்று ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். மேலும் வியர்வை தொடர்ந்து படிவதால் துணிகள் நனைந்து ஒரு வித அசவுகரியத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க சந்தையில் கிடைக்கும் ஸ்வெட் பேட் வாங்கி பயன்படுத்தலாம். இதை அக்குள் பகுதியில் உள்ள துணியில் ஓட்டிக்கொள்ளலாம். வெளியேறும் வியர்வையை இந்த பேட் உறிஞ்சிக்கொள்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. பயன்படுத்திய பின்பு அதனை அப்புறப்படுத்தி விடலாம்.

    இன்விசிபிள் பிரா ஸ்ட்ராப்

    வலை போன்ற துணி ரகங்களில் தயாரிககப்பட்ட உடைகள் அணிவது தற்போது ட்ரெண்டிங்காக இருக்கிறது. இவ்வாறு அணியும் போது உள்ளாடையில் உள்ள ஸ்ட்ராப் வெளியில் தெரிந்து சங்கடத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க கண்ணுக்கு தெரியாத வகையில் கண்ணாடி போன்ற பிரா ஸ்ட்ராப் கிடைக்கிறது. அணியும் உள்ளாடையில் இருக்கும் ஸ்ட்ராப்பை நீக்கி விட்டு இதை அணிந்து பயன்படுத்தலாம்.

    தோள்பட்டை பேட்

    இறுக்கமான உள்ளாடைகளை பெண்கள் தொடர்ந்து அணியும் போது தோள் பட்டையில் அழுத்தம் உண்டாகும். அதன் காரணமாக நாளடைவில் தோள்பட்டை சருமத்தில்கருப்பு நிறத் தழும்பு ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்ட தோள்பட்டை பேட் உதவுகிறது. தோள்பட்டை மீது இதை அணிந்து அதன் மேல் உள்ளாடைடையின் பட்டையை வைத்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படிருக்கிறது. இதனால் சருமத்தில் அழுத்தம் ஏற்பட்டு தழும்புகள் உண்டாகாது.

    ஷேப் வேர்

    பருமனான உடல் அமைப்பு கொண்டவர்கள் புடவை அணியும் போது இடுப்பு பகுதி சதையை உள்ளடக்கி புடவையின் மடிப்பை சரியாக எடுத்து காட்ட உதவுவதே ஷேப்வேரின் வேலையாகும். பாவாடை போன்று இருக்கும் இதில் இரண்டு பக்கமும் கால்களை நகர்த்துவதற்கு வசதியான அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    • எலாஸ்டிக் ஆடைகளை தொடர்ந்து அணிவதால் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
    • எலாஸ்டிக் ஆடைகள் உடலை ஒட்டியபடியே இருக்கும்.

    தற்போது பெண்கள் அணியும் பெரும்பாலான ஆடைகள் இறுக்கமாகவும், உடலை அழுத்தியவாறும் இருக்கின்றன. உள்ளாடை முதல் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஆடை வரை அனைத்திலும் இறுக்கத்தையும், நீட்சியையும் கொடுப்பதற்காக 'எலாஸ்டிக்' பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய எலாஸ்டிக் ஆடைகளை தொடர்ந்து அணிவதால் சருமத்தில் வறட்சி, தடிப்பு மற்றும் அரிப்பு உண்டாகுதல், உடல் வெப்பம் அதிகரித்தல் போன்ற பல ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    ரத்த ஓட்டம்:

    எலாஸ்டிக் ஆடைகள் உடலை ஒட்டியபடியே இருக்கும். இதனால், உடலில் இறுக்கம் ஏற்பட்டு, செல்கள் சுவாசிப்பதில் இடையூறை உண்டாக்கும். உடல் முழுவதும் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். எலாஸ்டிக் ஆடைகள் அணிவதால், நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, காலப்போக்கில் உடல் உறுப்புகளின் இயக்கத்தில் மந்த உணர்வை தரும்.

    சுவாசம்:

    எலாஸ்டிக் கொண்ட உள்ளாடைகள், ஆடைகளை தினசரி பயன்படுத்தும்போது அவை உடலை இறுக்கிப் பிடிப்பதால் எளிதாக மூச்சுவிட முடியாது. இதனால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவு இயல்பாகவே குறைந்துவிடும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் வரலாம்.

    சருமம்:

    எலாஸ்டிக் ஆடைகள் இறுக்கமாக இருப்பதால் சருமத்துக்கு காற்றோட்டம் செல்வது குறைகிறது. இதனால், ஈரப்பதம் குறைந்து, சருமத்தில் வெடிப்பு, கொப்புளங்கள், பூஞ்சைத் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எலாஸ்டிக் ஆடைகள் அணியும் போது உடலில் உண்டாகும் வியர்வை சரியாக வெளியேறாமல் சருமத்தில் அப்படியே படிந்துவிடும். இது சருமத் தொற்றை ஏற்படுத்துவதுடன், உடல் கழிவுகள் வெளியேறுவதையும் தடுக்கும்.

    வயிற்றுக் கோளாறுகள்:

    பெரும்பாலான பெண்கள் உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி, விளையாட்டு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் போது இறுக்கமான எலாஸ்டிக் ஆடைகளையே பயன்படுத்துகிறார்கள். இது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளில் அழுத்தம் கொடுத்து, அங்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுப்பதுடன், செரிமானக் கோளாறு, பசியின்மை, வயிற்று வலி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

    உடல் அமைப்பில் பாதிப்பு:

    எலாஸ்டிக் ஆடைகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது அதன் வடிவமைப்புக்கேற்ப, உடல் அமைப்பிலும் மாற்றம் ஏற்படக்கூடும். இதனால், உடல் தோற்றம் மாறுபட்டு, சில நேரங்களில் உடல் பருமன் பிரச்சினைக்கும் வழிவகுக்கும். முதுகு மற்றும் தோள்பட்டைப் பகுதிகளில் உள்ள தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். இதனால், தலை மற்றும் கழுத்துப் பகுதியை இணைக்கும் இடத்தில் வலி, முதுகுத் தண்டுவடத்தில் அழுத்தம் அதிகமாகி முதுகு வலி, தோள்பட்டையில் வலி போன்றவை ஏற்படலாம்.

    ×