search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிக் கிருத்திகை"

    • முருகன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.
    • பால் குடங்கள் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.

    கோபி:

    ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர். முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோபி பச்சைமலை கோவிலில் இன்று காலை முதல் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பால் குடங்கள் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.

    அப்போது கோபிசெட்டி பாளையம் அடுத்த கொங்கர்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெருமாள் சாமி என்பவர் இன்று காலை கோபி பச்சைமலை கோவிலுக்கு தனது 2 காளைகளுடன் வந்திருந்தார்.

    பின்னர் பால் குடத்துடன் பெருமாள் சாமி தனது 2 காளையுடன் 161 படிகளை ஏறி முருகனை வழிபட்டார். தனது மாடுகளுடன் முருகனை வழிபட வந்த பெருமாள் சாமியை கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
    • திருவாரூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமி நாதசாமி கோவில் உள்ளது.

    இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    தந்தையாகிய சிவபெருமானுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் 'குரு உபதேச தலம்' என்ற சிறப்பும் பெற்றுள்ளது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின், முருகனுக்கு மஞ்சள், பால், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் தஞ்சை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, மாலை 7 மணிக்கு நேத்திர புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற உள்ளது. சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி ஆகியோர் ஆலோசனைப்படி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை (7-ந் தேதி) முதல் 10-ந்தேதி வரை திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்க காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழக மண்டலத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்-திருத்தணிக்கு 100 பஸ்கள், அரக்கோணம்-திருத்தணிக்கு 25 பஸ்கள், சென்னை-திருத்தணிக்கு 100 பஸ்கள், திருப்பதி-திருத்தணிக்கு 75 பஸ்கள் என மொத்தம் 300 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.
    • அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நன்னாள். இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு போறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள். உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவு கூறும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.

    குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது. அரக்கர்களின் செருக்கழித்துமுருகன் ஓய்வெடுத்த திருத்தலம் திருத்தணி ஆகும். அந்த தினத்தில் இங்கு அரக்கர்கள் வீழ்ச்சிக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்த இறைவனை நினைத்து பல்வேறு வழிபாடுகளை செய்வது பக்தர்களின் வழக்கம்.

    • சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி.
    • ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும்.

    ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒருநாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது ஆடிப்பெருக்கில்...

    காவிரி நீர் அபிஷேகம்!

    நாமக்கல்லில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மோகனூர். இந்த தலத்தில் உள்ள சுவாமியின் திருநாமம் ஸ்ரீ அசலதீபேஸ்வரர். மூலவரின் சன்னதியில் எப்போதும், அசையாமல் ஒளிர்ந்தபடி இருக்குமாம் தீபம்; ஆகவே இந்தத் திருநாமம் ஈசனுக்கு!

    இந்தத் தலத்தின் சிறப்பு... சுவாமியை தரிசித்தபடி அப்படியே திரும்பினால், காவிரித்தாயை தரிசிக்கலாம். காவிரி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் தலம் இது என்பர்! எனவே காசிக்கு நிகரான திருத்தலம் எனப்போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு, காவிரி நீரால் அபிஷேகித்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

    சூரிய பூஜை காணும் முருகன்

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.

    காவிரித் தாயாருக்கு சீர்வரிசை!

    ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும். இதனைக் காண அரங்கன், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!

    ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரித் தாயாருக்கு மாலை, தாலிப்பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.

    காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாகக் கூடி, பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!

    • அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
    • ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    1. ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.

    2. ஆடி மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    3. ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பது பழமொழி, அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலைகுளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    4. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    5. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் ஆடி மாதம் 18-ம் பெருக்கின் போது நதிக்கரையில் நிலாச்சோறு சாப்பிடுவார்கள்.

    6. ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.

    7. புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும். அதாவது, ஆடி மாதத்தில் தம்பதியர் ஒன்று சேர்ந்து குழந்தை உண்டானால் சித்திரையில் குழந்தை பிறக்கும். அந்த சமயத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.

    • முருகன் என்றதுமே தமிழ் மக்களின் உள்ளமெல்லாம் உருகும்.
    • முருகன்பால் தமிழ் மக்களுக்கு எல்லை இல்லாத பக்தியுண்டு.

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..!

    முருகன் வீற்றிருக்கும் அத்தனை திருத்தலங்களும் வரும் திங்கட்கிழமை ஆடிக்கிருத்தியை முன்னிட்டு கோலாகல விழாவுக்கு தயாராகி கொண்டு இருக்கின்றன.

    தமிழகத்து மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வமான முருகன், கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என விளங்கி அடியார்களுக்கெல்லாம் முருகன் அருள் செய்தி வருகின்றான்.

    முருகன் என்றதுமே தமிழ் மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன்பால் தமிழ் மக்களுக்கு எல்லை இல்லாத பக்தியுண்டு.

    தமிழ்நாட்டில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் முருகனுக்கு கோவில்கள் அமைந்திருக்கின்றன. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி முதலிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு மகிழ்கிறார்கள்.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

    கந்தவேல் முருகனுக்கு அரோகரா...

    ×