search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆ ராசா"

    • 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இதற்கிடையே, ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி அன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அதாவது 1999-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கூடுதலாக ரூ.27.92 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    இதனடிப்படையில் ஆ.ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. சோதனையின் போது வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் நிலையான வைப்பு ரசீதுகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

    2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    வருமான ஆதாரங்களில் இருந்து 579 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்து அமைப்புகளை திரட்டி மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • சென்னை மாநகர் முழுவதும் பரபரப்பான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

    சென்னை:

    இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது புகார்கள் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்து அமைப்புகளை திரட்டி மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக 63 இந்து அமைப்புகளின் கூட்டு அமைப்பான இந்து பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டனர்.

    இதற்காக சென்னை மாநகர் முழுவதும் பரபரப்பான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. மெரினா நோக்கி திரண்டு வாருங்கள் என்கிற கோஷங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

    இந்த நிலையில் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையில் உள்ள இந்து பரிவார் அலுவலகத்துக்கு போலீசார் சென்றனர். அங்கிருந்த மாநில தலைவர் வசந்தகுமாரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், இந்து பரிவார் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த அமைப்பினர் மறியலிலும் ஈடுபட்டனர்.

    • ஆ.ராசா 2 நாள் பயணமாக நீலகிரி வருவதாக இருந்தது.
    • கோவை வழியாக நீலகிரி செல்லும் வழியில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர்.

    ஊட்டி:

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க அரசின் முப்பெரும் விழா தி.மு.க கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் தி.மு.க.வின் கட்சி கொடியேற்றும் விழா நடக்க இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. துணை பொதுசெயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசாவும் கலந்துகொள்ள இருப்பதாக மாவட்ட தி.மு.க. சார்பில் கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து வந்தனர்.

    இதற்காக ஆ.ராசா 2 நாள் பயணமாக நீலகிரி வருவதாக இருந்தது. நேற்று மாலை. சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, பின்னர் அங்கிருந்து கார் மூலமாக அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரிக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. நீலகிரி வரும் அவருக்கு வரவேற்பு கொடுக்கவும் கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் ஆ.ராசா தனது 2 நாள் நீலகிரி சுற்றுப்பயணத்தை திடீரென ஒத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்து மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. துணை பொதுசெயலாளர் ஆ.ராசா, இந்துக்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்றும் அவர் கோவை வழியாக நீலகிரி செல்லும் வழியில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஆ.ராசா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    • பா.ஜ.க, இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி நால்ரோடு சத்தியமங்கலம் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • மறியல் செய்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இந்து மதத்துக்கு எதிராக பேசியதாக கூறி அவரை கண்டித்து நேற்று நீலகிரி தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், பு.புளியம்பட்டி ஆகிய பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக அவர்கள் பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகம் செய்தனர். இதற்கு போட்டியாக கடைகளை வழக்கம்போல் திறந்து கொள்ளலாம் என்று தி.மு.க. சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

    இருப்பினும் நேற்று இந்த பகுதிகளில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக போலீசார் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி பா.ஜ.க, இந்து முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் புளியம்பட்டி நால்ரோடு சத்தியமங்கலம் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கோவை-சத்தியமங்கலம் சாலையில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து மறியல் செய்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க, இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் 1 மணி நேரத்துக்கு பின்பு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஏன் மனுதர்மத்தை எரித்தார்கள்? பல ஆண்டுகளுக்கு முன்?
    • இந்த பிறவி இழிவை நிலை நாட்டும் - பாதுகாத்து சட்டத்திலும் பரப்பும் மூல வித்து அது என்பதால்தானே!

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை பெரியார் திடலில் கடந்த 6.9.2022 அன்று 'விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆ.ராசா எம்.பி.யின் உரையைத் திரித்து, வெட்டி, பா.ஜ.க.வும், சில ஏடுகளும் வேறு பிரச்சினைகளை வைத்து தி.மு.க.விற்கு எதிராக களம் காணுவதில் அடைந்த தோல்வியை மறைக்க, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். - பார்ப்பன மற்றும் அவர்களது அடிவருடிகளின் கூட்டணி ஆ.ராசா எதிர்ப்புப் பிரசாரம் என்ற போர்வையில் தி.மு.க.வுக்கு எதிராகத் திட்டமிட்ட கோயபல்ஸ் பிரசாரத்தை சமூக வலைதளங்களிலும், சில ஏடுகளிலும் தொடர்ந்து எழுதியும், பேசியும், நடத்தியும் வருகின்றன.

    தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் தோழர் ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு பதிவிலிருக்கிறது; சொல் மாறாது 'விடுதலை' யிலும் (12.9.2022) வெளிவந்துள்ளது.

    மனுதர்மத்தில் உள்ள ''சூத்திர, பஞ்சமன்'' என்ற அர்த்த விளக்கம் எவ்வளவு மானக்கேடானது; பெரும்பான்மையான உழைக்கும் நமது இன மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் சொல் என்பதைத்தான் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்! அந்த இழிவுக்குப் பரிகாரம் தேடவேண்டாமா?

    இதற்காக, வழக்குப் போட்டு அவரை நீதிமன்றத்திற்கு அழைத்தாலும், அதை எதிர்கொண்டு மனுதர்மம், கீதை போன்ற ஜாதியை வலியுறுத்தும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் பல இந்து மத சாஸ்திரங்கள், தர்ம விளக்கம் பற்றி நீதிமன்றத்திலேயே அலசி அலசிச் சுட்டிக்காட்ட அவரும் தயார் - அவர் சார்பில் பெரியார் தொண்டர்களாகிய நாமும் தயார்!

    மீண்டும் மனுதர்மம் சாயம் வெளுப்பதற்குத் தந்த வாய்ப்புக்கு நன்றி!

    தோழர் ஆ.ராசா எம்.பி.,யின் பேச்சை வெட்டி, திரித்துக்காட்டி எழுதுகிறது.

    நோயைச் சுட்டிக்காட்டி, விஷக் கிருமிகளை அடையாளம் காட்டிவரும் டாக்டர்கள்தான் - நோய் பரப்புபவர்கள் என்று திசை திருப்பினால், அது எவ்வளவு கேவலமான கண்டனத்திற்குரியதோ, அதே பணியைத்தான் - ஏதாவது புரளி கிளப்பி அதில் புரண்டு மகிழ்கின்றனர் காவிக்கட்சியினர்.

    இதேபோலத்தான் முன்பு 'மனுதர்மம்' பற்றி பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தோழர் தொல்.திருமாவளவனின் பேச்சையும் திசை திருப்பி, பிரச்சினை புழுதி கிளப்பி, மூக்குடைப்பட்டு மூலைக்குச் சென்று முடங்கினார்கள்.

    இப்போது இப்படி ஒரு கேவலமான பொய்ப் பிரச்சாரத்தை, சில பூணூல் ஊடகங்கள், 'பொய் மயப் பிரச்சாரம்' என்ற மண் குதிரையில் பயணம் செய்கிறார்கள்!

    தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஏன் மனுதர்மத்தை எரித்தார்கள்? பல ஆண்டுகளுக்கு முன்?

    இந்த பிறவி இழிவை நிலை நாட்டும் - பாதுகாத்து சட்டத்திலும் பரப்பும் மூல வித்து அது என்பதால்தானே!

    'இனமலர்' ஏட்டின் கற்பனை வாசகர் கடிதத்தில் ஒரு 'அறிவுக் கொழுந்து' எங்கே இருக்கிறது என்று கேட்கிறது! அட மூட ஜென்மங்களே!

    ''அசல் மனுதர்மம்'' நூலில் 1919-ல் (103 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பதிப்பு) திருவந்திபுரம், கோமாண்டூர் இளைய வில்லி ராமானுஜாச்சாரியார் மொழிபெயர்ப்பு - அத்தியாயம் 8 - சுலோகம் 415 -ல் உள்ள வாசகங்களை அப்படியே தருகிறோம்.

    குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்

    குற்றத்திற்காக வேலை செய்கிறவன்'' என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்!

    இது போதாது என்றால், அக்னிஹோத்திரம் ஸ்ரீராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதி, 'நக்கீரன்' பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ''இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலிலும் பச்சையாகவே மேற்சொன்ன விளக்கம் உள்பட பலவற்றை அவர் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.''

    ஆதாரங்களைக் குவிக்க நாங்கள் என்றும் தயார்!

    இவற்றை நீதிமன்றத்தில் ஏற்றி, உலகம் முழுவதும் பரவிட, இந்து மதம் என்ற வேத சனாதன மதத்தின் உண்மை யோக்கியதையை 'ஸ்கேன்' செய்ய வாய்ப்புத் தந்தால் நன்றி!

    எங்களிடம் பூச்சாண்டி மிரட்டல் ஏதும் கிடையாது; 'இந்து' மதம் என்ற சொல்லே முதலில் எந்த இந்திய மொழி - சொல்லுவீர்களா?

    'அது அந்நியன் தந்த பெயர் என்பதை காஞ்சி சங்கராச்சாரியாரே பகிரங்கமாக கூறியுள்ளதற்குப் பிறகும் உங்களுக்கு ஏன் இந்த கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் புத்தி?

    கருத்தைக் கருத்தால் சந்திக்கத் திராணி இல்லாத தில்லுமுல்லு திருகுதாளப் பேர்வழிகளே - உங்கள் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது.

    உண்மை ஒருபோதும் உறங்காது! உலா வருவது உறுதி!!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கி விட்டது.
    • தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பலமுறை இந்து மதத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கி விட்டது. இந்து மதத்தின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி பேசுவதும், எதிராக பேசுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பலமுறை இந்து மதத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.

    நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதி புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் ஆ.ராசா இந்துக்களை அவதூறாக பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 வரை கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு வியாபாரிகள், வாகன டிரைவர், பொது நல அமைப்புகள், கூலித் தொழிலாளர்கள், பொது மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வெங்கடாஜலபதி என்பவர் ஒரு புகார் மனு கொடுத்து வழக்கு தொடர்ந்தார்.
    • இந்து மக்களை பற்றியும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார். ஒரு இந்துவாக எனது மனம் மிகவும் வேதனையடைந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக வெங்கடாஜலபதி என்ற குட்டி உள்ளார்.

    வக்கீலான இவர் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்து வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்ட நீதிமன்றம் வக்கீல் சங்க அலுவலகத்தில் நான் இருந்த போது எனது செல்போன் மூலம் யூடியூப்பை பார்த்த போது அதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியது தெரியவந்துள்ளது.

    மேலும் இந்து மக்களை பற்றியும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார். ஒரு இந்துவாக எனது மனம் மிகவும் வேதனையடைந்துள்ளது.

    தொடர்ந்து அவர் இதுபோன்று பேசி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • இந்துக்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இ
    • ஆ.ராசா மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    பொன்னேரி:

    தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா கடந்த 6-ந் தேதி வேப்பேரி, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் இந்துக்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கு பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    ஆ.ராசா மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    மேலும் இது தொடர்பாக பா.ஜனதா சார்பில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக் குரிய வகையில் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜனதா சார்பில் மீஞ்சூர், சோழவரம் போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு உள்ளது. அதில், 'இந்துக்களின் மனம் புண்படும் வகையிலும் இந்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் சர்ச்சைக்குரிய வகையில் ஆ.ராசா பேசி உள்ளார். இந்துமத நம்பிக்கையை இழிவுபடுத்தி வரும் ஆ.ராசா மீது சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.

    • 2ஜி அலைக்கற்றை வெறும் 30 'மெகா ஹெர்ட்ஸ்'தான் ஏலம் விடப்பட்டது.
    • 2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது.

    புதுடெல்லி :

    டெல்லியில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வனஉயிர் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கிடையே, புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் உள்ளிட்ட சரணாலய பகுதிகளில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் எந்தவித கட்டுமான பணிகளும், வளர்ச்சிப்பணிகளும் இருக்கக்கூடாது என ஏன் ஒரு சட்டத்தை வகுக்கக்கூடாது? என கேட்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதனால் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைமத்திய வனத்துறை மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவர் இதுகுறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதாக உறுதி தந்து இருக்கிறார்.

    5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது.

    2ஜி அலைக்கற்றை வெறும் 30 'மெகா ஹெர்ட்ஸ்'தான் (அதிர்வெண் அளவு) ஏலம் விடப்பட்டது. அதை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் கொடுத்தபோது ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் அறிக்கை அளித்தார்.

    2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது. 2ஜி-யில் வெறும் குரல்தான் சென்றது. 3ஜி-யில் வீடியோ வந்தது. இப்போது 5ஜி-யில் எந்த ஒரு இணைய தேடுதலாக இருந்தாலும் ஒரு நொடியில் வந்துவிடும்.

    இந்த திறன் அடிப்படையில் பார்த்தால் ரூ.5 லட்சம் கோடி அல்லது ரூ.6 லட்சம் கோடிக்கு ஏலம் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. அப்படியானால் திட்டமிடுதலில் மோசமா? நாலைந்து கம்பெனிகளோடு சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்ததா?. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

    2ஜி-க்கும், 5ஜி-க்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே எவ்வளவு பெரிய மோசடியை வினோத்ராய் செய்திருக்கிறார் என்பது தெரியும். அவர் யாருக்காக இதை செய்து இருக்கிறார்?. ஒரு ஆட்சி மாற்றத்துக்காக அவரது பின்னால் யார் யாரெல்லாம் இருந்தனர்? என்பதை விசாரிக்க வேண்டும்.

    இதற்கு அரசு முன்வரவில்லை என்றால், இந்த அரசு நிச்சயமாக மாறும். அப்படி மாறும்போது அடுத்து வருகிற அரசாங்கமாவது விசாரித்து நாட்டுக்கு உண்மையை சொல்ல வேண்டும். இது ஒரு மிகப்பெரிய மோசடி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×