search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருங்காட்சியகம்"

    • ஒவ்வொரு பொருட்களின் முக்கியத்துவத்தை குமரி மாவட்ட மக்களிடையே எடுத்துச்செல்வதற்கான ஒரு முயற்சி
    • சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் மே மாத சிறப்பு காட்சிப் பொருட்கள் கண்காட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் தேங்காய் சிரட்டையில் செய்யப்பட்ட கலைநயம் மிக்க பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராள மான அரும்பொருட் கள் உள்ளன. ஒவ்வொரு பொருட்களும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. அத்தனை சிறப்பு மிக்க பொருட்களின் முக்கியத்து வத்தை எடுத்துக் கூறும் விதமாக இதுபோன்று மாதம் ஒரு சிறப்பு காட்சி பொருட் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தின் இருப்பில் உள்ள அரும்பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அந்த பொருளை பற்றிய விளக்கமும் வைக்கப்பட்டு இருக்கும். ஒரு மாதம் முழுவதும் இந்த பொருட் கள் பொதுமக்களின் பார் வைக்காக அருங்காட்சிய கத்தில் வைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறாக கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு பொருட்களின் முக்கியத்துவத்தை குமரி மாவட்ட மக்களிடையே எடுத்துச்செல்வதற்கான ஒரு முயற்சிதான் இந்த சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி.

    அதன்படி கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கப்பட்டு உள்ள இந்த கண்காட்சியில் தேங்காய் சிரட்டையில் தயாரிக்கப்பட்ட அழகிய கைவினை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

    நமது முன்னோர்கள் இயற்கையோடு இசைந்த வாழ்வு வாழ்ந்து வந்தனர். தேங்காய் சிரட்டைகள் கழிவு பொருளாக கருதப் பட்டாலும் கறி தயாரிப்பது தவிர வேறு நன்மையான பயன்பாடுகளும் உள்ளன. உபயோகமற்றதாக கருதப்படும் தேங்காய் சிரட்டையில் இருந்து ஏராளமான அழகிய கைவினை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தென்னை அதிகம் வளரும் பகுதிகளில் தேங்காய் சிரட்டையில் கைவினை மற்றும் அலங்கார பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன. தேங்காய் சிரட்டைகள் சமையலுக்கான எரிபொரு ளாக பயன்பட்டாலும் அவற்றை கொண்டு கிண்ணங்கள், கரண்டிகள், அடிப்படை ஆபரணங்கள் ஆகியவை தயாரிக்கப்படு கின்றன. தேங்காய் சிரட்டை மற்றும் தென்னை மர செதுக்கு சிற்பக்கலை கேரளத்தில் பிரபலமாக உள்ளது.

    நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்து வத்தை இன்றைய தலை முறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே இந்த கண் காட்சியின் நோக்கமாகும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சி யர் சிவசத்தியவள்ளி தெரிவித்தார். கண்காட்சியை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.

    • அகழாய்வில் கிடைத்த புத்த சிற்பங்களை மீட்டு நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
    • சூடாமணி விகாரம் பகுதியை நாகையின் அடையாள சின்னமாக மாற்றப்படும்.

    நாகப்பட்டினம்:

    கீழடியில் அகழாய்வு செய்து தமிழர் நாகரிகத்தை வெளிக்கொண்டு வந்த, தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான ஆய்வுக் குழுவினர், நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சூடாமணி விகாரம், 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், பழைய கோட்டாட்சியர் அலுவலகம், நாகை அருங்காட்சியகம், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    முன்னதாக அவர்களை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வரவேற்றார்.நாகப்பட்டினம் துறைமுக நகரத்தின் வரலாற்று பண்பாட்டுத் தடங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த ஆய்வுப் பயணம் அமைந்துள்ளது என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.

    நாகப்பட்டினத்தில் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த புத்த சிற்பங்களை மீட்டு நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைப்பது, சூடாமணி விகாரம் பகுதியை நாகையின் அடையாளச் சின்னமாக மாற்றி, கீழடி போல் மக்கள் பார்வைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ஆய்வுப் பயணம் வலுசேர்க்கும் என்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.

    • பழம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு விடும்.
    • நோ ஹூன் சூவின் நண்பர் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

    சியோல் தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த கவின்கலை மாணவர் ஒருவர் கலைப்படைப்பாக சுவரில் டேப் கொண்டு ஒட்டப்பட்டு இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட சம்பவம் பேசிபொருளாகி இருக்கிறது. மௌரிசியோ கேடிலன் என்ற கலைஞர் காட்சிக்கு வைத்திருந்த வாழைப்பழம் அருங்காட்சியக சுவற்றில் டேப் கொண்டு ஒட்டப்பட்டு இருந்தது.

    காலை உணவை சாப்பிடாததால் அதிக பசி காரணமாக பழத்தை சாப்பிட்டேன் என்று தென் கொரிய மாணவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். நோ ஹூன் சூ என்ற மாணவர் வாழைப்பழத்தை சுவற்றில் இருந்து எடுத்து சாப்பிட்டு, பின் அதன் தோலை பழம் இருந்த சுவற்றில் அதே டேப் கொண்டு ஒட்டுகிறார். இந்த சம்பவம் முழுக்க வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நோ ஹூன் சூவின் நண்பர் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அருங்காட்சியகம் சார்பில் வாழைப்பழத்தின் தோல் நீக்கப்பட்டு வேறொரு பழம் அதே மாதிரி டேப் கொண்டு சுவற்றில் ஒட்டப்பட்டது. அருங்காட்சியகத்தில் இவ்வாறு ஒட்டப்படும் பழம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு விடும் என்று கேடிலன் தெரிவித்துள்ளார்.

    "நவீன கலையை சேதப்படுத்துவதும் ஒருவிதமான கலை தான்," என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நோ ஹூன் சூ தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்த தினம், காலை உணவை எடுத்துக் கொள்ளாததால் ஏற்பட்ட பசி காரணமாகத் தான் இவ்வாறு செய்தேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்தது.
    • தினமும் இந்த அருங்காட்சி யகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.

    தஞ்சை நகரின் மையப் பகுதியில் இருக்கும் பழமையான பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முடிவு செய்தார்.

    அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்தது. கலெக்டர் முயற்சியால் இந்த அருங்காட்சியகம் புதுப்பொலிவு பெற்றது.

    கடந்த ஜனவரி மாதம் இந்த அருங்காட்சியகத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    இதில், வேளாண்துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக் காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த செயற்கை முறையில் தத்ரூபமான காட்சிகள், அரியவகை பறவைகள் பூங்கா 7டி திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    தினமும் இந்த அருங்காட்சி யகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் அருங்காட்சியகத்தில் கூடுதல் அம்சமாக குழந்தைகள் விளையாடி பொழுதை போக்குவதற்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த ரெயில் சேவையை நேற்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    இன்னும் சில நாட்களில் பள்ளி தேர்வு முடிந்து கோடை விடுமுறை வரவுள்ளது.

    தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருங்காட்சியகத்துக்கு வருவர். தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    • ரூ.18.43 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
    • எப்படி நம் தமிழினம் வாழ்ந்துள்ளது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹால் மற்றும் சரஸ்வதி மஹாலில் தமிழக அரசு பொது நூலகத் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி இலக்கியத் திருவிழாவை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்மொழியின் செழுமையினையும், நமது மரபு, பண்பாடு, கலை மற்றும் வரலாற்றினை போற்றிடவும் இவற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மூலம் பொது நூலக இயக்ககம் வாயிலாக தமிழகத்தில் வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நதி நாகரிக மரபு அடிப்படையில் நான்கு இலக்கிய திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகின்றது.

    இதில் திருநெல்வேலி, சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏற்கனவே இலக்கிய திருவிழா நடந்து முடிந்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் காவிரி இலக்கியத் திருவிழா தொடங்ககியது. இன்று வரை இந்த விழா நடைபெறுகிறது.

    இவ்விழாவானது இலக்கியங்களை படைப்பு மற்றும், பண்பாட்டினை மையப்படுத்தி படைப்பரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம் என இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி மகாலில் படைப்பு அரங்க நிகழ்வுகளும், சங்கீத மகாலில் பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

    இவ்விழாவில் 45-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள் 30-க்கு மேற்பட்ட தலைப்புகளில் இரண்டு நாட்களும் இலக்கிய விருந்தளித்தனர்.

    இத்திருவிழாவினை பற்றி விழிப்புணர்வினை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் வாசிப்பு சார்ந்த பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி என பல போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

    முதல்-அமைச்சர் நடவடிக்கையால் ரூ.18.43 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் அனைவரும் ஒருமுறை யாவது சென்று பார்க்க வேண்டும். சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் எப்படி நம் தமிழினம் வாழ்ந்துள்ளது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி.கே.ஜி. நீலமேகம் , தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி , மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன், சரஸ்வதி மஹால் நூலகம் நிர்வாக அலுவலர் முத்தையா, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் முத்து, பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் பலவித பாரம்பரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
    • தஞ்ைச சுற்றுலா தலங்கள் வரிசையில் தற்போது இந்த அருங்காட்சியகமும் இடம்பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் ராபர்ட் சிஷோலம் என்பவர் தலைமையில் 1896-1900 கால கட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது.

    இந்தோ - சாராசனிக் கட்டிடக்கலை அம்சத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் தான் கடந்த 115 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இட நெருக்கடி காரணமாக தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது .

    இதையடுத்து பழமை வாய்ந்த பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது .

    அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்ப ட்டுள்ளது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இங்கு வந்து பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து உரிய ஆலோசனை வழங்கினார்.

    இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவு அடைந்ததால் அருங்காட்சியகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகத்தில் 7டி தியேட்டர், அரிய வகை பறவைகள் பூங்கா, இசைக்கு ஏற்றபடி நடனமாடும் செயற்கை நீரூற்று, சரஸ்வதி மகால் நூலக காட்சியறை, பழங்கால சிற்பங்கள் காட்சியறை, நில அளவீட்டு துறை காட்சியறை உள்பட பல்வேறு காட்சிக்கூடங்கள் உள்ளன. மேலும் இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு அறையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற 10 பொருட்களும் மற்றும் பலவித பாரம்பரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன. மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் தகவல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.

    கட்டிடத்தின் வெளியே தரை தளம் முழுவதும் கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது. பழமை மாறாமல் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சுண்ணாம்பு கலவை பூச்சுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

    அந்தந்த அரசுத்துறைகள் சார்பிலும் பழமையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்படி அருங்காட்சியகம் முழுவதும் அரிய வகை பொக்கிஷங்களால் நிரம்பி உள்ளது. அருங்காட்சியத்துக்கு வரும் மாணவ -மாணவிகள் மிகவும் பயன்பெறுவார்கள். பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.

    இது தவிர தஞ்சைக்கு வரும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அருங்காட்சியகத்தை பார்வையிடுவர். இதன் மூலம் தஞ்சை நகரில் பெரிய கோவில், மணிமண்டபம், அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வரிசையில் தற்போது இந்த அருங்காட்சியகமும் இடம்பெற்றுள்ளது.

    இந்த அருங்காட்சியக திறப்பு விழா நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் , மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, தாசில்தார் சக்திவேல், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், டாக்டர்கள் சிங்காரவேலு,ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை வேண்டும்.
    • பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டு உள்ளது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன், தலைமை கொறடா கோவி. செழியன், ஏடுகள் குழு உறுப்பினர்கள் செல்வம் எம்.எல்.ஏ, பொன்னுசாமி எம்.எல்.ஏ, நல்லதம்பி எம்.எல்.ஏ, மாவட்ட துணை கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை கலைத்தட்டு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட கைவினை படைப்புகளை பார்வையிட்டு இன்று பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தை ஆய்வு செய்தோம். ஆவின், எரிசக்தி, பூம்புகார் நிலையம், என அனைத்தையும் ஆய்வு செய்தோம்.

    இதில் ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 88 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு அதில் 57 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு மீதி உள்ள பாலை முனையத்திற்கு அனுப்பப்படுகின்றன.

    பசுக்கள் நல்ல முறையில் பராமரித்து தரமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அருங்காட்சியங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, கைவினை பொருட்களை உற்பத்தி செய்யும் கலைஞர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • கடந்த 2005 ஆம் ஆண்டு திடீரென இந்த பைபிள் மாயமானது. பைபிளை தேடும் பணி நடந்து வந்தது.
    • சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லண்டனுக்கு விரைந்து சென்று மாயமான பைபிள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருங்காட்சியகத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் உள்ளன. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால் என்பவர் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு பைபிள் இந்த அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு திடீரென இந்த பைபிள் மாயமானது. இதையடுத்து பைபிளை தேடும் பணி நடந்து வந்தது.இந்த சூழ்நிலையில் லண்டனில் இந்த புதிய ஏற்பாடு பைபிள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லண்டனுக்கு விரைந்து சென்று மாயமான பைபிள் இருப்பதை உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம் பைபிளை தமிழத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    பைபிள் மீட்கப்பட்ட பிறகு பிறகு தஞ்சைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறித்து சிலை கடத்த தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×