என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bible"

    • தி பிளாக் பைபிள் (சப்டைட்டில்: 22:18), முற்றிலும் புது வகையான திரில்லர் அனுபவத்தை உறுதியளிக்கும்.
    • இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    தமிழ் சினிமா முழுக்க புதுவித திகில் கதைசொல்லும் வழக்கம் தற்போதைய டிரெண்ட் ஆக இருந்து வருகிறது. இந்த வரிசையில் தி பிளாக் பைபிள் (சப்டைட்டில்: 22:18), முற்றிலும் புது வகையான திரில்லர் அனுபவத்தை உறுதியளிக்கும். பேய் படங்கள் என்றாலே "பேய்-சந்திப்பு-பழிவாங்கும்" என அதிகமாகப் பயன்படுத்தப்படும் கதைக்களத்தை தவிர்த்து, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் மர்மம், நாட்டுப்புற மரபு மற்றும் பயம் நிறைந்த ஒரு கதையை கொண்டுவருகிறார்.

    "சுழல் - தி வொர்டெக்ஸ்ட் என்ற இணைய தொடரில் தனது நடிப்பிற்காக மகத்தான வரவேற்பைப் பெற்ற எஃப்.ஜே. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாந்தினி தமிழரசன், ஸ்ரீஜா ரவி, மோனா பெத்ரா மற்றும் அய்ரா பாலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

    இந்தப் படத்தின் டீசர், ஏற்கனவே சினிமா ஆர்வலர்கள் மற்றும் திகில் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ள அஸ்தினாபுரம் என்ற நிழல் கிராமத்தில் இந்தப் படத்தின் கதை நடக்கிறது.

    காலனித்துவ கால மாந்திரீகம் மற்றும் சூனியத்தால் நீண்ட காலமாக சபிக்கப்பட்ட ஒரு நிலத்தின் பிடியிலிருந்து தப்பிக்க துடிக்கும் இரண்டு பெண்கள் அலிஷா மற்றும் அவரது தாயாரைச் சுற்றி கதை சுழல்கிறது. ஆனால் அவர்கள் தப்பி ஓட முயற்சிக்கும்போது, அவர்கள் நினைத்ததை விட ஆழமான, ஆபத்தான ஒரு இடத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அலிஷாவின் காதலன் மட்டுமே அவர்களுடன் நிற்கும் நிலையில், மூவரும் அமைதிக்கு பின் இருக்கும் பயங்கரங்களையும், அதில் இருந்து தப்பிக்க மறுக்கும் சாபத்தையும் எதிர்கொள்ள வேண்டும்.

    தி பிளாக் பைபிள் படத்தை அறிமுக இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை EPS பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு பாலா ஜி ராமசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

    படத்தின் டிரெய்லர், பாடல்கள் மற்றும் உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.

    • பாலிவுட் நடிகை கரீனா கபூர் ப்ரெக்னன்சி பைபிள் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
    • கரீனா கபூர் மலிவான விளம்பரத்திற்காக பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்துள்ளார். கரீனா கபூர் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார்.

    அந்த சமயத்தில் அவர் ப்ரெக்னன்சி பைபிள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில், கர்ப்பத்தின் அனுபவம் குறித்தும், தனது சவால்களைப் பற்றியும் குழந்தையை எதிர்பார்க்கும் அனைத்து தாய்மார்களுக்கும் ஆரோக்கியமாக இருப்பது பற்றியும் அவர் எழுதியுள்ளார்.

    இந்நிலையில், கரீனா கபூர் புத்தகத்தின் தலைப்பில் பைபிள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக கரீனா கபூர் மீதும் புத்தக விற்பனையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், "உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களின் புனித நூலாக பைபிள் உள்ள நிலையில், கரீனா கபூர் தனது கர்ப்பத்தை பைபிள் உடன் ஒப்பிடுவது தவறு என்றும், கரீனா கபூர் மலிவான விளம்பரத்திற்காக பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கரீனா கபூரின் புத்தகத்தின் உடைய தலைப்பில் பைபிள் என ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதை குறித்து கரீனா கபூர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஆண்டனி தனது மனுவில் புத்தக விற்பனைக்கு தடை விதிக்க கோரியதை அடுத்து, புத்தக விற்பனையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2005 ஆம் ஆண்டு திடீரென இந்த பைபிள் மாயமானது. பைபிளை தேடும் பணி நடந்து வந்தது.
    • சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லண்டனுக்கு விரைந்து சென்று மாயமான பைபிள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருங்காட்சியகத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் உள்ளன. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால் என்பவர் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு பைபிள் இந்த அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு திடீரென இந்த பைபிள் மாயமானது. இதையடுத்து பைபிளை தேடும் பணி நடந்து வந்தது.இந்த சூழ்நிலையில் லண்டனில் இந்த புதிய ஏற்பாடு பைபிள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லண்டனுக்கு விரைந்து சென்று மாயமான பைபிள் இருப்பதை உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம் பைபிளை தமிழத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    பைபிள் மீட்கப்பட்ட பிறகு பிறகு தஞ்சைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறித்து சிலை கடத்த தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிளை மத்திய புலனாய்வு போலீசார் நெதர்லாந்தில் மீட்டனர். #CarnegieLibrary #Bible
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் கார்னிஜே என்ற புகழ்பெற்ற நூலகம் உள்ளது. இங்கு பழமைவாய்ந்த புத்தகங்களுடன், பழங்கால அரிய பொக்கிஷங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 1990-ம் ஆண்டு இந்த நூலகத்தில் ஆவண காப்பாளராக பணியாற்றிய ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து 8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.56 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம்) மதிப்புடைய 300-க்கும் மேற்பட்ட அரிய பொக்கிஷங்களை திருடி சென்றனர். இதில் 404 ஆண்டுகள் பழமையான பைபிளும் ஒன்று.

    திருட்டு சம்பவம் நடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்தனர். திருடுபோன அரிய பொக்கிஷங்களை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்தினர்.



    இந்த நிலையில், நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், கார்னிஜே நூலகத்தில் இருந்து திருடப்பட்ட 404 ஆண்டுகள் பழமையான பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 12 ஆயிரம் டாலர் (ரூ.8 லட்சத்து 42 ஆயிரம்) கொடுத்து, அந்த பைபிளை மீட்ட மத்திய புலனாய்வு போலீசார், அதனை கார்னிஜே நூலகத்தில் ஒப்படைத்தனர். #CarnegieLibrary #Bible
    ×