search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு டவுன் பஸ்"

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார்.
    • பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று காங்கயம் செல்ல வந்தது. பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் அருகில் இருந்த கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றனர்.

    அந்த சமயத்தில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த அரசு டவுன் பஸ் மீது கல்லை வீசி எறிந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே இதுகுறித்து தகவல் அறிந்து ஓடி வந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் போதை ஆசாமியை பிடித்தனர். பின்னர் அவ்வழியே ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார். அந்த போதை ஆசாமியையும் பஸ்சில் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த போதை ஆசாமி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பதும், ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது.

    மேலும் நேற்று இரவு பஸ் நிலையத்தில் யாரோ ஒருவரிடம் ஏற்பட்ட தகராறில் அவரது சட்டை கிழிந்துள்ளது. அந்த கோபத்தில் அங்கு நின்ற டவுன் பஸ் மீது கல்லை எறிந்ததாக அவர் தெரிவித்தார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பஸ் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்ட நிலை யிலும் அரசு நகர் பேருந்து 4 ஏ. இயக்கப்படவில்லை.
    • அக்ரஹாரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையுள்ளது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் எச்.அக்ராஹரம், அழகிரிநகர், நெருப்பாண்டகுப்பம், ஆட்டியானூர், தூரணம் பட்டி, மாவேரிப்பட்டி சோரியம்பட்டி வழித்தடத்தில் அரசு நகர் பேருந்து தடம் எண் 4 ஏ. இயக்கப்பட்டது.

    கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அரசு நகர் பேருந்து 4 ஏ. தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    ஆனால், பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்ட நிலை யிலும் அரசு நகர் பேருந்து 4 ஏ. இயக்கப்படவில்லை.

    இதனால், அக்ரஹாரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையுள்ளது.

    எனவே, நிறுத்தப்பட்டுள்ள அரசு நகர் பேருந்து 4 ஏ.வை மீண்டும் இயக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேவராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் செட்டேரி டேம் பகுதியில் இருந்து சந்திரபுரம் வழியாக திருப்பத்தூர் வரை சென்று கொண்டு இருந்த அரசு டவுன் பஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ தேவராஜிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இந்த கோரிக்கை மனுவை ஏற்று எம்எல்ஏ தேவராஜ் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி புதிய அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதைதொடர்ந்து நேற்று நாட்டறம்பள்ளி அருகே சந்திரபுரம் பகுதியில் இருந்து வெலக்கல்நத்தம் செட்டேரி டேம் வரை அரசு டவுன் பஸ் 9A 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் இயக்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதன் பிறகு பஸ்ஸில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கு எம்எல்ஏ தனது சொந்த செலவில் டிக்கெட் பரிசோதகரிடம் பணம் கொடுத்து அனைவருக்கும் துவக்க விழா முன்னிட்டு இலவசமாக அனுப்பி வைத்தார்.

    இந்த அரசு டவுன் பஸ் தினசரி காலை 6 மணியளவில் நாட்டறம்பள்ளி அடுத்த செட்டேரி டேம் பகுதியில் புறப்பட்டு புத்தகரம் சந்திரபுரம் வழியாக திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு 7 மணிக்கு சென்று அடைகிறது.

    மீண்டும் மாலை 6.15 மணியளவில் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் புறப்பட்டு 7.15 மணியளவில் செட்டேரி டேம் சென்று அடைகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து தேவராஜ் எம்.எல்.ஏ.க்கு நன்றி தெரிவித்தனர்.

    விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மற்றும் திருப்பத்தூர் டெப்போ கிளை மேலாளர் மயில்வாகனம் துணை மேலாளர் வணிக ராஜராஜன் கோட்ட மேலாளர் கிருஷ்ணகிரி அரவிந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முருகன் வீட்டுக்கு செல்வதற்காகவிழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன்(வயது 35). இவர் நேற்று மாலை வீட்டுக்கு செல்வதற்காகவிழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பஸ் நிலையத்துக்குள் வந்த அரசு டவுன் பஸ் முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×