search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் பள்ளி மாணவர்கள் கோரிக்கை
    X

    அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் பள்ளி மாணவர்கள் கோரிக்கை

    • பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்ட நிலை யிலும் அரசு நகர் பேருந்து 4 ஏ. இயக்கப்படவில்லை.
    • அக்ரஹாரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையுள்ளது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் எச்.அக்ராஹரம், அழகிரிநகர், நெருப்பாண்டகுப்பம், ஆட்டியானூர், தூரணம் பட்டி, மாவேரிப்பட்டி சோரியம்பட்டி வழித்தடத்தில் அரசு நகர் பேருந்து தடம் எண் 4 ஏ. இயக்கப்பட்டது.

    கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அரசு நகர் பேருந்து 4 ஏ. தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    ஆனால், பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்ட நிலை யிலும் அரசு நகர் பேருந்து 4 ஏ. இயக்கப்படவில்லை.

    இதனால், அக்ரஹாரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையுள்ளது.

    எனவே, நிறுத்தப்பட்டுள்ள அரசு நகர் பேருந்து 4 ஏ.வை மீண்டும் இயக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×