search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாலை"

    • ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்களின் வசதிக்காக அழகியமண்டம், குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

    கன்னியாகுமரி:

    108 வைணவத் திருப்பதி களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆதிகேசவப் பெருமாள் பாம்பணை மீது சயன கோலத்தில் 3 வாயில்கள் வழியாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்

    ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மஹா கும்பாபிஷே கத்துக்குப் பின்னர் நடை பெறும் முதல் வைகுண்ட ஏகாதசி ஆகும். தற்போது கோவிலுக்கு தினமும் வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக உள்ளது.

    இன்று வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் வரிசையில் செல்வ தற்கு வசதியாக கோவில் பிரகாரத்தில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நேற்று இரவு 10 மணியளவில் கோவில் கருவறையின் வெளிப்பகுதி, உள்பகுதி, உதயமார்த்தாண்ட மண்டபம், சபா மண்டபம் ஆகிய இடங்க ளில் மலர்களால் அலங்க ரிக்கப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து அர்ச்சனா மூர்த்தி விக்கி ரகங்கள் கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு கலச பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து 6.30 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கருவறையில் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் காலை 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜை யும் நடைபெற்றது. அதன்பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் 3 வாயில்கள் வழியாக பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் ஆதிகேசவப்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மதியம் 12.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்குத்தான் திறக்கப்படும். இன்று மதியம் 12 மணி முதல் கோவிலில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாலையில் 6 மணிக்கு புஷ்பாபிஷேகம் 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியன நடை பெறுகிறது. தீபாராதனையை தொடர்ந்து கோவில் விளக்கணி மாடத்தில் உள்ள விளக்கு களுக்கு ஒளியேற்றும் லட்சதீப விழா நடக்கிறது. அப்போது கோவில் ஒளிவெள்ளத்தில் ஜொலிப்பதைக்காணலாம். கருட வாகனத்தில் ஆதி கேசவப்பெரு மாளும், கிருஷ்ணசாமியும் கோவில் பிரகாரத்தில் பவனி வருதல் நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசியான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அழகியமண்டம், குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார் தலைமையில் நிர்வாகத்தினரும், பக்தர்க ளும் இணைந்து செய்து உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் தலைமையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 2 பேர் படுகாயம் அடைந்தனர்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே ஆர்சி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 48). அவருடைய நண்பர் அதே பகுதியை சார்ந்த பாஸ்கர்.

    இவர்கள் 2 பேரும் மார்த்தாண்டம் மார்க்கெட் டில் சுமை தூக்கும் தொழி லாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அதிகாலையிலே வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இரு சக்கர வாகனம் திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.பேருந்து திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நண்பர்கள் இருவரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் 2 பேரும் சாலை யில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் படுகா யமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் 2 பேரும் விபத்தில் சிக்கி படுகாய மடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர்
    • அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அதிலும் குறிப்பாக தககலை, நித்திரவிளை, கொற்றிகோடு, களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடவும் அவர் அறிவுறுத்தினார். மேலும் தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டார்.

    இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களிலும் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகன நோதனையும் நடத்தி வருகின்றனர்.

    இன்று அதிகாலை அழகியமண்டபம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 3 பேர் இருந்தனர்.

    அவர்கள், போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாகச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படையினர், மோட்டார் சைக்கிளை விரட்டிச் சென்றனர். சுமார் 1 கி.மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்ற போலீ சார், வெள்ளிகோடு என்ற இடத்தில் 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

    அவர்களை விசாரித்த போது, 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனைத் தொடர்ந்து அவர்களை தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது 3 பேரும் பல்வேறு பகுதிகளிலும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரிய வந்தது.

    இவர்கள், நித்திரவிளை, கொற்றிகோடு, களியக்காவிளை பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு உள்ளனர். அதன் அடிப்படையில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் தட்டாமலையைச் சேர்ந்த மாஹின் (வயது 21), வடக்காவிளை செய்யது அலி (23), முளவன பர்ஜாஸ் (20) என தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

    • 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று களியக்காவிளை சந்திப்பு பகுதியில் லாரியை மடக்கி பிடித்தனர்.
    • 13 டன் ரேசன் அரிசியையும், லாரியையும் போலீசார் பறி முதல் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணெய் கடத்துவது தொடர் நடவடிக்கையாக உள்ளது.

    இதனை தடுக்க தமிழக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக-கேரள எல்லை பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையும் நடத்தி வருகின்றனர். இதில் அவ்வப்போது கடத்தல் அரிசி வாகனங்களுடன் பிடிபட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை களியக்காவிளை அருகே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக் குமரன் தலைமையில் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இட மாக கேரள பதிவெண் கொண்ட லாரி வந்தது.

    அந்த லாரியை நிறுத்து மாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் லாரியை நிறுத்தாமல் டிரைவர் வேக மாக ஓட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து போலீசார் தங்கள் வாகன த்தில் லாரியை விரட்டிச் சென்றனர். சினிமா காட்சி போல லாரியை பின்தொடர்ந்த போலீசார் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று களியக்காவிளை சந்திப்பு பகுதியில் லாரியை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் லாரியை சோதனை செய்த போது அதில் மூடை மூடையாக ரேசன் அரிசி இருந்தது. அதனை கேரளாவுக்கு கடத்துவது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரது பெயர் முத்து சிவன்(வயது46) என்பதும் அழகிய பாண்டியபுரம் பகுதி யை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.தொடர்ந்து லாரியில் இருந்த சுமார் 13 டன் ரேசன் அரிசியையும், லாரியையும் போலீசார் பறி முதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட அரிசி உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கபட்டது.அவர்கள் அரிசி யை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், லாரியை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கால்வாய் கரைகளிலுள்ள மின் இணைப்புகள் சட்ட விரோதமாக துண்டிக்கப்படுகிறது.
    • விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வர முடிவதில்லை.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசியதாவது:-

    உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயிகளுக்கும் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, கால்வாய் கரைகளிலுள்ள மின் இணைப்புகள் சட்ட விரோதமாக துண்டிக்கப்படுகிறது.

    உடுமலை பெரியகோட்டை, சின்னவீரம்பட்டி பகுதிகளில், ஆடு, மாடுகளை மர்ம விலங்குகள் கடித்து வருகிறது. கடந்த, ஒரு மாதத்தில்,நூற்றுக்கணக்கான ஆடுகள் கடித்து குதறப்பட்டு பலியாகியுள்ளன.வனத்துறையினர் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், சுற்றி வருவதாகவும், அவைதான் காரணம் என்கின்றனர். அவற்றை கட்டுப்படுத்தவும், பாதித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    அதிகாலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்த, அரசு பஸ்கள், நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வர முடிவதில்லை.கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்தஅரசு பஸ்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கிராம விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றனர்.  

    ×