search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடர்"

    • ஜெயங்கொண்டம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து ஆடு திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • உடையார்பாளையம் போலீசார் நடவடிக்கை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது 42). கூலி தொழிலாளி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.இவர் சம்பவத்தன்று ஆடுகளை வயல்காட்டுக்கு ஓட்டிச்சென்று மேய்த்துவிட்டு, வழக்கம்போல் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் கட்டிவிட்டு தூங்கச்சென்றார்.அதிகாலையில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த ராணி, உடனடியாக ஆடுகள் கட்டியிருந்த பகுதிக்கு சென்றார்.அப்போது 4 பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் ஆட்டை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த ராணி சத்தம் போட்டுள்ளார். சத்தத்தை கேட்ட அவர்கள் அங்கிருந்து ஒரு ஆட்டை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ராணி புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆட்டை திருடியதாக சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (21), வேணாநல்லூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (22) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தார்.

    • போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர்
    • அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அதிலும் குறிப்பாக தககலை, நித்திரவிளை, கொற்றிகோடு, களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடவும் அவர் அறிவுறுத்தினார். மேலும் தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டார்.

    இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களிலும் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகன நோதனையும் நடத்தி வருகின்றனர்.

    இன்று அதிகாலை அழகியமண்டபம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 3 பேர் இருந்தனர்.

    அவர்கள், போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாகச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படையினர், மோட்டார் சைக்கிளை விரட்டிச் சென்றனர். சுமார் 1 கி.மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்ற போலீ சார், வெள்ளிகோடு என்ற இடத்தில் 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

    அவர்களை விசாரித்த போது, 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனைத் தொடர்ந்து அவர்களை தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது 3 பேரும் பல்வேறு பகுதிகளிலும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரிய வந்தது.

    இவர்கள், நித்திரவிளை, கொற்றிகோடு, களியக்காவிளை பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு உள்ளனர். அதன் அடிப்படையில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் தட்டாமலையைச் சேர்ந்த மாஹின் (வயது 21), வடக்காவிளை செய்யது அலி (23), முளவன பர்ஜாஸ் (20) என தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

    ×