search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடு திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
    X

    ஆடு திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

    • ஜெயங்கொண்டம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து ஆடு திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • உடையார்பாளையம் போலீசார் நடவடிக்கை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது 42). கூலி தொழிலாளி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.இவர் சம்பவத்தன்று ஆடுகளை வயல்காட்டுக்கு ஓட்டிச்சென்று மேய்த்துவிட்டு, வழக்கம்போல் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் கட்டிவிட்டு தூங்கச்சென்றார்.அதிகாலையில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த ராணி, உடனடியாக ஆடுகள் கட்டியிருந்த பகுதிக்கு சென்றார்.அப்போது 4 பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் ஆட்டை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த ராணி சத்தம் போட்டுள்ளார். சத்தத்தை கேட்ட அவர்கள் அங்கிருந்து ஒரு ஆட்டை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ராணி புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆட்டை திருடியதாக சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (21), வேணாநல்லூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (22) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தார்.

    Next Story
    ×