search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அதிகாலை நடை திறப்பு
    X

    சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் காட்சி.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அதிகாலை நடை திறப்பு

    • ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்களின் வசதிக்காக அழகியமண்டம், குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

    கன்னியாகுமரி:

    108 வைணவத் திருப்பதி களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆதிகேசவப் பெருமாள் பாம்பணை மீது சயன கோலத்தில் 3 வாயில்கள் வழியாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்

    ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மஹா கும்பாபிஷே கத்துக்குப் பின்னர் நடை பெறும் முதல் வைகுண்ட ஏகாதசி ஆகும். தற்போது கோவிலுக்கு தினமும் வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக உள்ளது.

    இன்று வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் வரிசையில் செல்வ தற்கு வசதியாக கோவில் பிரகாரத்தில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நேற்று இரவு 10 மணியளவில் கோவில் கருவறையின் வெளிப்பகுதி, உள்பகுதி, உதயமார்த்தாண்ட மண்டபம், சபா மண்டபம் ஆகிய இடங்க ளில் மலர்களால் அலங்க ரிக்கப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து அர்ச்சனா மூர்த்தி விக்கி ரகங்கள் கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு கலச பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து 6.30 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கருவறையில் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் காலை 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜை யும் நடைபெற்றது. அதன்பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் 3 வாயில்கள் வழியாக பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் ஆதிகேசவப்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மதியம் 12.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்குத்தான் திறக்கப்படும். இன்று மதியம் 12 மணி முதல் கோவிலில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாலையில் 6 மணிக்கு புஷ்பாபிஷேகம் 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியன நடை பெறுகிறது. தீபாராதனையை தொடர்ந்து கோவில் விளக்கணி மாடத்தில் உள்ள விளக்கு களுக்கு ஒளியேற்றும் லட்சதீப விழா நடக்கிறது. அப்போது கோவில் ஒளிவெள்ளத்தில் ஜொலிப்பதைக்காணலாம். கருட வாகனத்தில் ஆதி கேசவப்பெரு மாளும், கிருஷ்ணசாமியும் கோவில் பிரகாரத்தில் பவனி வருதல் நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசியான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அழகியமண்டம், குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார் தலைமையில் நிர்வாகத்தினரும், பக்தர்க ளும் இணைந்து செய்து உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் தலைமையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×