search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth suicide"

    • கடந்த சில மாதங்களாக சுரேஷுக்கு வயிற்று வலி இருந்து வந்தது.
    • கடந்த 6-ந் தேதி இரவில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்தார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளம், கீழத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (வயது22). இவர் சென்னையில் ஒரு ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக அவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்று வலி தீரவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 6-ந் தேதி இரவில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.

    இதுபற்றி அவரது தந்தை முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித்குமார் (வயது 30).

    இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டையிங் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஜித்குமாருக்கு தோலம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் நேரில் பார்த்து கொள்ளாமல் செல்போன் மூலம் பேசி பழகி வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மேலும் வாலிபருடன் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறினர்.

    இதனையடுத்து இளம்பெண் தனது காதலனுடன் பேசுவதை தவிர்த்தார். ஆனால் சுஜித்குமார் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். இளம்பெண் போனை எடுக்கவில்லை.

    இந்தநிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி செல்போன் மூலமாக தங்களது மகளுக்கு வாலிபர் தொல்லை கொடுப்பதாக மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். புகாரையடுத்து சுஜித்குமாரை தொடர்பு கொண்ட போலீசார் விசாரணைக்கு நேரில் வருமாறு அழைத்தனர்.

    இதனையடுத்து அவர் கடந்த 3-ந் தேதி பெங்களூரில் இருந்து தனது வீட்டிற்கு வந்தார். போலீசாரின் விசாரணைக்கு பயந்து அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுஜித்குமார் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விஜயகுமார்-அனிதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மன வேதனை அடைந்த விஜயகுமார் திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போரூர்:

    கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனி 5-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது31). கிராபிக் டிசைனராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அனிதா.

    விஜயகுமார்-அனிதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த விஜயகுமார் திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தனியா இருந்த முருகன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லீம் நகரை சேர்ந்தவர் முருகன் (44). தொழிலாளி. இவரது மனைவி குடும்ப தகராறில் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியா இருந்த முருகன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • குடும்ப தகராறு காரணமாக நந்தியம்பாக்கம் அரசுப்பள்ளி வளாகத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 19). இவர் குடும்ப தகராறு காரணமாக நந்தியம்பாக்கம் அரசுப்பள்ளி வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

    • மனமுடைந்த பூபாலன் கடந்த 3-ந்தேதி இரவு அதிக அளவில் மது அருந்தி விட்டு தொட்டியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • பூபாலனின் தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். விவசாயம் செய்து வருகிறார்.

    இவருடைய 2-வது மகன் பூபாலன் (வயது 31). இவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சேத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென திருமணம் நின்று போனது.

    இதனால் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த பூபாலன் கடந்த 3-ந்தேதி இரவு அதிக அளவில் மது அருந்தி விட்டு தொட்டியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 11 மணி அளவில் பூபாலன் அதிக அளவில் வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் இதற்கான காரணத்தை கேட்டுள்ளனர்.

    உடனே பூபாலன் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பூபாலன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பூபாலனின் தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் தேடி லிங்கண்ணாவை பிணமாக மீட்டனர்.
    • தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கரளவாடி தேவி நகரை சேர்ந்தவர் பசுவராஜ் (60). திருமணமாகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தந்தையுடன் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் லிங்கண்ணா (32). கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் லிங்கண்ணாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடிப்பதற்கு தாய் தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் கரளவாடி பஸ் நிறுத்தம் அருகே இரவில் உட்கார்ந்து இருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த லிங்கண்ணா குடிப்பதற்கு மீண்டும் பெற்றோரிடம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.

    பின்னர் லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார். உனது சாப்பாடு எனக்கு தேவை இல்லை. குடிப்பதற்கு பணம் தரவில்லை என்றால் இனிமேல் வீட்டுக்கு வர மாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வீட்டின் பின்பக்கம் உள்ள குளத்தை நோக்கி லிங்கண்ணா வேகமாக ஓடினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகன் பின்னால் வேகமாக ஓடினர். ஆனால் அதற்குள் லிங்கண்ணா குளத்தில் குதித்து விட்டார். இதனால் பதறிய அவரது பெற்றோர் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் லிங்கண்ணா குளத்தில் மூழ்கி இறந்து விட்டார்.

    இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் தேடி லிங்கண்ணாவை பிணமாக மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறந்து போன மணிகண்டனுக்கு, திருச்சியை சேர்ந்த அகோரியான மணிகண்டன் என்பவர் நண்பராக இருந்துள்ளார்.
    • இறந்து போனவரின் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரி பூஜை செய்த சம்பவம் இந்த பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

    சூலூர்:

    சூலூர் அருகே குரும்பபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் 8 வருடங்களுக்கு முன்பு சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனுக்கு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக பணியாற்றும், பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் அவர் தனது மனைவியை பிரிந்து அந்த பெண்ணுடன் வாழ தொடங்கி விட்டார். இது தொடர்பாக மணிகண்டன் மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும், அவர் மனைவியுடன் செல்லாமல், அந்த பெண்ணுடனேயே வாழ்ந்து வந்தார்.

    கடந்த 27-ந் தேதி மணிகண்டனுக்கும், அவருடன் இந்த பெண்ணுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை எரியூட்டுவதற்காக சூலூர் மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே இறந்து போன மணிகண்டனுக்கு, திருச்சியை சேர்ந்த அகோரியான மணிகண்டன் என்பவர் நண்பராக இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மணிகண்டன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்கிருந்து தனது சீடர்களுடன் புறப்பட்டு கோவை சூலூருக்கு வந்தார்.

    பின்னர் மின் மயானத்திற்கு வந்த அவர், இறந்து போன உடலுக்கு மரியாதைகள் செலுத்தி பூஜை செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து இறந்த மணிகண்டன் ஆன்மா சாந்தி அடைய வேண்டி அகோரி அவரது உடல் மீது ஏறி அமர்ந்து தியானம் செய்தார்.இந்த பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்ததும் மணிகண்டன் உடல் எரியூட்டப்பட்டது. இறந்து போனவரின் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரி பூஜை செய்த சம்பவம் இந்த பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

    • அஸ்மா தனது வீடு கிரகப்பிரவேசம் செய்யும்போது விக்னேஷ்சை அழைத்துள்ளார்.
    • அஸ்மா அந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஐவேலி கிராமம், மாவெலிபாளையம் குட்டகாட்டைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு கவுதம், விக்னேஷ் என்ற 2 மகன்களும், காவியா என்ற மகளும் உள்ளனர். கவுதம், காவியா இருவருக்கும் திருமணமாகி விட்டது. இளைய மகன் விக்னேஷ் (25) எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில், விக்னேஷ்க்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து, ஏத்தாப்பூர் உத்தரகாண்டம்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். வருகின்ற 25-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது.

    இந்த நிலையில் விக்னேஷ், சங்ககிரியில் வசிக்கும் திருநங்கையான அஸ்மா என்பவர் வீட்டில் எலெக்ட்ரீசியன் வேலை செய்தபோது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அஸ்மா தனது வீடு கிரகப்பிரவேசம் செய்யும்போது விக்னேஷ்சை அழைத்துள்ளார். அங்கு இருவரும் போட்டோ எடுத்துள்ளனர்.

    அப்போது விக்னேஷ், தனக்கு நிச்சயம் செய்த பெண்ணின் போட்டோவை அஸ்மாவிடம் காட்டியுள்ளார்.

    அதற்கு அஸ்மா, நீ அந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் விக்னேஷின் வீட்டுக்கு வந்து நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளோம், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி டார்ச்சர் செய்ததாக தெரிகிறது. மேலும் விக்னேஷுக்கு நிச்சயமான பெண்ணின் செல்போன் நம்பருக்கு விக்னேஷ் உடன் ஜோடியாக உள்ள போட்டோவை அனுப்பி, நான் தான் விக்னேஷை திருமணம் செய்ய போகிறேன் என கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் விக்னேஷ் வீட்டிற்கு வந்து விக்னேஷ், திருநங்கையுடன் தொடர்பு வைத்திருந்த போட்டோவை காட்டி திருமண நிச்சயத்தை நிறுத்தி விட்டனர்.

    இதனால் மனமுடைந்த விக்னேஷ், தனது உறவினர் வீடான பரமேஸ்வரியின் வீட்டுக்குச் சென்று அவரது வீட்டில் இருந்த சீலிங் பேனில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை கீழே இறக்கி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.

    • அரசு வேலை கிடைக்காததால் விரக்தியில் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் பஜனைமடம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் லோகசுந்தர் (வயது23). இவர் பி.எஸ்.சி. கணிதம் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது அக்கா அரசு வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.

    இதேபோன்று உறவினர்களும் அரசு பணியில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக தானும் அரசு வேலையில் சேரவேண்டும் என்பதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகளும், அரசு வங்கி வேலைக்கான தேர்வுகளும் எழுதி வந்தார். இதற்கான முடிவுகளுக்காக அவர் காத்திருந்தார். ஆனால், முடிவுகள் வருவதில் தாமதமானதால் லோகசுந்தர் மனவிரக்தியில் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நடைபயிற்சிக்காக செல்வதாக கூறிவிட்டு வீட்டை வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன அசோகன் தனது மகனை இரவு முழுவதும் பல இடங்களில் தேடிபார்த்தார். அப்போது அதேபகுதியில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே லோகசுந்தரின் செருப்பு, செல்போன் ஆகியவை கீழே கிடந்தன. இதில் லோகசுந்தர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அசோகன் தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அவர்களால் லோகசுந்தரின் உடலை உடனே மீட்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து தருமபுரி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து சிறிது நேரத்தில் லோகசுந்தரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    அப்போது லோகசுந்தரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் லோகசுந்தரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு வேலைக்காக காத்திருந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கூலி வேலை செய்து வரும் அருண்குமார் தினந்தோறும் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
    • மனமுடைந்த அருண்குமார் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் சோர்வுடன் காணப்பட்டார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் அருண்குமார் தினந்தோறும் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கிட்னி செயல் இழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த அருண்குமார் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் சோர்வுடன் காணப்பட்டார். பின்னர் அவரது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாலூர் போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கரும்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடன் தொல்லையால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.
    • குடியாத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் காட்பாடியை தலைமை இடமாகக் கொண்டு பிரபல தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.

    தமிழகம் முழுவதும் இதில் ஏஜெண்டுகள் மூலம் பணம் வசூலிக்கப்பட்டது. ரூ.ஒரு லட்சத்திற்கு மாதந்தோறும் ரூ.7000 வரை வட்டி தருவதாக நிதி நிறுவனம் அறிவித்தது.

    இதனை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை செலுத்தினர். நிதி நிறுவன அதிபர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் ஏஜெண்டுகள் மற்றும் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 39) என்ஜினியரான இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி இருந்தார்.

    இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்தார்.

    நிதி நிறுவனம் மூடப்பட்ட பிறகு இவருக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பிரசாத்துக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர ஆரம்பித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு பிரசாத் வந்தார்.

    இன்று காலை கடன் தொல்லையால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.

    இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    குடியாத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்வதற்கு முன்பாக பிரசாத் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அதில் நான் தனியார் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி பணம் செலுத்தினேன். நான் பணம் செலுத்திய ஏஜெண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

    கடன் நெருக்கடி காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு தனியார் நிறுவனம் நிதி நிறுவனம் தான் காரணம். இதன் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×