search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை
    X

    அரசு வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

    • அரசு வேலை கிடைக்காததால் விரக்தியில் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் பஜனைமடம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் லோகசுந்தர் (வயது23). இவர் பி.எஸ்.சி. கணிதம் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது அக்கா அரசு வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.

    இதேபோன்று உறவினர்களும் அரசு பணியில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக தானும் அரசு வேலையில் சேரவேண்டும் என்பதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகளும், அரசு வங்கி வேலைக்கான தேர்வுகளும் எழுதி வந்தார். இதற்கான முடிவுகளுக்காக அவர் காத்திருந்தார். ஆனால், முடிவுகள் வருவதில் தாமதமானதால் லோகசுந்தர் மனவிரக்தியில் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நடைபயிற்சிக்காக செல்வதாக கூறிவிட்டு வீட்டை வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன அசோகன் தனது மகனை இரவு முழுவதும் பல இடங்களில் தேடிபார்த்தார். அப்போது அதேபகுதியில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே லோகசுந்தரின் செருப்பு, செல்போன் ஆகியவை கீழே கிடந்தன. இதில் லோகசுந்தர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அசோகன் தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அவர்களால் லோகசுந்தரின் உடலை உடனே மீட்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து தருமபுரி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து சிறிது நேரத்தில் லோகசுந்தரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    அப்போது லோகசுந்தரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் லோகசுந்தரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு வேலைக்காக காத்திருந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×