search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடம்பாக்கத்தில் மனைவியுடன் தகராறு- வாலிபர் தற்கொலை
    X

    கோடம்பாக்கத்தில் மனைவியுடன் தகராறு- வாலிபர் தற்கொலை

    • விஜயகுமார்-அனிதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மன வேதனை அடைந்த விஜயகுமார் திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போரூர்:

    கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனி 5-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது31). கிராபிக் டிசைனராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அனிதா.

    விஜயகுமார்-அனிதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த விஜயகுமார் திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×