search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth dead"

    • கார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சென்று கொண்டு இருந்தது.
    • இரவு முழுவதும் டிரைவர் தூங்காமல் காரை ஓட்டி வந்தார். குமரன்குன்று அருகே வந்தபோது டிரைவர் திடீரென கண் அயர்ந்து விட்டார்.

    மேட்டுப்பாளையம்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மலக்குள்ளி அருகே உள்ள பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவரது மனைவி ரஞ்சனி (30).

    இவர்களது மகன்கள் ஜோசப் ஆப்ரகாம் (8) கேசா சாரல் (6). ராஜேஷின் சகோதரி சித்ரா (27). இவர்கள் 5 பேரும் கோடை விடுமுறையையொட்டி தங்களது காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர். காரை ஓட்டுவதற்கு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பூவேந்திரன் (28) என்பவரை நியமனம் செய்தனர்.

    அதன்படி நேற்று மாலை 6 மணியளவில் பாலூரில் இருந்து காரில் அனைவரும் மகிழ்ச்சியாக ஊட்டிக்கு புறப்பட்டனர். காரை டிரைவர் பூவேந்திரன் ஓட்டி வந்தார். முன் இருக்கையில் ராஜேஷ் அமர்ந்து இருந்தார். அவரது மனைவி, தங்கை மற்றும் மகன்கள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

    கார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சென்று கொண்டு இருந்தது. இரவு முழுவதும் டிரைவர் தூங்காமல் காரை ஓட்டி வந்தார். குமரன்குன்று அருகே வந்தபோது டிரைவர் திடீரென கண் அயர்ந்து விட்டார். இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கண்இமைக்கும் நேரத்தில் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரின் முன் இருக்கையில் இருந்த ராஜேஷ் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    டிரைவர் உள்பட அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காருக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜேஷின் மனைவி ரஞ்சனி, அவரது தங்கை சித்ரா, மகன்கள் ஜோசப் ஆப்ரகாம், கேசா சாரல் மற்றும் டிரைவர் பூவேந்திரன் ஆகியோரை மீட்டனர். பின்னர் 5 பேரையும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 5 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் சிறுமுகை போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். பின்னர் விபத்தில் இறந்த ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை நேரத்தில் சுற்றுலா சென்ற கார் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆம்பூர்:

    சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் நிலேஸ் பாபு (வயது 39). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி அபூர்வா சென்னை தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்று காலை ஏலகிரி மலைக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றார். ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் நெடுஞ்சாலையில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    காரில் பயணம் செய்த நிலேஸ் பாபு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹரிஷ் படுகாயம் அடைந்தார். அபூர்வா லேசான காயமடைந்தார்.

    படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலேஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

    • தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய பிரவீன் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
    • பிரவீன் குமார் உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி அடுத்த மேல் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார்(23). பங்குனி உத்திர திருவிழாவிற்காக அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் பிரவீன்குமாரும் குழுவாக தீர்த்தம் எடுப்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு சாமி கும்பிட்டு காவடி தீர்த்தம் எடுப்பதற்காக அதிகாலை ஈரோடு மாவட்டம் கொடுமுடி வந்துள்ளனர்.

    அப்போது பிரவீன்குமார் தனது நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது பிரவீன்குமார் திடீரென சுழலில் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது. இதை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய பிரவீன் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரவீன்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீன் குமார் உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • செந்தமிழன் சம்பவத்தன்றும் வழக்கம் போல் நிறுவனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • இரும்பு பட்டாக்களை வெல்டிங் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செந்தமிழன் மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த இரட்டை புளியம்மரத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழன் (32). இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த கொள்ளுகாட்டு மேட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வெல்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செந்தமிழன் சம்பவத்தன்றும் வழக்கம் போல் நிறுவனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இரும்பு பட்டாக்களை வெல்டிங் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செந்தமிழன் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செந்தமிழன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் நடனமாடி மயங்கி விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
    • பிப்ரவரி 22-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது 24 வயது போலீசார் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.

    திருப்பதி:

    மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் முத்யம் (வயது 19). இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றார்.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இசை நடனம் என திருமண வரவேற்பு நிகழ்ச்சி களை கட்டியது. இதனால் வாலிபர் முத்யம் கொண்டாட்ட மனநிலையில் இருந்தார்.

    அப்போது விருந்தினர்கள் முன்னிலையில் ஒரு பிரபலமான இசைக்கு நடனமாடினான்.

    இதனை உறவினர்கள் வெகுவாக ரசித்தனர். மேலும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். நடனமாடிக்கொண்டிருந்த போது, முத்யம் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    விருந்தினர்கள் அவரை பைன்சா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    வாலிபர் நடனமாடி மயங்கி விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

    4 நாட்களில் தெலுங்கானாவில் இதுபோன்ற 2-வது சம்பவம் நடந்துள்ளது.

    பிப்ரவரி 22-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது 24 வயது போலீசார் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.

    இந்த சம்பவங்களால் தெலுங்கானாவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • பங்கு சந்தையில் விக்னேஷ் முதலீடு செய்ததாகவும், அதில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் மாயமானதாகவும் கூறப்படுகிறது.
    • விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கூட்செட் உள்ளது. அதன் அருகில் உள்ள ஒரு கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்புத்துறை உதவியுடன் கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர்.

    ஆனால் கிணற்றில் பிணமாக மிதந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனே தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கிணற்றில் பிணமாக கிடந்தவர் நேற்று மாயமான நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் பட்டதாரி ஆசிரியர் அசோகன். இவரது மகன் விக்னேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    மேலும் பங்கு சந்தையில் விக்னேஷ் முதலீடு செய்ததாகவும், அதில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் மாயமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
    • காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள ஆய்க்குடி சேனை விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாடசாமி. இவரது மகன் மணிச்சாமி(வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் இன்று அதிகாலை ஆய்க்குடி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காட்டுப்பன்றி கூட்டங்கள் அவரை விரட்டி சென்று கடித்து குதறி உள்ளது.

    இதில் படுகாயம் அடைந்த மணிச்சாமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்டுப்பன்றி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் தென்காசி மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் கோரிக்கைகள் வைத்து வரும் நிலையில், காட்டுப்பன்றி கடித்து வாலிபர் உயிரிழந்துள்ளார்.

    • அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்ட வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் சந்தீப் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து வெள்ளத்தூவன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 5 பேர் கேரள மாநிலம் மூணாறை சுற்றி பார்க்க வந்தனர். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த பின்னர் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    எல்லக்கல் பகுதியில் உள்ள சுனைமாக்கால் அருவி பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு இயற்கை அழகை கண்டு ரசித்தனர். இதில் சந்தீப் (வயது23) என்ற வாலிபர் அருவியின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளார். அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்ட அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் சந்தீப் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து வெள்ளத்தூவன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
    • இரவில் கழிப்பறைக்கு சென்ற யுகேஷ் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, சடையம் பாளையம், பகவதியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் யுகேஷ் (28). இவருக்கும் கோபியை அடுத்துள்ள பொலவபாளையம் பகுதியை சேர்ந்த கலைவாணி (23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு முன்னரே 2 முறை ஏற்பட்ட வாகன விபத்தில், யுகேஷுக்கு காலிலும், முதுகு தண்டுவடத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.

    இரவில் கழிப்பறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் யுகேஷ் கிடந்துள்ளார்.

    இதையடுத்து, நம்பியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே யுகேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வேன் மீது மோதினார்.
    • தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போரூர்:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது22). மினி வேன் டிரைவர். இவர் நேற்று இரவு வேனில் மரசாமான்கள் ஏற்றிக் கொண்டு புழல் பகுதியில் இருந்து பைபாஸ் சாலை வழியாக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    மதுரவாயல் அருகே வந்தபோது வேனை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வேன் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மினி வேன் டிரைவர் சந்துருவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • செல்வமணி இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது.
    • செல்வமணி கட்டிடத்தின் 3-வது தளத்துக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்றார்.

    பொன்னேரி:

    சென்னை, கானத்தூர் அடுத்த உத்தரண்டி ஜிகு கடற்கரை சாலையில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    இங்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வமணி (வயது 23) என்பவர் அங்கேயே தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் செல்வமணி இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர் கட்டிடத்தின் 3-வது தளத்துக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்றார். அப்போது செல்வமணி செல்போனில் பேசியபடி சென்றதாக தெரிகிறது. திடீரென நிலைதடுமாறிய அவர் 3-வது மாடியில் இருந்து லிப்ட் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காலி இடத்தில் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த செல்வமணி உயிருக்கு போராடினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • வேட்டைக்கு சென்ற வாலிபர், வேட்டை நாய்களுடன் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தோட்டத்து உரிமையாளரான அசோக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் வேட்டை நாய்களும் வளர்த்து வந்தார். அதனை வைத்து காட்டு பகுதிக்கு சென்று வேட்டையாடுவதிலும் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாணிக்கம் தன்னுடைய 5 வேட்டை நாய்களை அழைத்து கொண்டு அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யன கவுண்டன்பட்டி கிராமத்தில் இருக்கும் காட்டு பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றுள்ளார்.

    அந்த இடத்தில் அய்யன கவுண்டன்பட்டியை சேர்ந்தவர்களின் தோட்டங்கள் இருக்கிறது. அசோக்குமார் என்பவர் தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் சம்பங்கி பூக்கள் பயிரிட்டிருந்தார். அதனுள் வன விலங்குகள் எதுவும் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக சம்பங்கி பூக்கள் பயிரிடப்பட்டிருந்த இடத்தை சுற்றி மட்டும் மின்வேலி அமைத்திருக்கிறார்.

    சாதாரணமாக பார்த்தால் உடனடியாக தெரியாத வகையில் மின்வேலி மிகவும் மெல்லிய கம்பியை பயன்படுத்தி சிறிதாக அமைக்கப்பட்டிருந்தது. இதனை அறியாத மாணிக்கம், அசோக்குமாரின் தோட்டத்து வழியாக நள்ளிரவில் சென்றிருக்கிறார்.

    அப்போது அவரது கால் மின்வேலியில் பட்டுவிட்டது. இதனால் மாணிக்கம் மீதும், அவர் அழைத்து சென்ற வேட்டை நாய்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் மாணிக்கம் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அவரது வேட்டை நாய்களும் மின்சாரம் பாய்ந்து பலியாகின.

    மாணிக்கம் மற்றும் அவரது வேட்டை நாய்கள் இறந்து கிடப்பதை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து தோட்டத்து உரிமையாளரான அசோக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×