என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொங்கல் பண்டிகை கொண்டாட மாமியார் வீட்டிற்கு சென்ற வாலிபர் திடீர் மரணம்
- பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
- இரவில் கழிப்பறைக்கு சென்ற யுகேஷ் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது.
ஈரோடு:
ஈரோடு, சடையம் பாளையம், பகவதியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் யுகேஷ் (28). இவருக்கும் கோபியை அடுத்துள்ள பொலவபாளையம் பகுதியை சேர்ந்த கலைவாணி (23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு முன்னரே 2 முறை ஏற்பட்ட வாகன விபத்தில், யுகேஷுக்கு காலிலும், முதுகு தண்டுவடத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
இரவில் கழிப்பறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் யுகேஷ் கிடந்துள்ளார்.
இதையடுத்து, நம்பியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே யுகேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்