search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரவாயல் விபத்து"

    • விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர்.
    • விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பூந்தமல்லியில் இருந்து பூக்கள் ஏற்றிய மினி வேன் ஒன்று கோயம்பேடு மார்க்கெட் நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

    காலை 6 மணி அளவில் மதுரவாயல் பைபாஸ் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது போகிப்பண்டிகையை முன்னிட்டு எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் கடும் புகை மூட்டம் மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக சாலையே தெரியாத அளவுக்கு காணப்பட்டது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையில் கிடந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இதில் மினி வேனில் இருந்த பூக்கள் அனைத்தும் சாலையில் கொட்டி சிதறியது.

    இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் சென்ற மற்ற வாகனங்கள் மீது வேன் மோதாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரவாயல் சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
    • குண்டும் குழியுமான சாலையால் பெண் என்ஜீனியர் பலியாகி விட்டார்.

    பூந்தமல்லி:

    போரூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகள் ஷோபனா (வயது22). கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி ஹரீஸ். முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் நொளம்பூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஏற்கனவே பெய்த மழை காரணமாக சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்தது.

    இந்த நிலையில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறிய ஷோபனாவின் மோட்டார் சைக்கிள் அருகில் சென்ற வேன் மீது உரசியது. இதில் அவர் தம்பியுடன் சேர்ந்து மோட்டார்சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.

    அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த மணல் லாரியின் சக்கரத்தில் ஷோபனா சிக்கிக்கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஷோபனா பரிதாபமாக இறந்தார்.

    மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்தபோது எதிர்ப்புறம் விழுந்ததால் ஷோபனாவின் தம்பி ஹரீஸ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் பலியான அக்காளின் உடலை கண்டு கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் பலியான ஷோபனாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக போரூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    மாணவர் ஹரீஸ் நீட் தேர்வுக்காக பள்ளியிலேயே நடக்கும் சிறப்பு வகுப்பில் படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு செல்ல தாமதமானதால் அவர் அக்காள் ஷோபனாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். குண்டும் குழியுமான சாலை ஷோபனாவின் உயிரை காவு வாங்கிவிட்டது.

    மதுரவாயல் சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் குண்டும் குழியுமான சாலையால் பெண் என்ஜீனியர் பலியாகி விட்டார். இதைத்தொடர்ந்து இன்று காலை அப்பகுதியில் உள்ள சாலையில் பள்ளங்களை மணல், ஜல்லிகள் கொட்டி சீரமைக்கப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வேன் மீது மோதினார்.
    • தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போரூர்:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது22). மினி வேன் டிரைவர். இவர் நேற்று இரவு வேனில் மரசாமான்கள் ஏற்றிக் கொண்டு புழல் பகுதியில் இருந்து பைபாஸ் சாலை வழியாக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    மதுரவாயல் அருகே வந்தபோது வேனை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வேன் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மினி வேன் டிரைவர் சந்துருவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் வந்தபோது அங்கிருந்த வேகத்தடை மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வேகமாக ஏறி இறங்கியது.
    • நிலை தடுமாறிய கண்ணன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வைரவன். இவரது மகன் கண்ணன் (வயது 25) கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நள்ளிரவு 1.30மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் வந்தபோது அங்கிருந்த வேகத்தடை மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வேகமாக ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறிய கண்ணன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.

    இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×