search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman suicide"

    • கள்ளக்காதல் கசந்ததால் சவுடேஸ்வரி தனது வீட்டிற்கும் செல்ல முடியாமல், வாழ பிடிக்காமல் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • இதனால் சவுடேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 35). ஜே.சி.பி. டிரைவர்.

    இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் முத்துப்பாண்டிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான சவுடேஸ்வரி (வயது 30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் சவுடேஸ்வரியின் வீட்டுக்கு தெரிய வரவே அங்கு தகராறு ஏற்பட்டது. இது குறித்து சவுடேஸ்வரி முத்துப்பாண்டியிடம் தெரிவித்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நெகமத்துக்கு வந்தனர்.

    பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். முத்துப்பாண்டி காக்கடவில் உள்ள கயிறு மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதற்காக 2 பேரும் மில்லில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தனர்.

    சம்பவத்தன்று மில் உரிமையாளர் முத்துப்பாண்டிக்கு தொடர்பு கொண்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவர் குடியிருப்புக்கு சென்று பார்த்த போது சவுடேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சவுடேஸ்வரி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு ஓடி வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த படி முத்துப்பாண்டி வாழ்க்கையை கொடுக்கவில்லை. இதனால் அவரது கள்ளக்காதல் 10 மாத்தில் கசந்தது. இதன் காரணமாக சவுடேஸ்வரி தனது வீட்டிற்கும் செல்ல முடியாமல், இங்கும் வாழ பிடிக்காமல் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார்.
    • பவானி ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்து அவரது கணவர் பாக்யராஜ் மற்றும் பெற்றோர் கண்டித்தனர். ஆனால் அவர்களது பேச்சை பவானி கேட்கவில்லை.

    திருவொற்றியூர்:

    சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (32). இவரது மனைவி பவானி (29).

    இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் மெக்காட்டிக் பேரஸ், ஒரு வயதில் நோயல் கிறிஸ் ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

    பாக்யராஜ் கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    திருமணத்துக்குப் பிறகு மண வாழ்க்கை பவானிக்கு இனிமையானதாகவே இருந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக ஈடுபட்டார்.

    பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார்.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக வரும் விளம்பரங்கள் அவருக்கு அதில் மேலும் ஆர்வத்தை தூண்டியது. இதனால் பல்வேறு வழிகளிலும் பணத்தை தயார் செய்து பவானி ரம்மி விளையாட்டில் மூழ்கினார். இதில் அவருக்கு பண இழப்பு ஏற்பட்டது.

    ஆனால் பவானி ரம்மி விளையாட்டுக்கு முழுமையாக அடிமையானதால் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை.

    பவானி ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்து அவரது கணவர் பாக்யராஜ் மற்றும் பெற்றோர் கண்டித்தனர். ஆனால் அவர்களது பேச்சை பவானி கேட்கவில்லை. பவானிக்கு 2 தங்ககைகள் உள்ளனர். முதல் தங்கை பாரதி எண்ணுரிலும், 2-வது தங்கை கவிதா பெரியபாளையத்திலும் வசித்து வருகிறார்கள்.

    இருவரிடமும் தலா ரூ.1½ லட்சம் பணத்தை பவானி வாங்கியுள்ளார். இந்த ரூ.3 லட்சம் பணத்தையும் தனது வங்கி கணக்கில் செலுத்தி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அவர் ஈடுபட்டார். தங்கை பாரதியிடம் கடந்த 6 மாதத்துக்கு முன்பும், தங்கை கவிதாவிடம் 4 மாதத்துக்கு முன்பும் பவானி பணத்தை வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு மொத்தமாக பணத்தை இழந்துள்ளார்.

    வீட்டில் இருந்த தனது 20 பவுன் நகைகளை விற்று வங்கி கணக்கில் செலுத்தியும் பவானி ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த நகைகளை விற்ற பணம் லட்சக்கணக்கில் இருந்துள்ளது. இவை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ரம்மி விளையாட்டில் செலுத்தி பணத்தை இழந்துள்ளார். இப்படி ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலமாக ரூ.20 லட்சத்துக்கும் மேல் பவானி பணத்தை பறி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு தங்கை பாரதியிடம் முறையிட்ட பவானி மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.

    அப்போது அவர் பவானிக்கு ஆறுதல் கூறியதுடன் இதற்கு மேல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடாதே என்று அறிவுரை கூறி இருக்கிறார்.

    இருப்பினும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பவானி மிகுந்த மன உளைச்சலிலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பவானி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இரவு 8.30 மணி அளவில் குளித்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்ற பவானி, நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கணவர் பாக்யராஜ் அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு பவானி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ், பவானியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பவானி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை கேட்டு பவானியின் கணவர் பாக்யராஜ் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு பவானியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் குடும்ப தலைவியாக இருந்த 2 குழந்தைகளின் தாய் இளம் வயதிலேயே லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட பவானி பி.எஸ்.சி. கணிதம் பட்ட படிப்பை முடித்துள்ளார். ஆன்லைனில் ரம்மி போன்று மேலும் பல விளையாட்டுகளும் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன.

    இது போன்ற விளையாட்டுகளில் படித்த இளைஞர்கள் பலரே பணம் கட்டி விளையாடி வருகிறார்கள். தொடக்கத்தில் விளையாட்டாகவே தெரியும். இந்த ஆன்லைன் விளையாட்டு போகப்போக அடிமையாக்கி அதில் மூழ்க செய்து விடும் ஆபத்தானதாகும்.

    இதனை கருத்தில் கொண்டுதான் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டுவருகிறது.

    இந்த நிலையில்தான் 2 குழந்தைகளின் தாய் ஆன்லைன் விளையாட்டுக்கு பலியாகி இருக்கிறார். இதனால் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது.

    குடவாசல் அருகே செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    குடவாசலை அடுத்த புளிச்சகாடியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் கங்கா (வயது 24). இவர் அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை பாஸ்கரன் கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த கங்கா வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அமெரிக்காவில் 19 வயதான இளம்பெண் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். #USSuicide
    புளோரிடா:

    அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பார்க்லாந்தை சேர்ந்தவர் சிட்னி அயல்லோ (19). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தார். வீட்டில் இருந்த அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடந்த ஆண்டு இவர் படித்த பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். அதில் இவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதிலிருந்து மனஅழுத்தத்தில் இருந்து வந்தார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என அவரது தாயார் கேரா தெரிவித்துள்ளார். #USSuicide
    கோவை அருகே கணவர் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் மனவேதனையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கார்த்திகேயன் குடி போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த தீபா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தீபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 5 வருடத்தில் தீபா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
    திருப்பத்தூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள கந்திலியை சேர்ந்தவர் பஸ்வராஜ். இவரது மனைவி சுமித்ரா (வயது 25). இந்த தம்பதிக்கு 1 மகன். 1மகள் உள்ளனர்.

    இந்நிலையில் பஸ்வராஜ் சுமித்ராவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்றும் அவரது தாய் வீட்டில் பணம் வாங்கி வருமாறு தகராறு செய்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த சுமித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த கந்திலி போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சுமித்ராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் செய்தனர்.

    திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாட்டி இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு இரு மகள்கள் இருந்தனர். அவர் இறந்துவிட்டதால் 2-வது திருமணம் செய்துள்ளார்.

    அதில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. மற்றொரு மகள் மதுமிதா (வயது 20). சிறுவயதில் இருந்தே பாட்டி வீட்டில் வளர்ந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக நாமக்கல்லில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். தந்தை 2-வது திருமணம் செய்ததால் ஊருக்கு வரும்போது கூட, தந்தை வீட்டிற்கு செல்வதில்லையாம்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது பாட்டி உயிரிழந்தார். இறுதி சடங்கிற்காக ஊர் திரும்பிய மதுமிதா, அம்பேக்கர் நகரில் உள்ள சித்தி சுந்தரி வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையே அவருக்கு உறவினர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

    தந்தை 2-வது திருமணத்தால் விரக்தியில் இருந்த மதுமிதா, ஆதரவாக இருந்த பாட்டியும் இறந்ததால் மேலும் கவலை கொண்டுள்ளார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் மதுமிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலத்தில் திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது26). சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஐ.டி.கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    தாரமங்கலத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 26). அழகு கலை படித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அம்மாப்பேட்டை காமராஜர் காலனி பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தற்போது வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த அப்பார்ட்மெண்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ரஞ்சிதா இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதியினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    அப்போது ரஞ்சிதா 3 மாத கர்ப்பிணியாக இருந்ததும், சில நாட்களுக்கு முன்பு அபார்‌ஷன் ஆனதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த ரஞ்சிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். திருமணம் ஆகி 4 மாதமே ஆவதால் அருண்குமார் மற்றும் ரஞ்சிதா உறவினர்களிடமும் அந்த பகுதியிலும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார்.
    வாசுதேவநல்லூர் அருகே பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இளம்பெண்ணை அவதூறாக பேசியதால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி இனிதா (வயது28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ளது. சுரேஷ் விவசாயம் செய்து வருகிறார். இனிதா தனது வீட்டருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கடை அருகே உள்ள பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இனிதாவிடம் தகராறு செய்தார். அப்போது அவரை அவதூறாக பேசி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த இனிதா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி வாசுதேவநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து இனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    பொள்ளாச்சி கோட்டூர் அருகே அவால் சின்னம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத் குமார். இவரது மனைவி தாரணி (வயது 30). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    அதன் பின்னர் சம்பத் குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை தாரணி பிரிந்தார்.

    இதனையடுத்து தாரணிக்கு அவரது உறவினர் ஒருவர் அவால் சின்னம் பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தார். அங்கு தாரணி தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் தாரணிக்கு வீட்டின் அருகே வசித்து வந்த சோமசுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அவரது உறவினர் கண்டித்தார்.

    நேற்று மதியம் உறவினர் தாரணியின் வீட்டுக்கு சென்றார். அப்போது தாரணியின் செல்போனை எடுத்து பார்த்தார். அதில் தாரணி சோமசுந்தரத்தக்கு அனுப்பிய மெசேஜ் இருந்தது. இதில் கால் மீ ப்ளீஸ், நீ கால் பன்னலனா நாளைக்கு மார்னிங் நான் இருக்க மாட்டன் ஐயாம் இன் டெத் என்று இருந்தது.

    உடனடியாக உறவினர் செல்போனை எடுத்துக்கொண்டு சோமசுந்தரம் வீட்டுக்கு சென்றார். வீட்டில் அவர் தூங்கிக் கொண்டு இருந்தார். பின்னர் தாரணி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

    அப்போது வீட்டில் உள்ள அறையில் தாரணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இந்த தகவல் கிடைத்ததும் கோட்டூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தாரணியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 வருடத்தில் தாரணி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்து வருகிறது.
    மார்த்தாண்டம் அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    திண்டுக்கல் மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி திவ்யா(வயது19). இவர்களுக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

    தற்போது அவர்கள் மார்த்தாண்டத்தை அடுத்த வெட்டுமணி நல்லூரில் வசித்து வந்தனர். திவ்யாவுக்கு திடீரென உடல்நலம் குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருந்தாலும் அவருக்கு நோய் குணமாகவில்லை. சம்பவத்தன்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மன வருத்தத்துடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், டி.எஸ்.பி. கார்திகேயன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அங்கு பிணமாக கிடந்த திவ்யாவின் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 4 மாதத்தில் திவ்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது.

    மார்த்தாண்டம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருங்கல்லையடுத்த மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்(வயது38). இவர் நேற்று வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தா.பேட்டை அருகே விட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அடுத்த வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவர் தனியார் ஜவுளிகடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த இந்துமதியை (21) கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 மாத பெண்குழந்தை உள்ளது. 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்துமதி தனது தந்தை வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுமருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    மேலும் இந்து மதிக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களுக்குள் தற்கொலை செய்து கொண்டதால் முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை மேற்கொண்டுள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×