search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupattur Suicide"

    நாட்டறம்பள்ளி அருகே வாழ்க்கையில் வெறுப்படைந்த தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த சொக்கலாம்பட்டி மூக்கனூர் வட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55). பீடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சீதா. சபரி, மணி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந் நிலையில் சீதாவுக்கு உடல் நிலைகுறைவு ஏற்பட்டுள்ளது.

    இதனால் சக்திவேல் மதுபோதைக்கு அடிமையாகி அதிகளவில் மது குடித்து வந்தார். இந்நிலையில் சக்திவேல் வாழ்க்கையில் வெறுப்படைந்து கடந்த 17-ந்தேதி தன் வீட்டுக்குப் பின்புறம் விவசாய நிலத்தில் கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

    உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று சக்திவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள கந்திலியை சேர்ந்தவர் பஸ்வராஜ். இவரது மனைவி சுமித்ரா (வயது 25). இந்த தம்பதிக்கு 1 மகன். 1மகள் உள்ளனர்.

    இந்நிலையில் பஸ்வராஜ் சுமித்ராவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்றும் அவரது தாய் வீட்டில் பணம் வாங்கி வருமாறு தகராறு செய்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த சுமித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த கந்திலி போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சுமித்ராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் செய்தனர்.

    திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
    ×