என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்11 Feb 2019 10:37 AM GMT (Updated: 11 Feb 2019 10:37 AM GMT)
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:
பொள்ளாச்சி கோட்டூர் அருகே அவால் சின்னம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத் குமார். இவரது மனைவி தாரணி (வயது 30). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அதன் பின்னர் சம்பத் குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை தாரணி பிரிந்தார்.
இதனையடுத்து தாரணிக்கு அவரது உறவினர் ஒருவர் அவால் சின்னம் பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தார். அங்கு தாரணி தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் தாரணிக்கு வீட்டின் அருகே வசித்து வந்த சோமசுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அவரது உறவினர் கண்டித்தார்.
நேற்று மதியம் உறவினர் தாரணியின் வீட்டுக்கு சென்றார். அப்போது தாரணியின் செல்போனை எடுத்து பார்த்தார். அதில் தாரணி சோமசுந்தரத்தக்கு அனுப்பிய மெசேஜ் இருந்தது. இதில் கால் மீ ப்ளீஸ், நீ கால் பன்னலனா நாளைக்கு மார்னிங் நான் இருக்க மாட்டன் ஐயாம் இன் டெத் என்று இருந்தது.
உடனடியாக உறவினர் செல்போனை எடுத்துக்கொண்டு சோமசுந்தரம் வீட்டுக்கு சென்றார். வீட்டில் அவர் தூங்கிக் கொண்டு இருந்தார். பின்னர் தாரணி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அப்போது வீட்டில் உள்ள அறையில் தாரணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இந்த தகவல் கிடைத்ததும் கோட்டூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தாரணியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 வருடத்தில் தாரணி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்து வருகிறது.
பொள்ளாச்சி கோட்டூர் அருகே அவால் சின்னம்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத் குமார். இவரது மனைவி தாரணி (வயது 30). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அதன் பின்னர் சம்பத் குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை தாரணி பிரிந்தார்.
இதனையடுத்து தாரணிக்கு அவரது உறவினர் ஒருவர் அவால் சின்னம் பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தார். அங்கு தாரணி தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் தாரணிக்கு வீட்டின் அருகே வசித்து வந்த சோமசுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அவரது உறவினர் கண்டித்தார்.
நேற்று மதியம் உறவினர் தாரணியின் வீட்டுக்கு சென்றார். அப்போது தாரணியின் செல்போனை எடுத்து பார்த்தார். அதில் தாரணி சோமசுந்தரத்தக்கு அனுப்பிய மெசேஜ் இருந்தது. இதில் கால் மீ ப்ளீஸ், நீ கால் பன்னலனா நாளைக்கு மார்னிங் நான் இருக்க மாட்டன் ஐயாம் இன் டெத் என்று இருந்தது.
உடனடியாக உறவினர் செல்போனை எடுத்துக்கொண்டு சோமசுந்தரம் வீட்டுக்கு சென்றார். வீட்டில் அவர் தூங்கிக் கொண்டு இருந்தார். பின்னர் தாரணி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அப்போது வீட்டில் உள்ள அறையில் தாரணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இந்த தகவல் கிடைத்ததும் கோட்டூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தாரணியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 வருடத்தில் தாரணி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X