search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker murder"

    • பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் காலில் வெட்டி உள்ளார்.
    • சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் பெரிய மாரியப்பன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரிய மாரியப்பன் (வயது 55). கட்டிட தொழிலாளி . அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). பெயிண்டர்.

    இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் விஜயாபுரி சமுதாயக்கூடம் அருகே மது அருந்தி உள்ளனர்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் காலில் வெட்டி உள்ளார்.

    சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் பெரிய மாரியப்பன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பெரிய மாரியப்பன் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரிய மாரியப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காலில் வெட்டுக்காயங்களுடன் அப்பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் மணிகண்டனை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாலாட்டின் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமது பாசில் தங்கி இருந்த பிளாட்பாரத்தில் அருகே கேரளாவை சேர்ந்த ரமேஷ் என்பவரும் தங்கி இருந்தார்.
    • ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கேரளாவை சேர்ந்தவர் முகமது பாசில்(வயது28).

    இவர் தனது மனைவியுடன் துடியலூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் தங்கி பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை சேகரிக்கும் தொழில் செய்து வந்தார்.

    தினமும் இருவரும், அந்த பகுதி முழுவதும் ஒன்றாக சேர்ந்து குப்பைகளை சேகரித்து, அதனை விற்று, அதில் வரும் பணத்தை கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

    முகமது பாசில் தங்கி இருந்த பிளாட்பாரத்தில் அருகே கேரளாவை சேர்ந்த ரமேஷ்(51) என்பவரும் தங்கி இருந்தார். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டது.

    2 பேரும் நண்பர்களாக பழகினர். இதையடுத்து 2 பேரும் ஒன்றாக வேலை செய்ய ஆரம்பித்தனர். 2 பேருக்குமே மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் 2 பேரும் பணி முடிந்ததும் சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும் 2 பேரும் ஒரின சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது.

    நேற்றும் வழக்கம் போல் 2 பேரும் தங்கள் வேலையை முடித்து விட்டு ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தனர். மதுகுடித்த பின்னர் தூங்க சென்றனர். அப்போது முகமது பாசில், ரமேசை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.

    ஆனால் ரமேஷ் வர மறுத்தார். மேலும் உனது ஆடையை களைந்து இருக்குமாறு கூறியதால் ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர் முகமது பாசிலின் மீது கடும் கோபம் கொண்டார். அவரை கொல்ல முடிவு செய்தார்.

    அதன்படி முகமது பாசில் தூங்கியதும், சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது முகமது பாசில் இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியாகினர்.

    உடனடியாக சம்பவம் குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், ஒரின சேர்க்கைக்கு அழைத்ததால் ரமேஷ், முகமது பாசிலை கல்லை போட்டு கொன்றது போலீசின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரமேசை தேடி வந்தனர். இந்த நிலையில் ரமேஷ் துடியலூர் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 21-ந் தேதி மணிகண்டனின் அக்கா தங்கமாரியை அவரது கணவர் தாக்கியதாக தெரிகிறது.
    • மணிகண்டன் குடிபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை இடையர்பாளையம் கோவில்மேட்டை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி வேலம்மாள்(வயது60).

    இவர்களுக்கு மணிகண்டன்(23) என்ற மகனும், தங்கமாரி, செல்வி என 2 மகள்களும் உள்ளனர்.

    மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. தங்கமாரி தனது கணவர் அய்யப்பனுடன் வேலாண்டிபாளையம் சின்ன அண்ணன் செட்டியார் வீதியிலும், செல்வி தனது கணவர் பாலசுப்பிரமணியத்துடன் இடையர்பாளையத்திலும் வசித்து வருகின்றனர்.

    செல்லையா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து வேலம்மாள் தனது மகன் மணிகண்டனுடன் தனியாக வசித்து வந்தார். மணிகண்டன் தச்சு வேலை செய்து வந்தார்.

    மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து, வீட்டில் தகராறில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 21-ந் தேதி மணிகண்டனின் அக்கா தங்கமாரியை அவரது கணவர் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து மணிகண்டன் குடிபோதையில் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து தனது சகோதரர் குடித்து விட்டு வந்து தகராறு செய்வதாக தங்கமாரி சகோதரி செல்வியிடம் கூறி வேதனைபட்டார்.

    அப்போது செல்வியின் கணவர் பாலசுப்பிரமணியம், இவர்களை தொடர்பு கொண்டு உங்கள் சகோதரருக்கு வேலையே கிடையாது. எப்போது பார்த்தாலும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து வருகிறார் என கேட்டார். அதற்கு அவர்கள், பாலசுப்பிரமணியத்தை திட்டியுள்ளனர்.

    இதனால் பாலசுப்பிரமணியத்திற்கு, மணிகண்டன் மீது கோபம் உண்டானது. நேற்று இரவு பாலசுப்பிரமணியம் குடிபோதையில் மணிகண்டனின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார்.

    இதையடுத்து அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு நெற்றி, மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஆத்திரம் தீராத பாலசுப்பிரமணியம் இரும்பு கம்பியால் மேலும் அடித்தார்.

    இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து பாலசுப்பிரமணியம் அங்கிருந்து திருவள்ளுவர் நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    அங்கிருந்து தனது மனைவியை தொடர்பு கொண்டு, உனது தம்பி உயிருடன் இருக்கிறானா? என்று போய் பார்த்து கொள் என்று கூறினார்.

    இதை கேட்டு பதறிப்போன அவர் தனது தாயுடன் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது மணிகண்டன் அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மகனின் உடலை பார்த்து வேலம்மாள் கதறி அழுதார்.

    இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி.நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவரபாளையம் பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் கந்தசாமி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
    • பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    பல்லடம்:

    திருச்சி கருவம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 56). இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் முனீஸ்வரன், விக்னேஸ்வரன், சிவகாந்த பிரியதர்ஷினி ஆகிய 2மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவி சிவகாமி இறந்துவிட்டதால் தனது மகன்களுடன் திருப்பூர் பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் தனது சகோதரி ரேணுகா வீட்டில் குடியிருந்து கொண்டு கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு கந்தசாமி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் திரும்பி வரவில்லை. இது குறித்து திருச்சியில் உள்ள உறவினர்களிடம் ரேணுகா மற்றும் குடும்பத்தினர் விசாரித்த போது கந்தசாமி அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

    இந்தநிலையில் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவரபாளையம் பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் கந்தசாமி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    கந்தசாமியுடன் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது ஒருவர் மட்டும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது அவர் கந்தசாமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் கரண் (22) என்பதும் கந்தசாமியுடன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    கந்தசாமி சொந்த ஊருக்கு சென்று பணம் கொண்டு வந்ததை தெரிந்த கரண், தனது கள்ளக்காதலி பழனி அருகே உள்ள புதிய ஆயக்குடியை சேர்ந்த சசிகலா (34) என்பவருடன் சேர்ந்து கந்தசாமியை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கந்தசாமி வைத்திருந்த ரூ.10ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு உடலில் பாறாங்கல்லை கட்டி கிணற்றில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். போலீசார் விசாரணையில் கரண், சசிகலா சிக்கிக்கொண்டனர். ரூ.10ஆயிரம் பணத்திற்காக தொழிலாளியை கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கைகாட்டி அருகே உள்ளது கீழ விளாங்குடி கிராமம். இந்த ஊரைச்சேர்ந்தவர் அறிவழகன் (வயது 48). கூலித்தொழிலாளியான இவர் மரம் வெட்டும் வேலைக்கு செல்வார்.

    இவர் தினமும் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது வழியில் மது அருந்தி விட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    பக்கத்து ஊரான ஆதிச்சநல்லூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (50). இவர் மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். மதுவுக்கு அடிமையான இவரும் அறிவழகன் மது அருந்தும் டாஸ்மாக் கடைக்கு வருவது வழக்கம்.

    அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகினர். அப்போது முதல் இருவரும் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு அறிவழகன், வெங்கடாசலம் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவரின் குடும்ப விஷயங்களை பகிர்ந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் மது போதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஒன்றாக புறப்பட்டனர். மணல் மேடான பகுதிக்கு சென்றபோது மீண்டும் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அறிவழகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெங்கடாசலத்தை சரமாரியாக வெட்டினார்.

    இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் அவரது உடலை அப்பகுதியில் உள்ள கருப்பு கோவில் அருகே குழி தோண்டி புதைத்த அறிவழகன் மண்ணால் மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    ஆனாலும் மதுபோதை குறையாத அறிவழகன் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை உளறிக் கொட்டியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையில், விரைந்து சென்ற கயர்லாபாத் போலீசார் தாசில்தார் கண்ணன், வி.ஏ.ஓ. ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கொலை செய்து புதைக்கப்பட்ட வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.
    • செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.

    இவருக்கு மாரியம்மாள் (48) என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் மணி மகன் ராஜா (27).

    இவரை செல்லையாவின் மகன் மாரியப்பன் கிண்டல் செய்துள்ளார். இது சம்பந்தமாக மாரிய ப்பனுக்கும், ராஜாவிற்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறினார்.

    சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் செல்லையாவை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுபற்றி நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொ டுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி ராஜாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது, என்னை மாரியப்பன் கிண்டல் செய்தது தொடர்பாக செல்லையாவிடம் தட்டி கேட்டேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கம்பால் தாக்கினேன். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறி உள்ளார். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    • டாக்டர்கள் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பார்த்தனர்.
    • ஆசாரிப்பள்ளம் புற காவல் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே திட்டுவிளை ஜோசப் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் எடிசன் (வயது 42), கொத்தனார்.

    இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று வீட்டிற்கு வந்தார். இவருக்கும் அவரது சகோதரர் மார்ட்டின் ஜெயராஜ் (40) என்பவருக்கு இடையே குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின் ஜெயராஜ் அவரது அண்ணன் ஜார்ஜ் எடிசனை நெஞ்சில் சரமாரியாக குத்தினார்.

    இதில் ஜார்ஜ் எடிசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அண்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததைப் பார்த்த மார்ட்டின் ஜெயராஜ் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். உடனடியாக ஜார்ஜ் எடிசனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அப்போது அங்கு டாக்டரிடம் தனது அண்ணன் ஜார்ஜ் எடிசன் விபத்தில் சிக்கியதாக கூறினார். டாக்டர்கள் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பார்த்தனர். இதுபற்றி ஆசாரிப்பள்ளம் புற காவல் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் அங்கு வந்து மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் அவர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.

    பின்னர் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மார்ட்டின் ஜெயராஜை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    பிடிபட்ட மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்திய போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர் ஜார்ஜ் எடிசனை குத்தியதாக கூறினார். இதிலிருந்து தப்பிக்க விபத்தில் சிக்கியதாக நாடகம் ஆடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது.

    சகோதரரை தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சீவலப்பேரி தொழிலாளி கொலை வழக்கில் போலீசார் 15 பேரை கைது செய்தனர்
    • சுடலைகோவில் பூசாரி துரையின் குடும்பத்தில் ஒருவருக்கு அடுத்த மாதத்திற்குள் அரசு வேலை வழங்கப்படும்

    நெல்லை:

    பாளை சீவலப்பேரியை சேர்ந்தவர் தொழிலாளி மாயாண்டி( வயது 38). இவர் கடந்த 10-ந் தேதி ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை கைது செய்தனர்.

    பேச்சுவார்த்தை

    இதற்கிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாயாண்டியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அவர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தனர். அவர்களுடன் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, உயிரிழந்த மாயாண்டி குடும்பத்தாருக்கு நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.

    அரசு வேலை

    மேலும் மாயாண்டி குடும்பத்தில் ஒருவருக்கும், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட சுடலைகோவில் பூசாரி துரையின் குடும்பத்தில் ஒருவருக்கும் அடுத்த மாதத்திற்குள் அரசு வேலை வழங்கப்படும்.

    2 பேர் குடும்பத்தின ருக்கும் பாளை கிருபா நகரில் 3 சென்ட் இடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் மாயாண்டியின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

    உடல் ஒப்படைப்பு

    இந்நிலையில் மாயாண்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடலை வாங்க இன்று அவரது உறவினர்கள் வந்தனர். அவர்களிடம் மாயாண்டியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    அவர்கள் மாயாண்டியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். தொடர்ந்து அவரது சொந்த ஊரான சீவலப்பேரியில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    பலத்த பாதுகாப்பு

    இதைத்தொடர்ந்து மருத்துவமனை முன்பு நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரவணன் தலைமையில் சீவலப்பேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. இதற்காக நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் சீவலப்பேரியில் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • முன்பின் தெரியாத யாருக்கும் வழியில் லிப்ட் கொடுக்க வேண்டாமென ஆந்திர போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
    • முன் விரோதம் காரணமாக இருக்குமா எனும் கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்‌.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஜமீல் (வயது 45). தொழிலாளி. இவரது பெண்ணை ஆந்திர மாநிலம், ஜக்கய்ய பேட்டை, வல்லபீ எனும் ஊரை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் முடித்து கொடுத்தார்.

    ஜமீல் பைக்கில் அவரது மகள் வீடு அமைந்துள்ள வல்லபீக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வல்லபீ கிராமத்தின் அருகே சாலையில் ஒருவர் லிப்ட் கேட்டார். அதை பார்த்த ஜமீல் பைக்கை நிறுத்தி அவரை பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு மீண்டும் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னாடி இருந்த நபர் திடீரென ஜமீலின் முதுகில் ஊசி போட்டார்.

    சுருக்கென தனது முதுகில் குத்தியதை உணர்ந்த ஜமீல் பைக்கை நிறுத்த முயன்றார்.

    அப்போது லிப்ட் கேட்டு வந்தவர் வாகனத்தை நிறுத்துவதற்குள் இறங்கி தப்பி ஓடிவிட்டார். லிப்ட் கேட்டு வந்தவர் தப்பி ஓடுவதற்கு முன்னதாக ஊசி போட பயன்படுத்திய சிரிஞ்சை சாலை ஓரத்தில் வீசி விட்டு ஓடினார்

    அதைப் பார்த்துவிட்ட ஜமீல் தனக்கு ஊசி போட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக செல்போன் மூலம் தனது மனைவிக்கு தெரியப்படுத்தினார்.

    அவர் பதறிபோய், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அதற்குள் ஜமீலுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது, அந்த வழியாக செல்வோரிடம் நடந்த விஷயங்களை கூறி உதவி கேட்டார் அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், 108 ஆம்புலன்சு வரவழைத்தனர். ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜமீல் இறந்தார்.

    ஜக்கைய்யா பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஊசி போட்ட சிரிஞ்சை கைப்பற்றி கொலையாளியை தீவிரமாக வருகின்றனர்.

    முன் விரோதம் காரணமாக இருக்குமா எனும் கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்‌.

    முன்பின் தெரியாத யாருக்கும் வழியில் லிப்ட் கொடுக்க வேண்டாமென ஆந்திர போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    • கொலை நடந்த இடத்துக்கு ஈரோட்டில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.
    • போலீசார் கொலை செய்யப்பட்ட சுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலை ஓரங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கால்வாய் அமைக்க கம்பி கட்டும் வேலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்கள் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பழனியப்ப நகர் என்ற பகுதியில் தகர ஷெட் அமைத்து தங்கி உள்ளனர்.

    தினமும் இங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று வந்தனர். தற்போது இவர்கள் கோபிசெட்டிபாளையம்- அத்தாணி சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு வேலை முடிந்து தொழிலாளர்கள் தாங்கள் தங்கியுள்ள இடத்துக்கு திரும்பி வந்தனர். இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் மது குடித்துவிட்டு சீட்டு விளையாடினர்.

    அப்போது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள அயரோனிபுரம் பகுதியை சேர்ந்த சுஷின் (40), மருங்கூர் தாலுகா ராஜாவூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோருக்கும் இடையே நள்ளிரவு 2 மணி அளவில் சீட்டு விளையாடுவதில் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அருகில் கிடந்த கடப்பாரையால் சுஷினை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இது குறித்து கவுந்தப்பாடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் (கவுந்தப்பாடி), சண்முகம் (கோபி செட்டிபாளையம்), துரை பாண்டி (கடத்தூர்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை நடந்த இடத்துக்கு ஈரோட்டில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

    இதையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட சுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.

    • மனைவியை பிரிந்து வாழ்ந்த அலெக்ஸ் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்.
    • சம்பவத்தன்று இரவு அலெக்ஸ் தன்னுடன் பணிபுரியும் நண்பர் உச்சிப்புளி பசும்பொன் நகரை சேர்ந்த முருகேசன் என்ற பிரபுவுடன் மது குடிக்க சென்றார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 38), கட்டிட கான்கிரீட் கலவை எந்திரத்தை இயக்கும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக அலெக்ஸ் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் உச்சிப்புளி அலைகாத்த வலசை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தென்னந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அலெக்ஸ் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் உச்சிப்புளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அலெக்ஸ் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியை பிரிந்து வாழ்ந்த அலெக்ஸ் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு அலெக்ஸ் தன்னுடன் பணிபுரியும் நண்பர் உச்சிப்புளி பசும்பொன் நகரை சேர்ந்த முருகேசன் என்ற பிரபுவுடன் (23) மது குடிக்க சென்றார்.

    தோப்பில் மது குடித்துக் கொண்டிருந்தபோது அலெக்ஸ் போதையில் பிரபுவின் மனைவி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் பிரபு மது பாட்டிலை உடைத்து அலெக்சை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அலெக்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணைகள் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் பிரபுவை கைது செய்தனர்.

    • மணக்குடி பகுதியில் ஒரே அறையில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
    • கொலையாளி அங்கிருந்து தலைமறைவானார். இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே சித்திரங்கோடு பகுதியில் அலங்கார தரையோடுகள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

    இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோம்போ (வயது 28), அனில் பர்மன் (22) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் அங்கேயே உள்ள அறை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இவர்கள் 5 பேரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் சோம்போ, அனில்பர்மன் இருவரும் குடிபோதையில் இருந்தபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    சோம்போ, அனில்பர் மனின் உறவினர்களை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. பெண்களை இழிவாக பேசியதால் ஆத்திரமடைந்த அனில்பர்மன் அங்கிருந்த பாட்டிலால் சோம்போவை தாக்கினார். பின்னர் அந்த பகுதியில் கிடந்த இரும்பு கம்பியாலும் அடித்தார். இதில் சோம்போ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சோம்போ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அனில் பர்மனை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தென் தாமரைகுளம் அருகே மணக்குடி பகுதியில் இதே போல் ஒரே அறையில் தங்கி இருந்த வட மாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளி அங்கிருந்து தலைமறைவானார். இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் திருவட்டார் பகுதியில் வட மாநில தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×