search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே தொழிலாளியை கொன்றது ஏன்? - கைதான வாலிபர் வாக்குமூலம்
    X

    கைது செய்யப்பட்ட ராஜா

    நாங்குநேரி அருகே தொழிலாளியை கொன்றது ஏன்? - கைதான வாலிபர் வாக்குமூலம்

    • நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.
    • செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.

    இவருக்கு மாரியம்மாள் (48) என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் மணி மகன் ராஜா (27).

    இவரை செல்லையாவின் மகன் மாரியப்பன் கிண்டல் செய்துள்ளார். இது சம்பந்தமாக மாரிய ப்பனுக்கும், ராஜாவிற்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறினார்.

    சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் செல்லையாவை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுபற்றி நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொ டுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி ராஜாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது, என்னை மாரியப்பன் கிண்டல் செய்தது தொடர்பாக செல்லையாவிடம் தட்டி கேட்டேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கம்பால் தாக்கினேன். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறி உள்ளார். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    Next Story
    ×