search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman attack"

    அரியாங்குப்பம் அருகே குடும்ப தகராறில் பெண்ணை தாக்கி பொருட்களை சூறையாடிய கணவர்- உறவினர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அருகே மணவெளி திருமால் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். (வயது 45). இவரது மனைவி கலைவாணி. (41). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.

    ராஜகோபால் ஷெட்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

    அது போல் சம்பவத்தன்று இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜகோபால் தனது உறவினர்களான செல்வி, நந்தினி, பிரியா ஆகியோருடன் சேர்ந்து கலைவாணியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடியதாக தெரிகிறது.

    இதுகுறித்து கலைவாணி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அது போல் ராஜகோபாலும் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் தன்னை கலைவாணி இரும்பு பைப்பாலும், கிரிக்கெட் மட்டையாலும் தாக்கியதாக தெரிவித்தார். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆண்டிப்பட்டி அருகே மது விற்பனையை காட்டி கொடுத்த பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு தங்கம்மாபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது45). இவர் அப்பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்தார். ஈஸ்வரியின் வீடு அருகே வசித்து வருபவர் கக்கன் மனைவி ராஜலட்சுமி (35).

    சம்பவத்தன்று ராஜலட்சுமி தான் மது விற்பதை போலீசுக்கு காட்டி கொடுத்ததாக ஈஸ்வரி சந்தேகப்பட்டார். மேலும் இது குறித்து அவரிடம் தகராறு செய்து தாக்கி உள்ளார். தாக்குதல் குறித்து ராஜலட்சுமி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே கேலி- கிண்டலை தட்டிக் கேட்ட பெண் தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே குமணன்தொழுவை சேர்ந்தவர் மணி மனைவி மகாலட்சுமி (வயது36). இவரை அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் அடிக்கடி கேலி- கிண்டல் செய்து வந்துள்ளார்

    இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி, அருண்குமாரை தட்டி கேட்டுள்ளார். மேலும் இது குறித்து அருண்குமாரின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் தந்தை அவரை கண்டித்துள்ளார்.

    மகாலட்சுமி தனது கணவருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அருண்குமார் எதற்கு எனது தந்தையிடம் புகார் கூறினாய் என கேட்டு அவரை கடுமையாக தாக்கி உள்ளார். இதனை தடுக்க வந்த மணிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

    சிவகங்கையில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை கமலா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஏலம்மாள் (வயது 45). இவர், சிவகங்கையில் இருந்து வாடகை காரில் மதுரைக்கு சென்றார்.

    அதற்கான வாடகையை ஏலம்மாள் கொடுக்கவில்லை. இதனால் டிரைவர் கிருஷ்ணன் (33) வந்து கேட்டார். அப்போது ஏலம்மாளுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் கிருஷ்ணன் தன்னை தாக்கியதாக சிவகங்கை டவுன் போலீசில் ஏலம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து கார் டிரைவர் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    காரைக்குடி அருகே உள்ள காளவாய் பொட்டல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி காளியம்மாள் (60), காரைக்குடியைச் சேர்ந்த முத்து (55) என்பவரிடம் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதனை திருப்பிக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து முத்து தனது சகோதரி முருகேஸ்வரியுடன் வந்து காளியம்மாளிடம் பணம் கேட்டார்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் தாக்கப்பட்டதாக காரைக்குடி தெற்கு போலீசில் காளியம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து சகோதரிகள் முத்து, முருகேசுவரியை கைது செய்தார். #Tamilnews
    ×